Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25 Mar, 2025 | 12:36 PM

image

போலி கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேரும் அவர்களுக்கு உதவிய தரகர் ஒருவரும்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவேளை கைதான 11 பேரும் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 

இந்த சந்தேக நபர்களில் அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அண்மையில் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பியவர்களும் காணப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவையின் யு.எல் - 225 விமானத்தில் துபாய்க்குச் சென்று, பின்னர் அங்கிருந்து கனடாவுக்குத் தப்பிச் செல்வதற்காக நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர். 

இதன்போது, சந்தேக நபர்கள் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர். 

அந்த ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவற்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர், திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கனடா விசாக்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

கைதான 11 சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்களுடன் விமான நிலையத்துக்குச் சென்றிருந்த தரகர் ஒருவரும் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட தரகரை விசாரணைக்கு உட்படுத்தியபோது மற்றுமொரு தரகரின் உதவியுடன் தலா 45 இலட்சம் ரூபா அடிப்படையில் இந்த போலி கனேடிய விசாக்கள் தயாரிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, தரகர் உட்பட கைது செய்யப்பட்ட 12 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அரசுகள் மாறினாலும் வெளிநாட்டு மோகம் மாறவில்லை ....45 லட்சம் கொடுத்து விசா...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

கைது செய்யப்பட்ட தரகரை விசாரணைக்கு உட்படுத்தியபோது மற்றுமொரு தரகரின் உதவியுடன் தலா 45 இலட்சம் ரூபா அடிப்படையில் இந்த போலி கனேடிய விசாக்கள் தயாரிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

கனடாவுக்கு 45 லட்சம் என்பது ரொம்ப கம்மியாக உள்ளதே?

12 minutes ago, putthan said:

அரசுகள் மாறினாலும் வெளிநாட்டு மோகம் மாறவில்லை ....45 லட்சம் கொடுத்து விசா...

போகிற போக்கைப் பார்த்தால் கனேடியர்கள் போலி வீசாவில் இலங்கைக்கு ஓடி/பறந்து போகும் நிலையும் ஏற்படலாம்.

தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெல்லும் சாத்தியம் அதிகரிக்கின்றது, அதே நேரம் ட்ரம் பும் வரி விதிப்பில் பின்வாங்கப் போவதில்லை.

கனடாவை காப்பாற்ற எவராலும் முடியாமல் போகப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நிழலி said:

போகிற போக்கைப் பார்த்தால் கனேடியர்கள் போலி வீசாவில் இலங்கைக்கு ஓடி/பறந்து போகும் நிலையும் ஏற்படலாம்.

தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெல்லும் சாத்தியம் அதிகரிக்கின்றது, அதே நேரம் ட்ரம் பும் வரி விதிப்பில் பின்வாங்கப் போவதில்லை.

கனடாவை காப்பாற்ற எவராலும் முடியாமல் போகப் போகுது.

அப்பிடி எல்லாம் கனடாவைக் கைவிட்டுவிடமாட்டம்! இந்த முறை லிபரல்காரரை வீட்டுக்கு அனுப்புறம் கொன்சர்வேட்டிவ்காரரை ஆட்சியில் அமர்த்துறம். கர்பன் டக்ஸ் கார்ணிக்கு நல்லதொரு பாடம் புகட்டுறம்!😎

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-344.jpg?resize=750%2C375&ssl

போலி கனேடிய விசா மோசடி: மிகப்பெரிய குழு விமான நிலையத்தில் கைது!

போலியான கனேடிய விசாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது போலி விசா ஆவணங்கள் தொடர்பாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மிகப்பெரிய குழுவாகும்.

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் நேற்று (24) மாலை ஒரு சந்தேக நபரின் பயண ஆவணங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியதைத் தொடர்ந்து சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பயணியின் கனேடிய தொழில் விசா போலியானது என்று கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில் அவரது கடவுச்சீட்டு உண்மையானது என்று கண்டறியப்பட்டது.

சந்தேக நபரை மேலும் விசாரித்ததில், இதேபோன்ற போலி விசாக்களுடன் மேலும் எட்டு பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் துபாய்க்கு புறப்படுவதற்காக புறப்படும் முனையத்தில் காத்திருந்தனர்.

30 முதல் 40 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் போலியான கனடிய விசாவைப் பெறுவதற்காக தலா 4.5 மில்லியன் ரூபாவ செலவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் தங்கள் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட ஒரு நபர், அவர்கள் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு நீர்கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், விமான நிலையத்தில் அவர்களை இறக்கிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

போலி விசாக்களுக்காக மில்லியன் கணக்கில் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் ஒருங்கிணைப்பாளர், குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நீர்கொழும்பு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதானவர் கனடாவில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும், உள்ளூர் முகவர் மூலம் செயல்பட்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக CIDயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1426467

14 hours ago, வாலி said:

அப்பிடி எல்லாம் கனடாவைக் கைவிட்டுவிடமாட்டம்! இந்த முறை லிபரல்காரரை வீட்டுக்கு அனுப்புறம் கொன்சர்வேட்டிவ்காரரை ஆட்சியில் அமர்த்துறம். கர்பன் டக்ஸ் கார்ணிக்கு நல்லதொரு பாடம் புகட்டுறம்!😎

அண்மைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் லிபரல் 6 புள்ளிகள் கன்சர்வேட்டிவ்வை விட முன்னுக்கு நிற்பதாகவே காட்டுகின்றன.

கன்சர்வேட்டிவ் கட்சி, கார்பன் Tax விடயத்தினை மட்டும் அதிகமாக தூக்கிப் பிடித்து கொண்டு இருந்தார்கள். கார்னே வந்த உடனே ஏப்ரல் ஒன்றில் இருந்து அதை நீக்குவதாக அறிவித்த பின் கன்சர்வேட்டிவ் இற்கான வெற்றி வாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது. அதுவும் வரும் ஏப்ரல் முதலாம் திகதி, சனம் gas விலையில் ஏற்படப் போகும் சடுதியான விலை குறைவை கண்டபின், முதல் நடந்தவற்றை எல்லாம் மறந்து விடும் என நினைக்கின்றேன்.

இதை விட, லிபரல் ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிராக காட்டும் எதிர்ப்பை விட கன்சர்வேட்டிவ் காட்டும் எதிர்ப்பு மிக குறைவு. இந்த விடயத்தில் அவர்கள் ஏற்கனவே தோற்று விட்டார்கள் என நினைக்கின்றேன். அத்துடன் வலதுசாரிகளுக்கு எதிரான மனநிலை ட்ரம்ப் அங்கு ஆட்சிக்கு வந்த பின் இங்கு அதிகரித்து, அதுவும் கன்சர்வேட்டிவ் இற்கு எதிரானதாக அமைந்துள்ளது.

என்ன நடந்தாலும் நான் கன்சர்வேட்டிவ் இற்குத்தான் வாக்களிப்பேன்.

6 hours ago, தமிழ் சிறி said:

இவ்வாறு கைதானவர் கனடாவில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும், உள்ளூர் முகவர் மூலம் செயல்பட்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இங்கு சுற்றுலா மற்றும் மாணவர் வீசாவில் வந்தவர்களுக்கு குறுக்கு வழிகளில் இந்த தொழில் விசா எடுத்துக் கொடுப்பதன் மூலம் கடந்த சில வருடங்களில் பெருந்தொகை பணத்தை உழைத்த ஒரு கூட்டம் இங்கு உள்ளது.

கனடிய அரசு குடியேற்ற விதிகள் மற்றும் மாணவர் வீசாக்களை இறுக்கிய பின், இவர்களின் வருமானம் குறைவடைந்தமையால் மாற்று குறுக்கு வழிகளை தேடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

இங்கு சுற்றுலா மற்றும் மாணவர் வீசாவில் வந்தவர்களுக்கு குறுக்கு வழிகளில் இந்த தொழில் விசா எடுத்துக் கொடுப்பதன் மூலம் கடந்த சில வருடங்களில் பெருந்தொகை பணத்தை உழைத்த ஒரு கூட்டம் இங்கு உள்ளது.

கனடிய அரசு குடியேற்ற விதிகள் மற்றும் மாணவர் வீசாக்களை இறுக்கிய பின், இவர்களின் வருமானம் குறைவடைந்தமையால் மாற்று குறுக்கு வழிகளை தேடுகின்றனர்.

கள்ள வழியில் பணம் சம்பாதிப்பவர்கள்... ஒரு வழியை மூடினால்,

படாரென்று அடுத்த வழியை தேர்ந்தெடுத்து விடுவார்கள்.

இப்படியானவர்கள்... அடைக்கலம் கொடுத்த நாட்டின் முதுகில் குத்துபவர்கள்.

தமிழர்களில் இப்படியான ஒரு கூட்டம், வேலைக்குப் போய் சம்பாதிக்காமல் குறுக்கு வழியில் பெரும் பொருள் ஈட்டி, பந்தா காட்டிக் கொண்டு திரியும் தமிழர்கள் உலகம் எங்கும் வாழ்வது வேதனையானது.

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.