Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று (04) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த மகஜரை கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைமைத் துவங்களிடமும் அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் பகிரங்க கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

இதுவரை காலமும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப் பெறவில்லை.

இதற்கு பிரதான காரணம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வு குறித்த ஏகோபித்த உடன்பாடு காணப்படாமையும் ஜக்கியமின்மையுமே காரணமாகும்.

இந்நிலையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் இந்திய பிரதமரை நேரடியாக சந்திப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வே நிரந்தரமான தீர்வாக அமையுமென தமிழ் பேசும் மக்கள் அனைவரும் வலியுறுத்துகின்றார்கள்.

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதனை மறுக்க முடியாத ஒன்று.

எனவே தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் ஏகோபித்த குரலில் ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.

இதுவே, தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு செய்கின்ற அரசியல் கடமையாகும்.

அவ்வகையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் இந்திய பிரதமரிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கையானது,

'இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்பதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://adaderanatamil.lk/news/cm93qe3th00kp10a6avxuhx2z

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமரிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக முன்வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து மகஜர்

05 APR, 2025 | 10:15 AM

image

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வெள்ளிக்கிழமை (04) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் யே.யாட்சன் பிகிறாடோ  தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில்  மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைமைத் துவங்களிடமும் அக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் பகிரங்க கோரிக்கை யை முன் வைக்கின்றோம்.

இது வரை காலமும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப் பெறவில்லை. 

இதற்கு பிரதான காரணம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வு குறித்த ஏகோபித்த உடன்பாடு காணப்படாமையும் ஜக்கியமின்மையுமே காரணமாகும். 

இந் நிலையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் இந்திய பிரதமரை நேரடியாக சந்திப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வே நிரந்தரமான தீர்வாக அமையுமென தமிழ் பேசும் மக்கள் அனைவரும் வலியுறுத்துகின்றார்கள்.

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதனை மறுதலிக்கமுடியாது. 

எனவே தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் ஏகோபித்த குரலில் ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.

இதுவே, தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு செய்கின்ற அரசியல் கடமையாகும். அவ்வகையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் இந்திய பிரதமரிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கையானது, 

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதாகும். என குறிப்பிடத் தக்கது.

IMG-20250404-WA0105.jpg

IMG-20250404-WA0103.jpg

IMG-20250404-WA0102.jpg

IMG-20250404-WA0106.jpg

IMG-20250404-WA0104.jpg

IMG-20250404-WA0101.jpg

https://www.virakesari.lk/article/211194

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம்பியாரிடம் யாரும் மகஜர் கையளிக்கவில்லையோ? அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் இல்லையென்பது யாவரும் அறிந்ததே, ஆனாலும் முந்திக்கொண்டு அறிக்கை விடுவதும், வெளிநாட்டுத்தூதுவர்களுடன் நின்று படம் பிடிப்பதும், அழைப்பு கிடைக்கப்பெற்றவர்களை முந்திக்கொண்டு தான் பயணம் செய்து காணொளி பதிவிடுவதும் பார்த்தால்; அவர் இன்னும் யதார்த்தத்தை புரியவில்லை என்பது தெரிகிறது. பாருங்கள்! எந்த வழியிலாவது புகுந்து மோடி, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் தரிசனமாவார். அவர் தமிழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்லி வாக்கு வாங்கினாலும் வக்காலத்து வாங்குவது, உழைப்பதெல்லாம் சிங்களத்துக்கே. 

மோடியே தனக்கு பாதுகாப்பில்லை என, தனது வான், தரை, விசேஷ கொமோண்டோ  பாதுகாப்பு படையுடன் வந்திறங்கியிருக்கிறார். இதுபற்றி பேசவா போகிறார்? தன் நாட்டில் வைத்தே பேசாதவர், இங்கு வந்து பேசுவாராம். பாப்போம்! 

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பல வருடங்களாக வழமையாக சொல்லும்... 13'ம் திருத்த சட்டத்தையும் நிறைவேற்றச் சொல்லி, ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொல்லுங்கப்பா. 😂

  • கருத்துக்கள உறவுகள்

மகஜர் கொடுக்கப்பட்ட எம்பிக்கள் எல்லோரும் இந்திய விசூசிகள். அதிலும் இந்த அடைக்கலநாதன் சிறிதரன் இரண்டுபேரும் மினவும்விசுவாசிகள். மற்றையவர்கள் புதியவர்கள் என்பதால் இனிமேல்தான் அவர்களின் விசுவாசததைப்பற்றி அறிந்து கொள்ள முடியும்.மோடி சம்பூரை பறித்தெடுக்கவே வருகிறார்.திருடனிடம் கோரிக்கை வைத்து என்ன பயன்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.