Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

விரிவான தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி

வாத்தியார் வீர‌கேச‌ரி ப‌த்திரைக‌ய‌ மைய‌மாய் வைச்சு தான் சொல்லுகிறார் அதில் எவ‌ள‌வு உண்மை பொய் அட‌ங்கி இருக்கு என்று தெரியாது...................நான் அறிந்த‌து ஒன்றே ஒன்று தான் 1990க‌ளில் யாழ்பாண‌த்தில் இருந்து முஸ்லிம் ம‌க்க‌ளை வெளி ஏற்றின‌வை எம்ம‌வ‌ர்...............எத‌னால் என்றால் சிங்க‌ள‌வ‌னுக்கு எம்ம‌வ‌ர்க‌ளை காட்டி கொடுத்த‌வ‌ர்க‌ளாம்.................2002ம் ஆண்டு த‌லைவ‌ர் முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ளை கூப்பிட்டு க‌தைச்சு எல்லாத்தையும் ச‌ரி செய்த‌வ‌ர்👍...........................

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

அனால், காஸ்மீரிகள் (முஸ்லிம்கள்) முதலே காணியை பிடுங்கி, கலைத்து முஸ்லீம் அல்லாதோரை காஸ்மீரில் இருந்து நீக்கிவிட்டு , இந்து தன்மை உலா ஜம்முவையும் சொந்தம் கொண்டாட நினைப்பது, ஜம்மு மக்களுக்கு எவ்வளவு அநியாயம். அதை இந்தியா நீக்கி இருக்கிறது.

இதுதான் யதார்த்தம்.

கடஞ்சா, நீங்கள் இப்படி சொல்வதற்கு ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா?

பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு காஷ்மீருக்கு மட்டும் இருந்த சிறப்பு உரிமைச் சட்டங்களை (சட்டம் 370 மற்றும் 35A) நீக்கியதற்கான பிரதானமான காரணமாக இந்திய ஒருமைப்பாட்டையும், காஷ்மீரினூடாக முழு இந்தியாவிற்கும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு/பயங்கரவாத பிரச்சனைகளையுமே காரணங்களாக முன்வைத்தது.

ஒரு தேசத்துக்குள் இரண்டு தேசங்கள் இருக்க முடியாது என்பதே பாஜகவினதும், இதை ஆதரித்த இந்திய மக்களினதும் நிலைப்பாடாக இருந்தது. இந்திய ஒன்றிய அரசின் இந்த முடிவை பல தமிழர்களும் ஆதரித்தார்கள். பலரினதும் பார்வையில் ஒரு பொதுவான இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இருந்தது. ஒரு வரலாற்றுப் பார்வை அல்ல. இன்று இதே போன்று தான் எம் மக்களிடையே இந்தியாவிற்கு எதிரான, பாகிஸ்தானிற்கு ஆதரவான பார்வையும் உள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தேச வழமைச் சட்டம் போன்ற கூறுகளும் இங்கே சிறப்பு உரிமைகளாக இருப்பதால், காஷ்மீர் மக்கள் தவிர்ந்த ஏனையோர் அங்கு நிலம் வாங்க முடியாது. காஷ்மீரின் அபிவிருத்தியை இது தடுக்கின்றது என்ற பொருளாதாரக் காரணியும் சொல்லப்பட்டது.

இந்தச் சிறப்புச் சட்டங்கள் நீக்கப்பட்ட பின், காஷ்மீர் அபிவிருத்தி அடைந்து உள்ளதா? காஷ்மீரிய மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்று இப்போது சொல்கின்றார்களா?

ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின், அன்று பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பயந்தே அன்றைய சுதந்திர நாடான காஷ்மீர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தங்களே இந்த சிறப்பு உரிமைகள். இன்று அவர்களுக்கு இரு பக்கங்களாலும் நெருக்கடிகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

எனக்கு ஒரு காஷ்மீரிய குடும்பம் நல்ல நண்பர்களாக இருக்கின்றார்கள். இந்துக் குடும்பம். எங்களுக்கு இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், எங்களைத் தனியே விட்டுவிடுங்கள் என்று தான் அவர்கள் சொல்லுகின்றார்கள். ஏனைய காஷ்மீர் மக்களின் அபிப்பிராயம் எனக்குத் தெரியாது, ஆனால் என்னுடைய அபிப்பிராயமும் இதுவே.

  • கருத்துக்கள உறவுகள்

496805445_1111036114394693_8104172762228

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

கடஞ்சா, நீங்கள் இப்படி சொல்வதற்கு ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா?

வாசித்ததில் நினைவில் உள்ளவை.

காஷ்மீரின் நிலை, இந்தியாவுடன் இணையும் போது (சிறு வரலாறு),

காணியை சிறு அரச வம்ச குழுமம் வைத்து இருந்தது . அது பிரித்தானியர் கஸ்மீரை, (சீக்கிய இராச்சியத்தை வென்ற பின்), Dogra ராஜ்புட் அரச வம்சத்துக்கு விற்றதில் (1846 என்று தான் நினைவு) இருந்து தொடங்குகிறது. இந்த Dogra அரச வம்சமும் இந்து தான், பிருத்தானியர் சும்மா காணி விற்பது போலவே காஷ்மீரை விற்றனர் Dogra அரச அம்சத்துக்கு, ஏனெனில் பிரித்தானிய- சீக்கிய இராச்சிய யுத்தத்தில், Dogra பிரித்தானியரை ஆதரித்தால்.

அனால், சீக்கிய இராச்சியமும், காஷ்மீர் முஸ்லிம்களை அவ்வளவு நன்றாக நடத்தவில்லை என்றும் பிரித்தானியரின் பார்வை.

இந்தியாவுடன் இணையும் போது, Dogra வரி, நிலசுவாந்தார் கொடுமை ஆட்சியில்.

காஸ்மீர் பண்டிதர்கள் (பிராமணர், இந்துக்கள், நேருவின் அடியும் இந்த காஷ்மீர் pandits இல் தான் உள்ளது என்பதும்), , சமூக அளவில் அடுத்த நிலை

அடுத்த நிலையில் முஸ்லிம்கள், இந்துக்களும் குடிமை கமக்கரராக ( tenant cultivators) ஆக இருந்தாக்கள், Dogra நிலசுவந்தருக்கு.

அடுத்த நிலை அடிமட்டம், முஸ்லிம்களும் , இந்துவுகளும் இருந்தார்கள்.

அத்துடன் பிரிவினையில் பாகிஸ்தானின் இருந்து வந்த பஞ்சாபிகளும், இந்துக்களும் , இந்த tenant cultivators க்கு கீழ் தொழில் செய்ய தொடங்கினார்கள், அடிமட்டமாக.

முஸ்லிம்களிடமும் காணி இருந்தது - அது அந்த பூக்கள் , பழங்கள், பட்டு பயிரிடும் காணிகள், காஷ்மீரில் மிக உயர் பெறுமானம் உள்ளவை. இவை காணி சீர்த்திருத்தத்துக்குள் வரவில்லை

காணி சீர்திருத்தம் 1947 இல் யஹோடங்கியது. முஸ்லீம் பெரும்பான்மை என்பதால். காணில் பெரும்பாலும் அவர்களுக்கும் (முஸ்லீம் tenant cultivators), காஸ்மீர் அரசாங்கத்துக்கும் சென்றது.

இந்து tenant cultivators க்கும் போனது.

அடிமட்டத்தில் இருந்தவர்களுக்கு ( tenant cultivators ஆக இல்லை), ஒன்றும் கிடைக்கவில்லை, அதில் பெரும்பான்மையாக பாதிக்கபட்டது இந்துக்கள்.

ஏனெனில் இந்து tenant cultivators சிறுபான்மை.

பெரும்பான்மை முஸ்லீம் tenant cultivators காணி கிடைத்ததில்,முஸ்லீம் அல்லாதோர் வேலையும் இழந்தனர். இதில் பிரிவினையில் வந்த பஞ்சாபிகள், இந்துக்கள் உள்ளடக்கம். அவர்களின் தொழிலை முஸ்லிம்கள் அடிமட்டத்துக்கு பொதுவாக சென்றது .

இதில் இந்து tenant cultivators க்கு காணி கொடுக்கப்படாமல் விடப்பட்டதும் இருக்கிறது ,

அடிப்படையாக, காணி சீர்த்திருத்தம், இந்துக்களை வேலை இழக்க, காணி இழக்க வைக்கப்பட்டு (துரத்தப்படுவதத்திற்கு) பாவிக்கப்பட்டது,

ஏனெனில், சீர்திருத்தத்தை செய்தர்க் ஜம்மு-காஸ்மீர் அரசாங்கம் முஸ்லீம் பெரும்பான்மை.

(காஷ்மீர் நவீன பொருளாதாரம் அல்ல வேறு வேலை தேடுவதற்கு அந்த நேரத்தில்)

நிலச்சுவாந்தர் முறை நீக்கப்பட்டது நன்மை.

காணி சீர்திருத்தம் 1953 வரை நடந்தது, ல்லாம் ஒரேயடியாக செய்யமுடியதால் , பாதிக்கப்பட்டு துரத்தப்பட்டவர்கள் (சிறு) தொகுதி தொகுதியாக. அது வெளியில் தெரியவில்லை.

அவர்கள் அநேகமாக வந்தது ஜம்முவுக்கு. ஏனெனில் ஜம்மு இந்து பெரும்பான்மை.

ஜம்முவிலும் முஸ்லீம் பெரும்பான்மை இடங்கள் இருந்தது, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினால் கொல்லப்பட்டு (RSS செய்தது, டோக்ரா அரசாம்சம் சேர்ந்து என்ற நம்பிக்கையும் இருக்கிறது) இந்த முஸ்லிகள் ஒரு பகுதி காஷ்மீருக்கு, மற்ற பகுதி பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்டனர்.

1990 கலியே பொதுவாக காஸ்மீர் pandits மீது கைவைக்கப்பட்டது.

இதை 1990 களில் நடந்ததுக்கு. இதை ஒன்றை மட்டும் கருத்தில் எடுக்காமல் தேடி பாருங்கள் பல இணைப்புகள் இருக்கிறது.

https://sites.tufts.edu/praxis/2023/06/18/the-plight-of-kashmiri-pandits/

https://kashmirlife.net/costly-land-reforms-issue-16-vol-11-215417/ (இது காணி சீர்திரும் நடந்தது என்பதற்கு மட்டும். இதில் இருந்து நான் அறியவில்லை )

(இதில் இருந்த்தும் நான் அறியவில்லை, அனால், இப்படி நடந்து இருக்கிறது என்பதற்கு)

அனால், இந்தியாவின் காஷ்மீருக்கு பல ஆய்வுகள்,விமர்சனங்கள் ... என்று ஆழமான, பரவலாக இருக்கிறது.

எனவே நடப்பதை / நடத்தை மறைப்பது கடினம். அனால், பாக்கிஸ்தான் காஷ்மீருக்கு மிகவும் குறைவு

நிர்வாகம் இதை நீக்கிவிடவும்

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

கடஞ்சா, நீங்கள் இப்படி சொல்வதற்கு ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா?

வாசித்ததில் நினைவில் உள்ளவை.

காஷ்மீரின் நிலை, இந்தியாவுடன் இணையும் போது (சிறு வரலாறு),

காணியை சிறு அரச வம்ச குழுமம் வைத்து இருந்தது . அது பிரித்தானியர் கஸ்மீரை, (சீக்கிய இராச்சியத்தை வென்ற பின்), Dogra ராஜ்புட் அரச வம்சத்துக்கு விற்றதில் (1846 என்று தான் நினைவு) இருந்து தொடங்குகிறது. இந்த Dogra அரச வம்சமும் இந்து தான், பிருத்தானியர் சும்மா காணி விற்பது போலவே காஷ்மீரை விற்றனர் Dogra அரச அம்சத்துக்கு, ஏனெனில் பிரித்தானிய- சீக்கிய இராச்சிய யுத்தத்தில், Dogra பிரித்தானியரை ஆதரித்தால்.

அனால், சீக்கிய இராச்சியமும், காஷ்மீர் முஸ்லிம்களை அவ்வளவு நன்றாக நடத்தவில்லை என்றும் பிரித்தானியரின் பார்வை.

இந்தியாவுடன் இணையும் போது, Dogra வரி, நிலசுவாந்தார் கொடுமை ஆட்சியில்.

சமூக மட்டத்தில்

காஸ்மீர் பண்டிதர்கள் (பிராமணர், இந்துக்கள், நேருவின் அடியும் இந்த காஷ்மீர் pandits இல் தான் உள்ளது என்பதும்), , சமூக அளவில் அடுத்த நிலை

அடுத்த நிலையில் முஸ்லிம்கள், இந்துக்களும் குடிமை கமக்கரராக ( tenant cultivators) ஆக இருந்தாக்கள், Dogra நிலசுவந்தருக்கு.

அடுத்த நிலை அடிமட்டம், முஸ்லிம்களும் , இந்துவுகளும் இருந்தார்கள்.

அத்துடன் பிரிவினையில் பாகிஸ்தானின் இருந்து வந்த பஞ்சாபிகளும், இந்துக்களும் , இந்த tenant cultivators க்கு கீழ் தொழில் செய்ய தொடங்கினார்கள், அடிமட்டமாக.

சமய (முஸ்லீம், அல்லாதோர்) மட்டத்தில்,

முஸ்லிம்களிடமும் காணி இருந்தது - அது அந்த பூக்கள் , பழங்கள், பட்டு பயிரிடும் காணிகள், காஷ்மீரில் மிக உயர் பெறுமானம் உள்ளவை. (இவை காணி சீர்த்திருத்தத்துக்குள் வரவில்லை )

காணி சீர்திருத்தம் 1947 இல் யஹோடங்கியது. முஸ்லீம் பெரும்பான்மை என்பதால். காணில் பெரும்பாலும் அவர்களுக்கும் (முஸ்லீம் tenant cultivators), காஸ்மீர் அரசாங்கத்துக்கும் சென்றது.

இந்து tenant cultivators க்கும் போனது.

அடிமட்டத்தில் இருந்தவர்களுக்கு ( tenant cultivators ஆக இல்லை), ஒன்றும் கிடைக்கவில்லை, அதில் பெரும்பான்மையாக பாதிக்கபட்டது இந்துக்கள்.

ஏனெனில் இந்து tenant cultivators சிறுபான்மை.

பெரும்பான்மை முஸ்லீம் tenant cultivators காணி கிடைத்ததில்,முஸ்லீம் அல்லாதோர் வேலையும் இழந்தனர். இதில் பிரிவினையில் வந்த பஞ்சாபிகள், இந்துக்கள் உள்ளடக்கம். அவர்களின் தொழிலை முஸ்லிம்கள் அடிமட்டத்துக்கு பொதுவாக சென்றது .

இதில் இந்து tenant cultivators க்கு காணி கொடுக்கப்படாமல் விடப்பட்டதும் இருக்கிறது ,

அடிப்படையாக, காணி சீர்த்திருத்தம், இந்துக்களை வேலை இழக்க, காணி இழக்க வைக்கப்பட்டு (துரத்தப்படுவதத்திற்கு) பாவிக்கப்பட்டது,

ஏனெனில், சீர்திருத்தத்தை செய்தர்க் ஜம்மு-காஸ்மீர் அரசாங்கம் முஸ்லீம் பெரும்பான்மை.

(காஷ்மீர் நவீன பொருளாதாரம் அல்ல வேறு வேலை தேடுவதற்கு அந்த நேரத்தில்)

நிலச்சுவாந்தர் முறை நீக்கப்பட்டது நன்மை.

காணி சீர்திருத்தம் 1953 வரை நடந்தது, ல்லாம் ஒரேயடியாக செய்யமுடியதால் , பாதிக்கப்பட்டு துரத்தப்பட்டவர்கள் (சிறு) தொகுதி தொகுதியாக. அது வெளியில் தெரியவில்லை.

அவர்கள் அநேகமாக வந்தது ஜம்முவுக்கு. ஏனெனில் ஜம்மு இந்து பெரும்பான்மை.

ஜம்முவிலும் முஸ்லீம் பெரும்பான்மை இடங்கள் இருந்தது, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினால் கொல்லப்பட்டு (RSS செய்தது, டோக்ரா அரசாம்சம் சேர்ந்து என்ற நம்பிக்கையும் இருக்கிறது) இந்த முஸ்லிகள் ஒரு பகுதி காஷ்மீருக்கு, மற்ற பகுதி பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்டனர்.

1990 கலியே பொதுவாக காஸ்மீர் pandits மீது கைவைக்கப்பட்டது.

இதை 1990 களில் நடந்ததுக்கு. இதை ஒன்றை மட்டும் கருத்தில் எடுக்காமல் தேடி பாருங்கள் பல இணைப்புகள் இருக்கிறது.

https://sites.tufts.edu/praxis/2023/06/18/the-plight-of-kashmiri-pandits/

https://kashmirlife.net/costly-land-reforms-issue-16-vol-11-215417/ (இது காணி சீர்திரும் நடந்தது என்பதற்கு மட்டும். இதில் இருந்து நான் அறியவில்லை )

Fortune India
No image preview

How draconian land reform act deprived Hindus of their la...

(இதில் இருந்த்தும் நான் அறியவில்லை, அனால், இப்படி நடந்து இருக்கிறது என்பதற்கு)

அனால், இந்தியாவின் காஷ்மீருக்கு பல ஆய்வுகள்,விமர்சனங்கள் ... என்று ஆழமான, பரவலாக இருக்கிறது.

எனவே நடப்பதை / நடத்தை மறைப்பது கடினம். அனால், பாக்கிஸ்தான் காஷ்மீருக்கு மிகவும் குறைவு

Edited by Kadancha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா கப்ஸா கதைகளை ஏனைய உறுப்பினர்களும் இனம் கண்டு கேள்வி கேட்ப்பதால் கொஞ்சம் அமைதியாக இருக்க எண்ணுகிறேன்.

ஆனால் வழமை போல் ஆதாரம் எதையும் கொடுக்காமல், நான் வாசித்த அறிவின் படி, அல்லது நீங்களே வாசித்து அறியுங்கள் போன்ற பதில்களும், அதை சுற்றி கருத்தாளரின் கற்பனையில் உருவாக்கிய பத்திகளும், கதைகளும் நீட்டி வளத்தபடுவது கண்கூடு.

# விக்கிராமாதித்தன் போல் முயலும் கருத்தளர்களுக்கு வாழ்த்துக்களும், அனுதாபங்களும் ஒரு சேர🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

கஞ்சா கப்ஸா கதைகளை ஏனைய உறுப்பினர்களும் இனம் கண்டு கேள்வி கேட்ப்பதால் கொஞ்சம் அமைதியாக இருக்க எண்ணுகிறேன்.

ஆனால் வழமை போல் ஆதாரம் எதையும் கொடுக்காமல், நான் வாசித்த அறிவின் படி, அல்லது நீங்களே வாசித்து அறியுங்கள் போன்ற பதில்களும், அதை சுற்றி கருத்தாளரின் கற்பனையில் உருவாக்கிய பத்திகளும், கதைகளும் நீட்டி வளத்தபடுவது கண்கூடு.

# விக்கிராமாதித்தன் போல் முயலும் கருத்தளர்களுக்கு வாழ்த்துக்களும், அனுதாபங்களும் ஒரு சேர🤣.

என‌க்கும் க‌ஸ்மீர் வ‌ர‌லாறு கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் தெரியும்

நான் கேட்ட‌துக்கு அவ‌ர் ச‌ரியான‌ விள‌க்க‌ம் த‌ர‌ வில்லை...................அவ‌ர் நான் கேட்ட‌துக்கு இன‌ங்க‌ சிறு விள‌க்க‌ம் த‌ந்து இருந்தார் அத‌ற்க்கு தான் ந‌ன்றி சொன்னேன்

(குரு ) ர‌சோத‌ர‌ன் அண்ண‌ எழுதின‌து நூற்றுக்கு 90வித‌ம் உண்மை...................................

சில‌ ச‌மைய‌ம் தேவை இல்லாம‌ முர‌ன் ப‌டுவ‌தும் பார்க்க‌ தெரிந்தாலும் தெரியாது போல் க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு........................பெரும்பாலான‌ க‌ஸ்மீர் ம‌க்க‌ள் இந்திய‌ ஒன்றிய‌த்துக்குள் இருக்க‌ விரும்ப‌ல‌ த‌னித்து இருக்க‌வே விரும்புகின‌ம்

இந்திய‌ன் ஆமி க‌ஸ்மீரில் செய்த‌ கொடுமைக‌ள் ப‌ல‌..............க‌ஸ்மீர் இள‌ம் பெடிய‌ங்க‌ள் இந்திய‌ன் ஆமிக்கு எதிரா க‌ல்லால் எறிந்து த‌ங்க‌ட‌ கோவ‌த்தை வெளிப்ப‌டுத்தின‌வை.........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

சில‌ ச‌மைய‌ம் தேவை இல்லாம‌ முர‌ன் ப‌டுவ‌தும் பார்க்க‌ தெரிந்தாலும் தெரியாது போல் க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு...

நான் ஆதாரபூர்வமாக, அல்லது லொஜிக்கலாக வாதாடும் எவரையும் கடந்து செல்ல விரும்புவதில்லை.

ஆனால் கவுண்டமணி வாழைப்பழ ஜோக் போல எழுதுபவர்களோடு விவாதித்தால் அயர்ச்சிதான் மிஞ்சும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

ர‌சோத‌ர‌ன் அண்ண‌ எழுதின‌து நூற்றுக்கு 90வித‌ம் உண்மை...................................

பையன் சார், 90 வீதம் என்றால் இங்கு அமெரிக்காவில் அநேக வகுப்புகளில் A- மட்டுமே கிடைக்கும். A+ எடுக்க வேண்டும் என்றால் 95 வீதத்திற்கு மேல் வரவேண்டும். இன்னும் ஒரு ஆறு வீதத்தை எப்படி எடுக்கலாம் என்று யோசிக்கின்றேன்..................🤣.

இரு நாடுகளையுமே பலரும் பொய்யர்கள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதில் போதாக்குறைக்கு அதிபர் ட்ரம்ப் வேற அவருடைய கனவுகளையும், நினைவுகளையும் நிஜமாகவே நடந்த நிஜங்கள் என்று விளங்கி கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றார். வயது நல்லாப் போகப்போக இப்படியான ஒரு தடுமாற்றப் பிரச்சனை வருவது சாதரணமே............... தமிழ்நாட்டில் அமைச்சர் துரைமுருகன் இன்னொரு உதாரணம்.................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

இதை 1990 களில் நடந்ததுக்கு. இதை ஒன்றை மட்டும் கருத்தில் எடுக்காமல் தேடி பாருங்கள் பல இணைப்புகள் இருக்கிறது.

https://sites.tufts.edu/praxis/2023/06/18/the-plight-of-kashmiri-pandits/

https://kashmirlife.net/costly-land-reforms-issue-16-vol-11-215417/ (இது காணி சீர்திரும் நடந்தது என்பதற்கு மட்டும். இதில் இருந்து நான் அறியவில்லை )

அனால், இந்தியாவின் காஷ்மீருக்கு பல ஆய்வுகள்,விமர்சனங்கள் ... என்று ஆழமான, பரவலாக இருக்கிறது.

எனவே நடப்பதை / நடத்தை மறைப்பது கடினம். அனால், பாக்கிஸ்தான் காஷ்மீருக்கு மிகவும் குறைவு

நன்றி கடஞ்சா.

ஒரு காலத்தில் இவர்கள் பற்றி நிறையவே வாசித்திருக்கின்றேன். தொடர்ந்து வாசித்துப் பார்க்கின்றேன்.

சிலவற்றை வாசிக்கும் போதே அவை பிரதானமாக ஒரு பக்கசார்பான பிரச்சாரங்கள், பரப்புரைகள் என்று தெரிந்துவிடும். தரவுகளற்ற தகவல் குவியல்களாக, அனுமானங்களாக அவை இருக்கும்.

உலகில் சில நாடுகளில் நடப்பவை மிகக்குறைவாக வெளியே தெரியும். சீனா, ரஷ்யா, வட கொரியா, மியான்மார், பாகிஸ்தான் என்பன சில உதாரணங்கள். அவர்களின் அரசியல் அப்படிப்பட்டது. ஆதலால் பாகிஸ்தான் பக்கம் இருக்கும் காஷ்மீர் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியே தெரிவதில்லை என்பதில் மாற்றுக் கருத்தும், ஆச்சரியமும் இல்லை.

ஓரளவாவது ஜனநாயகமும், உரிமைகளும் உள்ள நாட்டில் வெகு சிலராவது கேள்விகளை கேட்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பையன் சார், 90 வீதம் என்றால் இங்கு அமெரிக்காவில் அநேக வகுப்புகளில் A- மட்டுமே கிடைக்கும். A+ எடுக்க வேண்டும் என்றால் 95 வீதத்திற்கு மேல் வரவேண்டும். இன்னும் ஒரு ஆறு வீதத்தை எப்படி எடுக்கலாம் என்று யோசிக்கின்றேன்..................🤣.

இரு நாடுகளையுமே பலரும் பொய்யர்கள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதில் போதாக்குறைக்கு அதிபர் ட்ரம்ப் வேற அவருடைய கனவுகளையும், நினைவுகளையும் நிஜமாகவே நடந்த நிஜங்கள் என்று விளங்கி கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றார். வயது நல்லாப் போகப்போக இப்படியான ஒரு தடுமாற்றப் பிரச்சனை வருவது சாதரணமே............... தமிழ்நாட்டில் அமைச்சர் துரைமுருகன் இன்னொரு உதாரணம்.................

குரு நூற்றுக்கு 90 என்றால் நீங்க‌ள் வென்று விட்டீங்க‌ள் என்று அர்த்த‌ம் 90வித‌ம் கூட‌😁👍........................ப‌த்து வித‌ம் பிழையாக‌ இருக்க‌லாம்.....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரசோதரன் said:

ஒரு காலத்தில் இவர்கள் பற்றி நிறையவே வாசித்திருக்கின்றேன். தொடர்ந்து வாசித்துப் பார்க்கின்றேன்.

சிலவற்றை வாசிக்கும் போதே அவை பிரதானமாக ஒரு பக்கசார்பான பிரச்சாரங்கள், பரப்புரைகள் என்று தெரிந்துவிடும். தரவுகளற்ற தகவல் குவியல்களாக, அனுமானங்களாக அவை இருக்கும்.

நீங்கள் அறிந்தவை எவை என்று ( இங்கு அலசப்படும் விடயங்ளோடு உங்களின் சிந்தனையில்தொடர்பு உள்ளவை) சாராம்சமாக சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kadancha said:

நீங்கள் அறிந்தவை எவை என்று ( இங்கு அலசப்படும் விடயங்ளோடு உங்களின் சிந்தனையில்தொடர்பு உள்ளவை) சாராம்சமாக சொல்ல முடியுமா?

( குரு ) ர‌சோத‌ர‌ன் அண்ண எழுதின‌து ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் நானும் அறிந்து இருக்கிறேன்..................அவ‌ர் சொல்ல‌ வ‌ந்த‌தில் ப‌ல‌ உண்மைக‌ள் இருக்கு.....................

இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் அவியிற‌ மீனை துடிக்குது என்று சொல்பாங்க‌ள் கார‌ண‌ம் ஆளும் அர‌சுக‌ளிட‌ம் காசை வேண்டி கொண்டு..................பாக்கிஸ்தான் இந்தியா போன‌ கிழ‌மை ந‌ட‌ந்த‌ போரில் இந்தியா பாக்கிஸ்தானுக்கு ந‌ல்ல‌ அடி கொடுத்து விட்ட‌து என்று ப‌ச்சையா போலி செய்திய‌ வெளியிட்ட‌வை தான் இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள்👎.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Slow release medicine என கேள்விபட்டிருப்பீர்கள். அதைபோல்ல ஸ்லோ ரிலீஸ் முறையில் உண்மையை தம் நாட்டு மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பருக்கும் இந்திய ஊடகங்கள்👇😂.

இது கூட தென்னிந்தியாவில்தான், பானி-பூரி பெல்ட்டில்…மோடி ஜி அடித்து நிமித்தி விட்டார் என்றே இன்னும் நம்புகிறார்கள்🤣.


எதிர்பார்த்ததை விட ஆழம்.. இந்தியா - பாகிஸ்தான் போரில்.. சீனா ஆடிய சீக்ரெட் ஆட்டம்.. ஷாக் பின்னணி

Shyamsundar IUpdated: Friday, May 16, 2025, 10:53 [IST]

pakistan Jammu Kashmir

பாகிஸ்தான் ராணுவத்திடம் சீனாவின் ஜே ரக போர் விமானங்கள், PL-15 வகை ஏவுகணைகள் என்று பல உள்ளன. பாகிஸ்தானின் 80 சதவிகித போர் உபகரணங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இதெல்லாம் இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததுதான்.

இதில் அதிர்ச்சி தரும் தகவல் இந்தியா பாகிஸ்தான் போரில் Chinese PL-15 வகை ஏவுகணைகளை சீனர்களே இயக்கியதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டெக்னீஷியன்களை களமிறக்கி பணிகளை செய்துள்ளனர். அதாவது இந்தியாவிற்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளை பாகிஸ்தானில் இருந்து இயக்கத்து சீனர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனாவின் சாட்டிலைட் இமேஜ்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதேபோல் சீனா சார்பாக பாகிஸ்தானுக்கு நிறைய உளவு தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது. அதாவது சீனா ஆயுதங்களை அனுப்பி, அதை இயக்க சாட்டிலைட்டை இமேஜ்களை அனுப்பி.. அதை சரியாக பயன்படுத்த உளவு தகவல்களை அனுப்பி கூடுதலாக இடத்தி எல்லாமே இயக்க ஆட்களையும் அனுப்பியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

அதாவது இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட ஆழமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன.

சீனா நிழல் யுத்தம்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த போரை வைத்து சீனா போர் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சில ஆயுதங்களை சீனா சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த போர் விவகாரத்தில் உலக நாடுகளின் தீவிரமான சப்போர்ட் பாகிஸ்தானுக்கு இருந்தது. உதாரணமாக துருக்கி , சீனா ஆகியவை பாகிஸ்தானை நேரடியாக ஆதரித்தது. ராணுவ ரீதியாக அரசியல் ரீதியாக பாகிஸ்தானை சப்போர்ட் செய்தது.

வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. இதிலேயே பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா ஆதரவு இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் தனது தாக்குதலில் சீன ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட நிலையில், சீன ட்ரோன்களுடன் சேர்த்து துருக்கி ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியது. 36 இடங்களைக் குறிவைத்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தியப் பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறையில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவை துருக்கி மற்றும் சீனாவின் டிரோன்கள், என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.

இந்த டிரோன்களை பாகிஸ்தானிடம் தந்து சீனா சோதனை செய்ததாகவும், சீனாவின் சில ஏவுகணைகளையும் சீனா பாகிஸ்தான் வழியாக சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

எக்ஸ் பக்கம்

இந்த போருக்கு சில நாட்களுக்கு முன்பே பாகிஸ்தானில் எக்ஸ் பக்கம் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு காரணம் சீனா என்கிறார்கள். அதாவது இந்தியாவிற்கு எதிராக போடப்பட்ட போஸ்டுகள் எல்லாம் பாகிஸ்தான் வழியாக சீனர்கள் செய்த போஸ்ட் என்று கூறப்படுகிறது.

அதாவது இந்தியாவின் இமேஜை அழிக்க சீனர்கள் களமிறக்கப்பட்டு ஆன்லைன் போரை சீனா நிழல் யுத்தமாக நடத்தி இருக்கலாம். எதிர்காலத்தில் போர் வந்தால் ஆன்லைனில் எப்படி narrative உருவாக்குவது என்பதை பாகிஸ்தான் வழியாக சீனா இந்த முறை கற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த போரை எதிர்கால போருக்கான பயிற்சியாக மேற்கொண்டு இருக்கலாம் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

https://tamil.oneindia.com/news/chennai/role-of-china-in-the-india-vs-pakistan-war-might-be-deeper-than-we-think-704557.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர் காஷ்மீரிகளுகே சொந்தம். இந்துப். பயங்கரவாதம் காஷ்மீரை வல்வளைப்புச் செய்திருக்கின்றது. இந்துஸ்தான் படைகள் காஷ்மீரில் நடந்தும் பாலியல் வன்முறைகளும் மனிதவுரிமை மீறல்களும் எண்ணிலடங்கா. உடனடியாக பன்னாட்டுச் சமூகம் தலையிட்டு காஷ்மீரை காஷ்மீரிகளிடம் கையளிக்கவேண்டும்.

காஷ்மீரிகள் பாலஸ்தீனத்தில் அத்துமீறிக் குடியேறிவிட்டு அந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாடும் அரேபிய வம்சாவளிப் பயங்கரவாதிகள் போன்றவர்கள் அல்லர். மாறாக தமது மரபுவழித் தாயகத்தினை வல்வளைப்புச் செய்துநிற்கும் இந்துஸ்தான் பயங்கரவாததிடம் இருந்து விதலைகோரி நிற்கும் அந்த நிலத்துக்கே உரித்தான மக்கள். இதே நிலைமைதான் ஈழத்திலும் தமிழர் தாயகத்தினை வல்வளைப்புச் செய்திநிற்கும் பௌத்த சிங்களப் பயங்கரவாதத்திடம் இருந்து விடுதலைபெறுவதற்காகவே எமது விதலைப்போராட்டம் தொடங்கப்பட்டது. எனவே எமது முழு ஆதரவும் காஷ்மீரிகளுக்கே தரப்படவேண்டும்.

கொடிய கீழ்த்தரமான மனிதநேயமற்ற இந்துஸ்தான் படைகள் காஷ்மீரில் இருந்து வெளியேறவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

497582180_623562297388454_53380410657765

பார்டரில் மீண்டும் பிரச்சினையாம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இவை இங்கே சொல்லப்பட வேண்டும் என்பதால்

இங்கே சிலர் சிந்திக்கவும் தெரியாது, ஈழத்தமிழருக்கும், அவர்கள் சொல்வதுக்கும் பொருந்தும் என்பதை கூட சிந்திக்க தெரியாத *** நிலையில் இருக்கிறார்கள்.

முதலில் அத்தைகையவர்களுக்கு, எது யதார்த்தம் (அல்லது அப்படி இல்லை), எது வாதம் என்பதை பிரித்தறிவதில் கூட சிநதிக்க தெரியாமல் மொ... கதைப்பது.

நான் சொல்லியவை வாதம் அல்ல என்பது கூட புரியாத ... மரம் கூட சிந்தித்து (சூரிய) ஒளி கூடிய நோக்கி வளர்கிறது / வளைகிறது .. அந்த அளவுக்கு கூட சிந்திக்க தெரியாது இருப்பது.

குறிப்பாக, அப்படியானவர்கள் காஸ்மீரில் நடந்தது என்பதற்கு சொல்லுவது போல, ஈழத்ததமிழர் சொல்லுவதுக்கும், எந்தவொரு சிந்தனை (அறிவது என்பது பின்) இன்றி பிற சமூகங்கள் பதில் அளிக்கலாம், புறக்கணிக்கலாம், எள்ளி நகையாடலாம் என்பதை கூட புரியாத .... இவர்களை என்னவென்று சொல்வது.

(அனால், காஸ்மீரில் 90 ஆண்டு நடந்ததை பற்றியும் அறியாமல், சும்மா காஸ்மீரை மாலைக்கனவு அசரீரியில் கேட்டது என்று நினைவு பிம்பம் உருவாக்கி வாய்க்கு வந்தபடி கதைத்து இருப்பது.)

இப்படியான விடயங்களை (இதில் காஷ்மீரில் நடந்த) சொல்லும் போது, எனது அனுபவத்தில் எம்மை பற்றி வெளியாரிடம் (சீனரிடம் கூட) சொல்லும் போது முதலில் எவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்கிறதே அவர்கள் அணுகியது. ஏனெனில், அவர்கள் (எமது பிரச்சனை தோன்றிய அறிவு இல்லாவிட்டாலும்) சுயமாக சிந்திக்க தெரிந்து இருப்பது.

இறுதியில் எமது கண்ணை நாமே குத்தும் அளவுக்கு வந்து இருக்கிறது, சுயமாக, சொந்தமாக சிந்திக்கத் தெரியாது , இணையத்தை பிரதி செய்யும் கிளிப்பிள்ளை போக்கால்.

ஆனால், இந்த சிந்திக்காது கதைத்து எமது கண்ணை நாமே குத்தும் உரிமை எவருக்கும் இல்லை, குறிப்பாக ஈழத்தமிழர் எவருக்கும்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

காஷ்மீர் காஷ்மீரிகளுகே சொந்தம்.

காஸ்மீரிகள் - முஸ்லிம்களும் , இந்துக்களும் (சிவ வழிபாடு)

எல்லா தீவிரலாத அமைப்பின் நிலைப்பாடும் - முஸ்லிகளுக்கு மட்டும்.

மற்றும் முஸ்லீம் அரசியல் கட்சிகள் காணி சீர்திருத்தத்தை கருவியாக கொண்டு இந்து சனத்தொகையை குறைத்ததை வைத்து பார்க்கும் போதும்.

அப்படி என்றால் ஜம்முக்கு உங்கள் நிலைப்பாடு / பர்வை என்ன?

இங்கே உள்ள சிலர் வரலாறு தெரியாமல் கதைப்பது.

1 hour ago, வாலி said:

இதை முதலில் கவனித்து இருந்தால், இதுமட்டுமே போதும் . கொண்டாடும் அரேபிய வம்சாவளிப் பயங்கரவாதிகள் போன்றவர்கள் அல்லர்.

நீங்கள் சொல்லுவதை நீங்களாவே உடைத்து விட்ட விற்பன்னர்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இவை இங்கே சொல்லப்பட வேண்டும் என்பதால்

இங்கே சிலர் சிந்திக்கவும் தெரியாது, ஈழத்தமிழருக்கும், அவர்கள் சொல்வதுக்கும் பொருந்தும் என்பதை கூட சிந்திக்க தெரியாத *** நிலையில் இருக்கிறார்கள்.

முதலில் அத்தைகையவர்களுக்கு, எது யதார்த்தம் (அல்லது அப்படி இல்லை), எது வாதம் என்பதை பிரித்தறிவதில் கூட சிநதிக்க தெரியாமல் மொ... கதைப்பது.

நான் சொல்லியவை வாதம் அல்ல என்பது கூட புரியாத ... மரம் கூட சிந்தித்து (சூரிய) ஒளி கூடிய நோக்கி வளர்கிறது / வளைகிறது .. அந்த அளவுக்கு கூட சிந்திக்க தெரியாது இருப்பது.

குறிப்பாக, அப்படியானவர்கள் காஸ்மீரில் நடந்தது என்பதற்கு சொல்லுவது போல, ஈழத்ததமிழர் சொல்லுவதுக்கும், எந்தவொரு சிந்தனை (அறிவது என்பது பின்) இன்றி பிற சமூகங்கள் பதில் அளிக்கலாம், புறக்கணிக்கலாம், எள்ளி நகையாடலாம் என்பதை கூட புரியாத .... இவர்களை என்னவென்று சொல்வது.

(அனால், காஸ்மீரில் 90 ஆண்டு நடந்ததை பற்றியும் அறியாமல், சும்மா காஸ்மீரை மாலைக்கனவு அசரீரியில் கேட்டது என்று நினைவு பிம்பம் உருவாக்கி வாய்க்கு வந்தபடி கதைத்து இருப்பது.)

இப்படியான விடயங்களை (இதில் காஷ்மீரில் நடந்த) சொல்லும் போது, எனது அனுபவத்தில் எம்மை பற்றி வெளியாரிடம் (சீனரிடம் கூட) சொல்லும் போது முதலில் எவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்கிறதே அவர்கள் அணுகியது. ஏனெனில், அவர்கள் (எமது பிரச்சனை தோன்றிய அறிவு இல்லாவிட்டாலும்) சுயமாக சிந்திக்க தெரிந்து இருப்பது.

இறுதியில் எமது கண்ணை நாமே குத்தும் அளவுக்கு வந்து இருக்கிறது, சுயமாக, சொந்தமாக சிந்திக்கத் தெரியாது , இணையத்தை பிரதி செய்யும் கிளிப்பிள்ளை போக்கால்.

ஆனால், இந்த சிந்திக்காது கதைத்து எமது கண்ணை நாமே குத்தும் உரிமை எவருக்கும் இல்லை, குறிப்பாக ஈழத்தமிழர் எவருக்கும்.

அண்ண‌ யார்

எதையும் சொன்னால் ந‌ம்பும் ப‌ழ‌க்க‌ம் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ளிட‌ம் இல்லை , எம் முன்னேர்க‌ள் சில‌ர் அந்த‌க் கால‌த்தில் இந்தியா அவுட்டு விட்ட‌ பொய்க‌ளை உண்மையேன‌ ந‌ம்பி இருக்க‌லாம்..........................பெரும்பாலான‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் அறிவில் சிற‌ந்த‌வ‌ர்க‌ள்.......................நாங்க‌ள் மின்சார‌ம் இல்லாத‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள்.......................க‌டும் போர்.............விமான‌ தாகுத‌ல்க‌ள் இவைக‌ளுக்கு ம‌த்தியில் தான் வ‌ள‌ந்தோம்....................நாங்க‌ள் சினிமா கூத்தாடிக‌ளை த‌லையில் தூக்கி வைச்சு கொண்டாடின‌து கிடையாது.................எங்க‌ட‌ போராட்ட‌த்தை நாங்க‌ளா நேசித்து வ‌ர‌லாறுக‌ளை ப‌டித்து தெரிந்து கொண்டோம் ப‌ல‌ ஆயிர‌ம் உயிர் தியாக‌ங்க‌ளை செய்து எம் போராட்ட‌ம் மெது மெதுவாய் வ‌ள‌ந்து நின்ற‌ போது தான் நீங்க‌ள் ஆத‌ரிக்கும் ஹிந்தியா எம் போராட்ட‌த்தையும் எம் உற‌வுக‌ளையும் சிறு வ‌ட்ட்ட‌த்துக்கை வைச்சு அழித்தவை......................சும்மா ஜெய் ஹிந் என்று வீர‌ வ‌ச‌ன‌ம் இணைய‌த்தில் எழுதும் கூ முட்டைக‌ள் நாங்க‌ள் கிடையாது............................இந்திய‌ர்க‌ளின் அறிவை போன‌ கிழ‌மை ந‌ட‌ந்த‌ பாக்கிஸ்தான் போரில் பார்த்து விட்டோம்......................உல‌கில் அதிக‌ம் ப‌டிக்காத‌ புரித‌ல் இல்லா கூ முட்டைக‌ள் அதிக‌ம் வாழும் நாடு இந்தியா...........................சினிமா மோக‌த்துக்குள் மூழ்கி இருந்தால் உல‌க‌ அறிவு உண்மை த‌ன்மை பொய்க‌ள் இவை அணைத்தும் எங்கை தெரிய‌ப் போகுது😁😛...........................

Edited by இணையவன்
தணிக்கை செய்யப்பட்ட கருத்துக்கான பதில் திருத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

நீங்கள் அறிந்தவை எவை என்று ( இங்கு அலசப்படும் விடயங்ளோடு உங்களின் சிந்தனையில்தொடர்பு உள்ளவை) சாராம்சமாக சொல்ல முடியுமா?

ஆங்கேலேயர்கள் வெளியேறிய பின், காஷ்மீரின் பகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவுடனும், மறு பகுதி பாகிஸ்தானிடனும் இணைக்கப்பட்டது சரியல்ல என்பதே என் பார்வையாக இருக்கின்றது. அந்தக் காலப்பகுதிகளில் இப்படியான ஒரு தீர்வு வெவ்வேறு காரணங்களுக்காக உலகின் வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்து தனித்தனியேயான இரு நாடுகளாக ஆக்கிவிடுதல். ஆனால் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வேறு இரு நாடுகளுடன் அவை இணைக்கப்பட்டன.

அந்த நாட்டையும், மக்களையும் சுதந்திரமான ஒரு நாடாகவே விட்டிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். பெரும்பாலான பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை ஆகவும், ஒரு பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மை ஆகவும், இன்னொரு சிறிய பகுதியில் பௌத்த மக்கள் பெரும்பான்மை ஆகவும் இருப்பது ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் ஒரு நாடாகவும், அதற்குள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களாகவும் தங்கள் நிர்வாகத்தை உருவாக்க ஐநாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் உதவியிருக்கலாம்.

இன்றைய பாஜக அரசின் பிரச்சாரங்களும், செய்கைகளும் முழு இந்தியாவையுமே ஒரு ஒற்றைப்படைத் தன்மையை நோக்கியே செலுத்துகின்றது. இந்த இந்திய அரசும், அதன் பின் நிற்பவர்களும் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை காவி அடையாளத்தை போர்த்தவே முனைகின்றார்கள். மிகச் சாதரணமாக திருவள்ளுவருக்கே காவி உடையை அணிவித்து விடுகின்றார்கள் இவர்கள். உலகத் திருமறை என்று ஐயன் எழுதியது பலவும் அப்படியே வீணாகிப் போகும் இவர்களின் செயலால்.

வரலாற்றில் அது ஒரு இந்து அரசாக இருந்தது, பின்னர் முகலாயர்களே அதை ஒரு பெரும்பான்மை இஸ்லாமிய பிரதேசமாக மாற்றினார்கள், இப்போதும் மீண்டும் அதை நாங்கள் வென்றெடுப்போம் என்ற முனைப்பு தவறு என்றும் சொல்கின்றேன். அவர்களின் அரசியலை அந்த மக்களே தீர்மானிக்கவேண்டும்.

அங்கு நடைபெறும் இந்திய ராணுவ அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. இவர்களின் அடக்குமுறைகளுக்கு நாங்களும் ஒரு வாழும் சாட்சிகள். எவ்வளவு தான் தொழில்நுட்பமும், தொடர்பாடலும் முன்னேறினாலும், இவர்களால் என் ஊரில் நடத்தப்பட்டவையே என் ஊருக்கு வெளியே தெரியாத நிலைதான் இன்றும் நீடிக்கின்றது. அங்கிருந்தே இவர்கள் காஷ்மீரில் செய்யும் கொடுமைகளை நான் ஊகித்துக் கொள்கின்றேன்.

2019ம் ஆண்டில் அந்த மக்கள் மீது முழுத் தடை ஒன்றை இந்திய அரசு அமுல்படுத்தியது எல்லோருக்கும் தெரிந்ததே. அது அப்பட்டமான உரிமைகள் மீறலும், அடக்கி ஒடுக்கப்படுவதும் தானே. இலங்கை அரசு எங்களுக்கு செய்தது போன்றதே இதுவும். வெறும் கண்டனங்களை மட்டும் உலகம் எழுப்பும், பாதிக்கப்படும் மக்களுக்கு கைகொடுக்க எவரும் வருவதில்லை.

ஒரு மாநிலமாக இருந்த காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிக்கப்பட்டுவிட்டது. எங்களின் வடக்கு, கிழக்கை பிரித்ததும், பிரதேச/சமூக முரண்பாடுகளை தூண்டி விட்டதும், இதுவும் அடிப்படையில் ஒரே செயல்கள்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரசோதரன் said:

ஒரு மாநிலமாக இருந்த காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிக்கப்பட்டுவிட்டது. எங்களின் வடக்கு, கிழக்கை பிரித்ததும், பிரதேச/சமூக முரண்பாடுகளை தூண்டி விட்டதும் இதுவும் அடிப்படையில் ஒரே செயல்கள்.

56 minutes ago, ரசோதரன் said:

ஒரு மாநிலமாக இருந்த காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிக்கப்பட்டுவிட்டது. எங்களின் வடக்கு, கிழக்கை பிரித்ததும், பிரதேச/சமூக முரண்பாடுகளை தூண்டி விட்டதும், இதுவும் அடிப்படையில் ஒரே செயல்கள்.

இதில் தான் எம்மவரக்ள் இந்திய கொள்கைவகுப்பாளரை புரியாதது

எமது வடக்குகிழக்கு பிரிப்பு தவறு - வரலாற்றில் அது தமிழரின்

அனால் ஜம்மு, காஸ்மீர் அப்படி அல்ல.

(இந்தியா இப்படி கொள்கை முடிவு எடுத்தது எமக்கு மிகவும் உதவி, பொருத்தம். கச்சமீர், ஜம்மு இரண்டுக்கும் கிட்டத்தட்ட நியாயம்)

சுருக்கமாக்க, இயலுமானவரை கிளை வரலாறுகளை தவிர்த்து.

ஜம்முகாஸ்மீரில், இறுதியாக இருந்த மன்னார் Hari Sing (இந்தியா உடன் இணைந்தவர்) இன் முப்ப்பாட்டன் குலாப் சிங் (ராஜ்புட் Dogra வம்சம்) முதலே சிற்றார்சர் போன்ற நிலையில் சீக்கிய இராச்சியத்தில் ஜம்மு ஐ கொண்டு இருந்தார்.

உண்மையில் Gulab Sing (காசுமீரின் இறுதி மன்னார் ஹரி சிங்கின் (இந்தியா உடன் இணைந்தவர்) முப்பாட்டன்) சீக்கிய இராச்சியத்தில் முக்கிய தளபதி. சீக்கிய இராச்சியத்தை திபெத் பகுதிகளுக்கு நீடித்தவர்.

ஆங்கிலேயர் - சீக்கிய இராச்சிய யுத்தத்தில் Gulab Sing ஆங்கிலேயே பக்கம் மாறிவிட்டார் (இதுவே பொதுவாக நம்ப படுவது).

முன்பு யுத்தத்தில் (இப்போதும்) தோற்றவர்கள், வென்றவர்களுக்கு war indemnity பணம் கட்ட வேண்டும்.

சீக்கிய இராச்சியம் ஆங்கிலேயரால் தோற்றகடிக்கப்பட்டது. சீக்கிய இராச்சியத்திடம் போதுமான பணம் இல்லை.

அனால், Gulab Sing, ஆங்கிலேயர் பாகம் நின்றதால் (இதுவே பொதுவாக நம்ப படுவது, வேறு வடிவ கதைகளும் இருக்கிறது), ஆங்கிலேயர் war indemnity பணதின் தொகையை குறைத்து, கச்சமீரை Gulab Sing க்கு சன்மானமாக விற்றனர்.

ஆங்கிலேயருடன் , சீக்கிய இராச்சியத்தின் சமாதான Amritsar Treaty இன் பொறுப்பாளரும் Gulab Sing (காசுமீரின் இறுதி மன்னார் ஹரி சிங்கின் (இந்தியா உடன் இணைந்தவர்) முப்பாட்டன்))

(அப்படி விற்ற பின், விடுமுறைகளை கச்சமீரில் கழித்து களிப்படைந்து, ஆங்கிலேயர், பெரிய பகுதிகளை கச்சமீரில் வாங்க தெண்டித்தனர், Gulab சிங் , மற்றும் தொடர்ந்த Dogra அரசவம்சம் மறுத்து விட்டது)

இதுவே காஸ்மீர், ஜம்மு உடன் இணைந்த மிகச் சுருக்கமான வரலாறு.

இதனால் தான் ஜம்மு எப்போதும் இந்து பெரும்பான்மை.

இந்தியா உடன் ஜம்முகாஷ்மீர் இணையும் ஒப்பந்தத்தை, ஜம்மு இல் இருந்தவாறே மன்னர் Hari Sing கையொப்பம் வைத்தார்.

அந்த கையொப்பத்தை பெறுவதற்கு, ச V. P மேனன் (இவருக்கும், சிவ சங்கர் மேனனுக்குக்ம் தொடர்பு இல்லை, நான் அறிந்த வரையில்) ஜம்மு சென்றார் (என்பது உத்தியோக பூர்வ நிலைப்பாடு).

V. P. மேனன் வல்லபாய் பட்டேல் இன் இயங்கும் அதிகார வடிவம்.

(ஆனால், இன்னொரு குறிப்பு வாசித்த நினைவு, கச்மீர் மன்னர் ஹரி சிங் இடம் இருந்து கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்தத்தை மவுண்ட் பட்டேன் பெற்றுக்கொண்டதாக)

(சிறிய தவறு:

நேருவிப் மிக நெருங்கிய உச்ச நம்ம்பிக்கையாளர் K P S மேனன் (சிவசங்கர் மேனனின் பாட்டன் ) ஜம்மு சென்றார் (என்பது உத்தியோக பூர்வ நிலைப்பாடு).

)

24 ஐப்பசி 1947 மன்னர் உத்தியோக பூர்வமாக இந்தியாவிடம் உதவி கோரினார்.

26 ஐப்பசி 1947 கையொப்பம் இட்டது, உத்தியோக பூர்வமாக.

27 ஐப்பசி 1947 இந்தியா படைகள் வான் வழியாக தரை இறக்கப்பட்டனர் என்பதே உத்தியோக பூர்வ நிலைப்பாடு.

உத்தியோக பூர்வம் என்று சொல்வதன் காரணம், திகதிகளும் , கையொப்பங்களும் மோசடி செய்யப்பட்டதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

(ராஜதந்திரம் = நாகரிகமாக ஏமாற்றுவது, மிகவும் கூரியது)

Edited by Kadancha
தவறு திருத்தப்பட்டு உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kadancha said:

இதில் தான் எம்மவரக்ள் இந்திய கொள்கைவகுப்பாளரை புரியாதது

எமது வடக்குகிழக்கு பிரிப்பு தவறு - வரலாற்றில் அது தமிழரின்

அனால் ஜம்மு, காஸ்மீர் அப்படி அல்ல.

(இந்தியா இப்படி கொள்கை முடிவு எடுத்தது எமக்கு மிகவும் உதவி, பொருத்தம். கச்சமீர், ஜம்மு இரண்டுக்கும் கிட்டத்தட்ட நியாயம்)

ஜம்முவும், காஷ்மீரும் பிரிக்கப்படவில்லையே. பௌத்த மக்கள் அதிகமாக வாழும் லடாக் பகுதி தானே காஷ்மீரிலிருது பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு எங்களுக்கு உதவியாக இருக்கின்றது மற்றும் இது எவ்வாறு ஜம்முவிற்கும், காஷ்மீருக்கும் நியாயமான ஒன்று என்றும் எனக்குப் புரியவில்லை.

அன்றைய மன்னர்கள் வரிசையையும், ஆங்கிலேய ஆட்சியாளர்களையும் சில அடிப்படைகளாக தெரிந்துகொண்டு விட்டு, இன்றைய இந்தியா இன்றைய காஷ்மீரை என்ன செய்கின்றது என்று ஆராய்வது தான் பிரதானம். உலகில் எங்கென்றாலும் அன்றைய தரவுகளின் படி இன்று எப்படி உரிமையும், பங்கும் கோரமுடியும்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

இது எவ்வாறு எங்களுக்கு உதவியாக இருக்கின்றது மற்றும் இது எவ்வாறு ஜம்முவிற்கும், காஷ்மீருக்கும் நியாயமான ஒன்று என்று எனக்குப் புரியவில்லை.

சிவபூமியாக இருந்த முழு இலங்கைத்தீவு, பௌத்த பெரும்பான்மையாக மாறியது (இதை வெளிப்படையாக சொல்லவில்லை, அவர்கள் , கருத்தில் கொண்டது, 13ம் திருத்தத்திலும்)

அத்துடன், காலனித்துவதில், வடகிழக்கு தமிழர் சிவபூமி இராச்சிய பிரதேசம், சிங்கள இராச்சிய பௌத்த பிரதேங்களுடன் இணைக்கப்பட்டது.

இப்பொது பிரிக்கப்ட்டு இருப்பது, இந்தியாவில் - பௌத்த பெரும்பான்மை (ladak), இந்து, முஸ்லீம் கலப்பில் இருந்து.

(இலங்கையில் - பௌத்த பெருமைப்பாண்மை இடங்கள், இந்து (சைவம்) - முஸ்லீம் கலவையில் இருந்து பிரிவு.)

(தொடர்ந்து ஜம்மு, கசமீரை பிரிப்பதாகவும் போக்கு செல்லலாம். இது பாகிஸ்தானில் தங்கி இருக்கிறது. கொள்கை வகுப்பாளர் வெற்றிடத்தில் இயங்குவதில்லை.)

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரசோதரன் said:

இன்றைய இந்தியா இன்றைய காஷ்மீரை என்ன செய்கின்றது என்று ஆராய்வது தான் பிரதானம்

நான் சொல்லுவது யதார்த்தத்தை.

un, மேற்கு சொல்லும் நீண்ட கால அமைப்பு சர்வதேச நியதி படி, பாகிஸ்தான் காஸ்மீர் பகிஸ்தானின் இறைமைக்கு கீழ் வரும்

இந்திய காஷ்மீர் இந்திய இறைமைக்கு கீழ் வரும்.

இவை 2ம் விட்டால் ஒழிய காசுமீர் ஒன்றாக போவதில்லை.

மாறிச்சாறி, காஷ்மீருக்கு கடவுள் வரமாக பயங்கர ஆயுதங்கள் ஏதாவது கிடைத்து தாக்கினால், இந்தியா , பாகிஸ்தான் ஒன்றாக சேர்ந்து அடிக்கும் (இது தான் அரசுக்கள்).

கஹ்மீரின் நிலை கிட்டத்தட்ட குர்டிஸ்தானின் நிலை (அது 4 அரசுகளை சமாளிக்க வேண்டும்)

எனவே, இந்திய பகுதி காஷ்மீருக்கு உள்ள இப்போதைய சிறந்த தெரிவு, , இந்திய பகுதி

காஸ்மீரின் முஸ்லீம் தன்மையை மாறுவதற்கு / மாற்றுவதத்திற்கு இடம் கொடுக்காமையும், அதே நேரத்தில் இந்திய அரசுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதும்.

இப்போதைய இந்திய கொள்கை ஒரு கோணத்தில் பொருளாதார பரிசோதனை - அதாவது மத்திம , நீண்ட காலத்தில் காஸ்மீர் பொருத்தர அபிவிருத்தியால் குதர்க்கம் குறைந்து, இந்தியாவின் அங்கமாக தங்க பெரும்பாலும் வரலாம் என்பதற்கு.

எமக்கும் இதே தன்மை பிரச்சனைகள் இருக்கிறது.

அனால், சிங்களம் எமக்கு எதையும் தராததும , இந்தியா அந்த பிரிப்பை செய்ததும் இந்த நேரத்தில் எமது வசதி.

இந்திய பிரிப்பை ஏற்றுக்கொள்வது (அது நியாயமானது, லடாக் வரவேற்று உள்ளது) எமது நலனின் அடிப்படையிலும்.

அத்துடன் எமது பிரச்சனையின் தனி தன்மையும்.

இதை தவிர வேறு இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.