Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கோவில் அண்மை என்பது கோவிலில் இருந்து 300, 400 மீட்டர் என நீள முடியாது.

டெம்பிள் ரோட்டில், கோவில் வெளி வீதி முடிந்து வீதி தொடங்கும் புள்ளியில் இருந்து, சங்கிலியன் ஒழுங்கை (முன்பு அது ஒரு பெயரில்லாத ஒழுங்கை) தொடங்கும் இடம் வரையான பகுதி கோவில் வெளிவீதியில் இருந்து 150 மீட்டர், 200 மீட்டர்தான் .

இங்கே பல வீடுகளில் நானே நல்ல மச்ச கறி சாப்பிட்டுள்ளேன்.

கோவிலில் இருந்து 300, 400 மீட்டர் தொலைவில் கூட ஒரு கோப்பிக்கடை போடக்கூடாது என்பது சுத்த கோமாளித்தனம்.

அவர்கள் செய்ய நினைப்பது என்ன? வியாபாரம். Beef panini யை அங்கே வசிக்கும் மக்கள் வாங்கினால்தானே விற்க முடியும்🤣.

ஒரு கிழமை யாரும் வாங்காவிட்டால் அடுத்த கிழமை முதல் கிழங்கு ரொட்டி போடுவார்கள்.

  • Replies 218
  • Views 9.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Justin
    Justin

    இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Sasi_varnam
    Sasi_varnam

    இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன். என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் உற்சவ எல்லை என்ற ஒன்றை வரையறுத்து காலம் காலமாக இருக்கும் ஒரு நடைமுறையை மீறி இப்படி ஒரு செயலை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

கடை சரியாக கோயில் முற்றத்தில் இருந்து >3௦௦ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கே தான் தண்ணீர் பந்தல், மோர் பந்தல், காவடிகள் இளைப்பாறல் எல்லாம் ஆரம்பமாகும்.

இந்த இடத்தில் ஒரு மத நல்லிணக்கத்தை பேணினால் தான் என்ன? ரிக்கோ முதல் mango வரை மாமிச உணவு பரிமாறப்படுவதில்லை.

Barista உரிமையாளர் தெற்கை சேர்ந்தவர் சிங்களவர், அவர் தான் கடைபிடிக்கும் சமய, சம்பிரதாய எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொண்டு வழிநடப்பவர். நல்லூர் ஆலய சூழல் பற்றி, அங்குள்ள வழமைகள் பற்றி எடுத்துக் கூறினால் புரிந்துகொள்வார். அவரின் மெனு கார்டில் சில மாற்றங்களை கொண்டும் வருவார்.

உங்கள் வீட்டில் உள்ள ஸ்வாமி அரையிலேனுள்ளே மாட்டுக்கறியையும் , மீன் குழம்பையும் தட்டிலே போட்டுக்கொண்டு கொண்டு போய் சாப்பிடுவீர்கள்?

அப்படித்தான் இதுவும். ஒரு புரிந்துணர்வு, நம்பிக்கை.

இதையும் ஒரு சங்கித்தனமாக, யாழ்ப்பாண மேட்டுக்குடி மேலாதிக்கமாக எப்படி பார்க்க முடிகிறது?

நாளைக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கும் எதோ ஒரு பள்ளிவாசல் பக்கத்தில் பன்றி இறைச்சிக்கடை வந்தாலும் இப்படித்தான் நான் யோசிப்பேன்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

அடுத்த நல்லூர் திருவிழாவுக்கு அன்னதான மடங்களிலை சிக்கன் மட்டன் எண்டு அமர்க்களம் பண்ணத்தான் இருக்கு....😎

நல்லூர் எனும் குடும்ப சொத்து மீது எனக்கு எந்த பெரிய பிரமிப்பும் இல்லை.

கோவண ஆண்டியிடமும், அன்னதான கந்தனிடமும் இருக்கும் ஈர்ப்பு இந்த “காட்டாப்பு” கந்தனிடம் என்றும் இருந்ததும் இல்லை.

ஆனால் ஏனையோரின் நம்பிக்கை என்ற அளவில், கோவில் வெளி வீதியில் இதை அனுமதிக்க முடியாது என்பதை ஏற்கிறேன்.

பிகு

எந்த கோவில் எண்டால் என்ன, சுடுகாடு என்றால் என்ன, சோறு போடுவதாயின் அதுவும் கறி சோறு - நான் தயாரே🤣.

14 minutes ago, நந்தன் said:

இது நூறு சதவீத தவறான தகவல்

அவர் சொன்னது 200 வீதம் தவறான தகவல்.

என் நண்பர்கள் சிலர் இன்னும் அங்கு தான் வாழ்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய இரண்டு அண்ணா, அக்கா மற்றும் பிற சொந்தங்கள் என 5 குடும்பங்கள் நல்லூர் கோயில் சுற்றாடலில் தான் வசிக்கிறார்கள். அதிகமாக சைவம் தான் சமைப்பார்கள், மாமிசம் சமைப்பது மிகவும் குறைவு. காரணம் சுற்றி உள்ள கோயில்களில் தொடர்ந்தும் ஏதாவது உட்சவங்கள் நடக்கும் ( மூத்த விநாயகர், நாச்சி அம்மன் இப்படி பல) ஆகையினால் பெரும்பாலும் மாமிசம் தவிர்க்கப்படுகிறது.

ஆனால் சமைக்கவே மாட்டார்கள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

நல்லூரில்... அசைவ கடை திறந்த, அந்தக் கடை முதலாளியை... ஆனையிறவில் ஆறுமாதம் உப்பு அள்ள விடுங்க சார்

இலங்கையில் இப்ப உப்பு இல்லை ....இந்தியாவிலிருந்து தான் வருகிறது,...தேவை என்றால் இந்தியாவில் கொண்டு போய் உப்பு அள்ள விடலாம் ....ஆனால் நீங்கள் விரும்பமாட்டீர்கள். அல்லவா ?????? 😀

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

வீட்டுக்காரன் மாமிசம் சாப்பிடுவதையும், கோவில் அருகில் கடைக்காரன் இறைச்சிக் கடை வைப்பதையும் ஒரே தராசில் வைத்து குழப்பிக் கொள்ளாதீர்கள்.

கடை என்றால்... 100 - 200 பேர் வந்து மாட்டு எலும்பை உறிஞ்சி திண்டுவிட்டுப் போக, கழிவு எலும்பையும் வாழை இலையையும் வீதியில்தான் போடுவார்கள். அதை தெருநாய் தூக்கிக் கொண்டு போய் கோவில் வாசலில் இருந்து சாப்பிட்டால் நல்லாவா இருக்கும். 😂

அதற்காக வருமுன் காப்பதே சிறந்தது. இப்ப தடுக்காவிடில்.... ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதையாக... கச்சான் கடை கூட வைக்க இடம் இல்லாமல்... எல்லா இடமும் கவுச்சி கடை வைக்க, புலம் பெயர் தேசத்தில் இருந்து புற்றீசல் போல் கிளம்பி வந்திடுவார்கள். 🤣

பிகு:

அந்தக் கடைக்கும் சுமந்திரனுக்கும் தொடர்பு உள்ளது என்று நானும் வாசித்தேன். அதன் நதிமூலம், ரிஷிமூலம் தேடிக் கொண்டு இருக்கின்றேன். கிடைத்தவுடன்... ஆதாரத்துடன் பதிகின்றேன். 😂 🤣

கைதடியில். இடுங்கித்தோட்டம். கந்தசாமி கோவில் எங்கள் வீட்டிலிருந்து 1/2 கிலோமீட்டர் துரத்தில். தான் இருக்கும் வருடவருடம். ஆவணி மாதம் பத்து நாள் திருவிழா நடக்கும் நான் சிறுவனாக இருந்த போது.........எங்கள் திருவிழா எட்டாம். திருவிழா அது வேட்டைத்திருவிழா பெரும்பாலும் இரத்த உறவினர்கள் அதாவது உடக்குக்காரர்கள். தான் இந்த திருவிழாக்கு மேளகாரருக்கு சாப்பாடு கொடுக்கும் பொறுப்பு என்னுடைய தகப்பருக்கு கொடுத்து விடுவார்கள்,......அன்று ஒரு ஆட்டுக் கிடா வெட்டப்படும். எங்களது பின் வளவில் அழகிய பிலாமரமுண்டு அதன் ஒரு கிளை. குறுக்கே போகும் பலமாது அதில் ஆடு அளிக்கப்படும் இரத்தம் எடுத்து வறுப்பார்கள். இறைச்சியும் கறி வைப்பார்கள் கோவிலுல். மேளம் அடிப்பவர்கள் ஏழு எட்டு மணிக்கு அழைத்து வருவார்கள்’’ சாரயம் குடித்து இறைச்சியும் சோறு. இடியாப்பம் சாப்பிட்டு திரும்ப போய் மேளம் அடிப்பார்கள். மச்சத்தை சாப்பிட்டு உள் வீதிகள் எல்லாம் மேளம் அடிக்கலாம் என்றால் கோவிலுக்கு பக்கத்தில் இறைச்சி. சாப்பாடு விற்பதில். என்ன தவறு ??

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

கைதடியில். இடுங்கித்தோட்டம். கந்தசாமி கோவில் எங்கள் வீட்டிலிருந்து 1/2 கிலோமீட்டர் துரத்தில். தான் இருக்கும் வருடவருடம். ஆவணி மாதம் பத்து நாள் திருவிழா நடக்கும் நான் சிறுவனாக இருந்த போது.........எங்கள் திருவிழா எட்டாம். திருவிழா அது வேட்டைத்திருவிழா பெரும்பாலும் இரத்த உறவினர்கள் அதாவது உடக்குக்காரர்கள். தான் இந்த திருவிழாக்கு மேளகாரருக்கு சாப்பாடு கொடுக்கும் பொறுப்பு என்னுடைய தகப்பருக்கு கொடுத்து விடுவார்கள்,......அன்று ஒரு ஆட்டுக் கிடா வெட்டப்படும். எங்களது பின் வளவில் அழகிய பிலாமரமுண்டு அதன் ஒரு கிளை. குறுக்கே போகும் பலமாது அதில் ஆடு அளிக்கப்படும் இரத்தம் எடுத்து வறுப்பார்கள். இறைச்சியும் கறி வைப்பார்கள் கோவிலுல். மேளம் அடிப்பவர்கள் ஏழு எட்டு மணிக்கு அழைத்து வருவார்கள்’’ சாரயம் குடித்து இறைச்சியும் சோறு. இடியாப்பம் சாப்பிட்டு திரும்ப போய் மேளம் அடிப்பார்கள். மச்சத்தை சாப்பிட்டு உள் வீதிகள் எல்லாம் மேளம் அடிக்கலாம் என்றால் கோவிலுக்கு பக்கத்தில் இறைச்சி. சாப்பாடு விற்பதில். என்ன தவறு ??

🫢..............

உண்மையாகவா அண்ணா.....................

எங்களூர் அம்மன் கோவில் திருவிழா நாட்களில் நாங்கள் ஊர்க் கட்டுப்பாடு, அம்மன் கண்ணைக் குத்துவார் என்று சொல்லி வளர்க்கப்பட்டு, 15 நாட்களும் கிழங்கு ரொட்டி தான் சாப்பிட்டுக் கொண்டு திரிந்தோம். அம்மன் திருவிழாவின் போது ஊரில் எல்லா ரொட்டிக் கடைகளிலும் கிழங்கு ரொட்டி மட்டுமே போடுவார்கள்.

உங்கள் இடத்தில் மேளம் அடிப்பவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்................

என்னுடைய ஊரில் கோவிலில் இருந்து 300 மீட்டர், 400 மீட்டர் என்று அளந்தால் அடுத்த ஊர் வந்துவிடும். அந்த நாட்களில் கோவிலின் முன் பக்க அருகாமையில் (சிவாஜிலிங்கத்தின் வீட்டருகே), பின் பக்க அருகாமையில் (தலைவர் வீட்டருகே) என்று ஏராளமான ரொட்டிக் கடைகள் இருந்தன. இந்தப் பதினைந்து நாட்களும், வெள்ளிக்கிழமைகளையும் தவிர்த்து, ஏனைய நாட்களில் நல்ல கொத்துரொட்டி போடுவார்கள். கோவிலின் முன்பக்கம் இருந்த ரொட்டிக்கடை மிகவும் பிரபலம். 25 மீட்டர் தூரம் அல்லது குறைவாக வரும் என்று நினைக்கின்றேன்.

இதுவரை நல்லூரைச் சுற்றி அருகாமையில் இப்படியான கடைகள் இல்லாமல் இருப்பது ஆச்சரியம் தான்............ அங்கிருக்கும் மக்களின் மனம் புண்படுகின்றது என்றால், கொஞ்சம் தள்ளி கடையை போட்டுக் கொள்ளுங்கள்................

ஈழம் ஒரு சிவபூமி, சைவர்களின் ராஜ்யம் என்று சொல்லப்படும் மற்றும் எழுதப்படும் போது, அவர்கள் வேறு ஒரு பிரதேசத்தை சொல்லுகின்றார்கள் என்ற உணர்வே இன்றுவரை ஏற்படுகின்றது. சிவசேனாவும், வேலன் சுவாமிகளும் அதைவிட அந்நியமாகத் தெரிகின்றார்கள்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

Barista உரிமையாளர் தெற்கை சேர்ந்தவர் சிங்களவர், அவர் தான் கடைபிடிக்கும் சமய, சம்பிரதாய எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொண்டு

இவர் தமிழர் சுமன் தோழர் என யாழில் இன்னொரு திரியில் கூறப்பட்டதே?

அவனவன் சுமந்திரனை எதிர்கிறேன் பேர்வழி எண்டு தன் தன் வியாபார கறளை எல்லாம் தீர்த்து கொள்கிறார்கள் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

🫢..............

உண்மையாகவா அண்ணா.....................

எங்களூர் அம்மன் கோவில் திருவிழா நாட்களில் நாங்கள் ஊர்க் கட்டுப்பாடு, அம்மன் கண்ணைக் குத்துவார் என்று சொல்லி வளர்க்கப்பட்டு, 15 நாட்களும் கிழங்கு ரொட்டி தான் சாப்பிட்டுக் கொண்டு திரிந்தோம். அம்மன் திருவிழாவின் போது ஊரில் எல்லா ரொட்டிக் கடைகளிலும் கிழங்கு ரொட்டி மட்டுமே போடுவார்கள்.

உங்கள் இடத்தில் மேளம் அடிப்பவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்................

என்னுடைய ஊரில் கோவிலில் இருந்து 300 மீட்டர், 400 மீட்டர் என்று அளந்தால் அடுத்த ஊர் வந்துவிடும். அந்த நாட்களில் கோவிலின் முன் பக்க அருகாமையில் (சிவாஜிலிங்கத்தின் வீட்டருகே), பின் பக்க அருகாமையில் (தலைவர் வீட்டருகே) என்று ஏராளமான ரொட்டிக் கடைகள் இருந்தன. இந்தப் பதினைந்து நாட்களும், வெள்ளிக்கிழமைகளையும் தவிர்த்து, ஏனைய நாட்களில் நல்ல கொத்துரொட்டி போடுவார்கள். கோவிலின் முன்பக்கம் இருந்த ரொட்டிக்கடை மிகவும் பிரபலம். 25 மீட்டர் தூரம் அல்லது குறைவாக வரும் என்று நினைக்கின்றேன்.

இதுவரை நல்லூரைச் சுற்றி அருகாமையில் இப்படியான கடைகள் இல்லாமல் இருப்பது ஆச்சரியம் தான்............ அங்கிருக்கும் மக்களின் மனம் புண்படுகின்றது என்றால், கொஞ்சம் தள்ளி கடையை போட்டுக் கொள்ளுங்கள்................

ஈழம் ஒரு சிவபூமி, சைவர்களின் ராஜ்யம் என்று சொல்லப்படும் மற்றும் எழுதப்படும் போது, அவர்கள் வேறு ஒரு பிரதேசத்தை சொல்லுகின்றார்கள் என்ற உணர்வே இன்றுவரை ஏற்படுகின்றது. சிவசேனாவும், வேலன் சுவாமிகளும் அதைவிட அந்நியமாகத் தெரிகின்றார்கள்.

49 minutes ago, Kandiah57 said:

கைதடியில். இடுங்கித்தோட்டம். கந்தசாமி கோவில் எங்கள் வீட்டிலிருந்து 1/2 கிலோமீட்டர் துரத்தில். தான் இருக்கும் வருடவருடம். ஆவணி மாதம் பத்து நாள் திருவிழா நடக்கும் நான் சிறுவனாக இருந்த போது.........எங்கள் திருவிழா எட்டாம். திருவிழா அது வேட்டைத்திருவிழா பெரும்பாலும் இரத்த உறவினர்கள் அதாவது உடக்குக்காரர்கள். தான் இந்த திருவிழாக்கு மேளகாரருக்கு சாப்பாடு கொடுக்கும் பொறுப்பு என்னுடைய தகப்பருக்கு கொடுத்து விடுவார்கள்,......அன்று ஒரு ஆட்டுக் கிடா வெட்டப்படும். எங்களது பின் வளவில் அழகிய பிலாமரமுண்டு அதன் ஒரு கிளை. குறுக்கே போகும் பலமாது அதில் ஆடு அளிக்கப்படும் இரத்தம் எடுத்து வறுப்பார்கள். இறைச்சியும் கறி வைப்பார்கள் கோவிலுல். மேளம் அடிப்பவர்கள் ஏழு எட்டு மணிக்கு அழைத்து வருவார்கள்’’ சாரயம் குடித்து இறைச்சியும் சோறு. இடியாப்பம் சாப்பிட்டு திரும்ப போய் மேளம் அடிப்பார்கள். மச்சத்தை சாப்பிட்டு உள் வீதிகள் எல்லாம் மேளம் அடிக்கலாம் என்றால் கோவிலுக்கு பக்கத்தில் இறைச்சி. சாப்பாடு விற்பதில். என்ன தவறு ??

எனது தாயாரிடம் ஒரு தவில் அடிப்பவரின் மகன் படித்தார்.

பேச்சுவாக்கில் ஒரு நாள் எங்கள் வீட்டில் நேற்று குடல் கறி என சொல்லி விட்டான்🤣.

அவனின் அப்பாதான் எங்கள் ஊர் கோவிலில் தினமும் மேளம்.

அப்பா நேற்று கோவிலுக்கு போகவில்லையா என கேட்க, போனவர். எங்கள் வீட்டில் வழமையாக நாங்கள் மச்சம் சாப்பிட்டு விட்டே கோவிலுக்கு போவோம், அப்போதுதான் உசாராக மேளம் அடிக்கலாம் எண்டு வேறு சொல்லிவிட்டான்.

அடுத்த நாள் காலை அவனோடு அவன் தாயும் வந்து, மகன் நேற்று சோயா மீட்டை, இறைச்சி என தவறாக சொல்லி விட்டார் என ஒரு விளக்கம் கொடுத்தார்🤣.

இது எங்கும் நடப்பது என நினைக்கிறேன்.

மேற்கு வங்க பிராமணர் மீனை சைவம் என சொல்லி அடிப்பார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

நல்லூரில் உற்சவ எல்லை என்ற ஒன்றை வரையறுத்து காலம் காலமாக இருக்கும் ஒரு நடைமுறையை மீறி இப்படி ஒரு செயலை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

கடை சரியாக கோயில் முற்றத்தில் இருந்து >3௦௦ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கே தான் தண்ணீர் பந்தல், மோர் பந்தல், காவடிகள் இளைப்பாறல் எல்லாம் ஆரம்பமாகும்.

இந்த இடத்தில் ஒரு மத நல்லிணக்கத்தை பேணினால் தான் என்ன? ரிக்கோ முதல் mango வரை மாமிச உணவு பரிமாறப்படுவதில்லை.

Barista உரிமையாளர் தெற்கை சேர்ந்தவர் சிங்களவர், அவர் தான் கடைபிடிக்கும் சமய, சம்பிரதாய எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொண்டு வழிநடப்பவர். நல்லூர் ஆலய சூழல் பற்றி, அங்குள்ள வழமைகள் பற்றி எடுத்துக் கூறினால் புரிந்துகொள்வார். அவரின் மெனு கார்டில் சில மாற்றங்களை கொண்டும் வருவார்.

உங்கள் வீட்டில் உள்ள ஸ்வாமி அரையிலேனுள்ளே மாட்டுக்கறியையும் , மீன் குழம்பையும் தட்டிலே போட்டுக்கொண்டு கொண்டு போய் சாப்பிடுவீர்கள்?

அப்படித்தான் இதுவும். ஒரு புரிந்துணர்வு, நம்பிக்கை.

இதையும் ஒரு சங்கித்தனமாக, யாழ்ப்பாண மேட்டுக்குடி மேலாதிக்கமாக எப்படி பார்க்க முடிகிறது?

நாளைக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கும் எதோ ஒரு பள்ளிவாசல் பக்கத்தில் பன்றி இறைச்சிக்கடை வந்தாலும் இப்படித்தான் நான் யோசிப்பேன்.

எங்கடை சில ஆட்களுக்கு…. கோயிலுக்கு பக்கத்தில் இருந்து தான் இறைச்சி தின்ன வேண்டும் என்ற குறுக்குப் புத்தி ஏன் வந்தது என்று தெரியவில்லை. விட்டால்… பூணூல் போட்டுக் கொண்டு பூசை செய்யவும் வெளிக்கிட்டு விடுவார்கள் போலுள்ளது.

யாழ்ப்பாணத்தில் எத்தனையோ மாமிசக் கடைகள் “ஈ” ஓட்டிக் கொண்டு இருக்க, கோவிலடிக்கு வந்துதான் இறைச்சி சாப்பிட வேண்டும் என்ற கீழ்த்தரமான சிந்தனையை என்னவென்பது. சிலருக்கு…. சைவம் என்றால், அதற்குள் சம்பந்தம் இல்லாமல் வந்து கருத்து கந்தசாமி போல்… எதையாவது உளறிக் கொட்டி விட்டு போவதை வழக்கமாகவே வைத்திருக்கின்றார்கள்.

புதன்கிழமை மதிப்பிற்குரிய வேலன் சுவாமிகள் குறிப்பிட்ட Barista கடையின் முன் நடாத்திய போராட்டத்தின் போது…. அளவுக்கு அதிகமான பொலிசார் கடைக்குப் பாதுகாப்பு கொடுக்கும் போதே… இது ஒரு அரசியல்வாதியின் பினாமியின் கடையாக இருக்கலாம் அல்லது அன்னிய மதத்தை சேர்ந்தவரது கடையாக இருக்கலாம் என யோசித்தேன்.

நீங்கள் அவர் தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர் என குறிப்பிட்ட போது… பொலிசாரின் அதிகப் படியான பாதுகாப்பின் அர்த்தம் புரிந்தது.

எப்படியோ… கடை அகற்றப் பட்டது சந்தோசம்👍🏽.

அதற்காக அழுது வடிபவர்கள்… சோனக தெருவில் உள்ள “மொக்கன் கடையில்” புட்டும், மாட்டு இறைச்சிக் கறியும் சாப்பிட்டு ஆறுதல் அடையட்டும். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

நல்லூரில் உற்சவ எல்லை என்ற ஒன்றை வரையறுத்து காலம் காலமாக இருக்கும் ஒரு நடைமுறையை மீறி இப்படி ஒரு செயலை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

கடை சரியாக கோயில் முற்றத்தில் இருந்து >3௦௦ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கே தான் தண்ணீர் பந்தல், மோர் பந்தல், காவடிகள் இளைப்பாறல் எல்லாம் ஆரம்பமாகும்.

இந்த இடத்தில் ஒரு மத நல்லிணக்கத்தை பேணினால் தான் என்ன? ரிக்கோ முதல் mango வரை மாமிச உணவு பரிமாறப்படுவதில்லை.

Barista உரிமையாளர் தெற்கை சேர்ந்தவர் சிங்களவர், அவர் தான் கடைபிடிக்கும் சமய, சம்பிரதாய எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொண்டு வழிநடப்பவர். நல்லூர் ஆலய சூழல் பற்றி, அங்குள்ள வழமைகள் பற்றி எடுத்துக் கூறினால் புரிந்துகொள்வார். அவரின் மெனு கார்டில் சில மாற்றங்களை கொண்டும் வருவார்.

உங்கள் வீட்டில் உள்ள ஸ்வாமி அரையிலேனுள்ளே மாட்டுக்கறியையும் , மீன் குழம்பையும் தட்டிலே போட்டுக்கொண்டு கொண்டு போய் சாப்பிடுவீர்கள்?

அப்படித்தான் இதுவும். ஒரு புரிந்துணர்வு, நம்பிக்கை.

இதையும் ஒரு சங்கித்தனமாக, யாழ்ப்பாண மேட்டுக்குடி மேலாதிக்கமாக எப்படி பார்க்க முடிகிறது?

நாளைக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கும் எதோ ஒரு பள்ளிவாசல் பக்கத்தில் பன்றி இறைச்சிக்கடை வந்தாலும் இப்படித்தான் நான் யோசிப்பேன்.

இந்த உரிமையாளரை முதலிலேயே அணுகி இதை செய்திருக்கலாம்.

இதில் மக்கள் அதிகம் அலட்டவில்லை என்பது “வேலனும் பத்து மொக்கராசுகளும்” நிற்கும் படத்தை பார்தாலே புரியும்.

அத்துகிரிய பரிஸ்டாவின் மெனு கீழே.

ஒரே ஒரு ஐட்டம் மட்டுமே மாடு. அதை மாற்றுவதில் அதிக சிக்கல் இருக்காது என நினைக்கிறேன்.

மூன்று சிக்கன் அயிட்டம் உள்ளது.

https://barista.lk/menu/

5 minutes ago, தமிழ் சிறி said:

மதிப்பிற்குரிய வேலன் சுவாமிகள்

மாட்டும் வரை விவேகானந்தா..

மாட்டினா நித்யானந்தா🤣.

அண்மையில் இதே போல் இன்னொரு மதிப்புக்குரியவரை இலண்டன் கோர்ட் பாலியல் வன் புணர்வு குற்றவாளி என உள்ளே போட்டது.

பாப்பம் வேலனுக்கும் ஒரு லெனின் இருப்பார்தானே🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

அளவுக்கு அதிகமான பொலிசார் கடைக்குப் பாதுகாப்பு கொடுக்கும் போதே… இது ஒரு அரசியல்வாதியின் பினாமியின் கடையாக இருக்கலாம் அல்லது அன்னிய மதத்தை சேர்ந்தவரது கடையாக இருக்கலாம் என யோசித்தேன்.

அப்ப வேலனோடு வந்த பத்து மொக்கராசுகளுக்கு பயந்து பொலிஸ் இறங்கவில்லை? 🤣

11 minutes ago, தமிழ் சிறி said:

எப்படியோ… கடை அகற்றப் பட்டது சந்தோசம்

பெயர் பலகையா, கடையா அகற்றப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அப்ப வேலனோடு வந்த பத்து மொக்கராசுகளுக்கு பயந்து பொலிஸ் இறங்கவில்லை? 🤣

வேலவன் சாமியார்… இதில் இறங்கியிராவிட்டால், கடை இப்போதும் இருந்திருக்கும் என்ற உண்மை… உங்களுக்கு இன்னும் புரிபடவில்லைப் போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

வேலவன் சாமியார்… இதில் இறங்கியிராவிட்டால், கடை இப்போதும் இருந்திருக்கும் என்ற உண்மை… உங்களுக்கு இன்னும் புரிபடவில்லைப் போலுள்ளது. 😂

கடை இன்னும் இருக்கிறது என நினைகிறேன்.

பெயர் பலகைதான் அனுமதி இன்றி இருந்தமையால் தூக்கி போயுள்ளனர்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

இங்கே தான் தண்ணீர் பந்தல், மோர் பந்தல், காவடிகள் இளைப்பாறல் எல்லாம் ஆரம்பமாகும்.

இது தவறான தகவல்.

கீழே இந்த கடையின் கூகிள் இணைப்பை தந்துள்ளேன்.

நல்லூர் குறுக்கு தெருவுக்கு எதிராக உள்ள உயர்ந்த மதிலுக்கு பின்னால் உள்ள வீட்டில்தான் கடை இருப்பதாக காட்டுகிறது.

இந்த குறுக்கு தெரு சந்தியில் வைத்து நீங்கள் சொன்ன நடவடிக்கைகள் நானறிய இடம்பெறுவதில்லை.

அதே கூகிள் ஸ்டீர்ட் வியூவில் நல்லூர் கோவில் பக்கமாக பருத்திதுறை வீதியில் உருட்டி போனால், நல்லூர் பிரதேச சபை வரும் அதற்கும் அப்பால்தான் நீங்கள் சொன்னன ஓலையால் வேயப்பட்ட வளைவு வரும்.

இந்த கூகிகிள் ஸ்டிர்ரீட் வியூவில் அந்த வளைவுக்கு ஓலை வேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த இடத்தில்தான் திரு விழா நாட்களில் மட்டும் பரியர் போட்டப்பட்டு, நீங்கள் சொன்ன நிகழ்வுகள் நடக்கும்.

இந்த கடை இருக்கும் இடம் எந்த வகையிலும் கோயில் சுற்றாடல் என்று சொல்லவே முடியாத இடம்.

https://maps.app.goo.gl/j6B5Xka2XdNfNcLD7?g_st=com.google.maps.preview.copy

பிகு

படங்களை பார்த்தால் நல்ல அழகாக உள்ளது.

அடுத்த முறை போய் ஒரு கபே லாத்தே வித் ஓட் மில்க் அடிக்க வேண்டும். முதலிலேயே கந்தனுக்கு ஒரு சலூட்டை போட்டு விட்டு வந்தால் பிளக் பெப்பர் பீப்பையும் ஒரு வெட்டு வெட்டலாம்.

யாழ்கள உறவுகளுக்கு படத்துடன் பயண கட்டுரை கரண்டீட்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

கைதடியில். இடுங்கித்தோட்டம். கந்தசாமி கோவில் எங்கள் வீட்டிலிருந்து 1/2 கிலோமீட்டர் துரத்தில். தான் இருக்கும் வருடவருடம். ஆவணி மாதம் பத்து நாள் திருவிழா நடக்கும் நான் சிறுவனாக இருந்த போது.........எங்கள் திருவிழா எட்டாம். திருவிழா அது வேட்டைத்திருவிழா பெரும்பாலும் இரத்த உறவினர்கள் அதாவது உடக்குக்காரர்கள். தான் இந்த திருவிழாக்கு மேளகாரருக்கு சாப்பாடு கொடுக்கும் பொறுப்பு என்னுடைய தகப்பருக்கு கொடுத்து விடுவார்கள்,......அன்று ஒரு ஆட்டுக் கிடா வெட்டப்படும். எங்களது பின் வளவில் அழகிய பிலாமரமுண்டு அதன் ஒரு கிளை. குறுக்கே போகும் பலமாது அதில் ஆடு அளிக்கப்படும் இரத்தம் எடுத்து வறுப்பார்கள். இறைச்சியும் கறி வைப்பார்கள் கோவிலுல். மேளம் அடிப்பவர்கள் ஏழு எட்டு மணிக்கு அழைத்து வருவார்கள்’’ சாரயம் குடித்து இறைச்சியும் சோறு. இடியாப்பம் சாப்பிட்டு திரும்ப போய் மேளம் அடிப்பார்கள். மச்சத்தை சாப்பிட்டு உள் வீதிகள் எல்லாம் மேளம் அடிக்கலாம் என்றால் கோவிலுக்கு பக்கத்தில் இறைச்சி. சாப்பாடு விற்பதில். என்ன தவறு ??

கந்தையா அண்ணை... சொல்லுறன் என்று குறை நினைக்கப்படாது, எண்டாலும் சொல்ல வேண்டி இருக்கு.

நமது கோவில்களுக்கு என்று சில விதிமுறைகள், வரைமுறைகள் உண்டு. அதனை மீறாமல் ஒழுக்கமாக செய்து முடிப்பதே ஆறறிவு மனிதருக்கு அழகு. கோவில் திருவிழாவுக்கு மேளம் அடிக்க வந்தவனுக்கு... ஆடு வெட்டி... இரத்த வறையும், ஆட்டுக் கறியும் வைத்து கொடுப்பதும், அவனுக்கு சாராயம் கொடுப்பதும் ஒழுக்கமான செயல் அல்ல. அப்படியான மனப்பிறழ்வு உள்ளவர்கள் திருவிழாவை செய்யாமல்.... அந்தத் திருவிழாவை ஆச்சாரமாக செய்பவர்களிடம் ஒப்படைத்து விடுவதே புண்ணியமானதும், பண்பானதுமான செயல்.

அதை விட்டுட்டு.... செய்த கூடாத செயலை, பெருமையாக வேறு சொல்லிக் கொண்டு திரிவதை என்னவென்று சொல்ல.

பொதுவாக தமிழர்கள்.... எந்த ஒரு செயலையும் விதிமுறைகளை மீறி செய்துவிட்டு, அதனை பெருமையாக நினைப்பவர்கள். அதனை கெட்டித்தனம் என நினைத்துக் கொண்டு விஞ்ஞான விளக்கமும் கொடுப்பதை பார்க்க சகிக்க முடியாது.

ஒரு முஸ்லீம் பன்றி இறைச்சி சாப்பிட்டு விட்டு, பெருமையாக பீத்திக் கொண்டு திரிவதில்லை.

முற்ற வெளியில் தமன்னாவின் நிகழ்ச்சி பார்க்க காசு கொடுத்து ரிக்கற் வாங்காமல் பனைமரத்தில் ஏறி நின்று பார்த்த இனமும், 50 ரூபாய் ரிக்கற் வாங்கி விட்டு 5000 ரூபாய் ரிக்கற் எடுத்தவர்களுக்கான கதிரையில் இருந்து கொண்டு... சண்டித்தனம் விட்ட இனத்திடம், வேறு நல்ல விடயங்களை எதிர்பார்க்க முடியாதுதானே. 😂

உங்களுக்கு இதனை தனிப்பட சொல்லவில்லை. இங்கு மாமிசக் கடை வைப்பதற்கு முட்டுக் கொடுத்த எல்லோருக்கும் பொதுப்படையாக சொல்லப் பட்டது. நன்றி. 🙏

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

நமது கோவில்களுக்கு என்று சில விதிமுறைகள், வரைமுறைகள் உண்டு. அதனை மீறாமல் ஒழுக்கமாக செய்து முடிப்பதே ஆறறிவு மனிதருக்கு அழகு. கோவில் திருவிழாவுக்கு மேளம் அடிக்க வந்தவனுக்கு... ஆடு வெட்டி... இரத்த வறையும், ஆட்டுக் கறியும் வைத்து கொடுப்பதும், அவனுக்கு சாராயம் கொடுப்பதும் ஒழுக்கமான செயல் அல்ல.

என் அறிவுக்கு எட்டிய வகையில் சைவ கோயில் விதிமுறைகளில், எல்லா இடமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிமுறைப்படியும், ஒரு சொற்ப கோயில்கள் ஆதி குடிகளின் (சரியான பதமோ தெரியாது) பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையிலும் வழிபாடுகள் நடாத்தப்பட்டுகின்றன.

அதன் அடிப்படையில் தான் ஒரு சில (சிறுதெய்வ, குலதெய்வ) கோயில்களில் உயிர் பலிகள், வேள்விகள் நடத்தப்படுகின்றன.

இப்படியான உயிர் பலிகளை பிரத்தியேகமாக நான் விரும்பவில்லை. ஆனாலும் அந்த பாரம்பரிய முறையை பின் பற்றுபவர்களின் விருப்பத்துக்கு குறுக்கே நான் போக முடியாது.

ஆகவே அப்படி வழிபாடுமுறைகளை வைத்திருக்கும் கோயில்களையும், நல்லூர் கோயில் நடைமுறைகளையும் ஒப்பிடுவதை தவிர்க்கலாம்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

என் அறிவுக்கு எட்டிய வகையில் சைவ கோயில் விதிமுறைகளில், எல்லா இடமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிமுறைப்படியும், ஒரு சொற்ப கோயில்கள் ஆதி குடிகளின் (சரியான பதமோ தெரியாது) பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையிலும் வழிபாடுகள் நடாத்தப்பட்டுகின்றன.

அதன் அடிப்படையில் தான் ஒரு சில கோயில்களில் உயிர் பலிகள், வேள்விகள் நடத்தப்படுகின்றன.

இப்படியான உயிர் பலிகளை பிரத்தியேகமாக நான் விரும்பவில்லை. ஆனாலும் அந்த பாரம்பரிய முறையை பின் பற்றுபவர்களின் விருப்பத்துக்கு குறுக்கே நான் போக முடியாது.

ஆகவே அப்படி வழிபாடுமுறைகளை வைத்திருக்கும் கோயில்களையும், நல்லூர் கோயில் நடைமுறைகளையும் ஒப்பிடுவதை தவிர்க்கலாம்.

ஆம், சசி ... அந்தக் கடைசிப் பந்தி சரியான கருத்து. 👍

சிலருக்கு... எத்தனை, எதனுடன் ஒப்பிடுவது என்ற பக்குவம் இன்னும் காணாது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

உண்மையாகவா அண்ணா.....................

ஆமாம் ...நான் செய்யவில்லை எங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி அல்லது செயல்கள்

மிக சிறந்த மேளக்காரன். கைதடியை சேர்ந்தவர் தான் அவருடைய பெயர் பழனி அந்த காலத்தில் இந்தியாவில் நடந்த போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடம் பெற்றவர் தமிழ்நாட்டில் முதலமைச்சரிடம். பரிசு பெற்றவர் முதலமைச்சர் பெயர் தெரியாது கைதடி சந்தியில் வந்து நின்றால் அவரை சுற்றி ஒரு கூட்டம் கூடி விடும் பொதுவாக மேளகாரர். எல்லாம் மச்சம். சாப்பிடுவார்கள் ஆனால் கோயில் மேளக்காரர். மதிப்பு இல்லாதவர்கள் சோம்பேறிகள். அவர்கள் சாப்பிடுவதில்லை மக்கள் மச்சம். சாப்பிடுவார்களா ?? இல்லையா?? என்று பார்ப்பதில்லை .....நன்றாக மேளம் அடிப்பாரா. ?? என்று தான் பார்ப்பார்கள்

5 hours ago, தமிழ் சிறி said:

சிலருக்கு

யாராக இருக்கும் ....🤣 பெயரை குறிப்பிட்டு எழுதவும்

5 hours ago, தமிழ் சிறி said:

சோனக தெருவில் உள்ள “மொக்கன் கடையில்” புட்டும், மாட்டு இறைச்சிக் கறியும் சாப்பிட்டு ஆறுதல் அடையட்டும். 😂 🤣

அங்கை சாப்பிட்டு விட்டு கோவிலுக்குள் வரலாம்” இல்லையா???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதை விட்டுட்டு.... செய்த கூடாத செயலை, பெருமையாக வேறு சொல்லிக் கொண்டு திரிவதை என்னவென்று சொல்ல.

நான் செய்யவில்லை பார்த்ததை சொன்னேன்

1 hour ago, தமிழ் சிறி said:

சண்டித்தனம் விட்ட இனத்திடம், வேறு நல்ல விடயங்களை எதிர்பார்க்க முடியாதுதானே. 😂

உண்மை தான் உங்கள் இனத்தைத் தானே சொல்கிறீர்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன்.

என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும், நல்லூர் Barista கிளையில் உணவு தெரிவுகளில் இருந்து மாமிசத்தை நீக்குவதாக தாங்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

நடக்குதா பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பொதுவாக தமிழர்கள்.... எந்த ஒரு செயலையும் விதிமுறைகளை மீறி செய்துவிட்டு, அதனை பெருமையாக நினைப்பவர்கள். அதனை கெட்டித்தனம் என நினைத்துக் கொண்டு விஞ்ஞான விளக்கமும் கொடுப்பதை பார்க்க சகிக்க முடியாது

நான் இருக்கும் இடத்தில் கோவில் உண்டு” அதற்கு அருகாமையில். துருக்கி இத்தாலி. ......ஜேர்மன் களின் சிறிய உணவு நிலையங்களுண்டு இறைச்சி விற்கும் கடைகளுமுண்டு

ஆனால் அதை மூடும்படி எவரும் சொன்னது இல்லை சொல்ல முடியாது கடவுள் கூட செல்ல மாட்டார் அடித்து புசி. என்று தான் சொல்வார். சொல்லப்பட்டு உள்ளது”

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Sasi_varnam said:

இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன்.

என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும், நல்லூர் Barista கிளையில் உணவு தெரிவுகளில் இருந்து மாமிசத்தை நீக்குவதாக தாங்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

நடக்குதா பார்ப்பம்.

நேரடியாக களத்தில் இறங்கி, நாகரீகமான முறையில் விடயத்தை அணுகி உள்ளீர்கள்👏.

பரிஸ்டா நிறுவனமும் ஒரு காப்பரேட்டுக்குரிய reputational damage awareness உடன் செயல் பட்டுள்ளனர்.

Beef, chicken இற்கு பதிலாக vegan beef, vegan chicken ஐ அவர்கள் பரிமாறலாம்.

விலையை கொஞ்சம் கூட்டியும் விற்கலாம்.

இதை ஒரு விளம்பர உத்தியாகவும் பாவிக்கலாம். இந்த திரியை வாசித்த பலர் ஒருதரமேனும் ஊருக்கு போகும் போது இங்கே போவார்கள்.

பார்ட்டிகள், பார்பிகியூக்களில் இது மேலும் அலசப்பட்டு இன்னும் பிரபலமாகும்.

இது யாழ்பாண தமிழரின் பிற்போக்குத்தனத்தை காசாக்கி கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பம் பாரிஸ்டாவுக்கு.


சுமந்திரனுக்கும் இதற்கும் சம்பந்தமிருப்பதாஅன ஊகத்தின் அடிப்படையில் இந்த விடையத்தில் குறுக்கு சால் ஓடியோருக்கு பரிஸ்டாவின் நெகிழ்வு போக்கும், கடை தொடரப்போவதும், மேலதிக விளம்பரமும் பாரிய மன உழைச்சலை தரும் என்பதில் ஐயமில்லை🤣.

ஒரு மார்கெட்டிங் ஏஜெண்டை வைத்து கூட அடைய முடியாத பப்ளிசிட்டியை பாரிஸ்டாவுக்கு கொடுத்துள்ளனர் வேலனும் மொக்கராசுகளும்.

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காவது இவர்களுக்கு எப்போதும் நடப்பதுதானே🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நந்தன் said:

இது நூறு சதவீத தவறான தகவல்

வணக்கம் தம்பி

நான் கண்டதை சொல்கிறேன். அப்படியானால் நூறு சதவிகிதம் என்பது 200 சதவீத தவறு.

மேலும் போன வருடம் எனது அண்ணனின் மகன் நல்லூர் கந்தசுவாமி கோயில் முன் வீதியில் வீடு ஒன்றை பார்த்து வீடு மற்றும் விலை பிடித்திருந்தபோதும் மாமிசம் சமைப்பது உகந்ததல்ல என்பதால் சுண்டிக்குளியில் வாங்கினான். எனவே நான் சொல்ல வந்தது அங்கு வாழும் மக்களின் சமூக பழக்கம் சம்பந்தமானது மட்டுமே. உங்கள் நண்பர்கள் ஆடு மாடு கூட அங்கே அறுத்து அடிக்கலாம். அது அவரவர் மனநிலை சார்ந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.