Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்?

யாழ். மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.

இந்நிலையிலேயே யாழ். மாவட்ட அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
யாழ். மாவட்டத்தில் நேற்று திங்கள் கிழமை எரிபொருளுக்காக ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக அறிந்தேன். இன்றையதினம் அநுராதபுரத்திலிருந்து 23 பௌசர்களில், ஒரு பௌரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் யாழ். மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருட்கள் யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, நாளையும் இதே அளவான எரிபொருள் எடுத்துவரப்பட்டு யாழ். மாவட்டதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் சேமிப்பு நிலையத்திற்கு தொடர்ச்சியாக எரிபொருள் எடுத்து வரப்பட்டு சேமிக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே யாழ். மாவட்ட மக்கள் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.samakalam.com/யாழில்-திட்டமிட்ட-எரிபொர/

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் குறித்து அதிரடி அறிவிப்பு!

எரிபொருள் குறித்து அதிரடி அறிவிப்பு!

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் பகுதிகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானிக்க கூடியதாக உள்ளதாவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmc0dgyf80007qp4ktbq7jcua

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு, எப்போ, என்னென்ன… தட்டுப்பாடுகள் வரும் என,

பல மாதங்கள் முன்பே துல்லியமாக கணிக்கும்…

யாழ்ப்பாணிகளின் மூளைக்கு,

இந்த உலகில் எவனும் கிட்ட நெருங்க முடியாது. 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

எங்கு, எப்போ, என்னென்ன… தட்டுப்பாடுகள் வரும் என,

பல மாதங்கள் முன்பே துல்லியமாக கணிக்கும்…

யாழ்ப்பாணிகளின் மூளைக்கு,

இந்த உலகில் எவனும் கிட்ட நெருங்க முடியாது. 😂 🤣

அதனால் தான் இன்றும் நிமிர்ந்து நிலைத்து நிற்கின்றார்கள். இல்லையேல் சோமாலியா எத்தியோப்பியா மாதிரி யாழ்ப்பாணிகளை எலும்பும் தோலுமாக ஆக்கியிருப்பார்கள். cool

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2025 at 00:04, குமாரசாமி said:

அதனால் தான் இன்றும் நிமிர்ந்து நிலைத்து நிற்கின்றார்கள். இல்லையேல் சோமாலியா எத்தியோப்பியா மாதிரி யாழ்ப்பாணிகளை எலும்பும் தோலுமாக ஆக்கியிருப்பார்கள். cool

👉 https://www.facebook.com/watch?v=4124586927821777&locale=de_DE 👈

//பெற்றோல் பற்றாக் குறையினால்... இஸ்ரேலியர்கள் தங்களுக்குள் மோதல்.//
அங்கேயே அடிபடுறானுங்க. எப்படியென்றாலும்...பெற்றோலுக்கு முதல் வரிசையில் நின்றது, யாழ்ப்பாணத்தான் தான். அதுக்குப் பிறகுதான் இஸ்ரேல்காரன்.  🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.