Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியில் உலக கழிப்பறை மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் உலக கழிப்பறை மாநாடு

வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007

டெல்லி: உலக அளவில் நிலவும் கழிப்பறை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக டெல்லியில் 40 நாடுகள் பங்கேற்கும் உலக கழிப்பறை மாநாடு தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் ஒரு காட்சியை தவறாமல் காண முடியும். அதிலும் அதிகாலையிலும், மாலை நேரங்களிலும் பயணம் செய்வோரின் கண்களுக்கு இந்தக் காட்சி தப்பவே தப்பாது.

அது - ரயில்வே டிராக்கின் ஓரங்களில் உள்ள செடிகளுக்கு இடையே புதைந்து காணப்படும் மனிதர்கள்தான். அவர்கள் தங்களது இயற்கை உபாதையை போக்க இப்படிப் புதர்களை நாடுவது சகஜமான காட்சியாகி விட்டது.

ரயில் வரும்போது எழுந்து நின்று கொள்வதும், ரயில் ேபான பின்னர் அமர்ந்து 'பாரத்தை' இறக்குவதும் சகஜமான காட்சியாகும்.

இந்தியக் கிராமங்களில் மலம் கழிக்க மக்கள் அதிகம் நாடுவது வயல் வெளிகளையும், ரயில்வே பாதைகளையும்தான். திறந்தவெளியில்தான் அவர்கள் தங்களது 'பாரத்தை' இறக்கி வைத்து விட்டுச் செல்கிறார்கள்.

இதில் பெண்களின் நிலைதான் ரொம்ப சோகமானது. இருள் பிரியாத அதிகாலை நேரங்களிலும், இருள் கவியும் மாலை நேரங்களிலும்தான் அவர்கள் இப்படி போக முடியும். இதனால் அவர்களுக்கு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வேறு சில பக்கவிளைவுப் பிரச்சினைகளுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இது இந்தியாவில் மட்டும் இல்லை. உலகம் முழுவதும் இந்த கழிப்பறைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன. இதுகுறித்து யோசித்த ஐ.நா. சபை, 2025ம் ஆண்டுக்குள் இதற்கு நிரந்தரத் தீர்வு காண தீர்மானித்தது.

வளரும் நாடுகளில் நவீன டாய்லெட் வசதிகளை ஏற்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. செலவுகள் அதில் முக்கியமான ஒன்று. ஆனால் அதற்கு மாற்று வழி உள்ளது.

அதுகுறித்து விவாதிக்கத்தான் டெல்லியில் உலக கழிப்பறை மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. 4 நாள் நடக்கும் இந்த மாநாட்டில், 40க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு கழிப்பறைப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு என்ன, செலவுகளைக் குறைக்க மாற்று வழி என்ன என்பது குறித்து விவாதிக்கின்றனர்.

ஐ.நா. மதிப்பீட்டின்படி, உலகம் முழுவதும் 20.6 கோடி மக்கள் முறையான, சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணிக்கையை 2015ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க ஐ.நா. திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 70 லட்சம் பேர் முறையான கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் பிரதிநிதியான பிந்தேஸ்வர் பதக் கூறுகையில், மற்ற பிரச்சினைகளைப் போல இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினை.

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் அடிப்படை சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. இதுகுறித்துத்தான் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப் போகிறோம் என்றார்.

இந்தியாவில் சுலப் இன்டர்நேஷனல் நிறுவனம் குறைந்த செலவிலான கழிப்பறைகளை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் துணைத் தலைவரான அனிதா ஜா கூறுகையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கழிப்பறை முறைதான் மிகவும் சிறந்தது, செலவு குறைந்தது. இந்த வகை கழிப்பறைகளை உருவாக்க குறைந்தது 700 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 3000 ரூபாய் வரை செலவாகும்.

இதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை என்பது முக்கியமான அம்சமாகும். தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் இத்தகைய கழிப்பறைகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் தண்ணீரையும் கூட நாம் சேமிக்க முடியும் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2007/11...t-in-delhi.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு மிக அவசியமான மாநாடு. பொதுச் சுகாதாரம் இந்தியாவைப் பொறுத்தவரை மிக கீழ்த்தரமாகவே உள்ளது. தமிழகத்தின் தலைநகரில் சிறுநீர், மல வாடை வீசாத தெரு என்று ஒன்றிருக்க முடியுமா..??! சென்னையில் மட்டுமல்ல.. தமிழகம் முழுவதுமே அப்படித்தான். இந்த நிலை மாறி ஆணும் பெண்ணும் பொதுச் சுகாதாரத்துக்கு முக்கியம் கொடுக்க கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். இன்றேல் தொற்றுநோய்களின் பெருக்கத்தை சனத்தொகை அடர்த்தியுள்ள தேசமொன்றில் குறைப்பது என்பது சாத்தியப்பாடாக அமையாது. :wub:

Edited by nedukkalapoovan

அட பாவிங்களா எதுக்கு எல்லாம் மாநாடு வைக்கிறது என்று விவஸ்தையே இல்லையா :) அது சரி இந்த உலக மாநாடு நடக்கிற இடத்தில கழிப்பறை எப்படி என்று சொல்லவில்லை!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பீலிங் :D -

"வெளிநாட்டில பப்ளிக்கில கிஸ் அடிக்கலாம் ஆனா பிஸ் அடிக்க முடியாது ஆனா இந்தியாவில பப்பிளிக்கிள கிஸ் அடிக்க முடியாது ஆனா பிஸ் அடிக்கலாம்" :wub:

நல்ல விசயம்...

நான் ஒரு முறை டெல்லிக்கு போய் இருந்தபோது நாற்றம் தாங்கமுடியவில்லை. புகையிரதப்பாதையின் இருமருங்கும் அப்போது திறந்த மலசலகூடமாக பாவிக்கப்பட்டு வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாநாட்டுக்கு போய்வந்த சிறிலங்கா பிரதிநிதியின் கருத்து என்னதெறியுமோ.....ஆசியாவில் இருந்து ஜரோப்பா நாட்டுக்கு விஜயம் செய்பவர்கள் கடதாசி பாவிப்பதால் அவர்களுக்கு நோய்கள் வரும்சந்தர்ப்பமதிகமாம் அகவே,அங்குள்ள மலசலகூடத்திற்க்கு நீர் வசதி செய்துகொடுக்கவேன்டுமாம்.....இப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விசயம்...

நான் ஒரு முறை டெல்லிக்கு போய் இருந்தபோது நாற்றம் தாங்கமுடியவில்லை. புகையிரதப்பாதையின் இருமருங்கும் அப்போது திறந்த மலசலகூடமாக பாவிக்கப்பட்டு வந்தது.

தம்பி மாப்பு எங்கடை ஊரிலையும் றயில் றோட்டுக்கரையிலை அங்கங்கை கு-பம் கும்-மாக இருந்த கண்கொள்ளாக்காட்சியை காண நீங்கள் குடுத்து வைக்கேல்லை.

சென்னையில் ஒரு இடத்தில் பார்த்தேன். கழிப்பறை நல்ல சுத்தமாக இருந்தது ஆனால் கழிப்பறையச்சுற்றி கும்பம் கும்பமாக..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.