Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

14 AUG, 2025 | 11:59 AM

image

கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையை செய்த கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் பிள்ளைகள் திருமணமாகி வேறு பகுதிகளில் குடியேறிய பின்னர் அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

குறித்த நபர் சம்பவத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு பேர் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். 

ஏனெனில் அவர் முன்தினம் கடையில் சொக்லேட்டுகளை திருடும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்துள்ளது.

முதியவரிடம் சொக்லேட் வாங்கும் அளவிற்கு பணம்  இல்லாமையால் சொக்லேட் பிரியரான அவர் திருடியுள்ளார். அவர் வழமையாக கடைக்குச் செல்லும் போது தனக்கும் அவரது மனைவிக்கும் சொக்லேட்கள் வாங்கி வரும் பழக்கம்  இருந்துள்ளது.

சந்தேகநபர்கள் தாக்குதலுக்குள்ளான முதியவரை கடை மூடும் நேரம் வரை உள்ளே வைத்திருந்து வீதியில் விட்டுச் சென்றுள்ளனர். 

அவ் வழியூடாக சென்ற பெண்ணொருவர் அவரை அடையாளம் கண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார் என மரணப்படுக்கையில் இருந்த முதியவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜித விஜேகோனின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

https://www.virakesari.lk/article/222548

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை ஐயா.

செய்தி திரட்டி என்பதை பார்த்துவிட்டு ஏதோ உலகத்தில் உருப்படாத நாடு ஒன்றில் இப்படி நடைபெற்றதோ என எண்ணினேன்.

இலங்கையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது என்பதை வாசிக்க அதிர்ச்சியாக உள்ளது.

நாட்டில் மனிதாபிமானம் இல்லாது போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

என்ன கொடுமை ஐயா.

செய்தி திரட்டி என்பதை பார்த்துவிட்டு ஏதோ உலகத்தில் உருப்படாத நாடு ஒன்றில் இப்படி நடைபெற்றதோ என எண்ணினேன்.

இலங்கையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது என்பதை வாசிக்க அதிர்ச்சியாக உள்ளது.

நாட்டில் மனிதாபிமானம் இல்லாது போகின்றது.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் உணவு திருடியதாக ஒரு சிறுமி தாக்கப்பட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா இது ஒரு சொக்கலேட்டுக்கு கொலையா?இந்த உலகம் எங்கு செல்கிறது??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் உணவு திருடியதாக ஒரு சிறுமி தாக்கப்பட்டிருந்தார்.

26 minutes ago, புலவர் said:

என்னையா இது ஒரு சொக்கலேட்டுக்கு கொலையா?இந்த உலகம் எங்கு செல்கிறது??

இலங்கை போன்ற வளரும் நாடுகள் கட்டிடங்களாலும் வீதிகளாலும் வளர்வதே வளர்ச்சியாகும் என்ற சிந்தனாவால், ஏழை மக்கள் பெருகிவரும்நிலை. பாவம் ஒரு மூதாளர் செய்தது தவறேயானபோதும், மரண தண்டனை கொடுக்கும் அளவு சென்றிருப்பது பெரும் துயரமாகும். பொதுவுடமைத் தத்துவார்த்த கொள்கைவழி ஆட்சி வந்தாலும் இனவாதநோய்த்தொற்றில் இருக்கும்வரை மக்களின் பசி பட்டிணி மாறப்போவதில்லை. முன்னைய ஆட்சிகளின் தொடர்ச்சியே இந்த ஆட்சியுமாகும்

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயம் said:

செய்தி திரட்டி என்பதை பார்த்துவிட்டு ஏதோ உலகத்தில் உருப்படாத நாடு ஒன்றில் இப்படி நடைபெற்றதோ என எண்ணினேன்.

சரியாக தான் எண்ணியுள்ளீர்கள். இந்த நவீன யுகத்திலேயே வங்குரோத்தான உருப்படாத நாடு

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அக்னியஷ்த்ரா said:

சரியாக தான் எண்ணியுள்ளீர்கள். இந்த நவீன யுகத்திலேயே வங்குரோத்தான உருப்படாத நாடு

வெளிநாட்டில் உள்ள பலரும் (தமிழர்கள்) இலங்கையில் பாரிய முதலீடு செய்கின்றார்கள். வீடுகள் கட்டுகின்றார்கள். கோயில்கள் கட்டுகின்றார்கள். பலரின் எதிர்பார்ப்பும் பகுதி அளவிலாவது இலங்கையில் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்பதுதான். வாழ்ந்து வழியனுப்பி வைத்த நாடு, வந்து வாழவிரும்பும் நாடு இடர்களை எதிர்கொள்ளும்போது அனைவருக்கும் சஞ்சலம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

வெளிநாட்டில் உள்ள பலரும் (தமிழர்கள்) இலங்கையில் பாரிய முதலீடு செய்கின்றார்கள். வீடுகள் கட்டுகின்றார்கள். கோயில்கள் கட்டுகின்றார்கள். பலரின் எதிர்பார்ப்பும் பகுதி அளவிலாவது இலங்கையில் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்பதுதான். வாழ்ந்து வழியனுப்பி வைத்த நாடு, வந்து வாழவிரும்பும் நாடு இடர்களை எதிர்கொள்ளும்போது அனைவருக்கும் சஞ்சலம்தான்.

இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள், இலங்கையும் இந்தியாவும் கிட்டதட்ட ஒரே காலப்பகுதியில் (ஒராண்டு) சுதந்திரம் பெற்ற நாடுகள், ஆரம்பத்தில் இலங்கைவளர்ச்சிப்பாதையில் பயணித்தது, தற்போது இலங்கை மிக மோசமான 3 ஆம் உலக நாடாக மாறுகிறதோ எனும் ஒரு வருத்தம் உள்ளது, ஆரம்பத்தில் அரச சேவையில் இலஞ்சம் பெறுபவர்களை சிறைக்கனுப்பிய அரசு தற்போது பெருமளவில் ஊழல் செய்து நாட்டை திவாலாக்கியது.

இலங்கை உள்நாட்டுப்போரின் பின்னர் மிக மோசமான நிலை நோக்கி அதன் பாதை வழியே தொடர்ந்தும் செல்கிறது, இலங்கையிலும் இந்தியாவிலும் ஊழல், சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறை என பொதுவான அம்சம் இருந்தாலும் ஒப்பீட்டலவில் இந்தியா இலங்கை இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

இலங்கை சுதந்திரம் பெறாமல் இருந்திருந்தால் ஒரு அபிவிருத்தி அடைந்த நல்ல சிறந்த தேசமாக வந்திருக்கும், 77 வருடங்களின் பின்னர் இலங்கை வாழ்மக்களின் இந்த நிலையினை உருவாக்கிய இந்த சுதந்திரதினத்தினை வெக்கம் இல்லாமல் கொண்டாடுகிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.