Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலணையில் தீ!

adminAugust 28, 2025

image_cdcf981e44.jpg

மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால், வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது.

இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ் மாநகர சபையின் தீயணைப்பி வாகனம் அப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடும் காற்றுக் காரணமாக பெரும் சுடர்விடு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் பலமணி நேரம் போராடிய கட்டுப்படுத்தினர்.

இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர்கதையாகி இருக்கின்ற நிலையில் குறித்த சட்டவிரோத செயலைச் செய்யும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது பிரதேசத்தின் அதிகாரிகள் திணறிவருகின்றனர்.

பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள குறித்த பகுதிக்கு பருவ காலங்களில் வெளி நாடுப் பறவைகள் அதிகளவில் வருகை தரும் அவை தமது இனப்பெருக்கங்களை செய்வதும் வழமை.  இவ்வாறு தீ வைக்கப்படுவதால் பறவைகள் சரணாலயமும் கேள்விக்குறியாக்கியுள்ளது

இதேநேரம் இவ்வாறு தொடர்ச்சியாக புற்றரைகள் தீவைக்கப்படுவதால் அந்த புற்களை உணவாக கொள்ளும் கால்நடைகளும் உணவின்றி குடிமனைகளுக்கு செல்லும் நிலையும்  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/219693/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

யாரைய்யா இந்த விசமிகள்? இப்படியான இடங்களை Droneகள் மூலம் கண்காணிக்கலாம். தீ மூட்டியவர்களை பிடித்து தகுந்த தண்டனை வழங்கவேண்டும். பச்சை மட்டையை சூடாக்கி ஆசனப்பக்கமாய் நாலு போட்டால் திருந்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர்கதையாகி இருக்கின்ற நிலையில்.....

ஒரு வேளை பற்றைகள் மறைவில் சட்ட விரோத செயற்பாடுகள் நடப்பதால் கொழுத்தி விடடார்களோ ? பாவம் பனைமரங்கள் அழிந்துபோக போகின்றன ,

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நியாயம் said:

யாரைய்யா இந்த விசமிகள்? இப்படியான இடங்களை Droneகள் மூலம் கண்காணிக்கலாம். தீ மூட்டியவர்களை பிடித்து தகுந்த தண்டனை வழங்கவேண்டும். பச்சை மட்டையை சூடாக்கி ஆசனப்பக்கமாய் நாலு போட்டால் திருந்துவார்கள்.

பச்சை மட்டையை…. சூடாக்காமல், ஆசனப் பக்கம் போட்டாலே… ஜென்மத்துக்கும் உந்த ஊத்தைவாளி வேலையை செய்ய மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நியாயம் said:

யாரைய்யா இந்த விசமிகள்? இப்படியான இடங்களை Droneகள் மூலம் கண்காணிக்கலாம். தீ மூட்டியவர்களை பிடித்து தகுந்த தண்டனை வழங்கவேண்டும். பச்சை மட்டையை சூடாக்கி ஆசனப்பக்கமாய் நாலு போட்டால் திருந்துவார்கள்.

3 hours ago, தமிழ் சிறி said:

பச்சை மட்டையை…. சூடாக்காமல், ஆசனப் பக்கம் போட்டாலே… ஜென்மத்துக்கும் உந்த ஊத்தைவாளி வேலையை செய்ய மாட்டார்கள்.

கலப்படம் இல்லாத சிறிதளவு மிளகாய்த்தூள்,கொஞ்ச ஆனையிறவு உப்பு,ஆமணக்கு எண்ணை கலந்து பச்சை மட்டை அடித்த இடங்களில் தடவ வேண்டும்.

ஏழேழு ஜென்மத்திற்கும் எந்த தவறும் செய்ய மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கலப்படம் இல்லாத சிறிதளவு மிளகாய்த்தூள்,கொஞ்ச ஆனையிறவு உப்பு,ஆமணக்கு எண்ணை கலந்து பச்சை மட்டை அடித்த இடங்களில் தடவ வேண்டும்.

ஏழேழு ஜென்மத்திற்கும் எந்த தவறும் செய்ய மாட்டார்கள்.

எரிவுக்கு… மிளகாய்த்தூள், ஆனையிறவு உப்பு ஓகே….

அது என்ன ஆமணக்கு எண்ணையின் விசேசம்? புதுசா இருக்கு. நான் இதுவரை கேள்விப்படவில்லை. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, தமிழ் சிறி said:

எரிவுக்கு… மிளகாய்த்தூள், ஆனையிறவு உப்பு ஓகே….

அது என்ன ஆமணக்கு எண்ணையின் விசேசம்? புதுசா இருக்கு. நான் இதுவரை கேள்விப்படவில்லை. 😂

சொல்கிறேன் கேளுங்கள்.😎

எண்ணைகளில் ஆமணக்கெண்னை விசேடமானது. பிசுபிசுப்பு தன்மை அதிகமானது.அது மட்டுமில்லாமல் தோல்களில் ஒட்டும் தன்மை கூடியது. இந்த ஆமணக்கெண்ணையுடன் ஆனையிறவு உப்பையும் ஒரிஜினல் மிளகாய் தூளையும் கலந்து பச்சை மட்டை சாத்தல் போட்ட இடத்தில் தடவி விட்டால் அவ்வளவுதான்.சம்பந்தப்பட்டவருக்கு இமயமலை உச்சி கண்ணெதிரே தெரியும். 😂

சன்லைட்,மில்க்வைட் போன்ற காரம் கூடிய சவுக்காரங்களினாலும் எப்படி தேய்த்து கழுவினாலும் சருமத்தை விட்டு அகலாது.😋

தவறான சிந்தனை உள்ள ஒருவர் வாழ்நாள் முழுவதும் நல்லதையே செய்ய தூண்டும் செய்முறை அது.cool

On 29/8/2025 at 06:00, தமிழ் சிறி said:

எரிவுக்கு… மிளகாய்த்தூள், ஆனையிறவு உப்பு ஓகே….

அது என்ன ஆமணக்கு எண்ணையின் விசேசம்? புதுசா இருக்கு. நான் இதுவரை கேள்விப்படவில்லை. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.