Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது

adminAugust 31, 2025

0-9.jpg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபரை கைது செய்யாது தவிர்க்க 20 இலட்ச ரூபாய் இலஞ்சம் வாங்க முற்பட்ட மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மூவர்  காவல்துறையினரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்

மாதகல் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவர் மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தரினால் கைது செய்யப்பட்டார்.   கைதில் இருந்து குறித்த நபரை விடுவிக்க , 30 இலட்ச ரூபாய் பணம் இளைஞனிடம் லஞ்சமாக கோரியுள்ளனர். அதற்கு இளைஞன் சம்மதிக்காது , 20 இலட்ச ரூபாய் கொடுப்பதற்கு சம்மதித்ததை அடுத்து , இளைஞனை விடுவித்து , சங்கானையில் உள்ள மதுவரி திணைக்கள அலுவலகத்திற்கு வந்து பணத்தினை தருமாறு கூறி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து , தன்னிடம் லஞ்சம் கோரிய விடயம் தொடர்பாக இளைஞன் காங்கேசன்துறை பிரிவு குற்றத்தடுப்பு  காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார்.  காவல்துறையினர் குறித்த  இளைஞனுடன் சிவில் உடையில் மதுவரி திணைக்களத்திற்கு சென்று , இளைஞனை ஒரு தொகை பணத்தினை கொடுக்க வைத்து , பணத்தினை பெற முயன்ற மூன்று அதிகாரிகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையின ர்  இலஞ்சமாக கொடுக்க முற்பட்ட ஒரு தொகை பணத்தினை  சான்று பொருளாக    மன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

https://globaltamilnews.net/2025/219869/

  • கருத்துக்கள உறவுகள்

இலஞ்சம் பெற முயன்ற மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், குற்றப்புலனாய்வு திணைகளத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று (30) மாதகல் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் முயற்சித்தனர்.

பின்னர் அவரை கைது செய்யாமல் விடுவதற்காக 30 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது

இந்நிலையில், போதைப் பொருளை வைத்திருந்தவர் 20 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்குவதற்கு இணங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர்கள் சந்தேகநபரை கைது செய்யாமல் விட்டு, இலஞ்சமாக கோரிய தொகையினை சித்தங்கேணி பகுதியில் உள்ள மதுவரித் திணைக்கள அலுவலகத்திற்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான அதிகாரிகள் மூவரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmezitm3u004xo29n167y0zr8

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:

ம் வடை போச்சா.

பக்கிரிகள்… 30 லட்சம் ரூபாய் லஞ்சம், என்று அதிகமாய் பேராசை பட்டு விட்டார்களோ…. இப்ப, நல்ல ஒரு அரச உத்தியோகம் போச்சே… 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

பக்கிரிகள்… 30 லட்சம் ரூபாய் லஞ்சம், என்று அதிகமாய் பேராசை பட்டு விட்டார்களோ…. இப்ப, நல்ல ஒரு அரச உத்தியோகம் போச்சே… 😂 🤣

மல்லாகம் நீதி மன்றம்தானே...பிணைகிடைச்சு ...யூரோப் டூர் போய் வந்து ...கட்டினவீட்டையும் கலகலப்பாய்...வீட்டுவேலை முடிக்கலாம் ...காசு மீண்டும் சேர்க்கலாம் ...அட வேறை இடத்திலை எழுத வேண்டியதை ..இங்கை எழுதிப்போட்டன் ...என்றாலும் சிறியருக்க்ய் விளங்கும் ...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

மல்லாகம் நீதி மன்றம்தானே...பிணைகிடைச்சு ...யூரோப் டூர் போய் வந்து ...கட்டினவீட்டையும் கலகலப்பாய்...வீட்டுவேலை முடிக்கலாம் ...காசு மீண்டும் சேர்க்கலாம் ...அட வேறை இடத்திலை எழுத வேண்டியதை ..இங்கை எழுதிப்போட்டன் ...என்றாலும் சிறியருக்க்ய் விளங்கும் ...

ஊரில் உள்ள கஸ்ரப் பட்டவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று…. “யூ ரியூப்” நடத்தி, புலம் பெயர் தேசம் எங்கும் வசூல் வேட்டை நடத்தி தனக்கு புது மாடி வீடும், சொந்தமாக காரும், உடல் முழுக்க நகையும் போட்ட அந்த புளிச்சல் ஏவறை விடும் யூ ரியூப்காரனை சொல்கிறீர்கள் என நினைக்கின்றேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

ஊரில் உள்ள கஸ்ரப் பட்டவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று…. “யூ ரியூப்” நடத்தி, புலம் பெயர் தேசம் எங்கும் வசூல் வேட்டை நடத்தி தனக்கு புது மாடி வீடும், சொந்தமாக காரும், உடல் முழுக்க நகையும் போட்ட அந்த புளிச்சல் ஏவறை விடும் யூ ரியூப்காரனை சொல்கிறீர்கள் என நினைக்கின்றேன். 😂

இதுவும் மல்லாகம் நீதிவான்தான்....பிணைகொடுத்து...இப்ப இவைக்கும் அதுதான் நடக்கும் ...ஒரு சின்ன உதாரணம் மட்டும் சொன்னேன்...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

.அட வேறை இடத்திலை எழுத வேண்டியதை ..இங்கை எழுதிப்போட்டன் ...என்றாலும் சிறியருக்க்ய் விளங்கும் ...

எனக்கும் விழங்கியது.அவனை மட்டும் குறை சொல்லி வேலையில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.