Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷாந்தி நினைவேந்தல்

சனி, 06 செப்டம்பர் 2025 01:43 AM

கிருஷாந்தி நினைவேந்தல்

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு செம்மணி வளைவில் நடைபெற உள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைத்து வருகிறது.

நிகழ்ச்சி நிரல்:

காலை 9.00 – நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம்

காலை 9.30 – நினைவுப் பகிர்வு

காலை 10.00 – “வாசலிலே கிருசாந்தி” கவிதைத் தொகுப்பு வெளியீடு

காலை 10.30 – ஆவண காட்சிப்படுத்தல்

மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைக்கின்றார்கள்.

https://jaffnazone.com/news/50435

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களுக்கு நினைவு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகாலமாக மனதில் மிக கவலையை ஏற்ப்படுத்திய சம்பவம் கிருசாந்தி மரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

காலங்கள் கடந்தாலும் கொலையாளிகள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

சாமாதான தேவதையாக வந்த சந்திரிகா

இதற்காக ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி கிருஷாந்தி படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

07 Sep, 2025 | 08:13 AM

image

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு செம்மணி அணையா விளக்குத்திடலில் நடைபெறவுள்ளது.

நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில் காலை 9மணிக்கு நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம் நடைபெற்று 9.30க்கு நினைவுப் பகிர்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

10மணிக்கு “வாசலிலே கிருசாந்தி” என்ற கவிதைத் தொகுப்பு வெளியீடு செய்யப்படவுள்ளதோடு 10.30க்கு ஆவண காட்சிப்படுத்தல் நடைபெறவுள்ளது.

WhatsApp_Image_2025-09-07_at_08.09.33.jp

https://www.virakesari.lk/article/224406

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத்தால் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆவது நினைவு தினம்!

adminSeptember 7, 2025

Krishanthy1.jpeg?fit=1170%2C658&ssl=1

செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி  குமாரசுவாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.09.25) நடந்தது.

கிருசாந்தி வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில் நடந்தது.

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில்

கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அத்தோடு “வாசலிலே கிருசாந்தி” எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

Krishanthy2.jpeg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2025/220176/

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

07 Sep, 2025 | 03:16 PM

image

யாழ்ப்பாணம், செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது. 

வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில் நடந்தது.

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

அத்தோடு "வாசலிலே கிருசாந்தி" எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது

மேலும் இந்த நினைவேந்தலில் தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம்,  வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

011__1_.jpg

02__2_.jpg

011__3_.jpg

011__8_.jpg

https://www.virakesari.lk/article/224452

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.