Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 1

04 Oct, 2025 | 10:43 AM

image

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் வரவு செலவுத் திட்ட செலவினங்களைக் குறைத்தது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் துறைகளுக்குக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்த சூழலில், நாட்டின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமிக்கப்பட்டார். எனினும், இவரது நியமனம் போராட்டக்காரர்களை மேலும் தூண்டியது. இதன் விளைவாக, போராட்டக்காரர்கள் 'அனைத்தையும் தடுப்போம்' (Block Everything) என்ற இயக்கத்தைத் தொடங்கி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

அழைப்பை ஏற்று, தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பிரான்ஸின் முக்கிய நகரங்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

போராட்டத்தின் எதிரொலியாக, உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. கோபுர நிர்வாகத்தின் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால், கோபுரம் திறக்கப்படவில்லை.

ஒன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பை அறியாமல் நேரில் வந்த ஏனைய சுற்றுலாப் பயணிகள், ஈபிள் கோபுரத்தைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பிரான்ஸ் அரசு பொதுச் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகப் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/226857

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி செய்வதற்கும் போராட்டங்கள் நடத்துவதிலும் தேர்ச்சி பெற்ற அதிக மக்களைக் கொண்ட நாடு பிரான்ஸ் நாடு.🤪

Edited by Paanch

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்ஸ்ல் மட்டும் பொருளாதார நெருக்கடியில்லை. உக்ரேன் போருக்கு எந்த நாடெல்லாம் பண நீதியாக முட்டு கொடுக்கின்றதோ அந்த நாடுகள் எல்லாம் பொருளாதார நெருக்கடியில் தான் உள்ளது. பொருளாதார நெருக்கடியில் ரஷ்யாவும் அடங்கும்.

படித்தவர்களும் பேரறிஞர்களும் விஞ்ஞானிகளும் சிறந்த மூளைசாலிகளிலும் நிறைந்த நாடுகளில் தான் நீயா நானா எனும் மமதையும் போர்க்குணங்களும் அதீதமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஐரோப்பா ஒரு இரஸ்சியாவுடனான ஒரு போருக்கு தயாராகி வருகிறது, அதற்காக மக்களை தயாராக்க முனைகிறது, அதற்காக ஊடகங்களை பயன்படுத்துகிறது.

இரஸ்சியா 3 நாளில் உக்கிரேனை ஆக்கிரமித்து விடும் என இரஸ்சியா கூறியதாக (இங்கு யாழிலும் அதனையே இப்போதும் கூறிவருகிறார்கள்) ஒரு கருத்தினை உருவாக்கி ஊடகங்களில் வெளியிட்டார்கள், அதற்கான ஆதாரம் என எதுவும் இணையத்தில் இருந்திருக்கவில்லை.

ஒரு புறம் இரஸ்சியாவினால் உக்கிரேனை கூட எதிர்க்க முடியாத காகித புலி என கூறிக்கொண்டு மறுபுறம் இரஸ்சியாவினால் ஒட்டு மொத்த ஐரோப்பாவிற்கும் ஆபத்து எனும் கருத்தையும் விதைக்கிறார்கள் (மக்கள் எந்த கூற்றை நம்புவது?).

ஐரோப்பாவில் என்றுமில்லாதவாறு அதிகரிக்கும் இரஸ்சிய ட்ரோனினது ஊடுறுவல் என கூறுவதற்கு அப்பாவி மக்களின் சிந்தனை திறனையினை கேள்விக்குள்ளாக்கும் எவ்வாறு ஒரு இந்த விலை குறைந்த ட்ரோனினால் ஐரோப்பாவிற்கு பயணிக்க முடிகிறது எனும் ஆச்சரியத்திற்கு புதிது புதிதாக கதை விடுகிறார்கள்.

இவ்வளவும் எதற்காக? மக்கள் ஆதரவற்ற, சில தலைவர்கள் தங்கள் சுய நலத்திற்க்காக பல உயிர்களை பணயம் வைக்கிறார்கள், இந்த நிலையினை மக்கள் புரிந்து கொள்ள முடியாதவாறு ஊடகங்களை தம்வசமாக வைத்துள்ளார்கள் ஆனால் இதே ஊடகங்கள் முன்னுக்கு முரணாக கருத்துகளை தெரிவிக்கும் போதாவது மக்கள் புரிந்து கொள்ளமுடியாதவாறு ஒற்றை பார்வை கொண்ட ஒரு சமூகமாக மாறினால் அதற்காக உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தினை பணயம் வைக்கும் சமூகமாக உருவாகும் நிலைக்கு எம்மை நாமே வலிந்து தள்ளுகின்றோம்.

போரினால் நேரடியாக பாதிப்படைவது சாதாரண மக்களே, அரசியல் வாதிகள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் நீண்ட கால கூர்ப்பினை கடந்து வந்திருந்தாலும் கற்கால மனிதனின் இயற்கையான பாதுகாப்பு பொறிமுறையான கூட்ட மனப்பாண்மையினை கடந்து வரமுடியவில்லை, கல்வி விஞ்ஞானம் என எவ்வளவு முன்னேறினாலும் மக்களை இவ்வாறு ஒரு முனைப்பார்வையாளர்களாக்க இந்த ஊடகங்களால் முடிகின்ற நிலை காணப்படுகிறது, தற்போதய முக்கிய பிரச்சினையாக இருப்பது ஒரு பக்க சார்பற்ற ஊடக நிலைப்பாடு உலகில் உருவாக வேண்டும் அது தேவையற்ற அழிவைத்தரும் போலிகளை இனங்காண உதவுவதாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, vasee said:

ஐரோப்பாவில் என்றுமில்லாதவாறு அதிகரிக்கும் இரஸ்சிய ட்ரோனினது ஊடுறுவல் என கூறுவதற்கு அப்பாவி மக்களின் சிந்தனை திறனையினை கேள்விக்குள்ளாக்கும் எவ்வாறு ஒரு இந்த விலை குறைந்த ட்ரோனினால் ஐரோப்பாவிற்கு பயணிக்க முடிகிறது எனும் ஆச்சரியத்திற்கு புதிது புதிதாக கதை விடுகிறார்கள்.

தாங்கள் விண்ணிலும் மண்ணிலும் மக்களுக்கான பாதுகாப்பு விண்ணர்கள் என பறை சாற்றுபவர்கள் புலுடா விட தொடங்கி விட்டார்கள்.இப்படியான மேற்கத்தைய செய்திகளை கேட்டு இருண்டகண்ட மக்களும் கொடுப்புக்குள் சிரித்து மகிழ்கின்றார்களாம்.

இதற்குள் வேற்று கிரக வாசிகள் பூமிக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றோம் என அறிக்கைகள் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்குப் பலன் சொல்லும் பல்லி கூழ்ப்பானைக்குள் வீழ்வதுபோல் என்று சொல்வார்கள்.

இன்றைய அறிவியல் உலகு என்று சொல்லப்படும் உலகில் அது மனிதர்ளுக்கும் பொருந்தும் போல் தெரிகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.