Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

adminOctober 8, 2025

3-6-1.jpg?fit=1170%2C654&ssl=1

வடக்கு மாகாணம் முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழை இலையைப் பயன்படுத்துவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அக் கலந்துரையாடலில், வடக்கு மாகாணம் முழுவதிலும் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழையிலையைப் பயன்படுத்துவது மற்றும் உணவுத்தட்டுக்களை கொதிக்க வைப்பது ஆகியவற்றை பின்பற்றலாம் என்றும் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது .

https://globaltamilnews.net/2025/221270/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழை இலையைப் பயன்படுத்துவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச் சீற் என்றால் சாப்பிடுகின்ற Plate தானே. வாழை இலையை திணிப்பதற்காக சாப்பிடுகின்ற Plate க்கு தடையா அடுத்த வருடம் யாழ்பாணம் வந்தால் வாழை இலையில் தான் சாப்பிட வேண்டுமா 😒

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு விடயம். சுற்றச்சுற்றாடலுக்கு உகந்த விடயம்.

தாமரை இலையில்,வாழை இலையில் சாப்பிடும் போதெல்லாம் மனதிற்கு குளிர்ச்சியும் சந்தோசத்தையும் தரும். 💚
இது என் சொந்த அனுபவம் மட்டுமே. ஆதாரம் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்.😎

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிடுகின்ற பிளேட்டுக்கள் பல தடவைகள் கழுவி உடைகின்ற வரை மறுபடியும் பாவிக்க கூடியவை என்பதால்சுற்று புற சூழல் பாதுகாப்புக்கும் சுத்தத்திற்கும் உகந்தவை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

லஞ்ச் சீற் என்றால் சாப்பிடுகின்ற Plate தானே. வாழை இலையை திணிப்பதற்காக சாப்பிடுகின்ற Plate க்கு தடையா அடுத்த வருடம் யாழ்பாணம் வந்தால் வாழை இலையில் தான் சாப்பிட வேண்டுமா 😒

இல்லை. சாப்பட்டு கோப்பைக்கு மேல் பொடும் மிக மெல்லிய பொலித்தீன் தாள்.

தடை நல்ல விடயம். சூழலுக்கு ஆபத்தனது. பூனை நாய் சப்பிட்டுட்டு சரியாய் கஷ்டபடும்.

சின்னனைலை 50 சதத்துக்கு 10 லஞ்ச் சீற்றை கொத்துரொட்டி கடையில வாங்கி பரசூட் விடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

நல்லதொரு விடயம். சுற்றச்சுற்றாடலுக்கு உகந்த விடயம்.

தாமரை இலையில்,வாழை இலையில் சாப்பிடும் போதெல்லாம் மனதிற்கு குளிர்ச்சியும் சந்தோசத்தையும் தரும். 💚
இது என் சொந்த அனுபவம் மட்டுமே. ஆதாரம் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்.😎

நாங்கள் அந்த கால யாழ்தேவி,மெயில் ரயில் வண்டிகளில் கொழும்புக்கோ,மட்டகளப்புக்கோ பயணம் செய்யும் பொழுது உந்த வாழையிலையில் ஆட்டிறைச்சி கறியும் இடியப்பமும் கட்டி கொண்டு போய் சாப்பிட்ட ஆட்கள் தானே...அதில் ஒர் சுவையிருக்கு ..ரயில் ஆட இடியப்பத்தையும் இறைச்சியை குழைத்து அடிக்க ,,உறைப்பு அதிகமாக இருந்தால் கண்ணாடி தண்ணீர் போத்தலில் ஊர் தண்ணீரை மதவாச்சி தாண்டினவுடன் குடிச்ச ஆட்கள்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

லஞ்ச் சீற் என்றால் சாப்பிடுகின்ற Plate தானே. வாழை இலையை திணிப்பதற்காக சாப்பிடுகின்ற Plate க்கு தடையா அடுத்த வருடம் யாழ்பாணம் வந்தால் வாழை இலையில் தான் சாப்பிட வேண்டுமா 😒

வாழை மரம் அவ்வளவுக்கு தற்பொழுது யாழில் கிடைக்குமா என்பது கேள்விக்குறி....வாழை இலையில் சைவர்கள் சாப்பிடுவார்கள். யாழ் வாழ் இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் எப்படி சாப்பிட முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் கற்காலத்துக்கே போறமா?

கடைகாரர்களுக்கு சாப்பாட்டுக் கோப்பையை ஒழுங்கா சுத்தமா கழுவி பயன்படுத்தணும் என்று அறிவுறுத்தலுடன் அதை செய்ய கற்றுகுடுங்கப்பா.

வாழை இலையை அறுத்து எடுத்துவந்து சுத்தம் பண்ணும் செலவுக்கு
ஒரு சாப்பாட்டுக் கோப்பையை சுகாதராமான முறையில் இலகுவாக சுத்தம்பண்ணி மீண்டும் பயன்படுத்தலாம்.

இந்த லஞ்ச் சீற் ஒரே கோப்பையை திரும்ப திரும்ப பலர் பாவிக்கும் போது சுகாதார பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதாக எண்ணுகிறேன். நான் படித்த காலத்தில் வாழை இலையைப் பயன்படுத்தி சாப்பிட்டதாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதன் said:

இல்லை. சாப்பட்டு கோப்பைக்கு மேல் பொடும் மிக மெல்லிய பொலித்தீன் தாள்.

உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

சாப்பட்டு கோப்பைக்கு மேல் ஒரு பொலிதீன் போட்டு தான் சாப்பிடுவார்களா என்ன கூத்து இது 🙄

7 hours ago, ரதன் said:

தடை நல்ல விடயம். சூழலுக்கு ஆபத்தனது.

நீங்கள் சொன்னது முழுக்க சரி. நான் சாப்பாட்டு கோப்பை பிளேட்டுக்கு தடை என்று நினைத்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு அசைவ கடைகள் தவிர்ந்த ஏனைய சாப்பாடுகடைகளில் வாழை இலை , வாழைத்தட்டு , தாமரை இலை போன்றவைதான் கடைகளில் இருந்தன ........!

7 hours ago, putthan said:

நாங்கள் அந்த கால யாழ்தேவி,மெயில் ரயில் வண்டிகளில் கொழும்புக்கோ,மட்டகளப்புக்கோ பயணம் செய்யும் பொழுது உந்த வாழையிலையில் ஆட்டிறைச்சி கறியும் இடியப்பமும் கட்டி கொண்டு போய் சாப்பிட்ட ஆட்கள் தானே...அதில் ஒர் சுவையிருக்கு ..ரயில் ஆட இடியப்பத்தையும் இறைச்சியை குழைத்து அடிக்க ,,உறைப்பு அதிகமாக இருந்தால் கண்ணாடி தண்ணீர் போத்தலில் ஊர் தண்ணீரை மதவாச்சி தாண்டினவுடன் குடிச்ச ஆட்கள்

நான் அடிக்கடி வாகன உதிரிபாகங்கள் எடுக்க கொழும்பு செல்வது வழமை ........ அப்போதெல்லாம் வாழையிலையில் குண்டு தோசையை தேங்காய் சம்பலில் முக்கி வைத்து கட்டிக்கொண்டு செல்வதுண்டு ........பிரயாணத்துக்கு இது ஒரு நல்ல உணவு . ...... ஓரிரு மணித்தியாலத்தின் பின் நன்றாக ஊறி இருக்கும் சாப்பிட அந்தமாதிரி இருக்கும் . ......அருகில் இருப்பவர்களுக்கும் குடுத்து சாப்பிடலாம் . ....... கை கழுவ என்று தண்ணி செலவழிக்க தேவை வராது ....... இங்கும் அநேகமாய் தூரப்பயணங்களுக்கு செய்து கொண்டு போவதுண்டு .........! 😇

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

திரும்பவும் கற்காலத்துக்கே போறமா?



இந்த லஞ்ச் சீற் ஒரே கோப்பையை திரும்ப திரும்ப பலர் பாவிக்கும் போது சுகாதார பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதாக எண்ணுகிறேன். நான் படித்த காலத்தில் வாழை இலையைப் பயன்படுத்தி சாப்பிட்டதாக ஞாபகம்.

பிளேட்டுக்கு மேல பெப்பர் பிளேட்டுக்கள் ,அல்லது வாழை மடலில் சில பிளேட்டுக்களை இந்தியாவில் தயாரிக்கின்றனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, vanangaamudi said:

திரும்பவும் கற்காலத்துக்கே போறமா?

மேற்குலகில் உணவு,அன்றாட பாவனை பொருட்கள் எனும் விடயங்களில் கற்காலத்தை நோக்கியே போகின்றார்கள். பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை.இரசாயனம் கலந்த உணவுகளுக்கு தடை விதிக்கப்போகின்றார்கள்.

நீங்கள் குறிப்பிடும் காலம் கற்காலமல்ல.நற்காலம்.

16 hours ago, vanangaamudi said:

கடைகாரர்களுக்கு சாப்பாட்டுக் கோப்பையை ஒழுங்கா சுத்தமா கழுவி பயன்படுத்தணும் என்று அறிவுறுத்தலுடன் அதை செய்ய கற்றுகுடுங்கப்பா.

அந்த கோப்பயை கழுவ பயன்படுத்தப்படும் இரசாயன அழுக்கு நீக்கியின் பக்க விளைவுகள்,எதிர் வினைகள் பற்றி ஏதாவது தெரியுமா?பெரிய ஹொட்டல்களில் கோப்பை கழுவப்படும் அல்லது பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தப்படும் அந்த கெமிக்கல் மருந்துகள் கையில் பட்டாலே எரிக்கும் தன்மை கொண்டவை.

எப்படி கழுவினாலும் அந்த கெமிக்கல்கள் பாத்திரங்களை விட்டு அகலாது.எல்லாம் சாப்பாடுடன் சேர்ந்து எமது வயிற்றுக்குள் தான் போகும்.

16 hours ago, vanangaamudi said:

வாழை இலையை அறுத்து எடுத்துவந்து சுத்தம் பண்ணும் செலவுக்கு
ஒரு சாப்பாட்டுக் கோப்பையை சுகாதராமான முறையில் இலகுவாக சுத்தம்பண்ணி மீண்டும் பயன்படுத்தலாம்.

ஊர்களில் ஒரு குடும்பத்தில் பத்து பேர் இருந்தாலும் அவரவற்கு என சொந்த கோப்பை இருக்கும். அதில் அண்ணன் தம்பியானாலும் சரி அக்கா தங்கச்சியானாலும் சரி ஒருவர் கோப்பைய மற்றவர் தொடமாட்டார்.அவ்வளவிற்கு சுத்த பத்தம்.

கோப்பைய சாம்பல் போட்டு கழுவினாலும் பழப்புளி போட்டு மினுக்கினாலும் சொந்தக்கோப்பை சொந்த கோப்பை தான் அதை யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2025 at 02:48, putthan said:

யாழ் வாழ் இஸ்லாமியர்கள்

அவர்களுடைய அந்த புத்தகத்தில் வாழை மரம் பற்றி ஏதாவது சொல்லபட்டிருக்கின்றதா அப்படி சொல்லபட்டிருந்தால் வாழை மரத்தின் நிலை பரிதாபம் தான் ☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.