Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

08 Oct, 2025 | 09:57 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தக் சந்திப்பின்போது இருதரப்புக்கும் இடையே முக்கியமான விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன, இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து உயர்ஸ்தானிகரும், எம்.ஏ. சுமந்திரனும் விரிவாகக் கலந்துரையாடினர். விசேடமாக, தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார்.

இந்தியா நிதியளிக்கும் வீடமைப்புத் திட்டங்கள், அகதிகள் மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் ஏனைய சமூக மேம்பாட்டுத் துறைகளில் இந்தியா வழங்கும் உதவிகள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

இந்தியா நிதியளிக்கும் வீடமைப்புத் திட்டங்கள், அகதிகள் மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் ஏனைய சமூக மேம்பாட்டுத் துறைகளில் இந்தியா வழங்கும் உதவிகள் குறித்தும்,

தமிழரின் வாழ்வாதாரத்தை அழித்து, குடும்பங்களை கலைத்து, நிற்கதியாக்கியதே இந்தியாதான். அனைத்தையும் செய்து ரசித்துவிட்டு, இப்போ உதவியாம். அதற்கு சுமந்திரனுடன் பேச்சாம். தமிழரசுக்கட்சியை இல்லாமல் செய்து, அவர்களுக்குரிய தீர்வை நீத்துப்போகச்செய்தவர் சுமந்திரன். தமிழர் எழுந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்து குட்டுகிறார்கள். தமிழரின் துயரில், எழுச்சியில் எந்த பங்கும் பாகமும் வகிக்காத சுமந்திரனுடன் பேச்சா? அல்லது சுமந்திரனே வலியப்போய் சந்தித்து படம் காட்டுகிறாரா? பாடின வாயும் ஆடின காலும் சும்மா கிடவாது. தமிழரின் விடிவிற்காக உழைத்ததை விட, ஓடியோடி பின்கதவால் சந்திப்புகளை நடத்தி படம் காட்டினதுதான் இவர் சாதித்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் எத்தனையோ தமிழ்கட்சிகள் இருக்க இந்த ஊத்தைவாளிகளை தேடி வெளிநாட்டு பிரதிநிதிகள் தேடிவந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மர்மம் என்ன?

இந்த கேள்வி 40 வருட கால அனுபவத்தில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தமிழரின் வாழ்வாதாரத்தை அழித்து, குடும்பங்களை கலைத்து, நிற்கதியாக்கியதே இந்தியாதான். அனைத்தையும் செய்து ரசித்துவிட்டு, இப்போ உதவியாம். அதற்கு சுமந்திரனுடன் பேச்சாம். தமிழரசுக்கட்சியை இல்லாமல் செய்து, அவர்களுக்குரிய தீர்வை நீத்துப்போகச்செய்தவர் சுமந்திரன். தமிழர் எழுந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்து குட்டுகிறார்கள். தமிழரின் துயரில், எழுச்சியில் எந்த பங்கும் பாகமும் வகிக்காத சுமந்திரனுடன் பேச்சா? அல்லது சுமந்திரனே வலியப்போய் சந்தித்து படம் காட்டுகிறாரா? பாடின வாயும் ஆடின காலும் சும்மா கிடவாது. தமிழரின் விடிவிற்காக உழைத்ததை விட, ஓடியோடி பின்கதவால் சந்திப்புகளை நடத்தி படம் காட்டினதுதான் இவர் சாதித்தது.

தமிழர்களுடன் ஒட்டி உறவாட சுமத்திரன்(எந்த வித பிரயோசனமும் கிடைக்காது தமிழர்களுக்கு)

சிங்களவர்களுடன் ஒட்டி உறவாட மோடி ஜீ ..இதனால் இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைக்கும் அதே நேரம் சிங்கள அதிகார வர்க்கம் தமிழர் இருப்பை இல்லாமல் பண்ண உதவிகள் இந்தியாவிடமிருந்து கிடைக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இலங்கையில் எத்தனையோ தமிழ்கட்சிகள் இருக்க இந்த ஊத்தைவாளிகளை தேடி வெளிநாட்டு பிரதிநிதிகள் தேடிவந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மர்மம் என்ன?

பேச்சுவார்த்தை நடத்துபவர்களும் அதில் பங்குபற்றுவோரும் தமிழரை வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விடமாட்டார்கள். அவர்களது பிழைப்புக்கு உதவுவது தமிழர் விவகாரம். கூத்தாடிகள் தேடுவது ஊத்தைவாளிகளையே! இல்லையென்றாலும் இதுகள் வாசலில் போய் நின்று தட்டுகிறார்களே.

  • கருத்துக்கள உறவுகள்

போன மாதம், இந்தியத் தூதுவருடன் நடந்த சந்திப்பின் போது பேசப் பட்ட விடயங்களுக்கு என்ன நடந்தது. அவை தீர்க்கப் பட்டு விட்டதா?

இப்படி மாதா மாதம் வெட்டியாக போய் சந்தித்து பத்திரிகைகளில் படங்களைப் போட்டு… நானும் அரசியலில் இருக்கின்றேன் என்று, சுத்துமாத்து சுமந்திரன்… இத்துப் போன “பிலிம்” காட்டுகின்றாரா?

இந்தப் பேய்க்காட்டல் அரசியல் எல்லாம் பழைய ரெக்னிக். சம்பந்தன் காலத்திலிருந்து பார்த்தும், கேட்டும் அலுத்துப் போச்சுது. புதுசா ஏதாவது செய்யப் பாருங்கள் சுமன்.

நட்டுக் கழண்ட லூசன் மாதிரி நெடுக செய்த ஒன்றையே திரும்பத் திரும்ப செய்யாதீர்கள் ஆபிரஹாம் சுமந்திரன். மக்கள் உங்களை பைத்தியக்காரன் என்று முடிவு கட்டி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

போன மாதம், இந்தியத் தூதுவருடன் நடந்த சந்திப்பின் போது பேசப் பட்ட விடயங்களுக்கு என்ன நடந்தது. அவை தீர்க்கப் பட்டு விட்டதா?

இப்படி மாதா மாதம் வெட்டியாக போய் சந்தித்து பத்திரிகைகளில் படங்களைப் போட்டு… நானும் அரசியலில் இருக்கின்றேன் என்று, சுத்துமாத்து சுமந்திரன்… இத்துப் போன “பிலிம்” காட்டுகின்றாரா?

இந்தப் பேய்க்காட்டல் அரசியல் எல்லாம் பழைய ரெக்னிக். சம்பந்தன் காலத்திலிருந்து பார்த்தும், கேட்டும் அலுத்துப் போச்சுது. புதுசா ஏதாவது செய்யப் பாருங்கள் சுமன்.

நட்டுக் கழண்ட லூசன் மாதிரி நெடுக செய்த ஒன்றையே திரும்பத் திரும்ப செய்யாதீர்கள் ஆபிரஹாம் சுமந்திரன். மக்கள் உங்களை பைத்தியக்காரன் என்று முடிவு கட்டி விடுவார்கள்.

இவர்கள் செய்யும் பேய்க்காட்டல்களினால்த்தான் இதய பூர்வமான தமிழின விசுவாசிகள் சிங்கள கட்சிகளை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர்.

இன்றுவரை ஒரு சதத்திற்கும் உதவாத சுமந்திரனை ஏன் தான் தலையில் வைத்து கொண்டாடுகின்றார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இன்றுவரை ஒரு சதத்திற்கும் உதவாத சுமந்திரனை ஏன் தான் தலையில் வைத்து கொண்டாடுகின்றார்களோ தெரியவில்லை.

சுமந்திரனை தலையில் வைத்து கொண்டாடுபவர்களின் பின் புலத்தையும், கடந்த காலத்தில் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையும் வைத்துப் பார்த்தால்… பல விடயங்கள் இலை மறை காயாக ஒளிந்து இருப்பதை கண்டு பிடிக்கலாம்.

1) சுமந்திரன், தமிழ் தேசியத்துக்கு எதிரானவர் என்பதால்… அந்தப் பாசத்தில் ஆதரவு கொடுப்பவர்கள்…. ஈழப் போராட்டத்தின் போது, புலிகளை காட்டிக் கொடுத்த ஒட்டுக் குழுக்களுக்கும், சிங்கள அரசாங்கத்துக்கும் ஆதரவாக கருத்துக்களை வைத்துக் கொண்டு திரிந்தவர்கள் ஒரு வகை.

2) சுமந்திரன், தமிழர் கட்சிகளை சின்னா பின்னமாக்கி ஒற்றுமையை சிதைத்துக் கொண்டு இருப்பது சிலருக்கு இனிப்பான விடயமாக இருப்பதாலும்…

3) சுமந்திரன், வட மராட்சியை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதால், ஊர்ப் பாசத்தில் ஒரு சிலரும்… (சென்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும்…. ஆபிரஹாம் சுமந்திரனின் தமிழரசுக் கட்சி மரண அடிவாங்கி, படு தோல்வி அடைந்த இடம் வடமராட்சிதான்.) 😂 🤣

4) ஆபிரஹாம் சுமந்திரன், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு சிலரும்….

5) சுமந்திரன், சிங்களவருக்குக்குள் திருமண தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதால் ஒரு சிலரும்….

6) யாழ்ப்பாணத்தில் கொழுத்தும் வெய்யில் வெக்கைக்குள்…. கோட்டு, சூட்டுப் போட்ட சுமந்திரனை, பெரிய அறிவாளி என நினைக்கும் சில பனங்கொட்டைத் தமிழர்களும்…. சுமந்திரனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றார்கள் என்பதே உண்மை.

இவர்களால்… தமிழருக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. பைத்தியக்காரக் கூட்டம் என்று கடந்து போக வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இவர்கள் செய்யும் பேய்க்காட்டல்களினால்த்தான் இதய பூர்வமான தமிழின விசுவாசிகள் சிங்கள கட்சிகளை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர்.

இன்றுவரை ஒரு சதத்திற்கும் உதவாத சுமந்திரனை ஏன் தான் தலையில் வைத்து கொண்டாடுகின்றார்களோ தெரியவில்லை.

சுமந்திரன்…. ஒரு சதத்திற்கும் உதவாதவர் என்பது மட்டுல்ல,

தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப் பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையாக இருந்த கட்சிகளை உடைத்து…

ஶ்ரீலங்காவினதும், இந்திய நாட்டினதும் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்த ஆபத்தான மனிதன்தான் சுமந்திரன்.

இனியும் இவரை தமிழரசுக் கட்சி வைத்திருக்குமானால்… அது தமிழருக்கும், தமிழரசுக் கட்சிக்கும் பேராபத்தாக முடியும்.

இவர் தமிழ் அரசியலில் இருக்கும் வரை… தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒற்றுமையாவதற்கு சந்தர்ப்பமே இல்லை.

சுமந்திரனை வைத்து…. தமிழரில் இன்னும் பல பிரிவினைகளை உருவாக்கவே இந்தியத் தூதரகம் மாதா மாதம் இவருடன் பேச்சுவார்த்தையும், ஆலோசனையும், பணமும் வழங்கிக் கொண்டு இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலத்துக்கு பின் 13 பற்றி கதைக்க பலரையும் இந்தியா களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.