Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்

adminOctober 10, 2025

WhatsApp-Image-2025-10-10-at-7.00.48-PM.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று  (10)  வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், அருட்தந்தை,முன்னாள் போராளிகள், உறவினர்கள் ,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.  இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

WhatsApp-Image-2025-10-10-at-7.00.46-PM-

WhatsApp-Image-2025-10-10-at-7.00.47-PM-

WhatsApp-Image-2025-10-10-at-7.00.47-PM.

WhatsApp-Image-2025-10-10-at-7.00.46-PM.

https://globaltamilnews.net/2025/221354/

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

562378263_828377869862716_58891297155027

முதல் பெண் மாவீரர் மாலதிக்கு வீர வணக்கங்கள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்டத்தில் முதல் தனது உயிரை அர்பணித்தவர் ஷோபா என்ற ஈபிஆர்எல்எவ் போராளியே.

இவர் இறந்தது மே 03 1985 மாலதி முதல் பெண் போராளி என்பது தவறான தகவல். மாலதி விடுதலைபுலிகளின் முதல் பெண் போராளி என்பதே சரியான தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளில் 2ஆம் லெப்டினன்ட் மாலதி நினைவேந்தல் நிகழ்வு

Published By: Vishnu

11 Oct, 2025 | 04:10 AM

image

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், பாரதிபுரம் வட்டாரத்துக்குட்பட்ட சூசைப்பிள்ளை கடைச் சந்தியில் இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு, 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் தியாகமும் வீரமும் நிறைந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

தவிசாளர்கள், உபதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

02.png

12.png

11.png

10.png

09.png

08.png

07.png

06.png

05.png

04.png

03.png

01.png

https://www.virakesari.lk/article/227448

  • கருத்துக்கள உறவுகள்

மாலதி ஈழப்போராட்டத்தில் முதல் களப்பலியான பெண் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். முதல் ஈழப்போராட்டத்தில் களப்பலியான பென் ஷோபா என்பது தெரிந்தும் வரலாற்றை திரிப்பவர்கள் உண்மையில் களப்பலியான பெண் போராளி ஷொபாவுக்கு தமது காழ்புணர்சசியால் உரிய மரியாதையை கொடுக்கவர்களே தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக இன்று புலம்புபவர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.