Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாத்தியார் said:

அடுத்த கட்டத்திற்கான செயற்பாடுகளை தொடர்வது நல்லது என நினைக்கின்றேன்

தேவைக்கு அதிகமான மூலப்பொருட்களை அடுத்த கட்ட வேலைகளுக்குப் பாவிக்கலாம் தானே

ஓம் அண்ணா. பொன்னாலை ஏரம்பு ஐயாவின் பிள்ளைகளின் மலசலகூட பிளேற் வெடித்துள்ளதாலும் தண்ணீர் கொள்கலன் வைத்துள்ள பிளாற் வெடித்துள்ளபடியாலும் பாதுகாப்பிற்காக தண்ணீர் கொள்கலனை தனியாக வைத்து தரும்படி கேட்கிறார்கள். பாகிஸ்தான் பைப்பில் தாங்கி செய்ய கூட காசு கேட்கிறார்கள். + வடிவில் 10 / 12 அடிக்கு கொங்கிறீற் கல் அடுக்கி மேலே பிளாற் வைத்து தண்ணீர் கொள்கலனை வைப்பதற்கு தொழிநுட்ப உத்தியோகத்தர் கூறினார். செலவு விபரம் அறிந்து சொல்கிறேன்.

இன்று காலை கொமட், பூட்டுவதற்கான சில பொருட்கள், கொண்டுவரும் கூலி எல்லாம் சேர்த்து 44500 ரூபா வங்கியில் இருந்து செலுத்திவிட்டேன். இருப்பு 300395.67-44525=ரூ 255,870.67 சதம் இன்று 19/01/2026 44525 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா சம்பத் வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள். தற்போதைய வங்கி மீதி.

Ponnalai-comed.jpg

comed-receipt.jpg

  • Replies 107
  • Views 5.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • ஏராளன்
    ஏராளன்

    அண்ணை, புலர் அறக்கட்டளைக்கு ஊடாக இயலாமை உடையவர்களை மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறோம். ஆனால் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினால் பணத்தை மீளப்பெற நிர்வாக அனுமதி கோரவேண்டும். அடிக்கடி பணத்த

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அறவே மலசல கூடங்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் திட்டமாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே மலசலகூட வசதி இருப்பவர்களின் திருப்பணி வேலைகளுக்கு பொதுப்பணி சரியான நிலையா? இல்லையேல் நான் பிழையாக விளங்கிக்கொண்டேனா?

நான் நினைப்பது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.🙏

அண்ணை, வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடம் பூரணப்படுத்த அரைகுறையாக இருப்பது அவசரம் என்பதால் முன்னுரிமை அளித்தோம்.

அதேபோல பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளுக்கான மலசலகூடப் புனரமைப்பும் அவசரம் என்றபடியால் செய்கிறோம். இவர்கள் இருவரதும் குடும்பநிலை கருதியே இவ்வுதவி செய்யப்படுகிறது.

அடுத்ததாக புதிதாக மலசலகூடம் கட்டிக் கொடுக்கலாம் அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

அறவே மலசல கூடங்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் திட்டமாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே மலசலகூட வசதி இருப்பவர்களின் திருப்பணி வேலைகளுக்கு பொதுப்பணி சரியான நிலையா? இல்லையேல் நான் பிழையாக விளங்கிக்கொண்டேனா?

நான் நினைப்பது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.🙏

பிந்தி பதில் போடுகிறேன் - மன்னிக்கவும்.

ஒம் அறவே இல்லாதோருக்கு என்பதே திட்டம்.

pilot ஆக இதை இரெண்டையும் செய்கிறோம், தேவை முன்னுரிமையும் இருப்பதால்.

இனி வரும் எல்லாமும் -அறவே இல்லாதோருக்கே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

பிந்தி பதில் போடுகிறேன் - மன்னிக்கவும்.

ஒம் அறவே இல்லாதோருக்கு என்பதே திட்டம்.

pilot ஆக இதை இரெண்டையும் செய்கிறோம், தேவை முன்னுரிமையும் இருப்பதால்.

இனி வரும் எல்லாமும் -அறவே இல்லாதோருக்கே.

7 hours ago, ஏராளன் said:

அண்ணை, வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடம் பூரணப்படுத்த அரைகுறையாக இருப்பது அவசரம் என்பதால் முன்னுரிமை அளித்தோம்.

அதேபோல பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளுக்கான மலசலகூடப் புனரமைப்பும் அவசரம் என்றபடியால் செய்கிறோம். இவர்கள் இருவரதும் குடும்பநிலை கருதியே இவ்வுதவி செய்யப்படுகிறது.

அடுத்ததாக புதிதாக மலசலகூடம் கட்டிக் கொடுக்கலாம் அண்ணை.

நான் எழுதும் கருத்து சிலருக்கு சங்கடமாக இருக்கலாம்..வேணாம் எழுதாமல் போவதே மேல்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2026 at 04:08, குமாரசாமி said:

அறவே மலசல கூடங்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் திட்டமாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே மலசலகூட வசதி இருப்பவர்களின் திருப்பணி வேலைகளுக்கு பொதுப்பணி சரியான நிலையா? இல்லையேல் நான் பிழையாக விளங்கிக்கொண்டேனா?

நான் நினைப்பது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.🙏

அண்ணை, வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை திரு நா.பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடம் அரைவாசி கட்டியபடி இருந்தது, இதனை பூரணப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்தபோது நீங்கள் உட்பட யாழ் - முன்னோடி செயற்றிட்டத்தில் பங்களிப்போர் பலரும் சம்மதித்து தான் அந்தப்பணிக்கு நிதி வழங்க தொடங்கினோம்.

இரண்டாவது பொன்னாலை திரு ஏரம்பு ஐயாவின் 3 இயலாமை உடைய பிள்ளைகளின் மலசலகூடத்திருத்தத்திற்கு ஏனைய உறவுகள் சம்மதித்துத் தான் அதனைத் தொடங்கி விரைவாக இன்று முடித்துக் கொடுத்துள்ளோம். அவர்களை நிலத்தில் உள்ள மலசல கூடத்தில் வைத்து தான் மலங்கழிக்க வைத்ததாக இன்றையதினம் நேரடியாக சென்றபோது சகோதரி கூறினார். இதனால் எனக்கு இந்தப்பணியை உடனடியாக செய்து கொடுத்தது மிகுந்த மனநிறைவைத் தந்தது.

இவர்களுடைய மலசலகூடப் பிளேற் உடைந்துள்ளதால் உடனடியாக தண்ணீர்க் கொள்கலன் வைப்பதற்கு மாற்றுவழி செய்யவேண்டி உள்ளது. அவர்கள் உள்ளே இருக்கையில் ஆபத்தை தேடாமல் இருக்க குறைவாக நீரை அடித்து பாவிக்க சொல்லிவிட்டு வந்தேன்.

இந்தப்பணியை இத்தோடு முடித்துவிடவா? இல்லை தண்ணீர் கொள்கலன்(500 லீற்றர்) வைப்பதற்கான ஏற்பாட்டை செய்துகொடுப்பமா? உங்கள் பதில் தெரிந்தபின் செய்வோம்.

குமாரசாமி அண்ணா விரும்புவது போல் புதிய மலசலகூடம் கட்டுவது மட்டும் தான் நல்லது என விரும்பினால் இவர்களுடைய மலசல கூடப்புனரமைப்புக்கான நிதியை புலர் அறக்கட்டளை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பெற்றுத்தர முயல்வேன், அல்லது வேறு பொருத்தமான அமைப்புகளிடம் கேட்டுப்பெற்றுத் தருவேன்.

நான் புரிந்து கொள்வது அறவே மலசலகூடம் இல்லாதவர்களின் வாய்ப்பைத்தட்டிப்பறிக்கக் கூடாதல்லவா?

அங்கு எஞ்சியுள்ள பொருட்கள் 3 1/2 பைக்கற் சீமந்து 7000 ரூபா பெறுமதியானது, அண்ணளவாக 1 லான்ட் மாஸ்ரர் மண் 12500 ரூபா பெறுமதியானது, அண்ணளவாக 3/4 லான்ட் மாஸ்ரர் சல்லி 5625 ரூபா, 1 1/2 கம்பி 1500 ரூபா. மொத்தமாக மிஞ்சிய பொருட்கள் பெறுமதி அண்ணளவாக 26625 ரூபா.(லான்ட் மாஸ்ரர் கணக்கு என்னுடைய கண் பார்வையின் புரிதல்படி)

20-01-26-Ponnalai.jpg

20-01-26-ponnalai8.jpg

20-01-26-ponnalai7.jpg

20-01-26-ponnalai6.jpg

20-01-26ponnalai5.jpg

20-01-26-ponnalai3.jpg

20-01-26-ponnalai4.jpg

இன்று நேரடியாகச் சென்று பார்த்து வந்தேன், படங்கள் சில.

bill-bhcp2.jpg

bill-2-bhcp2.jpg

முதலாவது பற்றுச்சீட்டு: 8 பைக்கற் சீமந்து 16000 ரூபா பெறுமதியானது, 2 லான்ட் மாஸ்ரர் மண் 25000 ரூபா(விலை 1000 ரூபா கூட), 2 லான்ட் மாஸ்ரர் சல்லி 15000 ரூபா, 20 கம்பி 20000 ரூபா, 1 கிலோ கட்டுக்கம்பி 400 ரூபா, பொருட்கள் இறக்கிய கூலி 2000 ரூபா(1000 ரூபா கூட முதலில் கூறியதை விட 4 தடவைகள் இறக்கியது)

இரண்டாவது பற்றுச்சீட்டு: 4 1/2 கிலோ பொலித்தீன் 1500 ரூபா

மூன்றாவது பற்றுச்சீட்டு: என்ன பொருள் என விளங்கவில்லை 700 ரூபா, 1 1/2 இஞ்ச் பைப் 2 பிற் வென்ரிலேசனுக்கு 2500 ரூபா, 2 பென்ட் 400 ரூபா, 4 சீற் ரெஜிபோம் 1350 ரூபா.

மொத்தச் பொருட்கள் செலவு 78400+1500+4950=84850 ரூபா

கணேஷா ஹாட்வெயார் கடைக்கு செலுத்தவேண்டி உள்ளது 84850-80000=4850 ரூபா.

கம்பிகட்டி பிளேற் போட்ட கூலி, கொமட் பூட்டிய கூலி, அசிட் போட்டு சுத்தமாக்கிய கூலி(அசிற் காசும்) கொடுக்கவேண்டும்.

20-01-26-ponnalai1.jpg

20-01-26-ponnalai2.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2026 at 22:57, குமாரசாமி said:

பூரணப்படுத்த எவ்வளவு பணம் வேண்டும் என்பதை வட்ஸ் அப்பில் எழுதி விடவும்.

On 18/1/2026 at 23:38, குமாரசாமி said:

அறவே மலசல கூடங்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் திட்டமாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே மலசலகூட வசதி இருப்பவர்களின் திருப்பணி வேலைகளுக்கு பொதுப்பணி சரியான நிலையா? இல்லையேல் நான் பிழையாக விளங்கிக்கொண்டேனா?

நான் நினைப்பது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.🙏

முதலில் அராலியில் ஒரு வீட்டுத்திட்டத்துடன் பூரணப்படுத்தாத வகையில் இருக்கும் கழிவறையைப் பூரணப்படுத்திக் கொடுப்பதற்கான

ஆலோசனையை ஏராளன் முன்வைத்த பொது கு சா அண்ணை தானே அதற்கு எவ்வளவு செலவாகும் என அறியாத தரவும் எனவும் கேட்டிருந்தார்.

அதன் அடிப்படையிலும் நாங்கள் முன்னோடியினூடாக நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக இந்த அராலி உறவின் தேவையையும் அதன் பின்னர் பொன்னாலையில் வாழும் இயலாத சகோதரர்களுடைய தேவைகளையும் செய்து பார்க்கலாம் என்ற கோஷானின் ஆலோசனைப்படி எல்லோருமே ஏற்றுக் கொண்டு தானே

ஏராளன் இவற்றை செய்து வருகின்றார்.

கு சா அண்ணை அதைக் கவனிக்காமல் இப்படி எழுதியிருக்கின்றார்

என்று நான் நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இந்தப்பணியை இத்தோடு முடித்துவிடவா? இல்லை தண்ணீர் கொள்கலன்(500 லீற்றர்) வைப்பதற்கான ஏற்பாட்டை செய்துகொடுப்பமா? உங்கள் பதில் தெரிந்தபின் செய்வோம்.

இதையும் நாமே செய்து கொடுக்கலாம் என்பது என் அபிபிராயம்.

வாத்தியார் அண்ணா, குசா அண்ணா, யாயினி அக்கா இவர்களோடு ஏனையவர்களும் உங்கள் கருத்தை சொல்லவும்.

பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்படுவோம்.


3 hours ago, ஏராளன் said:

குமாரசாமி அண்ணா விரும்புவது போல் புதிய மலசலகூடம் கட்டுவது மட்டும் தான் நல்லது என விரும்பினால் இவர்களுடைய மலசல கூடப்புனரமைப்புக்கான நிதியை புலர் அறக்கட்டளை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பெற்றுத்தர முயல்வேன், அல்லது வேறு பொருத்தமான அமைப்புகளிடம் கேட்டுப்பெற்றுத் தருவேன்.

இவ்வாறு புலரிடம் இருந்து எடுக்க தேவையில்லை.

கீழே வாத்தியார் அண்ணா சொன்னது போல், இவ்விரண்டு வேலைகளையும் pilot ஆக செய்வது என்பது நாம் கூடி எடுத்த முடிவுதான்.

அதை அப்படியே செய்வோம்.

குசா அண்ணை கேட்டது நாம் தொடர்ந்தும் திருத்தபணிகளையா அல்லது புதிய கட்டுமான பணிகளையா செய்யப்போகிறோம் என்பதையே.

தொடர்ந்து புதிய கட்டுமானப்பணிகளைத்தான் செய்ய போகிறோம்.

வேறு யாரும் இதுபோல் திருத்த பணி உதவி கோரின், அதை அப்போது பரிசீலிப்போம்.


Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் - செயல்கள் அத்தனைக்கும் நன்றி. கட்டப்பட்ட பின்னான படங்கள் ஒரு உத்தேகத்தை தருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.