Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுல் காந்தியை கொல்ல சதி 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்தியை கொல்ல சதி 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது

வீரகேசரி நாளேடு

ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்தற்காக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். சீதாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதை பொலிஸார் நிறுத்த சைகை காட்டிய போதும் அந்தக் காரை நிறுத்தாமல் சென்றனர்.

உடனே காரை மடக்க பொலிஸார் முயற்சித்தனர். அப்போது அந்தக் காரில் இருந்தவர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பொலிஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தி காரை மடக்கிப் பிடித்தனர். உள்ளே இருந்த 3 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அவர்களிடம் இருந்த லெப் டொப் கணனியை பரிசோதனை செய்த போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை பற்றி சில தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அது குறித்து தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்திய போது ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தோடு லக்னோ வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் வேறு யார் யாரை கொல்ல திட்டமிட்டிருந்தனர். அவர்களுடன் வேறு தீவிரவாதிகளும் வந்தார்களா? என்பது குறித்து தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தீவிரவாதிகளிடம் இருந்து 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்கள், வெடிகுண்டுகள், 16 கையெறி குண்டுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன. 5 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்தும் இதனுடன் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்தியை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லுகின்றார்களோ இல்லையோ, இந்திய உளவுத்துறை முன்னுக்கு வரவிடாது. நேரு குடும்பத்தின் சொத்தாக இந்தியா மாறவிடக்கூடாது என்பதற்காக மற்றவர்கள் மேலே பழிபோட்டும் மர்மமாகவும் இந்திரா, சஞ்சீவ், ராஜிவ் கொல்லப்பட்டனர். சோனியாவிற்கு ஆட்சி தராமல் மறுக்கப்பட்டது.

இந்தவகையில் ராகுல்காந்தி அரசியலில் ஈடுபடுவதை றோ விரும்பாது. அவரைக் கொல்வதற்கு ஏதாவது தீவிரவாத இயக்கத்தை இப்போதில் இருந்தே பழிபோட வெளிக்கிட்டது போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் நடந்த கிரிக்கேட் போட்டிக்கு பாகிஸ்தானியருக்கு விசா மறுக்கப்பட்டது....

அதற்கு நியாயம் காட்டவே இந்த ஜால்ரா வேலையெல்லம்....................

றோ வுக்கு தெரிந்ததெல்லாம் இப்படியான ஜில்லாக்கள்தான்..... அது தவிர்த்து போட வந்தவைனபிடிப்பதாக படம் காட்டுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகுல்காந்தியை கொல்ல வேண்டிய அவசியம் வெளிஉலகுகளிற்கில்லை. இவை எல்லாம் ஒரு சில இந்திய அரசியல்........................................ ............... .............. .......... ....................................... ----------------------------------- ---- அதே போல்தான் ----- -----........................ ராஜீவ் காந்தியின் கொலையும்???? என்றைக்காவது ஒரு நாள்?......... ...... வெளிவரும்

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

கு.மா அண்ணா உந்த கீறிட்ட இடங்களை யார் நிரப்புறது. :lol::lol::huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.மா அண்ணா உந்த கீறிட்ட இடங்களை யார் நிரப்புறது. :lol::lol::huh:

வெற்றிடத்தை நிரப்பினால் எனது கருத்தை கடத்தக்காரர்கள்( ஐ மீன் மட்டுறுத்தினர்கள்) கடத்திவிடுவார்கள் :wub:

ராகுல்காந்தியை கொல்ல வேண்டிய அவசியம் வெளிஉலகுகளிற்கில்லை. இவை எல்லாம் ஒரு சில இந்திய அரசியல்........................................ ............... .............. .......... ....................................... ----------------------------------- ---- அதே போல்தான் ----- -----........................ ராஜீவ் காந்தியின் கொலையும்???? என்றைக்காவது ஒரு நாள்?......... ...... வெளிவரும்

எய்தவன் இருக்க ,அம்பை நோவதில் பலன் ஏதுமில்லை. துன்பியல் துன்பியல்தான்

கொல்லவோ கடத்தவோ வந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டுக்கு அஞ்சி காரை நிப்பாட்டி சரணடைந்தது என்பது எங்கயோ இடிக்குது ராகுலை போட்டு தள்ள இந்த சம்பவத்தை பாவிக்க போறாங்களோ தெரியவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.