Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புறம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புறம்

காலமகள் மணலெடுத்து

கோலமிட்ட கடற்புறத்தில்

ஏழை மகள் ஒருத்தி.

முன்னே கடல் விரியும்

முது கடலின் பின்னாடி

விண்ணோ தொடரும்

விண்ணுக்கும் அப்பாலே

விழி தொடர நிற்கின்றாள்.

தாழை மர வேலி,

தள்ளி ஒரு சிறு குடிசை;

சிறுகுடிசைக்குள்ளே

தூங்கும் சிறு குழந்தை

ஆழ்க்கடலில்

ஆடுகின்ற தோணியிலே

தாழம்பூ வாசம்

தரைக் காற்று சுமந்து வரும்.

காற்று பெருங்காற்று

காற்றோடு கும்மிருட்டு.

கும்மிருட்டே குலைநடுங்கி

கோசமிட்ட கடல் பெருக்கு.

கல்லுவைத்த கோவிலெல்லாம்

கைகூப்பி வரம் இரந்த

அந்த இரவு

அதற்குள் மறக்காது.

திரை கடலை வென்று வந்தும்

திரவியங்கள் கொண்டு வந்தும்

இந்த சிறு குடிசை,

இரண்டு பிடி சோறு,

தோணி உடையான்

தரும்பிச்சை என்கின்ற

கோணல் நினைப்பு;

பெருமூச்சு.

தானாய் விடி வெள்ளி

தோன்றுகின்ற சங்கதிகள்

வானத்தில் மட்டும்தான்.

வாழ்வில் இருள் தொடரும்.

"கடற்புறம்" என்ற கவிதை கடலிற்கே எம்மை இழுத்து செல்கிறது மிகவும் அருமையான அழகான கவிதை வாழ்த்துகள் அதில் இந்த வரிகள் எவ்வளவு உண்மை!! :o

தானாய் விடி வெள்ளி

தோன்றுகின்ற சங்கதிகள்

வானத்தில் மட்டும்தான்.

வாழ்வில் இருள் தொடரும்.

தானாய் விடி வெள்ளி

தோன்றுகின்ற சங்கதிகள்

வானத்தில் மட்டும்தான்.

வாழ்வில் இருள் தொடரும்.

கடற்புறம் நல்லாக இருக்கு. வானத்தில் விடிவெள்ளி தோன்றும்போது வாழ்வில் ஏனுங்க இருள் தொடங்குது? வெளிச்சமாக்க பாருங்கோ.

கடற்புறம் நல்லாக இருக்கு. வானத்தில் விடிவெள்ளி தோன்றும்போது வாழ்வில் ஏனுங்க இருள் தொடங்குது? வெளிச்சமாக்க பாருங்கோ.

நிலா அக்கா இந்த வரிகளிள் கவிஞர் சொல்ல முற்படுவது எனது பார்வையில் "தானாகவே விடிவெள்ளி தோன்றுகிறது அல்லவா அது வானத்தில் மட்டும் நடக்கிற விசயம்"ஆனால் கடற்தொழிலாளர்களின் வாழ்வு அபப்டியல்ல விடிவெள்ளி போல உடனடியாக விடிவதிற்கு :lol: ............அவர்கள் எவ்வளவு கஷ்டபட்டாலும் அவர்களின் வாழ்வில் இருளிள் தான் மிதந்து கொண்டிருக்கும் என்ற அர்த்தத்தில் நான் இதனை எடுத்து கொண்டேன் :D ...........கவிஞர் அவர்களின் விளக்கத்தையும் பார்போம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

நிலா அக்கா இந்த வரிகளிள் கவிஞர் சொல்ல முற்படுவது எனது பார்வையில் "தானாகவே விடிவெள்ளி தோன்றுகிறது அல்லவா அது வானத்தில் மட்டும் நடக்கிற விசயம்"ஆனால் கடற்தொழிலாளர்களின் வாழ்வு அபப்டியல்ல விடிவெள்ளி போல உடனடியாக விடிவதிற்கு :lol: ............அவர்கள் எவ்வளவு கஷ்டபட்டாலும் அவர்களின் வாழ்வில் இருளிள் தான் மிதந்து கொண்டிருக்கும் என்ற அர்த்தத்தில் நான் இதனை எடுத்து கொண்டேன் :D ...........கவிஞர் அவர்களின் விளக்கத்தையும் பார்போம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

இதனை மனசில் வைச்சுத்தான் நானும் அவ்வாறு கேட்டேன். இருளில் மிதக்கிறோம் என நினனக்காமல் வெளிச்சத்தில் மிதப்போம் என கற்பனை பண்ணி அப்படியே வாழவைக்கலாமே என கேட்டேன். :D

இதனை மனசில் வைச்சுத்தான் நானும் அவ்வாறு கேட்டேன். இருளில் மிதக்கிறோம் என நினனக்காமல் வெளிச்சத்தில் மிதப்போம் என கற்பனை பண்ணி அப்படியே வாழவைக்கலாமே என கேட்டேன். :rolleyes:

வாழ்கையை கற்பனையில் அழகாக்குவது அவ்வளவு அழகல்ல என் பார்வையில் :unsure: அவ்வாறே எடுத்தியம்பது தான் சிறந்தது என்று நினைக்கிறேன் அக்கா :rolleyes: !!"இருள்" எப்பவும் கசக்கும் ஆனா இருளின் பின் வரும் வெளிச்சத்தை தேடும் போது கடந்து வந்த அல்லது இருளிள் தற்போது தத்தளித்து கொண்டிருக்கும் காலங்களை மறைக்க கூடாது!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல கவிதை! செம்மீன் படத்தில சிறு ட்ரெயிலர் பார்த்த மாதிரி!!! :rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழமைக்குரிய ஜமுனாவுக்கும் வெண்நிலாவுக்கும் சுவேக்கும் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் தானாக விடிவெள்ளி தோன்றாது, இருள் தொடரும். போராடினால் மட்டுமே வாழ்வில் விடியும் என்றால் ஜமுனாவும் வெண்ணிலாவும் மறுப்பீர்களா. அழகியர் வாழ்வில்கூட விடிவுக்கு கொஞ்சம் போராட வேண்டியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். தெரியாது. தப்பாக இருந்தால் திருத்துங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சிப் படிமங்களூடாக சொல்லப் படுகிற இக் கவிதை ஆங்கில தொகுபொன்றுக்காக தமிழகத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

Edited by poet

கடற்புறம் உங்கள் கவி அலைகளில் நான் கரைந்தேன் நன்றி தொடருங்கள் ...

தானாய் விடி வெள்ளி

தோன்றுகின்ற சங்கதிகள்

வானத்தில் மட்டும்தான்.

வாழ்வில் இருள் தொடரும்.

அருமை ரசித்தேன்.

தோழமைக்குரிய ஜமுனாவுக்கும் வெண்நிலாவுக்கும் சுவேக்கும் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் தானாக விடிவெள்ளி தோன்றாது, இருள் தொடரும். போராடினால் மட்டுமே வாழ்வில் விடியும் என்றால் ஜமுனாவும் வெண்ணிலாவும் மறுப்பீர்களா. அழகியர் வாழ்வில்கூட விடிவுக்கு கொஞ்சம் போராட வேண்டியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். தெரியாது. தப்பாக இருந்தால் திருத்துங்கள்.

:lol: போராடித்தான் வாழ்வில் விடியலை ஏற்படுத்தணும். எல்லோர் மனிதனும் ஏதோ ஒரு வகையில் போராடுறான் தான். அதற்கு மறுப்பில்லை. ஆனால் ஏன் நாமளும் அந்த தானாக விடியும் விடிவெள்ளி போல மாறக்கூடாது என்றதொரு கேள்வி என்மனதில். அவ்வளவுதான். :wub:

தோழமைக்குரிய ஜமுனாவுக்கும் வெண்நிலாவுக்கும் சுவேக்கும் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் தானாக விடிவெள்ளி தோன்றாது, இருள் தொடரும். போராடினால் மட்டுமே வாழ்வில் விடியும் என்றால் ஜமுனாவும் வெண்ணிலாவும் மறுப்பீர்களா. அழகியர் வாழ்வில்கூட விடிவுக்கு கொஞ்சம் போராட வேண்டியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். தெரியாது. தப்பாக இருந்தால் திருத்துங்கள்.

உங்கள் கருத்தும் தான் என் கருத்தும் சினிமா படத்தில் தான் நினைத்தவுடன் விடியும் வாழ்கை நிஜத்தில் அப்படியல்ல எத்தனையோ தடைகற்களை தாண்டிவர வேண்டும் :wub: ............ஒரு பெரிய விளக்கத்தையே இரு வரிகளிள் சொல்லி சென்ற விதம் அற்புதம்!! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தும் தான் என் கருத்தும் சினிமா படத்தில் தான் நினைத்தவுடன் விடியும் வாழ்கை நிஜத்தில் அப்படியல்ல எத்தனையோ தடைகற்களை தாண்டிவர வேண்டும் :lol: ............ஒரு பெரிய விளக்கத்தையே இரு வரிகளிள் சொல்லி சென்ற விதம் அற்புதம்!! :o

வாழிய தோழி, வறுமையிலும் கொடுமைகளிலலும் மரணத்திலும் வாழ்வே வலியது. வாழ்வே இனிமைகளின் ஊற்றாகவும் இன்பங்களின் நாற்றாங்காலாகவும் இருக்கிறது. வாழ்வுக்காக போராடுதல்தானே வாழ்வு. சொல்லிச் சென்ற அற்புதம் அதுவாகத்தான் இருக்கமுடியும்.

Edited by poet

கவிதை நன்று. எப்போது எழுதப்பட்ட கவிதை இது?

தானாய் விடி வெள்ளி

தோன்றுகின்ற சங்கதிகள்

வானத்தில் மட்டும்தான்.

வாழ்வில் இருள் தொடரும்.

உண்மையான வரிகள்.

வாழ்வில் வெளிச்சம் உண்டாக்க வேண்டியவர்கள் நாம்தான்.

போராடவேண்டும். வாழ்வின் கடைசி நிமிடம் வரை!

போரடித்தானே தாய் வயிற்றில் கருவுற்றோம்.

போராடித்தானே வாசல் கிழித்து வெளிவந்தோம்.

காற்று பெருங்காற்று

காற்றோடு கும்மிருட்டு.

கும்மிருட்டே குலைநடுங்கி

தள்ளி ஒரு சிறு குடிசை;

சிறுகுடிசைக்குள்ளே

இந்த வகை வசன அமைப்புகள் பற்றி விளக்கம் தாருங்களேன். அதாவது முதல் வரி முடிகிற சொல்லெடுத்து, அடுத்த வரி தொடங்குவது. இந்த வகையான வரி அமைப்புகளை எப்படி சொல்வார்கள்? வேறு கவிதைகளிலும் இதைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று. எப்போது எழுதப்பட்ட கவிதை இது?

இந்த வகை வசன அமைப்புகள் பற்றி விளக்கம் தாருங்களேன். அதாவது முதல் வரி முடிகிற சொல்லெடுத்து, அடுத்த வரி தொடங்குவது. இந்த வகையான வரி அமைப்புகளை எப்படி சொல்வார்கள்? வேறு கவிதைகளிலும் இதைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா?

அன்புக்குரிய இளைஞனுக்கு, நன்றி. இது 1980பதுகளில் எழுதப் பட்டது. வரி அமைப்புகள் இலக்கனத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள். சொல்லும் விடயத்துக்கு இயல்பாகவே ஒரு சந்தம் உண்டு. எதுகை மோனை வரி அமைப்பைப் பற்றிக் கவலைப் படாமல் இயல்பான வரிகளில் மனதின் சந்தத்த்ற்க்கு இடைக்கிடை இடம்பொடுத்து உங்கள் கவிதையை எழுதுங்கள்.

@ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ ..." என்கிற கம்பனின் கவிதை அதன் இலக்கணத்தாலல்ல உணர்வின் உண்மையான சந்தம் படிகிறதாலேயே சிறப்புப் பெறுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.