Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் கைது செய்யப்படுவதை விரும்பும் புலிகள் இயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கைது செய்யப்படுவதை விரும்பும் புலிகள் இயக்கம்

[10 - December - 2007] [Font Size - A - A - A]

தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையினரால் இவ்வாறு தொடர்ந்து கைது செய்யப்படுவதை புலிகள் இயக்கத்தினருக்கும் தேவைப்படும் விடயமாகும். ஸ்ரீலங்கா அரசு இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக விஷேட தடைகளை ஏற்படுத்தி விலங்கிடுவதையே புலிகள் இயக்கத்துக்குத் தேவை. அரசு தீவிரமாகவும் வக்கிரமாகவும் இவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறி தமிழர்களைத் துன்புறுத்த வேண்டும் என்பதே புலிகளின் ஆசை.

இந்த கைது நடவடிக்கைகள் தமது செயற்பாடுகளுக்கும் நோக்கங்களுக்கும் தோள் கொடுக்கும் காரியங்கள் . என புலிகள் இயக்கம் கருதுகிறது.

இதற்கு மேல் இவ்வாறான வகை தொகையற்ற முறையில் தமிழர்கள் என்பதற்காகக் கைது செய்யப்படுவதற்கு மேலாகத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு மீண்டும் கறுப்பு ஜூலை வன்முறைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் புலிகள் இயக்கத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதன் மூலம் தமது அனைத்து நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ளவும் தமக்கு எதிராகவுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதே புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தின் எதிர்பார்ப்பு.

கொடுமையான யுத்தச் சூழ்நிலையில் தமிழர்களின் பாதுகாப்பைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்காமல் இவ்வாறு விசாரணை கேள்வியின்றி தமிழர்களைப் பெருந்தொகையில் கைது செய்வதன் மூலமும் அடிப்படை மனித உரிமைகளை மீறி நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதன்மூலம் நிகழப்போவது என்ன? தமிழர்கள் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் வெறுப்பும் விரக்தியும் வேதனையும் கொண்டு நிம்மதியான வாழ்வை இழந்து குழம்பித் தவிக்கும் நிலைமை ஏற்படாதா? இதன்மூலம், பெரும் மகிழ்ச்சியடையப் போவது புலிகள் இயக்கம் தான். இவ்வாறு கொடுமையான முறையில் பாதிக்கப்பட்டு வேறு வழியற்று பதுங்கி வாழும் மக்களிடமிருந்து தமது புலிகள் இயக்கத்துக்கு புதிய உறுப்பினர்களையும் கரும்புலிகளையும் உருவாக்குவதே புலிகள் இயக்கத் தலைவர்களின் குறிக்கோள் ஆகும். இதனாலேயே புலிகள் இயக்கத்தினர் இவ்வாறு தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் அரசாங்கம் ஈடுபடுவதை விரும்புகின்றனர்.

அண்மையில் கிளிநொச்சியில் புலிகள் இயக்கத்தின் மாவீரர் தின நிகழ்வுகளுக்காக புலிகள் இயக்கத்தினரால் கொண்டு செல்லப்பட்ட அப்பாவிப் பாடசாலை மாணவிகளில் 11 பேர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அரசாங்கம் இந்தத் தாக்குதலை புலிகள் இயக்கமே செய்திருப்பதாகக் கூறியபோதும்;

பாதுகாப்புப் படை சார்ந்த இரகசிய தாக்குதல் பிரிவினரால் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. நுகேகொடை குண்டுத் தாக்குதலில் இளம் மாணவி ஒருவர் கொல்லப்பட்டதையிட்டு நாம் வேதனைப்படுவதாக கடுமையான கண்டனங்களை வெளியிட்டோம். இவ்வாறு இளம்பிள்ளைகளைக் கொல்லுதல் கொடுமையான பாவச் செயலாகும்.

இளம்பிள்ளைகள் கிளிநொச்சியில் கொல்லப்பட்டாலும் நுகேகொ?டயில் கொல்லப்பட்டாலும் அவர்கள் யாவரும் அப்பாவிப் பிள்ளைகளே ஆகும். அவர்களுக்கிடையே இருக்கும் ஒரு பேதம் தமிழர் சிங்களவர் வேறுபாடு மட்டுமே. புலிகள் இயக்கத்தினர் நடத்திய மாவீரர் தின நிகழ்வுக்குச் சென்ற அந்த இளம் மாணவிகள் தாம் மனம் விரும்பிச் சேரவில்லை. புலிகள் இயக்கத்தினரால் பலாத்காரமாகக் கூட்டிச் செல்லப்பட்டனர் . புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காட்டுப் பிரதேசங்களிலுள்ள கிராமங்களில் இயக்கம் கொடுக்கும் கட்டளைகளை மீறி நடக்க இளம் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களாலும் முடியாது. இதனை நன்கு அறிந்த நாங்கள் கிளிநொச்சியில் இளம் மாணவிகள் கொல்லப்பட்டதைக் கண்டிக்கவில்லை. குறைந்த பட்சம் நுகேகொடையில் இளம் மாணவி கொல்லப்பட்டதை வைத்து இனத் துவேஷத்தையாவது தூண்டாமலாவது இருக்க முடியாதா?

லங்காதீப வடக்கு தெற்கு விமர்சனம் 5/12/2007.

http://www.thinakkural.com/news/2007/12/10...s_page41995.htm

யாழ் கலம் துரோகிகள் கலமாகி விட்டத. லூசுதனம இப்படி தலைப்ப போட்டு, மக்களை பிழையான பாதையில நடதுரிங்கள்.

இது என்ன தூரிகளின் பிரச்சார வலையா?

யாழின் கட்டுபாடுகளை மீறி னீங்கள் இதை செய்யலாம?

பொய் பிர்ச்சாரம் இல்லாம அரசியல் இல்லை. விடுதலை வென்றெட்ட பொய் பிரச்சாரம் உதவாது

சோழியன் குடுமி சும்மா ஆடாது. :wub:

சோழியன் குடுமி சும்மா ஆடாது. :wub:

இதில 101 வது சிந்தனை துளி இருப்பது போல் இருக்கிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் குடுமி சும்மா ஆடாது
.

தலையை நன்னா விரிச்சு ஆடனுமுங்க :wub::wub::lol:

என்னடா இது...........? இந்தப்பாண்டி நாட்டுக்கு வந்த சோதனை.........?

யாழிலும்....ஆழ ஊடுருவும்.....படையணியா......?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லங்காதீபவின் புழுகு மூடைகளை யாழ் வாசகர்கள் நகைச்சுவையாக எடுப்பார்கள் என்ற ஒரே ஒரு நோக்கில் தான் இச்செய்தி நகைச்சுவை பகுதியில் இணைக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நண்பர்களே .......... இப்படியான அனைத்து செய்திகளையம் நாம் அறிந்திருக்க வேண்டும்.

சிங்கள இளைஞர்கள் ஏன் இனத்துவேசம் பிடித்தலைகின்றார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு நாம் விடை தேடவேண்டியாவராகவும்மிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.