Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிலிருந்து அடிமைகளாக அழைத்துவந்தோரை பொறுப்பேற்க வேண்டிய நிலை - மேத்தானந்த தேரோ.

Featured Replies

நாட்டில் சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் போராட்டம் நிலவினால் எவ்வாறு தமிழ் எம்.பி.க்களினால் பாராளுமன்றம் வர முடியும் என்று ஜாதிக கெல உறுமைய கட்சியின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரர் எம்.பி கேள்வியெழுப்பினார்.

பாரளுமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.:-

'பிரித்தானியர் இலங்கையை எம்மிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லும் போது மலையக தோட்டப் பகுதிகளை நாம் பொறுப்பேற்க வேண்டிய தேவையும் இல்லாத ஒரு கூட்டத்தினரை பொறுப்பேற்க வேண்டிய நிலையே எமக்கேற்பட்டது.

மலையத்தில் எமது வளங்களைக் கொள்ளையடித்து கொண்டிருந்த பிரித்தானியர் இந்தியாவிலிருந்து அடிமைகளாக அழைத்து வரப்பட்ட மக்களையும் எமக்கு பொறுப்பேற்க வேண்டியிருந்தது.

அவர்களுக்கு உணவு, வாழ்விடம் வழங்கி பாராமரிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. உலகத்தில் இவ்வாறு செயற்பட்ட ஒரே நாடு இலங்கையே ஆகும். ஆம், நாம் அடிமைகளுக்கு வாழ்வு கொடுத்தோம்.

சிங்களவர் தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதாக இச்சபையில் சிலர் கூறுகின்றனர். ஆனால், இது முற்றிலும் பொய்யானது. வெறுமனே இது ஜோடிக்கபட்டட கதையாகும். மாறி மாறி வந்த சிங்களத் தலைமைகளே தமிழர்களுக்கு உரிமை பெற்றுக் கொடுத்தார்கள்.

தமிழ் மக்கள் கூட்டாக கைது செய்யபடுவதாக இங்கு குற்றம் சாட்டப்பட்டது. இது எவ்வகையிலும் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. தமிழர்களாக பயங்கரவாதிகளாக இருப்பதால் தான் இக் கைதுப் படலம் தொடர்கின்றது. அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராகவே செயற்படுகிறது.

இந் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான போரட்டம் எதுவுமே கிடையாது. சிங்கள, தமிழ் மக்களுக்கிடையேயும் எப் போராட்டமும் இல்லை. போராட்டம் நிலவுவதாக கூறுவதும் கட்டுக்கதை.

இவ்வாறான ஒரு போராட்டம் இருக்குமானால் இப்பாராளுமன்றத்தினுள் தமிழ் உறுப்பினர்கள் வரமுடியுமா? அல்லது இப்பாராளுமன்றித்தினுள் தமிழ் உத்தியோகத்தர்கள் கடமையாற்ற முடியுமா?'

நன்றி தினக்குரல்

சமர்ப்பணம் : ஆறுமுகனாருக்கும், செல்லச்சாமிகளுக்கும் இது சமர்ப்பணம். இன்னமும் வேட்டி இடுப்பில் தொங்கிக் கொண்டு தானிருக்கிறதா. அல்லது அதையும் பேரினத்திடம் அடகு வைத்து விட்டீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமா மேத்தானந்த தேரோ சொல்வதில் உண்மை இருக்கு. அவர் சொல்வதை நீங்கள் தப்பாக எடுத்தது உங்கள் பிழை.. அவர் சொல்ல வந்த விடயம் ஒரு இந்திய அடிமையின் பல்லை தங்க பேழையில் வைத்து பாது காக்க வேண்டியுள்ளதே என்ற விடயமாகும் :lol::D

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அப்படி அடிமையாகக் கூட்டிக் கொண்டு வந்தவர்களின் பரம்பரையில் வந்த முரளிதரனால் தான் இலங்கை உலக அரங்கில் துடுப்பாட்டத்தில் சாதனை படைக்கிறது என்று தேரர் மறந்து விட்டாரா.

கந்தப்பு கண்டமாதிரியெல்லாம் அவரை கேள்வி கேக்கக்கூடாது? அவர் சொன்னது முழுக்க முழுக்க ஆறுமுகத்தாருக்கும் செல்லச்சாமியாருக்கும் தான். முரளிதரனிடம் இப்ப அல்ல ஆனா ஆறு தலாக கேட்பார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தரும் ஓர் இந்திய அடிமை

ஆறுமுகத்துக்கும் சந்திர சேகரனுக்கும் மானத்தை அடகு வச்சு விட்டு வந்திருப்பதால் இது எருமை மாட்டிற்கு மேல் மழை பெய்வது பொன்றதே

தூங்கிறவனை எழுப்பலாம் ஆனால் தூங்கிற மாதிரி நடிப்பவனை எழுப்பமுடியாது

அப்ப சிங்கத்திற்கு பிறந்த ஈனப்பிறவிகளுக்கு மனிதர்களோடு வாழ்வது ஒத்து வராது. காடுக்குள் கலைக்க வேண்டும்

அரசமரக்கொப்போட வந்த பிச்சைக்காரகூட்டம்.. என்ன பேச்சு பேசுறாங்க... :lol:

என்ன கொடுமை சார் இது..

இதப்படிக்கும்போது சிரிப்புதான் வருது..

தயவு செய்து இந்த செய்தியை நகைச்சுவையில் போடுங்க

Edited by vikadakavi

"புத்தரும் ஓர் இந்திய அடிமை"

இருக்கலாம். ஆனால் அவர்கள் பார்வையில் அவர் ஆரிய உயர் வம்சத்தைச் சேர்ந்தவர். அதேநேரம் திராவிடர் வம்சத்தைச் சேர்ந்த தமிழர்களோ பிழைப்புக்காக நாடுவிட்டு நாடு ஓடும் கூலிகள் அல்லது அகதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கமும், இராசகுமாரியும் புணர்ந்து பிறந்ததாகச் சொல்லிக் கொள்கின்ற இவர்களுக்கு மிருகப் புத்தி தானே இருக்கும். இந்தியாவில் இருந்து குற்றங்கள் செய்து. நாடுகடத்தப்ப்டட விஜயன் என்றவனின் வம்சவளியாக்க காட்டுகின்ற இவர்கள் மட்டும் யோக்கியமானவர்களா?

சிறுவயதில் குழப்படியாக, பெற்றோருக்குக் கட்டுப்படாதவர்களாகத் திரிந்த பிள்ளைகளைத் தான், பிக்குவாக அனுப்பிவிடுவார்கள். அந்த ரவுடிக் குணம் இருக்கத் தானே செய்யும்.

மலையகத் தமிழர்களின் பணத்தில் தான் இந்தச் சிங்கள நாய்களின் வெளிநாட்டுப் பொருளாதாரம் தங்கியிருக்கின்றது என்பதை இந்த தேரோக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

தமிழீழம் என்பது BDI அல்ல violent ஆன UDI என்பதில் குழப்பமில்லை. அந்தக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ள தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

மலையகத்தில் உள்ளவர்களிற்கு என்ன நடக்கும்? சிங்களம் அவர்களையும் கலைக்குமா? அல்லது தெரிந்தெடுத்து சுயதொழில்முயற்சி நிர்வாகம் அலுவலக வேலை என்று பொருளாதாரத்தில் கொஞ்சம் உயர் நிலையில் உள்ளவர்களை கலைத்துப் போட்டு தனியே தோட்டங்களில் வேலை செய்பவர்களை மாத்திரம் தனது நன்மை கருதி வைத்திருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தில் தூரநோக்கோடு இன அழிப்பைச் சிங்கள அரசு செய்கின்றது.

தனியார் மருத்துவமனைகள், அல்லது தனி வைத்தியர்களை வைத்து, திருமணமாகாத அல்லது, கன்னிப் பெண்களுக்கு கருத்தடை செய்வித்துக் கொண்டு இருக்கின்றது. இதைச் செய்கின்ற தனியார் வைத்தியர்கள் குறித்தளவு பணமும், உணவுப்பொருட்களும் கொடுத்து விடுகின்றார்கள். அப்படியான நிலையில் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது தெரியும்.

2. தோட்ட வேலைக்குப் பெண்கள் செல்லுகின்றபோது, குழந்தைகள் காப்பகத்தில், அல்லது பாடசாலைக்குச் செல்கின்ற சிறார்களுக்குச் சிங்கத்தை முக்கியமாக்க முனைகினறார்கள். அதனை வலியுறுத்த சிங்கள ஆசிரியர்களை அனுப்பி சிங்களமயமாக்கல் நடக்கின்றது.

ஏன் கொழும்பில் பல தமிழ்பாடசாலை என்ற பெயரில் இருக்கின்ற மலையகமக்களின் பாடசாலைப் பிள்ளைகளுக்கு தமிழ் கொஞ்சம் தான் தெரியும்.

(புலத்தமிழர்களின் நிலமையும் அதே போன்றது என்பதால் கவலைப்படத் தேவையில்லை)

எனவே காலம் செல்லச் செல்ல மலையகத்துகச் சிங்களவர்களாக அருகிப் போய் விடக் கூடும். அதனால் வடக்குக் கிழக்கைச் சாராத தமிழர்கள் பற்றிய எவ்வித பிரச்சனைகளும் எழாது. வடக்குக் கிழக்கு மக்கள் தான் இப்போதைக்குப் பிரச்சனையாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூசணத்தில் ஏசிய பசில் ராஜபக்சவை மன்னித்த மகாத்மாக்கள் மலைய்கத் தலைமைகள். இவர்கள் தம் குடும்பத்திற்காக அரசியலில் இருக்கிறார்கள். சிங்களவன் எப்படி அடித்தாலும் அவங்களை வடிவேல் பாணியில் ரொம்ப நல்லவன் என சேர்டிபிக்கேட் கொடுப்பார்கள்.

விஜயனின் வாரிசுகளுக்கு இப்படியொரு எண்ணமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.