Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா - ஜெயபாலன் (வெளிச்சம் 100 இதழ்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புறநானூற்றில் இருந்து தொடரும் தமிழ் இலக்கிய மரபில் புகழ்பூத்த சில கவிதைகளில் கவிஞர்களின் ஊடலும் கோபமும் பதிவாகியுள்ளது. சின்ன்ம் சிறுவயதில் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறைப் போர்க் களத்தில் சந்தித்ததில் இருந்து கவிஞர் புதுவை இரத்தினதுரையும் நானும் ஆப்த நண்பர்கள். மாக்சிய கருத்தாடல்களோடும் கள்ளோடும் கவிதைகளோடும் கழிந்த நாட்கள் பல. 2006ம் ஆண்டின் பின்பகுதியில் வன்னியில் என்னுடைய அம்மா நோய்வாய்ப் பட்டிருந்தபோது நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அம்மவை புதுவை சென்று பார்க்கவில்லையென கேழ்விப்பட்ட கோபத்தில் அம்மா கவிதையை எழுதினேன். அதனை புதுவையே தான் வெளியிடும் வெளிச்சம் 100 மலரில் வெளியிட்டது சிறப்பு. 1000 வருடங்கள் நிலைக்கவுள்ள எனது கவிதைகளுள் அம்மாவும் ஒன்று.

எமது காதலும் மோதலும் நிறைந்த நட்பை அறியாத சிலர் கொச்சையாக எழுதும்போது நெஞ்சு வலிக்கிறது.

அம்மா

- வ.ஐ.ச.ஜெயபாலன்

போர் நாட்களிலும் கதவடையா நம்

காட்டுவழி வீட்டின் வனதேவதையே

வாழிய அம்மா.

உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து

அன்றுநான் நாட்டிய விதைகள்

வானளாவத் தோகை விரித்த

முன்றிலில் நின்று எனை நினைத்தாயா

தும்மினேன் அம்மா.

அன்றி என்னை வடதுருவத்தில்

மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?

அம்மா

அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்

நம் முற்றத்து மரங்களில்

மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?

தம்பி எழுதினான்.

வலியது அம்மா நம்மண்.

கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்

வானில் ஒலித்த போதெலாம்

உயிர் நடுங்கினையாம்.

நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.

இருளர் சிறுமிகள்

மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர

நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்

கன்னிமாங்கனி வாடையில் வந்த

கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற

கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே

எங்கள் ஆற்றை எங்கள் காட்டை

உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.

என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை

உன்னை வந்து பார்க்கலையாமே.

போகட்டும் விடம்மா.

அவனும் அவனது

பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல

உன்னைக் காக்க

யானையின் மதநீர் உண்டு செளித்த நம்

காடும் உளதே

*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு.

Edited by poet

புறநானூற்றில் இருந்து தொடரும் தமிழ் இலக்கிய மரபில் புகழ்பூத்த சில கவிதைகளில் கவிஞர்களின் ஊடலும் கோபமும் பதிவாகியுள்ளது. சின்ன்ம் சிறுவயதில் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறைப் போர்க் களத்தில் சந்தித்ததில் இருந்து கவிஞர் புதுவை இரத்தினதுரையும் நானும் ஆப்த நண்பர்கள். மாக்சிய கருத்தாடல்களோடும் கள்ளோடும் கவிதைகளோடும் கழிந்த நாட்கள் பல. 2006ம் ஆண்டின் பின்பகுதியில் வன்னியில் என்னுடைய அம்மா நோய்வாய்ப் பட்டிருந்தபோது நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அம்மவை புதுவை சென்று பார்க்கவில்லையென கேழ்விப்பட்ட கோபத்தில் அம்மா கவிதையை எழுதினேன். அதனை புதுவையே தான் வெளியிடும் வெளிச்சம் 100 மலரில் வெளியிட்டது சிறப்பு. 1000 வருடங்கள் நிலைக்கவுள்ள எனது கவிதைகளுள் அம்மாவும் ஒன்று.

எமது காதலும் மோதலும் நிறைந்த நட்பை அறியாத சிலர் கொச்சையாக எழுதும்போது நெஞ்சு வலிக்கிறது.

அம்மா

- வ.ஐ.ச.ஜெயபாலன்

போர் நாட்களிலும் கதவடையா நம்

காட்டுவழி வீட்டின் வனதேவதையே

வாழிய அம்மா.

உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து

அன்றுநான் நாட்டிய விதைகள்

வானளாவத் தோகை விரித்த

முன்றிலில் நின்று எனை நினைத்தாயா

தும்மினேன் அம்மா.

அன்றி என்னை வடதுருவத்தில்

மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?

அம்மா

அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்

நம் முற்றத்து மரங்களில்

மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?

தம்பி எழுதினான்.

வலியது அம்மா நம்மண்.

கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்

வானில் ஒலித்த போதெலாம்

உயிர் நடுங்கினையாம்.

நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.

இருளர் சிறுமிகள்

மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர

நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்

கன்னிமாங்கனி வாடையில் வந்த

கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற

கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே

எங்கள் ஆற்றை எங்கள் காட்டை

உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.

என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை

உன்னை வந்து பார்க்கலையாமே.

போகட்டும் விடம்மா.

அவனும் அவனது

பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல

உன்னைக் காக்க

யானையின் மதநீர் உண்டு செளித்த நம்

காடும் உளதே

*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு.

அருமை ஐயா.... ஊடல் காதலுக்கு மட்டும் அல்ல நட்புக்கும் உண்டு... அந்த அனுபவம் நமக்கும் வாய்த்திருக்கின்றது.....

நம்பிக்கைதானே வாழ்க்கை.... மனிதனின் தும்பிக்கையும் அதுதானே ...... உங்கள் அம்மா நலமுடன் இருக்க வேண்டுதல்களுடன்.........

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமை ஐயா.... ஊடல் காதலுக்கு மட்டும் அல்ல நட்புக்கும் உண்டு... அந்த அனுபவம் நமக்கும் வாய்த்திருக்கின்றது.....

-எல்லாள மஹாராஜா-

அருமை ஜெயபாலன் என்று எழுதுங்கள் எல்லாளமகாராசா.

JP

அம்மா

- வ.ஐ.ச.ஜெயபாலன்

போர் நாட்களிலும் கதவடையா நம்

காட்டுவழி வீட்டின் வனதேவதையே

வாழிய அம்மா.

உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து

அன்றுநான் நாட்டிய விதைகள்

வானளாவத் தோகை விரித்த

முன்றிலில் நின்று எனை நினைத்தாயா

தும்மினேன் அம்மா.

அன்றி என்னை வடதுருவத்தில்

மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?

அம்மா

அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்

நம் முற்றத்து மரங்களில்

மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?

தம்பி எழுதினான்.

வலியது அம்மா நம்மண்.

கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்

வானில் ஒலித்த போதெலாம்

உயிர் நடுங்கினையாம்.

நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.

இருளர் சிறுமிகள்

மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர

நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்

கன்னிமாங்கனி வாடையில் வந்த

கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற

கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே

எங்கள் ஆற்றை எங்கள் காட்டை

உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.

என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை

உன்னை வந்து பார்க்கலையாமே.

போகட்டும் விடம்மா.

அவனும் அவனது

பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல

உன்னைக் காக்க

யானையின் மதநீர் உண்டு செளித்த நம்

காடும் உளதே

*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு.

பலதரப் பட்ட உணர்வுகளை வரிகளில் வளைத்துக் கட்டிய கவிதை ..... வாசிக்கும் போது கட்டவிழ்ந்து விரிந்து செல்கின்றது உங்கள் உணர்வுகளோடு ஒன்றிய மனம் போல .... நன்றி தொடர்ந்தும் எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை

உன்னை வந்து பார்க்கலையாமே.

போகட்டும் விடம்மா.

அவனும் அவனது

பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல

உன்னைக் காக்க

யானையின் மதநீர் உண்டு செளித்த நம்

காடும் உளதே

புலம் பெயர்க்கப்பட்ட ஒரு உறவின் தேடல்.

தாயின் அரவணைப்பிழந்த கன்றின் வாடல். முதுமை தோய்ந்து உடல் நலமிழந்த கருவறை நோக்கி பாசத்தில் தவிக்கும் பிள்ளையின் காலக்குறியீடு இக்கவிதை.

இங்கு நம் தலைவர் புதுவைக் கவிஞரின் பாட்டுடைத் தலைவன் மட்டுமா? உங்களுக்கு அவர் பாட்டுடைத் தலைவன் இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலனுக்கும் வல்வைசாகராவுக்கும் நன்றியும் புதுவருட நல் வாழ்த்துக்களும்.

என்னுடைய கவிதை வாசகர்கலைள எனது பரீச்சாத குறுநாவல்களையும் வாசித்து கருத்தெழுத வரவேற்கிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தேடலையும் வாடலையும் தேசத்தின் சூழலையும் படம்பிடித்து பாசத்தை வெளிப்படுத்திய அருமைக் கவிவரிகள் பாராட்டுகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேடலையும் வாடலையும் தேசத்தின் சூழலையும் படம்பிடித்து பாசத்தை வெளிப்படுத்திய அருமைக் கவிவரிகள் பாராட்டுகள்.

கவிதை மனசு செளித்த காவலூர்க் கண்மணிக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.