Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிப் போர்தான் என்பது எப்பவோ முடிந்த காரியம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனிப் போர்தான் என்பது எப்பவோ முடிந்த காரியம்!

[ உதயன் ] - [ Dec 20, 2007 05:00 GMT ]

மீண்டும் முழு அளவிலான இராணுவப் போர் வெறிப் பொறிக்குள் இலங்கைத் தீவு சிக்கப் போகின்றது. சமாதானத்திற்கான அமைதிப் பேச்சுகளுக்கான கதவுகள் இறுக இழுத்து மூடப்படப் போகின்றன. அதற்கான கட்டியத்தை முன்னறிவித்தலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூசகமாக வெளியிட்டிருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது உத்தியோகபூர்வ தடை விதிக்கும் உத்தேசம் அரசுக்கு இருப்பது பற்றிய தகவலை அவரே தமது கருத்து நிலைப்பாடாக வெளியிட்டிருக்கின்றார்.

சமாதானத்தையும் அமைதியையும் பரப்புவதையே தமது உலக வருகையின் இலக்காகக் கொண்ட சமாதானப் பிரபு இயேசுவின், அவனி வருகையை ஒட்டித் தாம் தமது அலரி மாளிகையில் நடத்திய கிறிஸ்மஸ் நிகழ்விலேயே முழு யுத்த வருகை பற்றிய தகவலையும் அவர் கோடி காட்டியிருக்கின்றார்.

தேசிய சமாதானப் பேரவையின் பிரதிநிதி ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியமை போன்று புலிகள் மீது அரசு தடை விதிப்பது என்பது, இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித் தீர்வே தனது உறுதியான நோக்கம் என்ற அரசின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்துகின்றது.

இலங்கை அரசைப் பொறுத்தவரை இத்தகைய இராணுவ வெறித்தன நிலைப்பாட்டுப் போக்கு புதிய விடயம் ஒன்றல்ல. இலங்கையில் ஆட்சிக்கு வந்த அண்மைக்கால அரசுகள் எல்லாமே, ஆட்சிக்கு வந்த புதிதில் இராணுவ சமவலு நிலையில் தாங்கள் மேலாண்மை பெற்றிருக்கின்றன எனக் கருதும் சூழ்நிலைகளில் இப்படித்தான் போர்வெறிச் சூளுரைகளையும் இராணுவத் திமிர்த்தனப் பேச்சுக்களையும் பிரகடனப்படுத்தி நின்றன என்பது எமது பட்டறிவு.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் ஜனாதிபதி பிரேமதாஸவும் அவரது அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னாவும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அவரது மாமனாரான அமைச்சர் அனுருத்த ரத்வத்தையும் உரைத்த சூளுரைகளையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷவும் இப்போது உரைக்கின்றனர் என்பதும் வெளிப்படை.

இப்படிப் போர் வெறித்திட்டத்தைக் கட்டவிழ்த்து விட்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசு, யாழ். குடாநாட்டைக் கைப்பற்றி, வன்னிப் பெரு நிலப்பரப்பை "ஜெயசிகுறு' நடவடிக்கை மூலம் பெரும்பாலும் கிழக்கு மேற்காக இரண்டாகப் பிளந்து விட்டதாக மார்தட்டி, "புலிகளில் 96 வீதத்தை அழித்து விட்டோம்; இனி எஞ்சியிருக்கும் நான்கு வீதப் புலிகளையும் விரைவில் அழித்தொழித்து விடுவோம்' என்று பிரகடனப்படுத்தியபோதுதான், விஸ்வரூபம் எடுத்து வெளிப்பட்டது புலிகள் அமைப்பு. விடயங்கள் தலைகீழாகின.

நாட்டின் பொருளாதாரத்தைக் குட்டிச்சுவராக்கி, பே(ர)ராயுதங்களை வாங்கிக் குவித்து, தன்னுடைய இராணுவக் கட்டமைப்பைப் பேரரக்க இராட்சத வடிவத்துக்கு உருவேற்றி, உசுப்பேற்றி வைத்திருக்கும் கொழும்பு அரசின் உள்நோக்கம், தமிழர் தேசியத் தாயகம் மீது கொடூரப் போர் ஒன்றைக் கட்டவிழ்த்து விடுவதே என்பதில் சந்தேகம் இல்லை.

இனப்பிரச்சினை விவகாரத்தில் தார்மீக நியாயத்துக்கு மேலதிகமாகத் தமிழர் தாயகத்திடம் இருக்கும் ஒரே பலம் வலிமை புலிகளின் போரியல் சக்திதான். அதை அழித்து, ஒழித்து, நிர்மூலமாக்கிய பின், தமிழர்களைத் தனது காலில் மண்டியிடச் செய்ய வைத்து, தான் விரும்பும் உருப்படியற்ற ஒரு பிச்சைத் திட்டத்தை, இனப்பிரச்சினைக்கான தீர்வு வடிவமாகத் தமிழர் தலைமீது திணித்து, தமிழர்களை அடக்கி, ஒடுக்கும் இலக்கையே சிங்கள தேசம் தனது உள்நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது என்பதும் திண்ணம்.

""புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியில் ஒடுக்கினால் மட்டுமே சமாதானம் சாத்தியமாகும் என்று நாம் நம்புகிறோம்.'' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடும் கூற்றினுள் புதைந்து கிடக்கும் உட்கருத்து இதுதான்.

நாடாளுமன்றில் போதிய பலமின்றி, வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் அல்லாடிய மஹிந்தரின் அரசு, கடைசி நேரத்தில் இறுதிக் கட்டத்தில் பௌத்த, சிங்களப் பேரினவாத, மேலாதிக்கச் சிந்தனை கொண்ட ஜே.வி.பியின் காலில் சரணடைந்த போதே அதன் பெறுபேறு இப்படித்தான் நடக்கும் என இப்பத்தியில் கோடி காட்டியிருந்தோம். ஜே.வி.பியினரின் தயவில் ஆட்சிப் பீடத்தில் இருக்கும் அரசு, ஜே.வி.பி போடும் தாளத்திற்கு ஏற்ப ஆடாமல் வேறு எப்படித்தான் செயற்படும்? புலிகள் இயக்கத்தைத் தடை செய்தல், யுத்த நிறுத்தத்தைக் கிழித்தெறிதல் போன்ற இன்னோரன்ன வாக்குறுதிகளை வழங்கி, புது வருடத்தில் அவற்றைச் செயற்படுத்த இணங்கியதன் மூலமே ஜே.வி.பியை நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் கடைசி நேரத்தில் தனக்கு இசைவாக அரசுத் தரப்பு வளைத்துப் போட்டது என்பதும் ஏற்கனவே கசிந்த செய்திதான்.

அந்த வாக்குறுதிகளைத் தமது அரசு தப்பாமல் செயற்படுத்தப் போகின்றது என்பதை தமது அரசுடன் உடன்பாடு கண்ட ஜே.வி.பி. தலைமைக்கு சூசகமாகவும், அதுபற்றிய முன் தகவலை சர்வதேசம் உட்பட ஏனைய தரப்புகளுக்கு கட்டியமாகவும் இப்படி நத்தார் விழாச் சந்திப்பின்போது கசிய விட்டிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்தர். அவ்வளவே.

புலிகள் மீது தடை விதிக்கப்படுமானால், புலிகளுடன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு போன்றவை தொடர்பாடல் நடத்த முடியாமல் போகும். அதனால் இப்போது செத்துச் செயலிழந்து, உருக்குலைந்து, சருகாகி, செல்லாக் காகிதமாகக் கிடக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் தன்பாட்டிலேயே உத்தியோகபூர்வமாகவே கைவிடப்பட்டதாகிவிடும். பிறகென்ன? முழு அளவிலான யுத்தம்தான்.

மஹிந்த அரசின் உள்நோக்கமும், திட்டமும், விருப்பமும், இலக்கும், தந்திரோபாயமும் எல்லாம் ஒன்றுதான். அது தமிழர் தாயகம் மீது கொடூர யுத்தம் ஒன்றைத் தொடுப்பதுதான். ஆகவே, இந்நிலையை யாழ்ப்பாணம் யோகர் சுவாமியின் மகா வாக்கியத்தில் கூறுவதானால் இங்கு போர் என்பது "எப்பவோ முடிந்த காரியம்.' அதுவே நிலைமை. அதை எதிர்கொள்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழியே இல்லை.

Published: Dec 20, 2007 05:00 GMT

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிப் போர்தான் என்பது எப்பவோ முடிந்த காரியம்!

[ உதயன் ] - [ Dec 20, 2007 05:00 GMT ]

Published: Dec 20, 2007 05:00 GMT

இது தான் சிங்கள அரசியல்வாதிகள் எல்லோருடைய பொதுவான கருத்தாகும்.

ஆனால் புலிகளை பலவீனபடுத்த அல்லது முழுப்போருக்கான ஆயுத்தங்களை மேற்கோள்ளும்வரை சமாதானம் பேச்சுவார்த்தை என்று இழுத்தடிக்கின்றார்கள்.

இப்போ அதற்கான காலம் வந்துவிட்டது என்று மகிந்த கருதுகின்றார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: சிங்கள தேசத்திற்கு அதன் பாஷையிலேயே பதில் கொடுக்கப்பட வேண்டும். ஜயசிக்குரு எதிர்த்தாகுதலில் தொடங்கி ஆனையிறவு கைப்பற்றியது வரையிலான ஒரு முழுத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அதுவரை சிங்களம் இந்த திமிர்க்கதைகளை கதைப்பதைத் தடுக்க முடியாது.

''முழு அளவிலான இராணுவப் போர்'' என்றால் என்னங்கோ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை மேல் எள்ளவும் நம்பிக்கை இல்லாமல் தொடர்சியான கெரில்லா முறை அல்லது மரபு யுத்தம் ஒன்றை இராணுவம் மீது தொடுப்பதை "முழு அளவிலான இராணுவ போர் "என்று குறிப்பிடலாம்.

முழு அளவிலான போர் ஒன்றை நடத்துவதற்கு இலங்கை அரசோ இலங்கை இராணுவமோ தகுதியற்றது. ஏதாவது ஒரு முனையில் பலமானதொரு அடி விழும்போது தனது முழுமையான போரினை அரசு கைவிட்டுவிடும். இது காடந்தகால இலங்கையரசின் போரியல் வரலாற்றில் கண்ட உண்மை .

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.