Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசையை மட்டும் நிறுத்தாதே

Featured Replies

அப்பால் தமிழ் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள கவிதை இது. படித்தேன். பிடித்திருந்தது. பகிர்கிறேன். எதிரிக்காயும் கவலைப்படும் உள்ளம் தமிழர் உள்ளம் என்பது கவிதையில் மீண்டும் வெளிப்படுகிறது. போர்த்துக்கீசரில் தொடங்கி, சிங்களவரிடம் வந்து... கவிஞர் மிக இயல்பாகவும், கவிநயத்தோடும் கவிதை வடித்து வைத்துள்ளார். இந்தக் கவிதையை வாசித்ததும் எனக்கு நினைவில் வந்த வரிகள்:

ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்துவருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது.

இசையை மட்டும் நிறுத்தாதே

எழுதியவர்: க.வாசுதேவன்

1.

அமெலியா, போர்த்துக்கல் அழகியே,

நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய்

இன்று இது எம் இறுதி இரவு

சாளரத்தினூடே பார்

இருள் அடர்த்தியாக இருக்கிறது

வானெங்கும் அளவிற்கதிகமாகவே

விரவிக் கிடந்தாலும்

நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?

நீ விமானம் ஏறிப்புறப்பட்டுவிடுவாய்

நான் அதிவிரைவுத் தொடரூந்தொன்றில்

பயணித்து விடுவேன்.

பயணங்கள் எனும் பகற்கனவுகளிலிருந்து

விழிக்கும் வரையும்

மீளவும் ஒருபோதும் சந்திக்கவே முடியாத

இன்மைக்குள் நாம் காத்திருக்கவேண்டும்

இந்த இறுதியிரவை நிறைப்பதற்குக்

கதையொன்று சொல்

காத்திருப்பை இதமாக்குவதற்கு அந்த இசையின்

சத்தத்தைச் சற்று அதிகமாக்கிவிடு

2.

கடலோடிகளாகவும் கொள்ளையர்களாகவும்

கணவர்களும் மகன்களும் காதலர்களும்

புறப்பட்டுச் சென்றபின்

கண்களிலிருந்து கப்பல்கள் மறையும் கணம் வரையும்

விழிவிளிம்பில் முட்டிநின்ற கண்ணீர்த்துளிகளுடன்

போர்த்துக்கீசப் பெண்கள் கடல் விளிம்பை

விட்டகன்றுவீடு திரும்பினார்கள்.

சமுத்திரங்கள் எங்கும்

போர்த்துகல்கள் மிதந்த காலத்தில்

கணவர்களும் மகன்களும் காதலர்களும்

கடலோடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும்

கொலைகாரர்களாகவும் அலைபாய்ந்த காலத்தில்

போர்த்துககீசப் பெண்கள்

'ஃபதோ' இசை பாடிக்கொண்டிருந்தார்கள்.

காதலும் பாசமும் காமமும்

கரைந்து போகும் சோகம் பிறக்கும்

இசையிலேயே அவர்கள் உயிர்வாழ்ந்தார்கள்.

இதுதான் அவ்விசை.

லிஸ்பொண் நகரத்துக் கோடைகால

நள்ளிரவுகளில் நூற்றாண்டுகளைத்தாண்டி

ஒலித்துக்கொண்டேயிக்கும் 'ஃபதோ'.

மீண்டு வராத கப்பல்களில் புறப்பட்டுச் சென்ற

மீண்டுவராத மனிதர்களை மென்று விழுங்கின சமுத்திரங்கள்.

மீண்டு வராத கணவர்களினதும் காதலர்களினதும்

மகன்களினதும் நினைவுகளை மென்று விழுங்கிது காலம்.

ஒரு ஓலம் மட்டும் எப்போதுமே

எஞ்சியிருந்தது.

ஒரு ஓலம் மட்டும் எப்போதுமே

எஞ்சியிருக்கிறது.

காற்றசையா நடுநிசிகளில்

பட்டமரங்களின் கிளைகளில்

படுத்துறங்கிக்கொண்டிருக்கி

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இசையை மட்டுமல்ல எம் இதயத்தையே ஒருகணம் நிறுத்திவிடும் கவிவரிகள்.

மீளவும் ஒருபோதும் சந்திக்கவே முடியாத இன்மைக்குள் காத்திருக்க

முன்பு வந்த அந்த இறுதி இரவை நிறைப்பதற்கு எது சாத்தியம்? இசையா?

காலம் சுமந்துவந்த சோகம் வழியும் ஓலம் கலந்த கவிதை.

எழுதிய வாசுதேவனுக்கும் எடுத்துவந்த கலைஞனுக்கும்

நன்றிகளும் பாராட்டுக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் வாசுதேவனின் வரலாற்றுப் பிரக்ஞையும் காதலியின் மெய் பற்றியும் தாண்டியும் செல்ல தேர்ந்தெடுத்த வடிமும் காதல் கவிதையை மேலான ஒரு தளத்துக்கு கொண்டு செல்கிறது. இதைத்தான் இனியவள் மற்றும் வெண்ண்ணிலாவின் காவிதைககள் பற்றி எழுதும்போது "அவனையூ அவளையும் தாண்டி அவர்களது சூழலுக்குள் வரலாற்றுக்குள் செல்லுதல்" என்று சொன்னேன். அண்மையில் நண்பன் வாசுவுடனும் சோபா சக்தியுடனும் நீண்ட இரவு செயின் நதிக் கால்வாக்கரையில் குந்தியிருந்து பேசிக்கொண்டிருந்தோம். முன்னே வானவில்போலா வழைந்த இருப்புப் பாலத்தின்ன் பக்கதில் வாழிப்போக்கர்கள் மறைந்து மூதிரம்பெய வசதியாக நின்றசெஸ்நட் மரம் இலையுதிர்துக் கொண்டிருந்தது. புலபெயர்வு போர்நிலவரம் மட்டுமன்றி அந்தக் கால்வாயை வெட்டிய நெப்போலியன் பற்றியும்கூட பேசினோம். தனிய நீஎப்படடி நான் இப்படி பேஎச்சு மட்டுமல்ல. கவிதையும் இப்படி விரிகிறபோது அழகும் மேன்மையும்பெறும்.

Edited by poet

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கள் கவிஞரை நிச்சயம் சென்றடையும் காவலூர் கண்மணி.

(குறிப்பு: நான் கலைஞனில்லை , இளைஞன்! :()

ஜெயபாலன் அண்ணாவின் கருத்துக்களுக்கும் நன்றி.

குறிப்பாக:

"அவனையும் அவளையும் தாண்டி அவர்களது சூழலுக்குள் வரலாற்றுக்குள் செல்லுதல்"

என்ற உங்களின் இந்த வரிகள் இளம் கவிஞர்களுக்கு ஒரு கவிதைப் பாடம். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மட்டுமல்ல சற்றும் பிசிறில்லாத அந்தக் குரலின் நாதமும், ஏற்ற , இறக்கங்களும் அற்புதம்.

:(:D

  • கருத்துக்கள உறவுகள்

வாசுதேவனின் கவிதையை இணைத்த இளைஞனிற்கு நன்றிகள் வாசுதேவன் நல்தொரு படைப்பாளி அதைவிட பிரெஞ்சு மொழியில் இருந்து பல படைப்புக்களை அவர் தமிழிற்கு மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார் அவரது படைப்புக்களை அவரே நேரடியாக யாழ்களத்தில் வந்து இணைத்தால் மற்றவர்களின் கருத்துக்களையும் நேரடியாகவே உள்வாங்கலாம். எனவே அவர் யாழ்களத்தின் வாசகன் என்று எனக்கு தெரியும் அவர் யாழின் உறவாகி மற்றைய உறவுகளினுடனும் தன்படைப்புக்களை பகிர்ந்து கொண்டால் நல்லது.

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.