Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா உதவும் என்பதில் இன்னமும் நம்பிக்கை உள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

Featured Replies

இந்தியா உதவும் என்பதில் இன்னமும் நம்பிக்கை உள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவிக்க எமது அண்டை நாடான இந்தியா முன்வந்து உதவும் என்பதில் எமக்கு இன்னமும் நம்பிக்கையுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி தெரிவித்தார்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் விவகாரங்களில்தான் தலையிடப் போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழக அ ரசியலின் தற்போதைய நிலைவரம் காரணமாக மத்திய அரசை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிலையில் கலைஞர் கருணாநிதி சில கருத்துக்களை கூறியுள்ள போதிலும் அவரது அடிமனதில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்கள் குறித்து சிந்திக்கக் கூடியவராகவே இருக்கின்றார்.

எமது நாட்டுப் பிரச்சினையை தீர்க்கக் கூடிய ஒரே நாடு இந்தியாதான் என்பதை இலங்கைத் தமிழர்கள் முற்றுமுழுதாக நம்பியுள்ளனர். எமது விடுதலைக்கும் சமாதானத்துக்கும் என்றுமே கைகொடுப்பது இந்தியாதான் என்பதிலும் ஐயமில்லை.

அந்த வகையில் இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியாவினால் மட்டுமே முடியும். எமக்கு அந்த நாடு முன்வந்து உதவும் என்பதிலும் மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய மத்திய அரசு ஆயுதம் வழங்கும் விடயங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் குறித்து முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களையே கூறி வருகின்றார்.

அவரது கருத்துக்களும் இலங்கைத் தமிழர் போராட்டத்தின் மீதான போக்குகளும் தமிழ் மனங்களை புண்படுத்துவனவாகவே அமைந்துள்ளன.

http://www.tamilwin.net/

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல தலைவர்கள் தான் வாய்த்திருக்கிறார்கள் எங்களுக்கு! :(

  • கருத்துக்கள உறவுகள்
:( அவர்களது நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் எங்கள் சார்பில் இதைச் சொலவதைத்தான் ஏற்க முடியாது. பாவம் இதைத் தவிர அவர்கள் எதையும் சொல்ல முடியாதே ?!!!!!
  • கருத்துக்கள உறவுகள்

சரியாகத் தான் சொன்னீர்கள் ரகுநாதன். ஆனால் தனிப்பட்ட அபிப்பிராயங்களையும் நம்பிக்கைகளையும் ஈழத்தமிழர்களின் நம்பிக்கைகள் போலக் காட்டி தவறான வழிநடத்தலைத் தான் உருவாக்குகிறார்கள். "ஆட்சிக்கு வரும் சிங்களக் கட்சி எதுவாக இருந்தாலும் நம்புங்கோ" என்று ஆறுமுகன் மலையகத் தமிழருக்கு வழிகாட்டினது மாதிரி எங்கள் ஆட்களும் கிளம்பியிருக்கினம்!வாயை மூடிக் கொண்டிருந்தாலே போதாதா? இந்த அடிவருடித் தனம் தேவை தானா எங்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
:( இவ்வாறான கருத்துக்களால் சிங்கள அரசாங்கங்கள் அன்றுமுதல் சொல்லிவரும் ," எல்லாத் தமிழர்களும் அரசை ஆதரிக்கும்போது, புலிகள் என்னும் ஒரு சிறு குழுவினர்தான் பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றனர்" என்னும் வாதத்திற்கு வலுச் சேர்க்குமாப்போல் டக்கிளசு, ஆறுமுகம், சித்தார்த்தன், ஆனந்த சங்கரி, வரதராஜப் பெருமாள், சிறிதரன் போன்றோருடன் இவர்களும் சேர்ந்து விடுவார்களோ என்ற பயம் எனக்கு!!!

இந்தியா ஏன் எமக்கு உதவி செய்யவேண்டும்?

அவர்கள் சிங்களவருக்குத்தான் உதவி செய்வார்கள்.

அது அவர்களின் வரலாற்று கடமையும்கூட!

:(

உங்களின் நம்பிக் ககைகு நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை...

ஒரு அறிவுரை: நம்பிக்கை மட்டும் இருந்து பிரயோசனம்மில்லை முயற்சியும் வேணும்....

அதுக்காக அறிக்கைகள் ளெல்லாம் முயற்சியென்று கொள்ளமுடியாது..

வீண் தேடல் பேசாம வய்த்து குத்துக்கு மருந்தை தேடுவோம்............... :(

இந்தியா இலங்கை பிரச்சனையில் தலையிடுவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிவதற்க்கு சமம்.

இந்தியா இலங்கை பிரச்சனையில் தலையிடுவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிவதற்க்கு சமம்.

கொள்ளிக்கட்டையை எடுத்து தண்ணியில நனையிங்கோ

இனி தலைய சொறிஞ்சு பாருங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.