Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் தலையீடு தீர்வைத் தருமா?

Featured Replies

இந்தியாவின் தலையீடு தீர்வைத் தருமா?

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்க அரசு விலகிக் கொண்டதை எதிர்த்துள்ள இந்திய அரசு, இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வே சரியான வழிமுறையாக இருக்கும் என்று கூறியுள்ளது.

இந்திய அரசின் எண்ணத்தை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதிபலித்துள்ளார். “சிறிலங்க அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறது. அத்திட்டத்தின் தர்க்க ரீதியான முடிவைப் பொறுத்து இந்தியாவின் அணுகுமுறை இருக்கும்” என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

உலக நாடுகளின் வற்புறுத்தலால் ராஜபக்ச அரசு ஏற்படுத்திய அனைத்துக் கட்சி மற்றும் நிபுணர்கள் குழு உருவாக்கிவரும் தீர்வுத் திட்டத்தையே நமது அயலுறவு அமைச்சர் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வாக சிறிலங்க அரசு உருவாக்கும் எந்தவொரு திட்டமும் தமிழர்களின் தார்மீக எதிர்பார்ப்பை ஈடேற்றுவதாக இருக்காது என்பது மட்டுமின்றி, தமிழர்களோடு பேசி இறுதி செய்யப்படாத எந்தத் தீர்வுத் திட்டத்தையும் அவர்கள் மீது திணிக்க முற்படுவது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

அது மட்டுமின்றி, தமிழர்களிடையே ஆதரவற்ற, அவர்களிடையே பிரதிநிதித்துவம் பெறாத அரசியல் அமைப்புக்களுடன் பேசி சிறிலங்க அரசு உருவாக்கும் எந்தத் திட்டத்தையும் இந்தியா ஏற்கக் கூடாது என்பது மட்டுமின்றி சிறிலங்க அரசுடன் இணைந்து எந்தத் தீர்வுத் திட்டத்தையும் உருவாக்கும் முயற்சியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியா ஈடுபடுவது பிரச்சனையை முற்றிலும் திசை திருப்புவதாகவே அமையும்.

இலங்கைத் தமிழர்களின் நியாயமான, ஜனநாயக அடிப்படையிலான எதிர்பார்புக்களுக்கு என்றுமே செவி சாய்யக்காத சிறிலங்க அரசு, தனது தமிழர் விரோத திட்டத்தை இந்தியாவின் துணையைக் கொண்டு நிறைவேற்றிடவே பெரிதும் முயன்று வருகிறது. 1986-ல் கையாண்ட அதே ராஜ தந்திரத்தை மீண்டும் கையாண்டு பிரச்சனையில் இந்தியாவைச் சிக்க வைத்து குளிர்காயவே ராஜபக்சே அரசு முயற்சித்து வருகிறது. எனவே இலங்கை இனப் பிரச்சனையில் இதுவரை கடைபிடித்துவரும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தமிழர்கள் நலத்தை முழுமையாக உறுதிசெய்யும் நியாயமான, தீர்க்கமான அணுகுமுறையை இந்திய அரசு கடைபிடிக்கவேண்டும்.

ஏனெனில் இலங்கைத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் இரு நாடுகளில் வாழும் ஓரின மக்களாவர். இந்தியாவில் அனைத்துவித சுதந்திரத்துடனும் தாங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும்போ

Edited by Iraivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவினால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு போதும் விமோசனம் கிடைக்கப்பொவதில்லை.

  • தொடங்கியவர்

இந்தியாவினால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு போதும் விமோசனம் கிடைக்கப்பொவதில்லை.

அது உண்மையே, தமிழருக்கு மடடுமல்ல முழு இலங்கைக்குமே விமோசனம் கிடைக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்வைத் தருமா இந்தியா

Edited by kural

எம் கையே எமக்கு உதவும். மற்றவர்களை நம்பி எந்தப் பிரியோசனமும் இல்லை. எமது விடிவை நாமேதான் பெற்றுக் கொள்ளவேண்டும். இந்தியா இனிமேல் எமக்கு எந்தவிதத்திலும் உதவாது. அவர்களின் கவனம் இப்போது வேறு பக்கம் உள்ளது.

இனிமேல் ஈழதமிழர், தமிழ்நாட்டுத்தமிழர் என்ற பேதமேயில்லாது பொதுத்தமிழனாக போராடவேண்டிய சகல வேலைகளினையும், இந்தியாவே தமிழநாட்டுத்தமிழனுக்கு கொடுத்துவிடப்போகும் இந்த செயல்பாடானது ஈழதமிழர்களுக்கு சாதகமானதே. என்னை யாரும் இதைச்செய்யாதே என்று சொன்னால் தான் நான் அதை மூர்கமாக செய்யமுயல்வேன். அதுபோல தமிழ்நாட்டுத்தமிழர்களின் ஈழவுணர்வை அடக்க, அடக்க அங்கே எனிமேல் பழைய யாழ்ப்பாணம் போல ஒரு நிலைமை உருவாகாமல் ஏன் இருக்கமுடியாது. ஒரு 20 பேர் சேர்ந்தால், தமிழ்நாடே கொதித்தெழும்.

நாய் வாலை நிமிர்த்த முடியுமா??????

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி, இந்தியாவின் தலையீடு தீர்வைத் தருமோ இல்லையோ ஆனால் நிச்சயமாக தமிழனுக்கு தலையிடியைத் தரும் இந்தியனுக்கு பேரிடியைத்(?) தரும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தீர்வைத் தரும் ! எப்படியென்று கேட்கிறீர்களா ? இன்றைக்கு இந்தியாவை நம்பியிருக்கும் எமது கூட்டமைப்பு எம்பீக்களை கேட்டுப் பாருங்கள். அல்லது இந்தியா எமது தந்தையர் நாடு என்று கனவுலகில் இருந்துகொண்டு " என்ன இருந்தாலும் எங்கட இந்தியா சும்மா விடாது, கடைசியில வந்து சிங்களவனை வெருட்டி எங்களுக்கு தனிநாடு எடுத்துத் தரும் " என்று சினிமாத் தனமாக அரசியல் இன்னும் விளங்கிக் கொண்டிருக்கும் இந்திய அபிமானிகளைக் கேட்டுப் பாருங்கள்.

இன்னும் சிலருக்கு இத்தளத்தில் இந்தியாவுக்கு எதிராக எழுதுவதற்கே பயம். ஐயோ, இந்தியாவின் பகைமையை ஏன் சம்பாதிப்பான் ? கோவிச்சுக் கீவிச்சு ஏதாவது செய்துபோட்டுதெண்டால் என்ன செய்வது என்ற பயம். இப்பமட்டும் என்ன செய்யுதாம் ? சிங்களவனுக்கு தமிழனை எப்படியெல்லாம் அழிப்பது என்று சொல்லிக் கொடுப்பதோடு, அதற்கான ஆயுதங்களையும் அல்லவா கொடுத்து வருகிறது ?

எங்கட இந்தியா ?!!!!!!!!

தமிழனுக்கு நிம்மதி இந்தியா அழியும்போதுதான் !அது துண்டு துண்டாக உடையும்போதுதான் !

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊகத்தின்படி இந்தியா இன்னும் 50 வருடங்களுக்குள் உடைந்து சிறு சிறு நாடுகளாக மாறுவது உறுதி. வேண்டுமென்றால் இந்தியா தனது அரசியல் இராணுவ காய் நகர்த்தல்களால் அதை ஒரு சில ஆண்டுகளுக்கு தள்ளிப் போடலாம் ஆனால் ஒருபோதும் தடுக்க முடியாது. இந்தியா வேண்டியோ வேண்டாமலோ இது கட்டாயம் நடக்கத்தான் போகிறது.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.