Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி பக்கம் கடவுள்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1412371637.jpg

கடவுளை பிடிக்காத சிலர் இருந்தாலும் அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார். முதல்வர் கருணாநிதிக்கும் கடவுளின் ஆசிர்வாதம் நிறையவே உள்ளது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தின் சிவாஜி பட வெள்ளி விழா சென்னையில் நடந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.

விழாவில் ரஜினியின் பேச்சும், முதல்வர் கருணாநிதியின் பேச்சும் ஹைலைட்டாக அமைந்தன.

ரஜினி பேசுகையில், சிவாஜி படத்தில், அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் என் நன்றியை கூறிக் கொள்கிறேன்.

இந்த பெருமைக்குரிய படத்தில் நான் இருந்தது, பாக்கியம். படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

சிவாஜி படம் பார்த்துவிட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் எப்படி இப்படி எல்லாம் நடித்தாய்? என்று கேட்டபோது, மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள், அவர்கள் ஆகிய படங்களில் நடித்தபோது, உங்களிடம் எப்படி நான் கேள்வி கேட்காமல் நடித்தேனோ, அதேபோல்தான் ஷங்கர் என்ன சொன்னாரோ, அதைத்தான் செய்தேன் என்றேன்.

ஷங்கர், ஏகலைவன் மாதிரி. அது, பூர்வஜென்ம புண்ணியம்.

அடுத்து, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யப்போகிற படம், `ரோபோ.' மிகப்பெரிய படம். இதுகுறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன என்பதை நான் அறிவேன். சிவாஜியை விட ரோபோட் மிகப் பெரிய படமாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல பாலச்சந்தருக்காக ஒரு படம் செய்யவுள்ளேன். அதைத் தொடர்ந்து செளந்தர்யா இயக்கத்தில் சுல்தான் தி வாரியர் படத்தில் நடிக்கிறேன். இதையடுத்து ரோபோட் வெளி வரும்.

ரோபோட் குறித்து 2002லியே நாங்கள் விவாதித்தோம். ஆனால் அதற்கு முழு வடிவம் தர 5 ஆண்டுகள் ஆகி விட்டன.

நான் பலமுறை சாய்பாபாவை எனது வீட்டுக்கு அழைக்க முயற்சித்துள்ளேன். ஆனால் பெருந்தலைவர் காமராஜரைப் போல 'ஆகட்டும் பார்க்கலாம்' என்று அவர் கூறி விடுவார். அந்த விஷயத்தை நான் பிறகு மறந்து விடுவேன். ஆனால் கடந்த ஆண்டு கலைஞர் வீட்டுக்கு எந்தவித அழைப்பும் இல்லாம் சாய்பாபா போனார்.

நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும். கலைஞருக்கும் கடவுளின் ஆசிர்வாதம் உள்ளது.

கலைஞர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கலையுலக விழாவாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, உங்களை தவிர யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரும் கிடையாது. நீங்கள்தான் கலந்துகொள்ள வேண்டும். அதற்காக, உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ரஜினி.

இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சுமன், விவேக், வி.எம்.சி.அனீபா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பேச்சாளர் ராஜா, கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.

http://thatstamil.oneindia.in/movies/heroe...ini-120108.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் சொன்னால் நிச்சயம் சரியாகத்தான் இருக்கும். :unsure::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ப்பூ! இவ்வளவுதானா! நானென்னவோ இந்திரலோகத்தில நா. அழகப்பன் மாதிரி கருணாநிதிபக்கம் கடவளெண்டு படமெடுக்கப் போறாங்களாக்குமெண்டு நினைச்சன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் பலமுறை சாய்பாபாவை எனது வீட்டுக்கு அழைக்க முயற்சித்துள்ளேன்

நானும் ஒவ்வொரு நாளும் பாபாவை கும்பிடுறேன் நம்ம கனவில கூட வாறார் இல்லை அட்லீஸ் நம்ம வீட்டு பாபா படத்தில இருந்து திருநீறு வரும் என்றா அதுவும் இல்லை..எல்லாம் அவன் செயல் :rolleyes:

நானும் ஒவ்வொரு நாளும் பாபாவை கும்பிடுறேன் நம்ம கனவில கூட வாறார் இல்லை அட்லீஸ் நம்ம வீட்டு பாபா படத்தில இருந்து திருநீறு வரும் என்றா அதுவும் இல்லை..எல்லாம் அவன் செயல் :rolleyes:

சாமிக்குச் சாமி (பாபா) தரிசனம் தந்தால் அவரை விட நீங்கள் சிறுமையடைந்து விடுவீர்கள் என அந்தச் சாமி (பாபா) நினைக்கின்றாரோ என்னவோ!!!! :rolleyes::lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சாமிக்குச் சாமி (பாபா) தரிசனம் தந்தால் அவரை விட நீங்கள் சிறுமையடைந்து விடுவீர்கள் என அந்தச் சாமி (பாபா) நினைக்கின்றாரோ என்னவோ!!!! :mellow::D:huh:

ஆசாமிக்கு சாமிமார் (பாபா) தரிசனம் தந்தா தானே ஆசாமிமார் திருந்துவார்கள்.. :D

சாமிக்குச் சாமி (பாபா) தரிசனம் தந்தால் அவரை விட நீங்கள் சிறுமையடைந்து விடுவீர்கள் என அந்தச் சாமி (பாபா) நினைக்கின்றாரோ என்னவோ!!!! :mellow::lol::huh:

வசபண்ணா எப்பவுமே இரண்டு கள்ள சாமிகள் ஒருவரை ஒருவர் மீட் பண்ண மாட்டீனம் என்று சொல்லுறியளோ :D ...ஏன் அப்படி வசபண்ணே!! :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.