Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நட்போடு வாழ்தல் வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நட்போடு வாழ்தல்

வ.ஐ.ச.ஜெயபாலன்

இன்னும் தொடுவானில் கையசைக்கும்

மணக்கோலச் சூரியன்.

கீழே படுக்கையில்

பொறுமை இழந்த பூமிப் பெண்

வெண்முல்லைப்பூ தூவிய

நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள்.

எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம்.

என் இரு கண்களிவை என்ற துடுப்புகளை

கரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும்.

வழித்துணையை போற்றினும் புணரினும்

எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது

விடைபெறும் நேரம்.

தோழி

உடன் இருக்கிற இன்பங்களும்

பிரிகிற துன்பங்களும் அடுக்கிய

நினைவு நிகழ்வு நூலகம் அல்லவா

நம் வாழ்வு.

பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்து

ஆர்ப்பரித்த வானம்

இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும்.

என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமா

நட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதா

அல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமா

இந்த மாரி இரவு.

கண்சிந்தும் பிரிவுகளில்

நிறைகிறது வாழ்வு.

ஒவ்வொரு தோழ தோழியர் செல்கிறபோதும்

காதலியர் வசைபாடி அகல்கையிலும்

நாளை விடியாதென உடைந்தேன்.

இனி முடிந்ததென்கிற போதெல்லாம்

பிழைத்துக் கொள்கிறது

வெட்டுண்ட தாய் அடியில் புதிதாய் ஒரு

குட்டிவாழை பூக்கிற உலகு.

என் இன்றைய கனவுகளின் நாயகியோ

எப்போதும் காதலில் நீந்துகின்ற மீன்.

இன்னும் எத்தனை நாள் எத்தனை நாள்

எனக்காக அந்த

ஏந்திழையாள் யாழ் மீட்டும் ?

தோழி உன் யாழிசையில்

சந்தணமாய் எனது மொழி தேய்கிறது.

கிடங்கில் திராட்சை மதுவாய்

முதிர்கிறதென் கவி மனசு.

எச்சில் ஒழுக வழி மறித்து

முத்தமிடும் துருவத்துப் பனிக் காற்றிலும்

எரிகிறது என் ஆத்மா.

கண்டங்களே அசைகிற உலகில்

மனிதர்களிடையே நிலையானது எது ?

எங்கள் நடுகல் வேலித் தாய் மண்ணில்

கரு கறுத்த மேகங்களின் கீழ்

பஞ்சு விதைகளாய் மிதக்கும்

மாவீரர் கனவுகள்போல

உயிர்தெழுமெம் வாழ்வு.

-2005. May

visjayapalan@yahoo.com

  • கருத்துக்கள உறவுகள்

தோழி

உடன் இருக்கிற இன்பங்களும்

பிரிகிற துன்பங்களும் அடுக்கிய

நினைவு நிகழ்வு நூலகம் அல்லவா

நம் வாழ்வு.

மிக நன்று, அதிலும் இவை மிக மிக ....... . :lol::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவே, உங்கள் கருத்துகளுக்கு மகிழ்ச்சி. சுவே கவிதை என்றும் வாழும். என்போன்ற கவிஞர்களும் கலை இலக்கியங்களை ஆதரிக்கின்ற உன்போன்ற கவிதை ஆர்வலர்களும் என்றும் வாழ்வார்கள்..

சுவே கவிதை உருவமாறங்களோடு பல்லயிரம் வருடாங்களாக கலை வாழ்வின் அன்மீக ஒளியாகத் தொடர்ந்து வருகிறது. அது மேலும் பல்லாயிரம் வருடங்கள் தொடரும்.

முன்னர் கவிதை நடை மனனம் செய்வதற்க்கு இலகு என்பதால் பல்வேறு பதிவுக்ளுக்குப அதனைப் பயன் படுத்தினார்கள். எங்கள்ள் சோதிட மருத்துவ நூல்கள் கட்டபொம்மன் கதை போன்ற சரித்திர சேதிகள் எல்லம் கவி நடையில் பதியப் படுள்ளன . ஆனாலும் அவை கவிதை கிடையாது.

உரைநடை வளர்க்கிறபோது மருத்துவம் சோதிடம் போன்றபல்வேறு விடயங்களை கவிதை நடையில் பதிகிற அவசியம் இல்ல்லாமல் போய்விட்டது. ஆனால் ககலை வடிவமானா கவிதை தனது மகிமையை என்றும் இழந்துவிடவில்லை. கலைகளின் பல வடிவங்களூக்கும் இது பொருந்தும்.

கமரா வருமுன் நிகழ்வுகளைப் பதிந்துவைக்க என்கிறேவிங் காண்பதை அப்படியே நிதர்சனமாக வரைதல் போன்ற ஓவிய முறைமை பயன் பட்டுத்தப் பட்டது. கமறாவின் வந்தபோதும் ஓவியம் காலாவதியாகிவிட்டது என்கிற வரட்டுத் தர்க்கங்கள் வைக்கப் பாட்டது. கமறா வந்தபிறகு பதிவுக் காரணங்களுக்கு ஓவியர்கள் தேவைப் படவில்லை. அனால் வரட்டுத் தர்க்க வாதிகளளின் சாக்குருவி சோதிடங்களைப் பொய்யாக்கிவிட்டு ஓவியம் இம்பிறசனிஸ்ம் எக்ஸ்பிறசனிஸ்ம் சரியலிஸ்ம் என பெரும் பெரும் பாச்சல்களுக்குள்ளால் மேம்பட்டது. வான்கோ, பிக்காசோ என்பவர்களெல்லாம் கமராக் காலத்தவர்கள். அதுபோலவே நோபல் பரிசை வென்ற பப்லோ நெருடா, ஒக்டாவியோ பாஸ் போன்ற பெரும் கவிஞர்கள் உரை நடைக் காலத்தவர்கள் அல்லவா. பாரதியார் அவரது காலத்தின் மிகச் சிறந்த உரை நடை எழுத்தாளர். ஆனால் அவர் உரை நடைய விட்டு கவிதைக்கே முதன்மை கொடுத்தர். கவிதை அழியாது என நம்பினார். அவர் காலத்து வரட்டுத் தத்துவ வாதீஅள் என்னசொன்னார்கள் தெரியுமா? இனி எல்லாமே அங்கிலம்தான் என்றார்கள். பாரதியாரும் மனமுடைந்து ""மெல்லத் தமிழ் இனிச் சாகும்.. .. , என்றெந்தப் பாவி உரைத்தான்?""என வெகுண்டெழுந்தார். பாரதியாரின் கவிதைகளுக்கு உரைநடை பிரதியீடாக முடியுமென்று யாராவது சொன்னால் பாரதியார் நல்ல உரை நடையாளர் அவர் கவிதை எழுதியது முட்டாள்தனம் என்று யாராஅவது சொன்ன்னால் இந்த நூற்றாண்டின் பிரபல நகைச்சுவை அதுவாகத்தானே இருக்கும். இல்லையா. எனக்குத் தொழில் கவிதை என்ற பாரதி பிழைப்புவாதி என்று யாராவது சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். அதனால்

கவிதையின் எதிர்காலம் பற்றி அண்மையில் உனக்கு ஏதும் கவலை ஏற்படிருந்தால் மனசைத் தேற்றிக் கொள். கவித நீடு வாழும் சுவே.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பாவலரே...உங்கள் படைப்பாற்றல் சிறந்தவை அதை மதிக்கின்றேன்

தலை வணங்குகின்றேன் ஆனால் ஏன் தற்கால அரசியல் நிலை சார்ந்த பாக்களை பாடாமல்

இறந்த கால பாக்களை இங்கு பதிவிலிடுகிறீர்கள்...??

இந்த யாழ் களம் நல் சிறந்த படைப்பாளிகளை பல்வேறு திசைகளில் வளர்த்துள்ளது

அவர்கள் பெரும்பாலானோர் இளையோர்... ஆனால் தாங்கள் பெரும் பாவலர் என தங்களை கூறும்போது

ஏன் இன்றய தமிழர் அவல நிகழ்வுகளை வெற்றி களிப்புக்களை தங்களால் வழங்க முடியவில்லை...?ஃ

இது தங்கள் இயலாமையா..?? அன்றி உங்கள் திறணை மாற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்

என்ற அச்சத்திலா...?? இதற்க்கு தங்கள் பதிலென்ன..? எங்கே தற்போதைய முறிந்த பேச்சு வார்த்தை பற்றிய தங்கள்

கருத்து பகிர்வை எங்கே ஒரு கவிதையில் தாருங்கள் பார்க்கலாம்...நான் பல இணையங்களில் அதை சுட்டு ஒட்டி

விடுகின்றேன்..color]

நன்றி

ஜயா

காக்கி

Edited by காவல்துறை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான கவிஞரே,

தங்கள் ரசிகருள் நானும் ஒருவர். உங்கள் கவிதைகள் என்றும் ஒரே பாணியில் இருப்பதாகவே எனக்கு படுகிறது. வேறு பாணியில் தரமுடியுமா?

அன்புடன்,

ரசிகன்

கண்டங்களே அசைகிற உலகில்

மனிதர்களிடையே நிலையானது எது ?

எங்கள் நடுகல் வேலித் தாய் மண்ணில்

கரு கறுத்த மேகங்களின் கீழ்

பஞ்சு விதைகளாய் மிதக்கும்

மாவீரர் கனவுகள்போல

உயிர்தெழுமெம் வாழ்வு.

படித்தேன்.. சுவைத்தேன் ..ரசித்தேன் கவிதை அருமை அதிலும் இந்த வரிகளிள் எத்தனை உண்மைகள்,மனிதரில் நிலையானது ஒன்று பிறப்பு மற்றது இறப்பு.... :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தேன்.. சுவைத்தேன் ..ரசித்தேன் கவிதை அருமை அதிலும் இந்த வரிகளிள் எத்தனை உண்மைகள்,மனிதரில் நிலையானது ஒன்று பிறப்பு மற்றது இறப்பு.... :mellow:

அப்ப நான் வரட்டா!!

அன்புடன் காவல்துறைக்கும் ரசிகனுக்கும் ஜமுனாவுக்கும் என் நல்வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.