Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவ மயப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் நிகழ்வு

Featured Replies

சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் நிகழ்வு முற்று முழுதாக இராணுவ மயப்படுத்தப்பட்ட நிகழ்வாக கொண்டாடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இராணுவ மயப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் நிகழ்வு

சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் நிகழ்வு முற்று முழுதாக இராணுவ மயப்படுத்தப்பட்ட நிகழ்வாக கொண்டாடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

60 ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தில் வெறிச்சோடிக்கிடந்த விருந்தினர் கதிரைகள்

*இ.தொ.கா, ஹெலஉறுமய பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை

முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலிமுகத்திடலில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நாட்டின் 60 வது சுதந்திர தின பிரதான வைபத்தில் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்து கதிரைகள் வெறிச்சோடி கிடந்தன.சுதந்தி தின வைவத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் , பிரதியமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவகர்கள் பிரதிநதிகள் அமர்வதற்காக விசேட கொட்டகைகள் அமைப்பக்கப்பட்டிருந்த அந்த கொட்டைகளில் இருந்த சில ஆசனங்கள் வைபவம் முடியும் வரை வெறிச்சோடியே இருந்தன.

வைபவத்கு விசேட அதிதிகளின் வரிசையில் அழைக்கப்பட்டிருந்த சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டார வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரது வருகை அறிவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசருக்கு அடுத்தப்படியாக சபாநாயகரின் வருகை இடம்பெறும் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வைபவத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சில கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை.

குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் இந்த வைவத்தில் கலந்து கொள்ளவில்லை எனினும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திர சேகரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் ஐக்கிய தேசியக்கட்சின் மாற்றுக்குழுவை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் பங்கேற்கவில்லை

நாட்டின் 60 ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தை பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட போதும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் இந்த வைபவத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் வருகைதந்திருக்கவில்லை. வைபவத்தை பார்வையிடுவதற்காக வருகைதருகின்ற பொதுமக்கள் லோட்டஸ் வீதியூடாக காலி முகத்திடலுக்கு அனுமதிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் லோட்டஸ் வீதியிலிருந்து இலவச பஸ் சேவையினை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பொதுமக்கள் பலத்த சோதனைக்கு பின்னர் வைபவத்தை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. லோட்டஸ் வீதிக்கு அண்மையிலிருந்து காலி முகத்திடல் வரைக்குமான குறுகிய தூரத்திற்குள் மூன்று தற்காலிக சோதனை கூடாரங்கள் நிறுவப்பட்டிருந்தன அத்துடன் லோட்டஸ் வீதியிலுள்ள சம்புத்தாலோக்க விஹாரைக்கு முன்னால் நிறுவப்பட்டிருந்த கூடாரத்தில் பொதுமக்களை வீடியோ செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

-வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தை அழித்து வறுமையை ஒழிக்க திடசங்கற்பம் கொள்வோம்'

[04 - February - 2008]

பயங்கரவாதத்தை அழிப்பதும் வறுமையை ஒழிப்பதுமான இரு முக்கிய சவால்களில் வெற்றி கண்டு புதியதோர் இலங்கையை நோக்கி நகர்வதற்கான திடசங்கற்பத்தை நாம் மீள உறுதிப்படுத்துவோம் என்று சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அதில் அவர்மேலும் தெரிவித்திருப்பதாவது;

2500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றையும் நாகரிகத்தையும் கொண்ட ஒரு நாட்டுக்கு 60 வருடங்கள் என்பது ஒரு சிறிய கால இடைவெளியாகும். இருந்தபோதிலும் இந்த 60 ஆவது ஆண்டு சுதந்திரதின வைபவமானது நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னர் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெற்று, தேசங்கள் எனும் சமூகத்தில் சுதந்திர மக்களாக எம்மை அடையாளப்படுத்திக் கொண்ட காலத்தை அது குறித்து நிற்பது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கை இக்காலப்பிரிவில் அதன் பல அடைவுகள் குறித்து பெருமிதம் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. அவற்றில் அநேகமானவை எமது பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் உலகுக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றன. ஆசியாவிலேயே பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நீண்ட மரபைக் கொண்டு தனித்துவமானவர்களாக நாம் திகழ்கின்றோம். உலகளாவிய சுகாதாரம், கல்வி, பால்சார் சமத்துவம், சமூக இயக்குகை என்பவற்றை மேம்படுத்துவதற்கான முதல் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாக நாம் விதிவிலக்கான சமூக பொருளாதாரக் குறிகாட்டிகளை எட்டமுடியுமாக இருந்திருக்கிறது. குறைந்த, நடுத்தர வருமான மட்டத்திலுள்ள நாடொன்றின் சாதாரணமாக எதிர்பார்க்கப்படுகின்றவற்ற

Edited by nunavilan

வீரகேசரி இணையம் - முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலிமுகத்திடலில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நாட்டின் 60 வது சுதந்திர தின பிரதான வைபத்தில் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்து கதிரைகள் வெறிச்சோடி கிடந்தன.சுதந்தி தின வைவத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் இ பிரதியமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவகர்கள் பிரதிநதிகள் அமர்வதற்காக விசேட கொட்டகைகள் அமைப்பக்கப்பட்டிருந்த அந்த கொட்டைகளில் இருந்த சில ஆசனங்கள் வைபவம் முடியும் வரை வெறிச்சோடியே இருந்தன.

வைபவத்கு விசேட அதிதிகளின் வரிசையில் அழைக்கப்பட்டிருந்த சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டார வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரது வருகை அறிவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசருக்கு அடுத்தப்படியாக சபாநாயகரின் வருகை இடம்பெறும் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வைபவத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சில கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை.

குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் இந்த வைவத்தில் கலந்து கொள்ளவில்லை எனினும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திர சேகரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் ஐக்கிய தேசியக்கட்சின் மாற்றுக்குழுவை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் பங்கேற்கவில்லை

நாட்டின் 60 ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தை பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட போதும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் இந்த வைபவத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் வருகைதந்திருக்கவில்லை. வைபவத்தை பார்வையிடுவதற்காக வருகைதருகின்ற பொதுமக்கள் லோட்டஸ் வீதியூடாக காலி முகத்திடலுக்கு அனுமதிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் லோட்டஸ் வீதியிலிருந்து இலவச பஸ் சேவையினை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பொதுமக்கள் பலத்த சோதனைக்கு பின்னர் வைபவத்தை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. லோட்டஸ் வீதிக்கு அண்மையிலிருந்து காலி முகத்திடல் வரைக்குமான குறுகிய தூரத்திற்குள் மூன்று தற்காலிக சோதனை கூடாரங்கள் நிறுவப்பட்டிருந்தன அத்துடன் லோட்டஸ் வீதியிலுள்ள சம்புத்தாலோக்க விஹாரைக்கு முன்னால் நிறுவப்பட்டிருந்த கூடாரத்தில் பொதுமக்களை வீடியோ செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இராணுவத்தைத் தவிர வேறுயாராலும் கொண்டாடப்பட முடியாத சுதந்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.