Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.வி.பிக்கு புலிகள் சிறிய ரக ஆயுத உதவி.... BBC SINHALA

Featured Replies

ஜே.வி.பிக்கு புலிகள் சிறிய ரக ஆயுத உதவி....?

http://www.bbc.co.uk/sinhala/news/story/20..._jvp_ltte.shtml

:o

அது தான் புலிகளுக்கு ஆயுத தட்டுப்பாடு வந்த்து போல?

நாங்கள்(நான் இல்லை) கொடுக்கும் காசில் சிங்களவனுக்கும் ஆயுதம் வாங்குவதா?

உதெல்லாம் வெறும் சீனவெடி தான்....

ஜேவிபி தமிழிழ விடுதலைப்புலிகளிடம் இருந்து பாரிய ஆயுதக்கொள்வனவில் ஈடுபட்டது

Saturday, 16 February 2008

ஜே வி பி கடந்த 1988 - 1989 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து பாரிய ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக முன்னாள் இராணுவ மேஜரான வசந்த பெரேரா கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

தாம் 2000 ஆம் ஆண்டு கனகராயன்குள இராணுவ முகாமில் கடைமையாற்றியதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் ஒன்றின் போது தான் பல கோடி பெறுமதியான ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடியதாகவும் 2004 பெப்ரவரி 9ம் திகதி தேசிய தொலைக்காட்சியான ரூபாவாகினியில் இடம் பெற்ற விசங்வாதய தொலைக் காட்சி செவ்வி ஒன்றின் போது ஜே விபியின் பிரசார செயலர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 100 மில்லியன் நட்ட ஈடு கோரி மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஜே வி பியின் பிரசார செயலர் விமல் வீரவன்ச இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்துக்கு சமூகம் அளித்திருந்தார்.

இந்நிகழ்சி குறித்த ஒளிப்பதிவு நாடாவை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் தேசிய தொலைக்காட்சிக்கு உத்தரவிட்டது.

மேலதிக விசாரணை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி நடைபெறும்.

- http://www.ajeevan.ch/content/view/131/1/

Edited by AJeevan

ஜே.வி.பிக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருந்தது: இராணுவ அதிகாரி

ஜே.வி.பிக்கு 1988-1989 காலப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்ததுடன், அவர்களுக்கு விடுதலைப் புலிகள் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஊடாக ஆயுத விநியோகத்தையும் செய்திருந்தனர் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் கலிகெனகெ வசந்த விமலசிறீ பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச இராணுவ உயரதிகாரி தொடர்பில் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போதே இராணுவ அதிகாரி இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

1999 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு உதவும் பொருட்டு மேஜர் ஜெனரல் வசந்த விமலசிறீ பெரேரா கனகராயன்குளம் படைத் தளத்தை மிக நவீன ஆயுதங்களுடன் கைவிட்டுச் சென்றதாக விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து தவறானது.

அந்த தளத்திற்கு வசந்த விமலசிறீ பெரேரா பொறுப்பாக இல்லாத போது விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் எனவும், அவர் விடுதலைப் புலிகளுக்கு உதவியதற்காக ஐ.தே.க. அவரை கௌரவித்தாகவும் மேலும் தெரிவித்திருந்தார்.

1988 -1989 காலப்பகுதிகளில் வசந்த விமலசிறீ பெரேரா ஜே.வி.பியின் நடவடிக்கைகளை முறியடித்ததனால் தான் விமல் வீரவன்ச இவ்வாறு எழுந்தமானமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

எனது நடவடிக்கைள் ஜே.வி.பி.யினரின் ஆயுத விநியோகத்தை தடுத்ததனால் அவர்கள் விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டனர். அன்றைய காலப்பகுதியில் ஜே.வி.பி பல இராணுவ உயரதிகாரிகளுக்கு எதிராகவும் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

ஜே.வி.பியின் இந்த நடவடிக்கையினால் எனக்கு 50 மில்லியன் ரூபாய்கள் மான நட்டம் ஏற்பட்டுள்ளது. விமல் வீரவன்சவின் இந்த கருத்தினால் எனது பதவி பறிபோனதுடன், எனது குடும்பத்தினரும் பெரும் மனச்சுமைகளை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த கருத்தை தெரிவிக்கும் போது விமல் வீரவன்ச நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. ஜே.வி.பி. முன்னர் பெரும் அழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. பல கொலைகளையும் அது மேற்கொண்டிருந்தது. நான் அப்போது காலி மாவட்ட இணைப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தேன்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் இருந்து ஜே.வி.பி. பெற்றுக்கொண்ட ஆயுத உதவிகளையும் நான் அன்று முறியடித்திருந்தேன்.

1987 ஆம் ஆண்டு நெல்லியடி இராணுவ முகாம் மீதான கப்டன் மில்லிரின் கரும்புலித்தாக்குதலில் நான் உயிர் தப்பியிருந்தேன். விமல் வீரவன்சவின் அறிக்கையின் பின்னர் என்மீது ஊடகங்கள் வாயிலாக பெருமளவில் சேறடிக்கும் முயற்சிகள் நடைபெற்றிருந்தன. அதில் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்காவுக்கும் பங்குண்டு. அவருக்கு எதிராக தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனது மகளின் திருமணத்திற்கு அண்மையாக இது நடைபெற்றதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். திருமணத்திற்கு வந்தவர்கள் என்னை தவறாகப் பார்த்தனர் என்றார் அவர்.

வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 28 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி.யும் விடுதலைப்புலிகளும் ஆயுத கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டனர் மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா நீதிமன்றில் சாட்சியம்

2/16/2008 10:38:46 AM

வீரகேசரி இணையம் - ஜே.வி.பி. பயங்கரவாதிகளும் தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளும் கடந்த 1988 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாரிய ஆயுத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்ததாக இலங்கை இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் பிரசாரச் செயலாளருமான விமல் வீரவன்ச அரச தொலைக்காட்சி சேவையொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தனது, நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தாக்கல் செய்த வழக்கு நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிபதி சிசிர ரத்னாயக்க முன்னிலையில் சாட்சியமளித்த போதே வசந்த பெரேரா இவ்வாறு கூறினார். கடந்த 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி அரச தொலைக்காட்சி சேவையொன்றில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சியின்போது விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்த கருத்துக்கள் மனுதாரரான மேஜர் ஜெனரல் வசந்த பெரேராவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைந்திருந்தது என்பதை சுட்டிக்காட்டி 50 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமெனக்கோரி வசந்த பெரேராவால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் கனகராயன்குளம் இராணுவ முகாம் கட்டளை அதிகாரியாக பதவிவகித்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின்போது வசந்த பெரேரா முகாமில் இருந்த கோடிக்கணக்கில் பெறுமதி வாய்ந்த ஆயுதங்களை கைவிட்டுவிட்டு ஓடித்தப்பிச் சென்றதாக விமல் வீரவன்ச அந்த விவாத நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா மேலும் கூறியதாவது, புகழ்பெற்ற இராணுவ அதிகாரியான நான் "ரணவிக்ரம' ரணசூர போன்ற பதக்கங்களைப் பெற்றவன்.

விமல் வீரவன்ச கூறியதைப்போல் எந்த சந்தர்ப்பத்திலும் நான் கனகராயன் குளம் இராணுவ முகாமில் கடமையாற்றியது இல்லை. ஜே.வி.பி. பயங்கரவாதிகள் தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுடன் கடந்த 1988 மற்றும் 89ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாந்தோட்டைப் பகுதியில் பாரிய ஆயுத கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்தனர்.

அக்காலப்பகுதியில் நான் காலி மாவட்ட இணைப்பதிகாரியாக செயற்பட்டு வந்தேன். அந்த நேரத்தில் ஜே.வி.பி.யின் இந்த நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு தெரிவித்ததுடன் அதனை மேலும் தொடரவிடாமல் முழுமையாக என்னால் கட்டுப்படுத்தவும் முடிந்தது. இதனடிப்படையில் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச மற்றும் அக்கட்சியின் சில உறுப்பினர்கள் என் மீது பகைமையை காட்டி வந்துள்ளனர். இதனாலே எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கருத்துக்கள் விமல் வீரவன்சவினால் அரச தொலைக்காட்சி சேவை நிகழ்ச்சியின்போது முன்வைக்கப்பட்டது.

நீதிபதி உத்தரவு

வசந்த பெரேராவின் சாட்சியத்தை செவிமடுத்த கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கலந்து கொண்ட குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒளி, ஒலிப்பதிவை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அரச தொலைக்காட்சி “சேவை நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் மே மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.