Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவலே வெளியிடப்படுகிறது: லக்ஸ்மன் கிரியெல்ல

Featured Replies

போர் குறித்து இன்று வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

அதை தானே உங்கள் ஆட்சியிலும் நீங்கள் செய்தனீங்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணாவ பிரித்தெடுத்து, புலிகளினடையே பிளவை ஏற்படுத்தியவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தான் என்று ஐ.தே.கட்சி எம்.பியான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் ரணிலுக்கு புகழாரம் சூட்டினார்.

ரணில் இந்த 'மௌன யுத்தம்" மூலம் ஆறாயிரம் புலிகள் உறுப்பினர்களைப் பிரபாகரனிடமிருந்து பிரத்தெடுத்து, புலிகள் அமைப்பைப் பலவீனப்படுத்தி, இரத்தம் சிந்தாத பணத்தை விரயம் செய்யாத வெற்றியொன்றை ஐ.தே.கட்சி அரசால் மிக இலகுவாகப் பெற முடிந்தது என்றும் அவர் கூறினார்.

இதுவொரு மௌனமான மிக முக்கியமான தந்திரரோபாய வெற்றி என்பதால் இந்த இரகசியததை இதுவரை காலமும் வெளிப்படுத்தாது மறைத்து வைத்திருந்தோம் என்றும், ரணில் இந்தத் தந்திரோபாய நடவடிக்கையின் காரணமாகவே அரசால் கிழக்கை மிக இலகுவாகக் கைப்பற்ற முடிந்துள்ளது என்றும் கிரியெல்ல மேலும் கூறினார்.

இலங்கையில் தற்போது அர்த்தமற்ற ஓர் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த யுத்தம் மூலம் மனிதவுயிர்கள் அநியாயமாக அழிகின்றன.

இரதம் சிந்தா, நல்லதொரு அரசியல் தீர்வின் ஊடாக இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வழிவகைகள் எவையும் இந்த அரசிற்குத் தெரியாது.

தற்போது தொடர்கின்ற இந்த யுத்தம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மாத்திரம் 8 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கினறனர். மூன்றரை லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

ஐ.தே.கட்சியின் ஆட்சியில் இவ்வாறான பெரும் எண்ணிக்கையில் உயிர்கள் பலியாகவில்லை. யாரும் இடம்; பெயரவுமில்லை.

ஆனால். தற்போதைய அரசில் உயிர்கள் கணக்கின்றிப் போகின்றன. நாம் இரத்தம் சிந்தாமல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.

கருணாவைப் புலிகளிடமிருந்து பிரித்தெடுத்து, அதன் மூலம் புலிகள் அமைப்பை பலவீனப்படுத்தி, இரத்தம் சிந்தாத வெற்றியைப் பெற்றார் எமது தலைவர் ரணில்.

கருணாவுடன் சேர்ந்து ஆறாயிரம் புலிகள் பிரிந்து சென்றனர். அதுவொரு மௌனமான இராஜதந்திர யுத்தமாக இருந்தது.

அதுவொரு ஆக்கபூர்வமான மௌனமான வெற்றி என்பதால் நாம் அந்த இரகசியத்தை இது வரை வெளியிடாமல் மறைத்து வைத்தோம்.

கருணாவை ரணில் பிரித்தெடுத்ததன் காரணமாகவே இந்த அரசால் கிழக்கை மிக இலகுவாகப் புலிகளிடமிருந்து மீட்க முடிந்தது என்றார்.

நன்றி சுடர் ஒளி

ரணிலின் சதியில் கருணா வீழ்த்தப்பட்டது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான். இன்றைய தமிழர் தரப்பு இழப்புக்கள் எம்மிடையே உள்ள துரோகத்தனங்களால் அரசதரப்பிற்குக் கொடுக்கப்பட்டது. மிக இலகுவாகவே பிளவுபடும் தன்மைகொண்ட தமிழினம் எதற்கும் பலிபோகக் கூடிய நிலையிலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தனம் என்பது தமிழினத்தின் சாபக்கேடு. தனது இனத்துக்கே துரோகம் இழைத்தவர்கள் பட்டியலில் நாம்தான் முதலில் இருப்போம் என்று நினைக்கிறேன். எமது போராட்டாம் அவ்வப்போது பலவீனப்படுவதற்கும், நீண்ட நாட்களாக இழுபடுவதற்கும் இது முக்கிய காரணம். தனிப்பட்ட சுகபோகங்களுக்காக தனது இனத்தின் இருப்பையே பலவீனப்படுத்துவதற்கு இப்படியானவர்கள் தயங்குவதில்லை. தமது துரோகத்தனத்திற்கு அவர்கள் கற்பிக்கும் விளக்கங்கள் வேடிக்கையானவை. ஆனால் இவற்றை நம்புவதற்கும் எம்மில் சிலர் இருக்கின்றனர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரணில் இதற்காக கொடுத்த விலை தன் ஜனாதிபதி பதவி. ரணிலை படுகுழியில் வீழ்த்திய காமினி திசனாயகாவின் மகன் நவீன், மிலிந்த மொரகொட இருவரும் இப்போ ஆளும் கட்சியில். பாவம் கிரியெல்ல சும்மா உளருகின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.