Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த - ரணில் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவும் - ரணிலும் நாளை சந்திப்பர்

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

சிறீலங்கா அதிபர் மாளிகையில் நாளை மாலை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் தற்கால அரசியல் நிலமை, மற்றும் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு என்பன பற்றி விவாதிக்கப்படவுள்ளன.

அமைச்சர்களான மைத்திரிபால சிறீசேன, திஸ்ஸ வித்தாரண, ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ருக்மன் சேனாநாயக்க, கட்சியின் சட்ட ஆலோசகர் கே.என். சொக்ஸி ஆகியோரும் நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பதிவு

என்னத்தப் பேசிறது, மன்னாரில் நீண்டு செல்லும் முன்னேற்ற முயற்சியை எப்படி முடிவுக்குக் கொண்டு வரலாம், இனப்பிரச்சனைத் தீர்வான மாகாணசபைக்கு ஆதரவு தாருங்கள், யாரிடம் இன்னமும் கடன் வாங்கலாம். இப்படித்தான் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மஹிந்த - ரணில்

ஓரிரு தினங்களில் சந்திப்பு!

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான

யோசனை குறித்துப் பேசுவராம்

அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்னும் ஓரிரு தினங்களில் பெரும்பாலும் நாளை புதன்கிழமை அல்லது நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறும் எனத் தெரியவருகின்றது.

இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு யோசனை குறித்தே இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போது பேசப்படும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

அண்மையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவின் உருவப்படத்தைத் திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தம் இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றுக்காக ரணிலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதையொட்டிய சந்திப்புக்குத் தமக்கு வசதியான ஓரிரு நாட்களை எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் அவரது அலுவலகம், ஜனாதிபதி செயலகத்துக்குத் தெரியப்படுத்தியிருந்ததாகவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மகிந்த, ரணில் உத்தேச சந்திப்பின் பின்னணி குறித்து பல்வேறுபட்ட ஊகங்கள்

[27 - February - 2008]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில

மகிந்தவும் - ரணிலும் நாளை சந்திப்பர்

ஆஆஆ கா ஆ.... சந்திச்சு மாலையை மாத்தினா போச்சு....

வாளமீனுக்கு விலங்கும் மீனுக்கும் கல்யானோவ்.... பீப்பீப்பீ டும் டும் டும் டும்.

ம்ம்ம்ம்..அக்சுவலா நான் கூட இன்றைக்கு என்ட பிரண்டை சந்தித்தனான் என்றா பாருங்கோவேன்.. :unsure: (ஆனா என்ன அதை எல்லாம் பேப்பரில போடவில்லை அது தான் நேக்கு கவலையா போச்சு :huh: )..ஆனா இரண்டு பொறுக்கிகள் சந்தித்தா அதை எல்லாம் பேப்பரில போடுறாங்க..(உலகம் ரொம்பவே கெட்டுபோயிட்டு :unsure: )...

அப்ப நான் வரட்டா!!

இரண்டு பேபிகள் சந்திச்சா எல்லம் பேப்பரில போடேலாது ஜம்மு...

நீங்க வளர்ந்தா பிறகு பர்க்கலாம்..

இரண்டு பேபிகள் சந்திச்சா எல்லம் பேப்பரில போடேலாது ஜம்மு...

நீங்க வளர்ந்தா பிறகு பர்க்கலாம்..

நீங்க சொல்லுறபடியா விட்டிட்டு போறேன் இல்லாட்டி நடக்கிறதே வேற :unsure: சூறாவளி அண்ணா....கண்டிப்பா வளர்ந்தா பிறகு போட வேண்டும் என்ன... :unsure:

அப்ப நான் வரட்டா!!

பேப்பரில போடவேணுமெண்டு சொல்லுங்கோ...

இல்லாட்டா ஒரேயடியா போட்டு விடப்போறாங்கள்.. இங்க கடும் போக்காளர்கள் அதிகம் ஜாக்கிரதை...

பேப்பரில போடவேணுமெண்டு சொல்லுங்கோ...

இல்லாட்டா ஒரேயடியா போட்டு விடப்போறாங்கள்.. இங்க கடும் போக்காளர்கள் அதிகம் ஜாக்கிரதை...

அட....என்னை போட்டுவிட்டிடாதையுங்கோ நான் சின்ன பிள்ள :huh: ....ம்ம்ம் எனி கரக்டா சொல்லுறென் என்ன சூறாவளி அண்ணா :unsure: ..கடும்போக்காளர்கள் என்றா என்ன சூறாவளி அண்ணா... :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொல்லுறபடியா விட்டிட்டு போறேன் இல்லாட்டி நடக்கிறதே வேற :unsure: சூறாவளி அண்ணா....கண்டிப்பா வளர்ந்தா பிறகு போட வேண்டும் என்ன... :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு நீங்க பேபி இருந்துகிட்டு இப்படி கோபப்படலாமா? :huh:

ஜம்மு நீங்க பேபி இருந்துகிட்டு இப்படி கோபப்படலாமா? :unsure:

பின்னே கண்ட பொறுக்கிகள் மீட் பண்ணிணா எல்லாம் போடக்க நானும் என்ட பிரண்டும் மீட் பண்ணிணதை போடாட்டி எப்படி இருக்கும்... :huh: (பட் சூறாவளி அண்ணாவின்ட வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து போறேன் இல்லை நடக்கிறதே வேற :unsure: )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணில் - மஹிந்த சந்திப்புக்கு இந்திய தூதுவரே ஏற்பாடு - ஜே.வி.பி. குற்றச்சாட்டு

2/27/2008 9:45:25 PM

வீரகேசரி இணையம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில

இந்தியாவின் அனுசரணையுடன் சிறிலங்காவின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் திரைமறைவில் இணக்கம் கண்டுள்ளனர் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழு பிரமுகருமான விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

மஹிந்தவும் ரணிலும் தமிழ் மக்களுக்கு உரிமைகளையும் அதிகாரங்களையும் வழங்குவதற்காக இணையவில்லை. மாறாக தற்போது இருக்கும் உரிiமைகளையும் பறிததுத தமிழ் தேசியத்துவத்தை நசுக்கவே ஒன்றினைந்துள்ளனர். என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்கு அங்கீகாரத்தை வழங்குமாறு ஐ.நாவிடம் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளனர். இது பயங்கரமான விளைவுகளை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

முன்னணியின் அலுவலகத்தில் ஊடகவிலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் : உலகமயமாக்குதல் முதலாளித்துவ கொள்கையை முன்னெடுக்கும நாடுகளின் தேவைக்காகவே மஹிந்தவும் ரணிலும் இணைந்துள்ளனர். இதனை சிறந்த முறையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொள்கிறார். அமெரிக்காவின் கையாளாக செயல்படும் மன்மோகன் சிங் உலகமயமாக்கல் கொள்கையில் புஷ்ஷை விட புத்திசாலியாவார்.

வடகிழக்கை பிரத்த பின்பே 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர். இதற்கு தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தினதும் ஆதரவு கிடைத்துள்ளது. ஏனென்றால் அதிகாரங்களை சாதாரண தமிழ் மக்களுக்கு வழங்க முனையவில்லை. குறிப்பட் சிலரே தம்முடன் அதிகாரத்தை வைத்துக் கொள்ளவுள்ளனர்.

ஜே.வி.பி. உண்மையில் இந்திய எதிர்ப்பை மேற்கொள்ளவில்லை. தமிழருக்கு எதிரான போரட்டத்துக்கே இந்திய எதிர்ப்பு சாயத்தை பூசியுள்ளது. எதிர்காலத்தில் இது முஸ்லிம் விரோதமாகவும் மாறும்.

இனவாதத்திற்கு தூபமிட்டு, பல்கலைக்கழகங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி படைக்குள் ஊடுருவியிருக்கும் தமது சகாக்களைப் பயன்படுத்தி நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி இராணுவ ஆட்சியை அமைப்பதற்கே ஜே.வி.பி. முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலை உருவானால் 1971 கிளர்ச்சியை விட பயங்கரமானதாக இருக்கும்.

இதனை மஹிந்த நன்கு புரிந்து வைத்தள்ளார். எனவேதான் அரசு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் ஜே.வி.பிக்கு எதிராக வருவதோடு பல்கலைக்கழகங்கiளில் மாணவர்களுக்கு எதிரான அடக்கு முறையையும் அரசு ஆரம்பித்துள்ளது.

ஐ.நா அதிகாரிகள் இலங்கை வருவதை தடை செய்ய வேண்டுமென விமர்சிக்கும் ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அண்மையில் இலங்கைக்கு வந்த ஐ.நா.வின் பிரதி செயலாளர் அஞ்சலாகனேவிடம் புலிகளை ஒடுக்குவதற்கு உதவி கேட்டள்ளர்ர். இது தான் ஜே.வி.பி.யின் இரட்டை வேடம்.

இராணுவ புரட்சியை ஏற்படுத்த முனையும் ஜே.வி.பி. அதற்கு அமெரிக்காவின் உதவியையே பெற்றுக் கொள்ளும்.

யுத்தத்தைக் காரணம் காட்டி ஐ.நா. அதிகாரிகள் அடிக்கடி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்கின்றனர்.

இப்படித்தான் கொசோவோக்கும் அடிக்கடி பயணித்தனர். இன்று தனிநாடு பிரகடனப்படுத்தப்பட்டு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும் கொசோவோவை அங்கீகரித்துள்ளன. இலங்கையிலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காணாது அரசு யுத்தத்தால் தீர்க்க முயன்று வருகிறது. எதிர்காலத்தில் இங்கும் கொசோவோ உருவெடுக்கலாம்.

விடுதலைப் புலிகள் முதன் முறையாக தனிநாட்டு கோரிக்கையை அங்கீகரிக்குமாறு ஐ.நா.விடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது எதிர்காலத்தில் பயங்கர விளைவுகளை தோற்றுவிக்கும் என்று இங்கு உரையாற்றிய முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் நெவில் விஜேதிலக தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை பயங்கரமாக முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, அம் மக்கள் தாமாகவே பிரிவினைக்கு ஆதரவு வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மஹிந்தவும் எதிர்கட்சியும் இணைந்தாலும் தமிழருக்கு விமோசனம் கிடைக்கப் போவதில்லை. இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகள் தான் தமிழ் மக்களை அழித்தன

தமிழ் மக்களை பாதுகாப்பதை கைவிட்டுள்ள இந்திய அரசு தமிழ் மக்களை அழிப்பதற்கு இலங்கை அரசிற்கு உதவுகின்றது என்று கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எஸ். ஜனகன் தெரிவித்தார்.

நன்றி :வீரகேசரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த - ரணில் பேச்சுகள் திருப்பத்தை ஏற்படுத்துமா?

[02 - March - 2008]

-பி.ஆர்.நாயகம்-

இவ்வாரத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றுதான் உள்நாட்டு அரசியல் அரங்கில் இன்று முக்கிய விடயமாகப் பேசப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்புத்தான் அது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தச் சந்திப்பின் பின்னணியில் இந்தியாவே இருந்துள்ளதாகக் கூறப்படுவது அதன் அரசியல் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்திருக்கின்றது. இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இந்தியப் பின்னணி பற்றிய அந்தக் குற்றச்சாட்டை ஏற்கவோ மறுக்கவோ இல்லை. இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவடைந்திருப்பதாக இரு தரப்பினரும் தெரிவித்திருக்கின்ற போதிலும் உண்மையில் இதன் பலாபலன்களைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதும் அக்குழுவால் முன்வைக்கப்பட்டிருக்கும் 13 ஆவது திருத்தத்தை மீண்டும் நடை முறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்வதும்தான் இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக இருந்தது. 13 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில், ஜே.வி.பி.அதற்கெதிரான கடுமையான விடயத்தை எடுத்துள்ள நிலையில் ஐ.தே.க.வின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவை பேச்சுவார்த்தைகளுக்கு ஜனாதிபதி அழைத்தமைக்கான பிரதான காரணமும் அதுதூன்!.

ரணிலின் உபாயம்

13 ஆவது திருத்ததத்துக்கான ஆதரவை ஐ.தே.க.தலைமையிடமிருந்து பெற்றுக்கொள்வதென்பது அவ்வளவு கடினமானதாக இருக்காது என அரசாங்கத் தலைமை கணக்குப் போட்டிருந்தது. காரணம் 1987 இல் 13 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்ததே ஐ.தே.க. தலைமைதான். அதனால், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஐ.தே.க.வின் ஆதரவு கிடைக்குமா என ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பியபோது அதற்கும் சாதகமாகப் பதிலளிப்பதைவிட ரணில் விக்கிரமசிங்கவுக்கு வேறு தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.

இருந்தபோதிலும், ஒரு நிபந்தனையை அவர் முன்வைத்தார். 13 ஆவது திருத்தம் நாட்டின் சட்டத்தில் ஏற்கனவே இருப்பதால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தடைகள் எதுவும் இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்த ரணில், ஆனால், அதனைத் துண்டுதுண்டாக அமுல் செய்வதற்குத் தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பதில் ஓரளவுக்கு மகிந்த எதிர்பார்த்ததுதான். ஏனெனில் ஜே.வி.பி., ஹெல உறுமய மற்றும் எம்.ஈ.பி.போன்ற கடும்போக்கு இனவாதக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக 13 ஆவது திருத்தத்தை வெட்டிச் சிதைத்து, அதிகாரங்களைக் குறைத்தே அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு தீர்வாக வெளியிட்டிருக்கின்றது. அத்துடன், கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துமாறும் சிபார்சு செய்திருக்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ளக் கடியவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்துவதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் திட்டவட்டமாக அறிவித்தார். தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலை கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் ஐ.தே.க.வின் நிலைப்பாடாக இருக்கின்றது.

மகிந்தவின் திட்டம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குள் ஐ.தே.க.வை மீண்டும் கொண்டுவருவதும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்குமே இந்தச் சந்திப்பை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார். ஐ.தே.க.வையும் இதில் இணைப்பதன் மூலம் சர்வதேச சமூகத்திடமிருந்து வரக்கூடிய விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும் என அவர் எதிர்பார்த்தார். அத்துட ன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அதற்கெதிரான போராட்டங்களை அண்மைக்காலத்தில் தீவிரப்படுத்தியிருக்கும் ஜே.வி.பி.யை ஓரங்கட்ட முடியும் என்பதும் அவரது உபாயமாக இருந்தது.

இருந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்க இந்த இரு பொறிகளிலிருந்தும் நழுவிக்கொள்ளும் விதமாகவே காய்களை நகர்த்தியிருக்கின்றார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் ஐ.தே.க.பங்குகொள்ளுமா என்பதற்குத் திட்டவட்டமான பதில் எதனையும் அவர் கூறவில்லை. அதேவேளையில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக

நடைமுறைப்படுத்தினால் ஆதரவு எனக் கூறியிருப்பதன் மூலம் அரசாங்கத்தை சங்கடமான ஒரு நிலைக்குத் தள்ள அவர் முற்பட்டிருக்கின்றார். இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் முற்பட்டால் பேரினவாதக் கட்சிகள் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியது தான். அதனால், அந்தளவுக்கு துணிச்சலுடன் மகிந்த செயற்படமாட்டார் என்பது ரணிலுக்குத் தெரியும்.

இந்த நிலையில் ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு சாதகமான ஒரு குறிப்புடனேயே முடிவடைந்திருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டபோதிலும் அவ்வாறு சாதகமான நிலைமைகள் எதனையும் காணக்கூடியதாகவிருக்கவில்லை.

இரு தரப்பினரும் தமது அரசியல் நலன்நோக்கிய காய்நகர்த்தல்களையே மேற்கொண்டிருந்தார்கள். பிரதான இரு கட்சிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே சமாதானத் தீர்வொன்றைக் காண முடியும் என்பது உண்மையாக இருக்கின்ற போதிலும் இரு தரப்பினரதும் அரசியல் நிகழ்ச்சி நிரல் அதற்கு இடம் தரப்போவதில்லை என்ற உண்மையைத் தான் இவ்வார முற்பகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பும் உணர்த்தியிருக்கின்றது.

இந்தியா பின்னணியில்?

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது எனவும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் இதன் பின்னணியில் செயற்பட்டிருப்பதாகவும் ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியிருக்கின்றது. இதேபோன்ற ஒரு கருத்தைத்தான் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவும் முன்வைத்தார். 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஐ.தே.க.வின் ஆதரவு இல்லாமல் அதனை நடைமுறைச் சாத்தியமாக்க முடியாது என்பதும் இந்தியாவுக்குத் தெரியும்.

அதனால், இந்தச் சந்திப்பின் பின்னணியில் இந்தியா இருந்திருக்கலாம் என்பது சாத்தியமானது தான்.

கடந்த வாரத்தில் தான் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பப்போவதாகக் கூறி நாடு தழுவிய ரீதியில் சுவரொட்டிப் போராட்டத்தை ஆரம்பித்த ரணில் ஒரு வாரத்துக்குள் அரசுத் தலைவரைச் சந்தித்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தமது ஆதரவு கிடைக்கும் எனக் கூறியிருப்பதற்கு `வெளியேயிருந்து வந்துள்ள' அழுத்தங்கள் தான் காரணமாக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் அழுத்தமே அது எனவும் ஜே.வி.பி. தெரிவித்திருப்பதை இலகுவில் நிராகரித்து விட முடியவில்லை.

இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை ஏற்கனவே, ஆரம்பித்திருந்த ஜே.வி.பி.க்கு தமது பிரசாரங்களைத் தீவிரப்படுத்துவதற்கான மற்றொரு விடயமாக இது கிடைத்திருக்கின்றது. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கும் ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதற்காகத் தமது உயிர்களைக் கூட தியாகம் செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கின்றார். அத்துடன், இவ்வாறான விடயங்களில் இந்தியாவின் தலையீடு தொடர்ந்தால் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களின் அடுத்த கட்டமாக இந்தியப் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு கோரும் நிலையும் வரலாம் என எச்சரித்திருக்கின்றார்.

ஆக 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்ப்புகள் மேலோங்குவதற்கே வழிவகுப்பதாக இருக்கும்.

ஜே.வி.பி.யின் உபாயம்

ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியிலேயே அவர்களுடைய வாக்கு வங்கி இருக்கின்றது. ஜாதிக ஹெல உறுமயவின் வருகையும் கடும் இனவாதப் போக்கில் அரசாங்கம் செல்வதும் அவர்களுடைய இந்த வாக்குவங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலையில் தமது ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்களுக்குக் கிடைத்துள்ள சிறந்த வாய்ப்புத்தான் இந்த 13 ஆவது திருத்தம். அதற்கெதிரான போராட்டங்களின் மூலமாகவே தமது ஆதரவுத் தளத்தை தற்போதைய நிலையில் அவர்கள் கட்டியெழுப்ப முடியும்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்துவது போல இதன்மூலம் இரண்டு நலன்களை ஜே.வி.பி. எதிர்பார்க்கின்றது. ஒன்று தமது ஆதரவுத் தளத்தை பாதுகாக்கவும் அவர்களை உற்சாகப்படுத்துவதற்குமான ஒரு உபாயமாக இந்தப் போராட்டங்களைப் பயன்படுத்துவது. இரண்டு ஏனைய பேரினவாதக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் மகாஜன எக்சத் பெரமுன என்பன அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பதால் அவற்றின் ஆதரவுத் தளங்களை இந்தப் போராட்டங்களின் மூலமாக உடைக்கலாம் என்பதும் ஜே.வி.பி.யின் மதிப்பீடு. அதனால், 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது தான் ஜே.வி.பி.யின் தற்போதைய உபாயமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் ஜாதிக ஹெல உறுமயதான் அதன் பிரதான போட்டிக் கட்சி. இரண்டும் இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்படுபவை என்பதுடன், அந்த அடிப்படையிலேயே தமது ஆதரவுத் தளத்தையும் உருவாக்கியிருக்கின்றன. ஹெல உறுமய அண்மைக் காலத்தில் அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செல்வது ஜே.வி.பி.க்கு கசப்பான ஒன்றாகும். குறிப்பாக உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி மகிந்தவுடன் நெருக்கமாகச் செயற்படுவது ஜே.வி.பி.க்கு சீற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது. ஜே.வி.பி. யின் போராட்டத்தின் பின்னணியில் இவை அனைத்தும் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

இனவாத அடிப்படையிலான எதிர்ப்பிரசாரம் ஒன்று தீவிரமடையும் நிலையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மகிந்த துணிவார் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. இதனைப் புரிந்து கொண்டுள்ள நிலையில்தான் ரணிலும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றார

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.