Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன அழுத்தம் குறைக்க ஐந்து வழிகள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தம் குறைக்க ஐந்து வழிகள்...

ஒரு அழுத்தம் மிகுந்த, பணிப்பளு மிகுந்த நாளுக்குப் பின் நீங்கள் என்ன செய்வீர்கள்? தொலைக்காட்சி பார்ப்பீர்களா? தியானம் செய்வீர்களா? நண்பரை அழைத்துப் பேசுவீர்களா? மக்கள் மிகுதியாகப் பயன்படுத்தும் ஐந்து வழிகளைப் பற்றியத் துணுக்கு இது.

தியானம்: தியானம் மன அழுத்தத்தைக் குறைப்பதில் மிக்க உதவியாக இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தியானத்திற்கு நிறைய நேரமும் செலவழிக்க வேண்டாம். 15 முதல் 20 நிமிடங்களே போதும். ஏற்றி வைத்த தீபத்தையோ ஏதாவது ஒரு சொல்லையோ தியானக் குறிக்கோளாக வைத்துக் கொண்டால் போதும்.

உடற்பயிற்சி: அளவான உடற்பயிற்சி என்டோர்பின் (Endorphin) என்னும் மூளை வேதியியற் பொருளின் தோற்றத்தை ஊக்குவிக்கிறது. என்டோர்பின் நல்லுணர்வைக் கொடுக்கும் வேதிப் பொருள். ஆனால் அதிகமான உடற்பயிற்சி செய்ய வேண்டாம். 90 நிமிடங்களுக்கு மேல் செய்யப்படும் கடுமையான உடற்பயிற்சி உடலின் நோயெதிர்ப்புச் சக்தியைத் தாக்கக்கூடும்.

படிப்பு: புத்தங்களைப் படிப்பது என்ற செயல் மட்டுமே அழுத்தத்தைக் குறைத்துவிடுவதில்லை. மகிழ்வூட்டக்கூடியதாகவோ நம்மை ஆழ்ந்து போகச் செய்வதாகவோ படிப்பது இருக்க வேண்டும். எரிச்சலூட்டுவதாக இருந்தால் படிப்பது அழுத்தத்தைக் கூட்டும்.

மற்றவருடன் பேசித் தீர்ப்பது: நல்ல நண்பருடன் பேசித் தீர்ப்பது நல்லதே. ஆனால் அந்த நண்பர் தேவையில்லாத அறிவுரை கூறுபவராகவோ நாம் செய்தது/செய்வது சரி அல்லது தவறு என்று தீர்ப்பு கூறுபவராகவோ இருந்தால் அதனால் பயனின்றிப் போகலாம். அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.

தொலைக்காட்சி பார்ப்பது: தொலைக்காட்சி பார்ப்பது மன அழுத்தத்தை நீக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளார்கள். ஆனால் கொடூரமான, நன்மை அளிக்காத காட்சிகளைப் பார்ப்பது அழுத்தத்தைக் கூட்டுமே ஒழிய குறைக்காது.

From 'Natural Health'

தியானம் பற்றி மேலதிக விபரங்கள் தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூயா, இங்கு தியானம் பற்றி சில குறிப்புகள் உண்டு.பாருங்கள்.

http://www.geocities.com/aatmeekam/author/...of_life_tam.htm

மிக்க நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

தியானம் பற்றி மேலதிக விபரங்கள் தெரியுமா?

போகிற போக்கைப் பார்த்தால் தூயா விரைவில் சாமியாராகி விடுவார் போல கிடக்குது.

போகிற போக்கைப் பார்த்தால் தூயா விரைவில் சாமியாராகி விடுவார் போல கிடக்குது.

கல்யாணமான ஆச்சியே ஆகலை..நான் ஏன் இப்பவே ஆகணும் ;)

  • கருத்துக்கள உறவுகள்

தூயா :

கல்யாணமான ஆச்சியே ஆகலை..நான் ஏன் இப்பவே ஆகணும்

அதுதானே. அப்பிடி கேளுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

பெருகிவரும் மனஅழுத்த மரணங்கள்!

[13 - March - 2008]

என். சுரேஷ்குமார்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பி.பீ.ஓ, கே.பி.ஓ என்று நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும் இன்னொருபுறம் புதுப்புது நோய்களும் மனிதர்களை தாக்கத்தான் செய்கின்றன.

இந்த சின்ன விஷயம் கூட மனிதர்களை இந்த அளவுக்குப் பாதிக்குமா என்று சொல்லும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளுடனே மனிதர்கள் பயணம் செய்வதால் மன அழுத்தம் மனிதர்களை வெகுவாகப் பாதித்து வருகிறது.

இதிலும், இவ்வகையான நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் 24 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

மன அழுத்தம் நோய் பாதிக்கப்பட்ட சிலரை சோதனைக்கு உள்ளாக்கியபோது அவர்களில் 90 சதவீதம் பேர் வாகனங்களில் நெடுந்தொலைவு சென்று பணிபுரிபவர்களாகவே இருக்கின்றனர்.

இதற்குக் காரணங்கள் நிறுத்தத்தைத் தாண்டி நிற்கும் பேருந்துகள், தேவையில்லாத, அனுமதிக்கப்படாத வாகன ஒலிப்பான்கள், வாகனங்கள் ஒன்றுக்கொன்று போக்குவரத்து விதிகளை மீறி முந்திச்செல்வது, இன்டிகேட்டர் விளக்குகளை மாற்றி மாற்றி பின்னால் வருபவர்களைக் குழப்புவது, வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது குறுக்காக நாய் போன்ற கால்நடைகள் குறுக்கிடுவது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதிலும், பேருந்தில் வேலைக்குச் செல்பவர்களுக்கு, சரியான நிறுத்தத்தில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்துவாரா, நடத்துநர் மீதி சில்லறையை மறக்காமல் திருப்பித் தருவாரா என்ற பதற்றம், படபடப்பு கூட மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

நம் கண் முன்னே நடக்கும் விதிமுறை மீறல்களைக் கண்டு கோபம், ஆத்திரம் அடைவது, இப்பிரச்சினைகளை யாரிடம் முறையிடுவது, யார் தான் தீர்வு காண்பது என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள். கோபத்தின் வெளிப்பாட்டை யாரிடம் காட்டுவது. இப்படி நாளும் நம் கண் முன்னே நடக்கும் சின்னச்சின்னப் பிரச்சினைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள்ளே போட்டு, கடைசியில் மன அழுத்த நோய் நம்மை ஆட்கொண்டுவிடும்.

மன அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் இரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாத மனப்போக்கு போன்றவை கடைசியில் மனிதர்களை மரணத்தை தழுவச் செய்கிறதாம்.

சமீபத்தில் தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பெங்களூரில் மட்டும் 1 இலட்சம் பேரில் சராசரியாக 35 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் காரணம் மன அழுத்தம் மட்டுமே!

இது குறித்து பெங்களூர் பிரபல மனோதத்துவ நிபுணர் ஒருவர், பெங்களூரில் அசுர வளர்ச்சிக்குத் தகுந்தவாறு அவ்வூர்வாசிகள் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனாலேயே, தற்போது ஒரு நாளைக்கு குறைந்தது 10 பேர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு தன்னிடம் சிகிச்சைக்கு வருவதாகக் கூறுகிறார்.

மேலும், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொள்தல், ஓய்வு அவசியம் என்கிறார் அவர்.

ஒருபுறம் தாறுமாறான போக்குவரத்து நெரிசலால் ஒரு சாரார் மன அழுத்த நோயால் பாதித்துக் கொண்டிருக்க, மற்றொரு பிரிவினர் வேலைப் பளுவால் பாதிக்கப்படுவதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதிலும், முக்கியமாக தகவல் தொழில்நுட்பத் துறையிலும், பி.பீ.ஓ மையங்களிலும் வேலை செய்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்களாம்.

அதிக நேர வேலை, பணிப் போட்டி, நேரம் தவறிய சாப்பாடு, பணிப் பாதுகாப்பின்மை போன்றவை இன்றைய இளைஞர்களை மேலும் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறதாம்.

இதையும் தவிர வருமானத்திற்கு மீறி செலவு செய்வதற்கும், ஆடம்பரமான வாழ்க்கைக்கு வங்கிக் கடன், இதை மாதந்தோறும் எப்படிச் செலுத்துவது என்ற பதற்றம் போன்றவையும் மன அழுத்த நோய்க்கு ஆளாக்கி விடுகிறதாம்.

மேலும், நேரம் கடந்து வீட்டுக்கு வருவதாலும், குடும்பத்தாருடன் சகஜமாகப் பேசும் வாய்ப்பை இவர்கள் இழக்க நேரிடுவதாலும், இவர்கள் தங்களுக்குள்ளாகவே தனிமையாக்கப்பட்ட மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

உடல் சோர்வு, உடல் வலி, ஒரே பணியில் அதிக கவனம் செலுத்துதல் போன்றவை மன அழுத்த நோய் வருவதற்கு அறிகுறியாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சரி! இதற்குத் தீர்வுதான் என்ன என்றால், ஒரே பதில், முறையான சாப்பாடு, உறக்கம், உடற்பயிற்சி. இதிலும், தியானப்பயிற்சி மன அழுத்தத்தை குறைத்து மனதை லேசாக வைக்கச் செய்கிறதாம்.

மேலும், குடும்ப உறுப்பினர்களிடையே சகஜமாகப் பேசிப் பழகுதல், பணிப் பிரச்சினைகள் குறித்து முழுவதுமாக அவர்களுடன் ஆலோசனை செய்வதால் மன அழுத்தப் பிரச்சினை குறையுமாம்.

- தினமணி

http://www.thinakkural.com/news/2008/3/13/...s_page47376.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன அழுத்திற்கு சிறந்த நிவாரணி கள்ளு :rolleyes:

நேக்கு பிடிகல...பிடிகல சொல்லிட்டன் இந்த மேதட் எல்லாம் பிடிகல்..பின்னே 15 நிமிசம் ஜம்மு பேபியை தியானம் செய்ய சொன்னா...(ரொம்ப கொடுமையாக்கும் :D )...எனக்கு தியானத்தில இருக்கும் போது றோட்டில போற பிகர் ஞாபகமா தான் இருக்கு...(பிறகு தியானம் செய்த மாதிரி தான் பாருங்கோ <_< )..

சோ..அக்சுவலா வந்து அழுத்தம் நிறைந்த நானா இருந்தா நான் என்ன செய்வன் தெரியுமோ..(சொவ்ட் மீயூசிக்கை போட்டு விட்டு :D )...ரூமை பூட்டி விட்டு தனிய இருப்பேன் பாருங்கோ..(அதில இருக்கிற சுகம் தனி சுகம் பாருங்கோ)...அதோட எல்லாம் பறந்திடும்..(ஜம்மு பேபி பக் டூ நோமல் ஆகிடும் பாருங்கோ :) )...

பிரண்ஸ் கூட இருந்தாலும் மன அழுத்தம் குறையும் ஒகே ஆனா அந்த நேரத்தில பிரண்ஸ் நக்கல் அடித்தா கோபம் வரும் :( அது கடசியா பிரச்சினையா அல்லோ போய்விடும்...(சோ ஜம்மு பேபி தனிமையில் இனிமை காணும் :D )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில பல அழுத்தங்கல் வரலாம் அதை எல்லாம் வெல்லுறவன் தான் மனிதன்" :o

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.