Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசிய தேர்தலில் அமைச்சர் சாமிவேலு தோல்வி ..!

Featured Replies

இந்தியர்களின் அதிருப்தியை சம்பாதித்த அமைச்சர் சாமிவேலு சொந்த தொகுதியில் (Sungai Siput) எதிர் கட்சியான நீதிக்கட்சியின் (Parti Keadilan Rakyat) Dr. ஜெயகுமாரிடம் தோல்வி கண்டார். அமைச்சர் சாமிவேலு 30 வருடங்களாக இத்தொகுதியில் உறுப்பினராகவும், அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தவர்.

http://www.channelnewsasia.com/stories/sou.../333757/1/.html

அதே போல் சில சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட பினாங் (Penang) மாநிலத்திலும் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழக்கலாம் என கருதப்படுகின்றது ...!

http://www.channelnewsasia.com/stories/sou.../333764/1/.html

  • தொடங்கியவர்

அதேவேளை உரிமை போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட HINDUREF தலைவர்களில் ஒருவரான மனோகரன் எதிர்கட்சியான Democratic Action Party சார்பாக சட்ட மன்ற தேர்தலில் (Selangor) வெற்றி பெற்றார்..!

http://www.channelnewsasia.com/stories/sou.../333763/1/.html

இதேவேளை ஆளும் கூட்டணி 2/3 பெரும்பான்மையை இழந்து விட்டது. இது வரை வெளிவந்த 220 பாராளுமன்ற முடிவுகளில் 139 இடங்களையே வெல்ல முடிந்தது. கடந்த 2004 தேர்தலில் இக்கூட்டணி 199 இடங்களில் வெற்றி கொண்டிருந்தது. இம்முறை முதல் முறையாக 1969 க்கு பின் ஆளும் கூட்டணி மிக மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது. அதேபோல் 4 முக்கிய மாநிலங்களை (Kedah, Penang, Perak and Selangor) எதிர் கட்சிகளிடம் இழந்துள்ளது. அதில் முக்கியமானது, சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் Penang மாநிலம். Kelantan மாநிலத்தை Pan-Malaysian Islamic Party தக்க வைத்துள்ளது. இம்முறை தேர்தலில் முக்கிய 3 எதிர் கட்சிக்களான Democratic Action Party (DAP), the Parti Keadilan Rakyat (PKR) and the Islamic Pan-Malaysian Islamic Party (PAS), தங்களுக்குளே போட்டியை தவிர்த்து ஒரு அணியில் நின்றதால் (loose coalition) முதல் முறையாக 81 பாராளுமன்ற இடங்களை வெல்ல முடிந்தது.

இன பாகுபாடு, வாழ்கை செலவு அதிகரிப்பு , வேலை வாய்ப்பு குறைவு , அதிகரிக்கும் குற்ற செயல்கள் ஆளும் கூட்டணியின் வீழ்ச்சிக்கு காரணமாகின எனலாம்.

http://www.channelnewsasia.com/stories/sou.../333807/1/.html

Edited by லீ

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு வைச்சிட்டாங்கையா சாமிக்கு ஆப்பு

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஒரேயொரு தமிழ் அமைச்சரான டத்தோ சாமிவேலு படுதோல்வி

[10 - March - 2008]

மலேசியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் பரிசான் தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளபோதும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அக்கட்சி பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.

சுமார் அரை நூற்றாண்டு காலமாக ஆட்சியிலிருக்கும் இக்கட்சி 219 பாராளுமன்ற ஆசனங்களில் 139 ஆசனங்களை பெற்றுள்ள போதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.

அத்துடன், இன்னும் மூன்று ஆசனங்களின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பின்னடைவுக்கு மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களின் விவகாரம், பணவீக்கம் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமையே காரணமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் முடிவுகளின் பின்னர் வன்முறைகள் நிகழலாம் என்ற அச்சத்தில் மக்களை அமைதியாக இருக்குமாறு பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் மலேசியாவில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கான தருணம் இதுவென்பதை வெளிக்காட்டி நிற்பதாக எதிர்க்கட்சி பிரமுகர்களில் ஒருவரான அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 82 ஆசனங்களில் 31 ஆசனங்களை அன்வரின் நீதிக்கட்சி வென்றுள்ளமையால் அவர் தன்னை எதிர்க்கட்சி தலைவராக ஆக்கிக்கொண்டுள்ளார்.

2003 இலிருந்து பிரதமராக பதவி வகிக்கும் பிரதமர் அப்துல்லா, அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்திருப்பதாக தெரிவித்துள்ள அதேவேளை, அவரது கட்சி உறுப்பினர்கள் அவரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கக் கூடுமென நிலவும் ஊகங்களை அவர் நிராகரித்துள்ளார்.

ஆனால், மக்கள் மாற்றமொன்றை விரும்புவதும் 1957 இலிருந்து அதிகாரத்திலிருக்கும் தேசிய முன்னணியை சீனர்களும் இந்தியர்களும் நிராகரித்திருப்பதும் தெளிவாகியுள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

இத் தேர்தலுக்கு முன் ஒரு மாநிலம் மட்டுமே எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது. ஆனால், இத் தேர்தலில் ஏற்கனவே இருந்தது உட்பட மேலும் 4 மாநிலங்களை எதிர்க்கட்சிகள் வென்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் அரசாங்கம் வாக்கு மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதேவேளை, ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகித்த ஒரேயொரு தமிழ் அமைச்சரான டத்தோ சாமிவேலு இத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளார்.

மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சாமிவேலு எதிர்க்கட்சி வேட்பாளரொருவரிடம் தோல்வி கண்டுள்ளார்.

8 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாமிவேலு 30 ஆண்டுகளாக அமைச்சர் பதவியை வகித்தவர்.

தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கூறி இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட போது அவர்களுக்காக குரல் கொடுக்காததுடன் இந்தியர்களுக்கு ஆதரவாக எந்தவித நடவடிக்கைகளையும் சாமிவேலு மேற்கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டுக்களே இவரது தோல்விக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய வம்சாவளியினரின் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த்ராவ் அமைப்பின் பிரமுகர்களில் ஒருவரான எம். மனோகரன் இத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

இதேவேளை, வாக்களிப்பு நேரங்களின் போதும் ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றதாகவும் வீதிகளில் கூடிய எதிர்க்கட்சி ஆதரவாளர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் பொலிஸார் கலையச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

thinakural.com

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய தேர்தலில் படுதோல்வியடைந்த சாமிவேலு தொடர்ந்தும் கட்சியின் தலைமைப் பதவியில்

[12 - March - 2008] [Font Size - A - A - A]

மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரேயொரு இந்திய வம்சாவளி அமைச்சரான டத்தோ சாமிவேலு படுதோல்வியடைந்துள்ள நிலையிலும் மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் இருப்பதென உறுதியெடுத்துள்ளார்.

மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியானது ஆளும் பரிசான் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றது.

கடந்த மாதம் கலைக்கப்பட்ட மலேசிய அரசாங்கத்தில் ஒரேயொரு இந்திய அமைச்சராக பதவி வகித்த சாமிவேலு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளார்.

8 தடவைகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர் இம்முறை தனது சொந்தத் தொகுதியையே இழந்துள்ளதுடன் மலேசிய இந்தியன் காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டிலிருந்த 9 பாராளுமன்ற ஆசனங்களில் மூன்றையும் 19 மாகாண சபைகளுக்கான ஆசனங்களில் ஏழையும் மட்டுமே கைப்பற்றியுள்ளது.

இது தொடர்பாக சாமிவேலு விடுத்துள்ள அறிக்கையில்;

புயல் எங்களைத் தடுத்தாலும் நாம் எமது பாதையில் முன்னேறுவோம். புதிய அலையொன்று எம்முடன் இணையும் நாள் வருமென்று நாம் நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோமெனத் தெரிவித்துள்ள சாமிவேலு கட்சியை மீளக் கட்டியெழுப்பவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் ஆளும் பரிசான் தேசியக் கட்சியும் இத்தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்து சாதாரண பெரும்பான்மையுடனேயே அதிகாரத்திற்கு வந்துள்ளது.

மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறி பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டபோது ஒரேயொரு இந்திய அமைச்சரான சாமிவேலு அவர்களுக்காக குரல்கொடுக்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டே இவரது கட்சியின் தோல்விக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.thinakkural.com/news/2008/3/12/...s_page47327.htm

  • கருத்துக்கள உறவுகள்

"மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறி பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டபோது ஒரேயொரு இந்திய அமைச்சரான சாமிவேலு அவர்களுக்காக குரல்கொடுக்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டே இவரது கட்சியின் தோல்விக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது."

தமிழராக இருந்து கொண்டு அவர்களுக்காக குரல்கொடுக்கவில்லை என்றால் இப்படியான தோல்விகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். காலம் கடந்த ஞானம்.

  • தொடங்கியவர்

சாமிவேலுவின் திருகுதாளங்கள் பற்றி ஒரு ஒளிவட்டே எதிர் கட்சிகளால் தேர்தல் பிரசாரத்தின் போது வெளிவிடப்பட்டது.

இவரை இவ்வளவு காலம் தலைவராக வைத்திருத்ததே பெரிய பிழை. ..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.