Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஏன் வாக்கு போட வந்தேன்?"I came because TMVP people threatened us

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது கட்டாயம் நடக்க கூடியதே. தங்களது கூட்டம் வைக்கவே ஆட்களை வலோற்காரமாக இழுத்து சென்றவர்கள் கட்டாயமாக மக்களை வலோற்காரம் செய்து தங்களுக்கு வாக்களிக்க வைத்திருப்பார்கள்.

முன்னரும் முதலமைச்சராக குந்தி இருந்தவர் இன்று புனாவில் ஓய்வெடுகின்றார் வெகு விரைவில் இவையளும் நாட்டை விட்டு ஓடுவீனம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்களே சாட்சி.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=8770

நடக்கிறது என்ன என்பதற்கு.

இதைக் கண்காணிக்க.. ஒரு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு. எல்லாரும் சேர்ந்து போடுற நாடகமே இது ஆகும்..! 2004 திட்டமிடப்பட்டது 2008 அரங்கேறுகிறது..!

  • கருத்துக்கள உறவுகள்

முடிவெடுத்தது போல, பல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பார்கள். ஆனால் வாக்குப் போடப் போன சனத்தைத் தான் படங்களில் காணவே கிடைக்குது இல்லை.

சென்ற வாரம் வரைக்கும், பதில் தலைவர் என்று போட்டுக் கொண்டிருந்த பிள்ளையான்கும்பல், இப்போது வெளிப்படையாகவே, தலைவர் என்று போட வெளிக்கிட்டார்கள்.

முன்பு அதிகமாகக் குரல் கொடுக்கின்ற, மார்க்கம், இனியபாரதி, மங்களம் என்று ஒருத்தரையும் காணக்கிடைக்குது இல்லையே. எல்லோருக்குக்கும் மங்களம் பாடியாச்சா?

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலுக்காக மட்டு. கறுவேப்பங்கேணி அரச பாடசாலையில் இயங்கும் வாக்களிப்பு நிலையத்தில் வாக்கு மோசடியில் ஈடுபட முனைந்த 6 ரி.எம்.வி.பி கட்சியினர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

தமது கைகளில் பெருமளவில் வாக்குச் சீட்டுக்களை எடுத்துச்சென்றிருந்த அக்குழுவினர் அடாத்தாக அவற்றினை செலுத்த முற்பட்டபோது அங்கு தேர்தல் கடமைகளில் இருந்த சுயேட்சைக் குழவில் அங்கம் வகிக்கும் ஈபிடிபி அலுவலர் வழங்கிய தகவலை அடுத்து விசேட அதிரடிப்படையினர் கையும் மெய்யுமாக அக்கும்பலை கைதுசெய்தனர்.

ரி.எம்.வி.பி கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிரு

முடிவெடுத்தது போல, பல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பார்கள். ஆனால் வாக்குப் போடப் போன சனத்தைத் தான் படங்களில் காணவே கிடைக்குது இல்லை.

சென்ற வாரம் வரைக்கும், பதில் தலைவர் என்று போட்டுக் கொண்டிருந்த பிள்ளையான்கும்பல், இப்போது வெளிப்படையாகவே, தலைவர் என்று போட வெளிக்கிட்டார்கள்.

முன்பு அதிகமாகக் குரல் கொடுக்கின்ற, மார்க்கம், இனியபாரதி, மங்களம் என்று ஒருத்தரையும் காணக்கிடைக்குது இல்லையே. எல்லோருக்குக்கும் மங்களம் பாடியாச்சா?

அவயளுக்கு மக்களம் பாடப்பட்டதோ இல்லையோ பிள்ளையானுக்கு மங்களம் போடுத்திற்கான வேலைகளை அரச புலனாய்வுத்துறை மேற்கொள்ளுது போல.

ஏனெண்டா பிள்ளையான் குழுவின் இராணுவத் தளபதியாக சாந்தன் எண்டவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் 20 வருடங்களாக அரச படையினருடன் இணைந்து செயற்பட்டு வந்தவர். திடீரென இந்தக் கும்பலுடன் இணைக்கப்பட்டிருக்கிறார்.

பிள்ளையானை வைத்து கருணாவிற்கு ஆப்படித்த சிறிலங்கா புலனாய்வுத்துறை தேவை ஏற்பட்ட சாந்தனை வைத்சு பிள்ளையானுக்கும் ஆப்படிக்கும்.

பிள்ளையானின் இறுதி அத்தியாயம் எழுத தொடங்க போகின்றது...அது நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண தேர்தலின் போது முடிவுக்கு வரும் (இந்த தேர்தல் அதற்கான ஒரு ஒத்திகை)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் மதிவதனனை ரெம்பவே மிஸ் பண்ணுவதாக உணர்கின்றேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுராட்சி சபைத் தேர்தலை 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் புறக்கணிப்பு

[ திங்கட்கிழமை, 10 மார்ச் 2008, 02:07.15 PM GMT +05:30 ]

மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலை 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் புறக்கணித்திருப்பதாக மட்டக்களப்பு அரச அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மிகவும் மந்த கதியிலேயே இன்றைய நாள் வாக்களிப்பு நடைபெற்றதாகவும் வாக்காளர்கள் பலரும் துணை இராணுவக் குழுக்களின் நிர்ப்பந்தத்திற்கு பயந்தே வாக்களித்துள்ளனர் என்றும் அங்குள்ள அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கடுமையான முறைகேடுகள் நடந்திருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டிருந்ததாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையாளர் மற்றும் காவல்துறை மா அதிபர் உள்ளடங்கலாக மேலும் பலரின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

துணை இராணுவக் குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த வாழைச்சேனைப் பகுதியிலேயே இத்தகைய முறைகேடுகள் அதிகம் இடம்பெற்றதாக பவ்ரல் அமைப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் பிரதேசங்களில் திட்டமிட்டு பாதுகாப்பு கெடுபிடிகளை இன்று திங்கட்கிழமை அதிகரித்திருந்த படையினர், முஸ்லிம் வாக்காளர்களிடம் கடுமையான சோதனைகளை நடத்தியதாகவும் சிலரை வாக்களிக்க விடாது அவர்கள் தடுத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் காவல்துறையினர் வாக்களர்களை தமது வாகனம் ஒன்றில் தமக்கு வேண்டப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு ஏற்றிச் சென்று வாக்களிக்க விட்டனர் என்றும் பவ்ரல் அமைப்பிடம் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் 8 உள்ளுராட்சி சபைகளுக்கான இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பு 125 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகியது.

மாலை 4:00 மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்தது. எனினும் மட்டு. மாவட்டத்தில் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இத்தேர்தலை புறக்கணித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

வாக்குச் சீட்டுகளை எண்ணும் பணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் முடிவை நாளை முற்பகல் முழுமையாக வெளியிட முடியும் என்று மட்டு. மாவட்ட அரச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

http://tamilwin.com/view.php?2adgE9ZZe0bdf...G7Dcd0ebFh2gsae

தேர்தல் நடத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் கிழக்கினை நல்லாட்சி புரியப் போகிறார்களா? பிசாசுகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.