Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் அனுமதி இன்றியே மக்கள் மடுத்தேவாலயம் செல்லும் நிலை வரும் பௌத்த பிக்குகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் அனுமதி இன்றியே மக்கள்

மடுத்தேவாலயம் செல்லும் நிலை வரும்

பௌத்த பிக்குகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் அனுமதியின்றியே மக்கள் மடுத் தேவாலயத்திற்குச் செல்லும் நிலை விரைவில் உருவாக்கப்படும்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பௌத்த பிக்குகளிடம் தெரிவித்திருக்கிறார்.

நேற்று முன்தினம் கிழக்கு மாகாண விகாரைகளைப் புனரமைப்பதற்கான நிதி வழங்கும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

கிழக்கில் இன்று மக்கள் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளை வடக்கில் கிளிநொச்சியில் உள்ள மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

யுத்த நிறுத்த ஒப்பந்ததின் மூலம் எல்லைக் கிராமங்கள் பிரிக்கப்பட்ட யுகம் முடிவுக்கு வந்துள்ளது. சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழலை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாகும்.

கிழக்கு என்று சொல்லாமல் வடக்கு கிழக்கு என அடையாளப்படுத்தப்பட்ட இம்மாகாணங்கள் இன்று பிரிக்கப்பட்டுள்ளன. தமது உள்நோக்கத்தை நிறைவேற்றவே இம்மாகாணங்கள் பிரபாகரனினால் இணைத்து அடையாளப்படுத்தப்பட்டன.

ஒரே நாட்டில் எல்லைக் கிராமங்கள் எவ்வாறு இருக்க முடியும்? ஆனாலும், கடந்த 30 வருடங்களாக அந்த நிலைமைதான் எமது நாட்டில் இருந்தது.

கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இதில் 60 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இங்குள்ள மக்கள் புலிகளின் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற்று சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றனர். அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

மக்களுக்குக் கிடைத்துள்ள இந்தச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. இச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது எமது கடமை.

சில அரசியல் கட்சிகள் இத்தேர்தலைப் பகிஷ்கரித்தன. பொய்த் தகவல்களை சர்வதேச சமூகத்திற்க்கு வழங்கி விஷமப் பிரசாரங்கள் செய்தன. எனினும், அவர்களது சகல முயற்சிகளும் பொய்த்து விட்டன.

பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து கிழக்கு முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. வன்முறையற்ற அமைதியான தேர்தல் ஒன்று அங்கு நடைபெற்றுள்ளது. கிழக்கில் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆயுதமுனையில் பறிக்கப்பட் சகல உரிமைகளும் வடக்கு கிழக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும். பிரபாகரனின் அனுமதியின்றியே மடுத் தேவாலயத்துக்குச் செல்லும் நிலை விரைவில் உருவாக்கப்படும். கிழக்கைப் போன்றே வடக்கில் உள்ள மதத்தலங்கள் புனரமைக்கப்படும்.

எமது தாய்நாட்டையும் புத்த மதத்தையும் பாதுகாக்க பௌத்த பிக்குகள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தைரியமூட்டியவர்களும் அவர்களே. அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார். (க 09)

http://www.sankathi.com/live/content/news.php

  • கருத்துக்கள உறவுகள்

மடு தேவாலயத்துக்கும் பௌத்த பிக்குகளுக்கும் என்ன சம்பந்தம்.

ஓ......கதிர்காம கந்தனை போல் ஆக்க போகின்றார்களோ.

மடுபக்கமா போய் அங்கனேக்குள்ள பல்லு புல்லு எதாவது எடுத்து போட்டு குளறப்போறாங்கள் போல கிடக்கு...

எப்படியோ இப்போது பிரபாகரனின், அனுமதியின்றி போகமுடியாது.

என்ன எங்களுக்கும் உங்க (மகிந்தவின்) அனுமதி இல்லாமல் மாவிட்டபுரம் போக ஆசை தான். பார்ப்போம் யார் ஆசை நிறைவேக போகுதுன்னு..

அம்பாந்தோட்டை ரவுடி மடு தமிழர் பிரதேசம். தமிழர் தான் ஆட்சி நடத்த வேண்டும்.

இப்ப தெரியும் தானே தமிழீழ நிர்வாகம் ஒண்டு இலங்கை தீவில இயங்குதெண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சக் காலத்தில மடுவுக்கு எல்லாரும் வந்து போகலாம் என்னுடைய விசேஷ அனுமதி வேண்டியதில்லை என்று தேசியத் தலைவர் சொல்லப் போறார் அதைத்தான் உந்தாள் போய் பிக்குமாரிட்டச் சொல்லியிருக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.