Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா சிறீலங்கா காவல்துறையினரக்கு $2.2 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சிறீலங்கா காவல்துறையினரக்கு $2.2 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

சிறீலங்கா காவல்துறையினருக்கு அமெரிக்கா அரசாங்கம் பயங்கரவாத தடுப்பிற்காக இரண்டு இலட்சத்து இருபதுனாயிரம் டொலர் பெறுமதியான உபகரணங்களை வழங்கவுள்ளதாக தெரியவருகிறது.

இதுதொடர்பில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவத்கு சிறீலங்கா காவல்துறையினரின் வினைத்திறனை அதிகரிப்பதற்காகவே இவ் உபகரணங்களை வழங்குவதாக அமெரிக்கா தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது

http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா இதுக்குதானா இரண்டு பேரும் சண்டை பிடிச்சவை? சீ இது சண்டை இல்லை ஊடல் ஆக்கும்.

2.2 x 109.81 = 24 158 200

இரண்டு கோடியே நாற்பத்தொரு லச்சத்து ஜ்ம்பதெட்டாயிரத்தி இருனூறுரூபய்...

அம்மாடியோவ்... கனக்க காசுதான்.. இதை வைச்சு இலங்கை போலீஸ் முனேறினால் தான் உண்டு.. இல்லாட்டா கஸ்டம் தான்.

இலங்கை கிடக்கிற பஞ்சத்தில 5 டொலரை போட்டாலும் காணும்.. போறுக்கி கொண்டு ஓடிடுவாங்கள்..

சிறிலங்கா அதிரடிப்படை மற்றும் காவல்துறையினருக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான இராணுவ உபகரணங்களை வழங்கியிருக்கும் அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக், சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் படையினருக்கு பயிற்சி வழங்குவது குறித்தும் பேச்சு நடத்தியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை என்றும் கூவிறாங்க.. மனிதரைக் கொல்ல ஆயுதமும் கொடுக்கிறாங்க. என்ன உலகமப்பா இது..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்பு உபகரணங்கள் அமெரிக்காவினால் அன்பளிப்பு இராணுவத் தளபதியுடனும் தூதுவர் பேச்சு

3/18/2008 9:19:45 PM

வீரகேசரி இணையம் - பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இரண்டு இலட்சத்து இருபது ஆயிரம் டொலர் பெறுமதியான உபகரணங்களை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது.இந்த உபகரணங்களைக் கையளிக்கும் வைபவம் நேற் றுக் காலை அமெரிக்க தூதகரத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத்துக்கு எதிரான படையினரின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவுமே இந்த உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், குண்டு செயலிழக்கும் பிரிவினர் ஆகியோர் பங்கு கொண்டனர். இவர்களுக்கு இந்த உபகரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற விளக்கமும் அளிக்கப்பட்டது. இங்கு அமெரிக்க தூதுவர் உரையாற்றுகையில்,

பயங்கரவாத தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே பொலிஸ் திணைக்களத்திற்கு இந்த உபகரணங்களை வழங்குகின்றோம். இலங்கை உட்பட நட்பு நாடுகளில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் மனித உரிமைகளின் தரத்தை மேம்படுத்தவும் அமெரிக்கா இணைந்து செயற்பட்டு வருகிறது.

பயங்கரவாதத்தினை ஒழிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவியாகவும் பாதுகாப்பை வழுப்படுத்தவும் மேலோங்கச் செய்வதற்காகவுமே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குண்டு வெடிப்புகளிலிருந்து பாதுகாக்கும் உடைத் தொகுதிகள் மூன்று, குண்டு வெடிப்பு இடம் பெற்ற பகுதியில் புலன் விசாரணை செய்யும் வேளையில் அணியும் இரண்டு உடைகள் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கான அவசர வேளையின் போது அணியும் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு உபகரணங்களையே வழங்கியுள்ளோம். இவை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்றார்.

இதேவேளை, அமெரிக்க தூதுவர் ரொபட் ஒ பிளெக்குக்கும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நேற்று இராணுவ தலைமையகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது இராணுவ தளபதி, அமெரிக்க தூதுவருக்கு வன்னிகள நிலைமைகள் குறித்து விளக்கியத்துடன், பொது மக்கள் பலர் தமது வீடு வாசல்களை கைவிட்டு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிவருவதாகவும் கூறினார்.

கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இராணுவ தளபதி, கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன், சிவில் நிர்வாகத்தை மீண்டும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறனார்.

இலங்கைப்படையினருக்கு அமெரிக்கா பயிற்சி அளித்துவருவது தொடர்வதும் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டது. இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்படி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.