Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவறுகள்

Featured Replies

அன்றாடம் நமது வாழ்வில்

பல தவறுகளை

சரியென்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம்.

அப்படியான தவறுகள் சிலவற்றை

யாழ் வாசகர்களோடு

பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கனிவுடன் கனிஷ்டா. :D

தவறுகள்

*மக்கள் அனைவரும்

தன் கருத்தை ஒப்பு கொண்டு

தன் வழியில் வரவேண்டும்

என்று எண்ணிச் செயற்படுவது.

*தன்னத் தானே பெரிய

அறிவாளி திறமைசாலி என்றும்

மற்றவர்கள் எல்லாம்

ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்றும்

கற்பனை செய்து கொள்வது.

*மற்றவர்கள் கஷ்டத்தில்

கைகொடுக்காமல் இருந்துவிட்டு

அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்

என நினைப்பது அல்லது விரும்புவது.

*தன்னால் முடியாத ஒரு காரியத்தை

வேறு எவராலும் செய்ய முடியாதது

எனக் கருத்திக் கொள்வது.

*இனிமையாகப் பேசும் எல்லோரையும்

நல்லேண்ணம் கொண்ட நண்பர்கள்

என எண்ணி கொள்வது.

*ஒருவருடைய வெளித்தோற்றத்தை பார்த்து

இவர் இத்தகயவர் எனக்

கருதுவது,கணித்துச் சொல்வது.

*இரண்டொரு முறை செய்துவிட்டு

பிறகு விட்டுவிடுவேன் என்று

மானக்கேடான செயலைச் செய்வது.

*தன் பெற்றோருக்கும் பணிவிடைகள்

செய்யாமல் என் பிள்ளைகள்

எனக்குப் பணிவிடை செய்வார்கள்

என எதிர்பார்பது.

*ஒருவரை சோதித்துத்

தெரிந்து கொண்ட பிறகு

மீண்டும் மீண்டும் சோதிப்பது.

*பாவமான ஒரு செயலைச் செய்யும் போது

தவறான பேச்சை பேசும் போது

சுவருக்குக் காதில்லை

கதவுக்கு கண்ணில்லை

எனக் கணிப்பது.

*நான் எப்போதும் ஆரோக்கியமாகவும்

அழகாகவும் வசதியாகவும் இருப்பேன்

என்று எண்ணிக் கொண்டிருப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

கனிஷ்தா! மக்கள் அனைவருமே இப்படி இருக்கும்போது நான் மட்டும் வீனாக எதற்கு மாறவேண்டும். இப்படியே இருந்திட்டுப் போறேனே. :D:D

*இனிமையாகப் பேசும் எல்லோரையும்

நல்லேண்ணம் கொண்ட நண்பர்கள்

என எண்ணி கொள்வது.

*ஒருவரை சோதித்துத்

தெரிந்து கொண்ட பிறகு

மீண்டும் மீண்டும் சோதிப்பது.

*நான் எப்போதும் ஆரோக்கியமாகவும்

அழகாகவும் வசதியாகவும் இருப்பேன்

என்று எண்ணிக் கொண்டிருப்பது.

1. நல்லவர்களாக இருப்பார்கள் என்று நினைப்பது தப்பில்லை, அவர்கள் அப்படியில்லை என்று நிரூபிக்கும் வரை.

2. அடிக்கடி டெஸ்ட் வைக்கும் டீச்சர்மாரை என்ன செய்வது? :D

3. பொசிட்டிவ் திங்கிங் கூடாதா?

  • கருத்துக்கள உறவுகள்

*நான் எப்போதும் ஆரோக்கியமாகவும்

அழகாகவும் வசதியாகவும் இருப்பேன்

என்று எண்ணிக் கொண்டிருப்பது

நான் எப்பொழுதும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கிணங்க செயற்படுவதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கக் கூறியவை யாவும் வாஸ்தவம் தான் ஆனாலும் கீதையை தந்த கிருஷ்ணன் இதை தான் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று டயலக் விட்டவர் அதன் பிறகு வந்த புத்தரும் ஏதோ டயலக் விட்டார் பிறகு வந்த வள்ளுவரும் டயலக் விட்டார் அதை தொடர்ந்து ஜேசு டயலக் விட்டார் இப்படி எல்லாம் டயலக்கா வந்து நம்ம காலத்தில கண்ணதாசன் டயலக் விட்டார் அட வைரமுத்துவும் இப்ப டயலக் விடுறார் இதில வேற நீங்க டயலக்விடுறீங்க கேட்க வேண்டிய நிலையில நாங்க வெங்காயங்கள் இருக்கிறோம் நல்லா வெட்டி விடுங்கோ எல்லா டயலக்கும் சரி தான் ஆனால் எங்களுகுள்ள ஒரு ஆணவம் என்று ஒரு சாமான் இருக்கு பாருங்கோ அது தான் பிடித்த மூன்று கால் என்று தான் வாதாடும் இதன் பிறகு நான் அலட்ட தயாரில்லை. உது எல்லாத்தையும் கண்டுக்காம இருக்கிறது என்று சொன்னா

ஒரே பதில் எல்லாம் சிவமயம் என்று 108 தரம் சொன்னீங்க என்றா ஒரு பிரச்சினையும் இல்லாம மனம் சாந்தியடையும் யாழிலும் புது புது கருத்துகளை வைக்கலாம். :D:D

ஒரே பதில் எல்லாம் சிவமயம் என்று 108 தரம் சொன்னீங்க என்றா ஒரு பிரச்சினையும் இல்லாம மனம் சாந்தியடையும் யாழிலும் புது புது கருத்துகளை வைக்கலாம். :D:D

பார்த்து. எல்லாம் சிவமயம் என்று முழுமனதாக சொல்லாம 108 எண்ணுறதில கவனமா இருக்கப்போறியள்.

அட...கனி தங்கச்சிக்கு என்ன ஆச்சு..(பட் தவறுகள் எல்லாம் நன்னா தான் இருக்கு :lol: )...யாரும் தவறு விட்டுவிட்டார்களோ அல்லது தவற விட்டு விட்டார்களோ..(என்னால முடியல்ல :lol: )..

இனிமையாகப் பேசும் எல்லோரையும்

நல்லேண்ணம் கொண்ட நண்பர்கள்

என எண்ணி கொள்வது.

ம்ம்ம்...மேலே கூறினது என்னவோ எனக்காக எழுதின மாதிரி இருக்கு..(ஜம்மு பேபியின்ட வீக் பொயிண்டே அது தான் பாருங்கோ :lol: )...ம்ம்ம் நேக்கு உந்த கூற்று நன்றாகவே பிடித்திருக்கு ம்ம்ம் நான் கூட லெசில நம்பிடுறது ஆனா அவை எங்களுக்கே அல்வா கொடுத்து விட்டு போயிடுவீனம்.. :D (ஒரு தவறு செய்தால் அதை தெரிந்தும் செய்தா அவன் அவுஸ்ரேலியன் பிரைம் மினிஸ்டர் என்றாலும் விடமாட்டேன் :D )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில ஒரு தடவை விட்டா தவறு அதையே பல தடவை விட்டா அது உன் மேல தவறு" :D

அப்ப நான் வரட்டா!!

2. அடிக்கடி டெஸ்ட் வைக்கும் டீச்சர்மாரை என்ன செய்வது?

ம்ம்ம்.. Eas அண்ணா ஒரு மனிசனிட்ட வாழ்க்கையில எத்தனை சோதனை எத்தனை வேதனை...(என்னால முடியல்ல :( )..அடிகடி டெஸ்ட் வைக்கு டீச்சர்மார் நமக்கு தாரது நாம அவைக்கு கொடுக்கிறது வேதனை அல்லோ.. :unsure: (முடியல்ல)..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

"தவறுகள் ஆக்கத்தை

தவறான கண்ணோட்டதோடு

பார்க்காத அன்புள்ளங்களுக்கு

எனது நன்றிகள்". :D

நுணாவிலன்,

"நான் எப்போதும் ஆரோக்கியமாகவும்

அழகாகவும் வசதியாகவும் இருப்பேன்

என்று எண்ணி கொண்டிருப்பது"

இது தான் வசனம்.

அதற்கிணங்க செயற்பட்டால்

நான் இப்போதும் ஆரோக்கியமாகவும்

அழகாகவும் வசதியாகவும் இருப்பேன்

என்று எண்ணி கொண்டிருக்கலாம். :o

புத்தன் அண்ணா,

உங்கள் பெயர் மட்டுமில்லை புத்தன்

நீங்கள் ஆன்மிக புத்தரோ என்று சந்தேகம்

அந்தளவு வாழ்க்கையில் நொந்திருக்கிறீர்கள்

என்று தெரிகிறது.

அறிஞர்களோடும்,கவிஞர்களோடும் கனிஷ்டாவையும்

சேர்த்ததிற்கு நன்றி.

வெங்காயங்களோடு நீங்களும் ஒரு வெங்காயம்

என்று ஒப்பு கொண்டதிற்கு மனமார்ந்த பாராட்டுகள். :(

108 முறை சிவமயம் சொன்னால்

100 வருசம் வாழலாமோ?? :D

ஜம்மு அண்ணா,

ஜம்மு அண்ணா யாரையும்

யாரும் தவறவிடவில்லை.

நீங்கள் இலகுவில் எல்லோரையும் நம்புவதே

பிரச்சினைகளுக்கு காரணம்.

பிரச்சினைகள் வந்தா பிறகு பஞ் டயலக்

எல்லாம் கூடாது. :)

ஜம்மு அண்ணா இது தேவையா... முடியல என்னால...

  • தொடங்கியவர்

கொக்குவிலான்,

நான் சொன்னது

எனது அண்ணாவிற்கு

ஏன் உங்களால்

முடியவில்லை. :D

உங்களுக்காகவும்

வருந்துகிறேன் :D

பொல்ல குடுத்து அடி வேண்டின கதையா போச்சு என்ட கதை...

ஜம்மு அண்ணா,

ஜம்மு அண்ணா யாரையும்

யாரும் தவறவிடவில்லை.

நீங்கள் இலகுவில் எல்லோரையும் நம்புவதே

பிரச்சினைகளுக்கு காரணம்.

பிரச்சினைகள் வந்தா பிறகு பஞ் டயலக்

எல்லாம் கூடாது.

அப்படியோ..(நான் நினைத்தன் தவறவிட்டு விட்டார்களோ என்று :) )...நம்பிக்கை தானே வாழ்க்கை அப்ப நம்பி தானே ஆக வேண்டும்..(நாளைக்கு நான் நித்தா விட்டு எழும்புவேன் என்பது கூட ஒரு நம்பிக்கை தானே என்ட தங்கச்சியே :wub: )..

அது சரி படத்தில எல்லாம் கீரோ வந்து பிரச்சினை வந்தா பிறகு பஞ் டயலக் சொன்னா கை தட்டுவீங்க ஜம்மு பேபி பஞ் சொன்னா தான்..(எல்லாருக்கும் நக்கல் :D )...எனி அழுதிடுவன் சொல்லிட்டன்... :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு அண்ணா இது தேவையா... முடியல என்னால...

கொக்குவிலன் அண்ணா தங்கச்சி தானே சொல்லுறா கேட்போம் என்ன... :( (நிசமா என்னாலையும் முடியல அட்வைஸ் கேட்க தான்)...கேட்காட்டியும் ஏச்சு விழும்.. :D

அப்ப நான் வரட்டா!!

பொல்ல குடுத்து அடி வேண்டின கதையா போச்சு என்ட கதை...

இப்ப என்னாலையும் முடியல்ல அண்ணா... :(

அப்ப நான் வரட்டா!!

*இனிமையாகப் பேசும் எல்லோரையும்

நல்லேண்ணம் கொண்ட நண்பர்கள்

என எண்ணி கொள்வது.

அடிக்கடி நான் விடும் தவறு.

நல்லதொரு பதிவு. நன்றிகள் கனிஷ்டா. புதுசா வந்தாலும் நல்லா எழுதுறியள். :unsure: பிடிச்சிருக்குங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கபூர்வமான தத்துவங்கள்!

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

108 முறை சிவமயம் சொன்னால்

100 வருசம் வாழலாமோ??

சிவமயம் சொல்லி பாருங்கோ 108 பிறந்த நாளிற்கு யாழில் பிறந்த நாள் வாழ்த்து போடுவோம் ஆனா என்ன நான் இருக்க மாட்டன்,எதலையும் நாங்கள் பிரக்ரிக்கலா தான் யோசிக்க வேண்டும் :lol::lol:

  • தொடங்கியவர்

கருத்துகளை பகிர்ந்து கொண்ட

சகோதரி வெண்ணிலா,வல்வை மைந்தன்

ஆகியோருக்கு நன்றிகள். :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.