Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் ஒருமைப்பாடும் - ஈழத்தமிழர் தாகமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஒருமைப்பாடும் - ஈழத்தமிழர் தாகமும்

சாதாரணமாக உலகம் என்று நாம்கூறிக்கொண்டாலும்

இந்த உலக இயக்கம் மேற்கத்தய நாடுகள் என நாம் அழைக்கும்

ஒரு சில நாடுகளாலேயே தங்கியிருக்கின்றது

அதாவது இவையே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன

அல்லது இயக்குகின்றன

நாம் இதை ஏற்றுக்கொள்ளலாம்

ஏற்காமல் மல்லுக்கட்டி உடைந்து போகலாம்

உண்மை இதுதான்

அதன்படி இந்த நாடுகள் சில குறிக்கோளைக்கொண்டவை

அது இவர்களின் சுயநலம் சார்ந்ததாகும்

அதன்படிதான் தீர்மானங்கள் எடுக்கப்படும்

நடைமுறைப்படுத்தப்படும்

இதில் முகம் பார்க்கப்படமாட்டாது

எதிரி

நண்பன்

துரோகி..........எதுவுமே பார்க்கப்படமாட்டாது

இவை தேவைக்கேற்றபடி மாற்றங்காணும்???

இதற்கு இறுதி உதாரணமாக

ஈhராக்கில் அமெரிக்கா

கொசேவேவுக்கான அங்கீகாரம்......என எழுதிக்கொண்டு போகலாம்

எனக்கு தேவை அதுவல்ல

கொசேவோவின் தீர்மானம் முடிய ஈழத்தின் பக்கம்தான் இவர்களின் ஆசிர்வாதம் விழும் என எழுதியோர் பலர்

ஆனால் அவர்களின் கருணை

திபெக் பக்கம் விழத்தொடங்கியிருக்கிறது

இது தற்செயலானதா??? என்றால் என்னைப்பொறுத்தவரை இல்லை என்பதே பதிலாகும்.....

ஏன்?

அதற்கு முன் உலக பொருளாதாரத்தை கொஞ்சம் பார்ப்போமாக இருந்தால்

உலக பொருளாதாரம் என்றால் அது இவர்கள்தானே

நான் எங்கேயும் தூரம்போக விரும்பவில்லை

இங்கே பிரான்சில் விலைவாசியைக்குறைக்கமுடியவி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம்தான் தமிழனின் தாகம். அந்தத் தாகத்தைத் தீர்ப்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களே எம் நண்பர்கள். ஏனையோரெல்லாம் எதிரிகள் அல்லது துரோகிகள். துரோகிகளுக்கோ எதிரிகளுக்கோ என்ன தீங்கு ஏற்பட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டிய அவசியம் எமக்கில்லை. எம்மால் யாருக்கும் தீங்கோ பிரச்சனைகளோ ஏற்படாமல் பார்த்துக்கொள்வதைத்தவிர தேசிய விடுதலைக்கான போரில் வேறொன்றைச் சிந்திக்கவேண்டிய அவசியமேயில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம்தான் தமிழனின் தாகம். அந்தத் தாகத்தைத் தீர்ப்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களே எம் நண்பர்கள். ஏனையோரெல்லாம் எதிரிகள் அல்லது துரோகிகள். துரோகிகளுக்கோ எதிரிகளுக்கோ என்ன தீங்கு ஏற்பட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டிய அவசியம் எமக்கில்லை. எம்மால் யாருக்கும் தீங்கோ பிரச்சனைகளோ ஏற்படாமல் பார்த்துக்கொள்வதைத்தவிர தேசிய விடுதலைக்கான போரில் வேறொன்றைச் சிந்திக்கவேண்டிய அவசியமேயில்லை.

மேற்குலகு அப்படியொரு முடிவுக்கு வர சந்தர்ப்பம் உண்டா???

  • கருத்துக்கள உறவுகள்

நீ;ங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் தரப்பட்டது. அப்படியில்லாமல் இந்தியா எங்களை ஆதரித்து ஈழவிடுதலைக்கு விரோதமில்லாமல் நடக்குமாயின் இந்தியாவும் எமது பாசத்துக்குரிய நண்பனே. எதிர்ப்போர் எல்லாரும் எதிரிகளே. இதில் பெரிய சிக்கல்கள் எதுவுமில்லை. மிக எளிதான விடயம். சிக்கல் தெரிந்தால் உங்கள் தேசிய முனைப்பில் ஏதோ கோளாறு இருப்பதாக அர்த்தம்.

தமிழர்களை கொண்று ஒழித்த ராஜீவ் மரணம் சரியானதுதான் எண்டு தமிழ் மக்கள் நியாய படுத்தும் நிலை வரவேண்டும்... அப்ப இந்தியாவின் பாதகத்தை தமிழர்கள் எதிர்க்கவும் துணிவார்கள் எனும் நிலை இந்திய கொள்கையை மாறச்செய்யும்...

இந்தியா வெளிப்படியாக யாரையும் பகைத்து கொள்ளாத கொள்கையை கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறது... ஆனால் மற்றைமுகமாக நிறையப்பேருக்கு எதிரி....!

  • கருத்துக்கள உறவுகள்
:D 10.000 பொதுமக்கள் பலியாவதற்கும், 600 போராளிகள் மரணமடைவதற்கும், எமது தாய் தங்கையர் கும்பல் கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு மிருகத்தனமாக கொல்லப்படுவதற்கும், எமது வாழ்விடங்கள் தரைமட்டமாக்கப்படுவதற்கும் காரணமாயிருந்த அந்த ஒற்றை மனிதனான ராஜீவ் கொல்லப்பட்டது சரிதான் என்பதில் ஈழத்தமிழருக்குள் கருத்து வேற்பாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படியிருப்பின் அவர்கள் ராஜீவின் அக்கிரமங்களை அறியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஈழப் போராட்டத்துக்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

1.கருவின் கருத்தே எனது கருத்தும். தனது தேசிய ஒருமைப்பாட்டிற்காக இந்தியா வாளாவிருக்கிறது என்ற நிலை எப்போதோ கடந்து போய் விட்டது. இப்போது ஈழத்தமிழரின் இரத்தம் இந்தியாவின் கைகளையும் நனைத்திருக்கிறது என்பதே உண்மை.இனியும் இந்தியா நண்பன் என்று நம்புவோர் தேசியப் போராட்டத்தில் எந்தத் தெளிவுமில்லாதோர் மட்டுமே!

2. அமெரிக்கா போன்ற ஒரு நாடு நம்மை ஆதரிக்குமா என்று கேட்டீர்கள். உலக அரசியலில் சில விடயங்கள் நடக்கலாம், அவை நமக்கு நன்மையாகவும் முடியலாம். இந்தியாவின் ஈழ எதிர்ப்பு அதன் உள்ளகப் பிரச்சினைகளை மூடி மறைக்கும் கைங்கரியத்தின் வெளிப்பாடு. எனவே அது எப்போதுமே மாறப் போவதில்லை (ஏனெனில் இந்தியா தன் உள்ளகப் பிரச்சினைகளை நேர்மையாகத் தீர்க்கப் போவதில்லை!). ஆனால் மேற்கு நாடுகளின் புலி எதிர்ப்பு உலக பயங்கரவாத எதிர்ப்புடன் இணைக்கப் பட்ட ஒன்று. பயங்கரவாதிகள் புலிகள் அல்ல என்று மீண்டும் மீண்டும் நிரூபித்தால் மேற்கு நாடுகளின் நிலைப்பாடு மாறலாம். இந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு சுதந்திரத்தின் சுவையும் அது இல்லாமல் போனால் என்ன ஆகும் என்பதும் நன்கு தெரியும்.இந்தியா போன்ற ஒப்பீட்டளவில் வெள்ளித் தட்டில் வைத்து சுதந்திரம் வழங்கப் பட்ட நாடுகளுக்கு இது புரியாது.எனவே, அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ எங்கள் நியாயத்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் எப்போதும் உண்டு.

:D 10.000 பொதுமக்கள் பலியாவதற்கும், 600 போராளிகள் மரணமடைவதற்கும், எமது தாய் தங்கையர் கும்பல் கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு மிருகத்தனமாக கொல்லப்படுவதற்கும், எமது வாழ்விடங்கள் தரைமட்டமாக்கப்படுவதற்கும் காரணமாயிருந்த அந்த ஒற்றை மனிதனான ராஜீவ் கொல்லப்பட்டது சரிதான் என்பதில் ஈழத்தமிழருக்குள் கருத்து வேற்பாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படியிருப்பின் அவர்கள் ராஜீவின் அக்கிரமங்களை அறியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஈழப் போராட்டத்துக்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக வேறுபட்ட கருத்து இருக்கிறது ரகுநாதன். இப்போதும் யாழ் களத்தில் "நம் பக்கத் தவறுகள்" என்று எழுதும் இந்திய அடிவருடிகள் இருக்கிறார்கள்.

:D 10.000 பொதுமக்கள் பலியாவதற்கும், 600 போராளிகள் மரணமடைவதற்கும், எமது தாய் தங்கையர் கும்பல் கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு மிருகத்தனமாக கொல்லப்படுவதற்கும், எமது வாழ்விடங்கள் தரைமட்டமாக்கப்படுவதற்கும் காரணமாயிருந்த அந்த ஒற்றை மனிதனான ராஜீவ் கொல்லப்பட்டது சரிதான் என்பதில் ஈழத்தமிழருக்குள் கருத்து வேற்பாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படியிருப்பின் அவர்கள் ராஜீவின் அக்கிரமங்களை அறியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஈழப் போராட்டத்துக்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும்.

எதுக்கு எடுத்தாலும் இராஜீவ் மரணம் எண்று சொல்லி ஈழத்தமிழருக்கு கிடைக்க வேண்டிய தார்மீக ஆதரவை கிடைக்காமல் செய்யும் இந்திய நிலைப்பாட்டை மாற்றமடைய செய்ய எங்களுக்குள் பேசிக்கொள்வது போதாது..!

பிரச்சார ரீதியில் ஈழத்தமிழர் படுகொலைகள் கண்டனங்களேடு வெளி வர வேண்டும்.... இண்று இந்திய தலைமை இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு துணை போவதாய் ஈழத்தமிழர் தலைமை கண்டனம் தெரிவித்த பின்னர் தமிழர்கள் (பொது மக்கள்) தங்களின் கண்டனங்களை கட்டுரைகள், கவிதைகள், ஓவியங்கல்ல், காணொளிகள் எண்று எல்லா வித்திலும் தெரிவிப்பது மிகவும் நல்லது...!

ஈழத்தமிழனின் பொறுமை கடந்த வேதனை இந்திய தமிழனுக்கு போய் சேர வேண்டும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய ஒருமைப்பாடு நம்ம போராட்டத்துக்கு சரிவராதண்ணே........ அங்கயும் ஒரு 5 கோடி விழுந்தாதான் எங்கட போராட்டதுக்கு நன்மை.........

  • கருத்துக்கள உறவுகள்

ஜச்டின், தயா !

இன்றும் எம்மில் சிலருக்கு இந்திய அபிமானம் இருப்பது உண்மைதான். அவர்கள் கேட்கும் கேள்விகளெல்லாம்" இந்தியாவை எதிர்ப்பதால் மட்டும் என்ன வந்துவிடப்போகிறது?", " இந்தியாவின் கோபத்தை இன்னும் சம்பாதிக்கப் போகிறோம் ", " என்ன இருந்தாலும் ராஜீவில் கை வைத்திருக்கக் கூடாது " போன்றவைதான்.

இந்தியாவின் கோபத்தைச் சம்பாதிக்கக் கூடாது என்றால் இப்போது மட்டும் இந்திய செய்துவரும் அநியாயங்களை என்னவென்று சொல்வது ? அல்லது இந்த அநியாயங்களெல்லாம் அநியாயங்களாகத் தெரியவில்லையா இவர்களுக்கு ?

இந்தியாவை எதிர்ப்பதால் மட்டும் என்ன வந்துவிடப்போகிறது என்றால் , இவ்வளவு அக்கிரமங்களுக்கும் துணைபோகும் இந்தியாவை எப்படி ஆதரித்து அநுசரித்துப் போவது ?

ராஜீவில் கைவைத்தது பிழை என்றால், அதை யார்தான் செய்தது என்று இன்னும் தெரியாது. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் இன்னொரு நரவேட்டை நடத்தி முடிக்கப்பட்டிருக்கும், அது 1987 இல் நடந்ததை விட மிக அகோரமாக நடந்திருக்கும். ஒருவேளை அப்படி ஒன்று நடந்திருந்தால் சிலவேளை இவர்கள் இந்தியாவின் சுயரூபத்தை அறிந்திருப்பார்களோ என்னவோ ?!

இதெல்லாம் இவர்களுக்குப் புரியாது. புரிந்ததெல்லாம்" எங்கட இந்தியா எங்களைக் கைவிடாது, கடைசியில வந்து எங்களுக்கு ஈழம் எடுத்துத் தரும் " என்ற கனவு நிகழ்வு மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

:D குகதாசன்

"எம் இந்தியா" என்று நீங்கள் அடிக்கொருதரம் எழுதுவதைச் சகிக்க முடியவில்லை. இந்தியப் போருக்கு ஆளெடுத்தால் நாம் வரிசையில் நிற்போம் என்று எந்த அர்த்தத்தில் எழுதுகிறீர்கள் ? ஒருமுறை இந்தியா போரெடுத்து எம்மைத் துவசம் செய்தபின்னும் அந்த" இந்தியப் போருக்கு" வரிசையில் போய் நிற்பீர்களோ ??

எம் இந்தியா , எம் இந்தியா என்று சொல்வதற்கு நாம் ஒன்றும் அந்தநாட்டின் பிரஜைகள் அல்ல, இந்தியா எமது நாடும் அல்ல. எம்மை பூண்டோடு அழித்து தனது பிராந்திய வல்லரசு என்ற பதக்கத்தை தக்கவைக்க போராடும் ஒரு வல்லாதிக்க நாடு.

இதைப் பற்றி எழுதி எழுதியே களைத்து விட்டது. நாம் எப்போதுதான் திருந்தப் போகிறோமோ ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D குகதாசன்

"எம் இந்தியா" என்று நீங்கள் அடிக்கொருதரம் எழுதுவதைச் சகிக்க முடியவில்லை. இந்தியப் போருக்கு ஆளெடுத்தால் நாம் வரிசையில் நிற்போம் என்று எந்த அர்த்தத்தில் எழுதுகிறீர்கள் ? ஒருமுறை இந்தியா போரெடுத்து எம்மைத் துவசம் செய்தபின்னும் அந்த" இந்தியப் போருக்கு" வரிசையில் போய் நிற்பீர்களோ ??

எம் இந்தியா , எம் இந்தியா என்று சொல்வதற்கு நாம் ஒன்றும் அந்தநாட்டின் பிரஜைகள் அல்ல, இந்தியா எமது நாடும் அல்ல. எம்மை பூண்டோடு அழித்து தனது பிராந்திய வல்லரசு என்ற பதக்கத்தை தக்கவைக்க போராடும் ஒரு வல்லாதிக்க நாடு.

இதைப் பற்றி எழுதி எழுதியே களைத்து விட்டது. நாம் எப்போதுதான் திருந்தப் போகிறோமோ ?!

உங்கள் கருத்துக்கு நன்றி

ஆனால் அந்தளவுக்கு எம்முள் இந்தியா புகுந்து விளையாடுகிறது

அதை வகுத்துப் பார்ப்பதே எனது நோக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.