Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மழை பொழிந்தாலும் போர் தொடரும் சரத்பொன்சேக முழக்கம்...

Featured Replies

முகமாலை மன்னார், மற்றும் மணலாறு

பகுதிகளில் கடந்த சிலநாட்களாக

இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான

மோதல்கள் இடம்பெறுகின்றன.

2008 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் நேற்று

முன்தினம் வரை புலிகளின் 115 சடலங்கள்

செஞ்சிலுவை சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. அடைமழையினால்

இடையூறு ஏற்படினும் வடக்கில்

இடம்பெறுகின்ற தாக்குதல்கள் கைவிடப்படமாட்டாது

என்று பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

மேலும் படிக்க...

http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1597#1597

  • கருத்துக்கள உறவுகள்

மழை பெய்தாலும் இராணுவ இழப்புகளை தவிர்க்க முடியாது என பொன்சேகா சொல்ல வருகிறார் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் சரத் பொன்சேகா என்று எழுதி இருக்கிறீர்கள். ஆனால் செய்தியில் உதய நாணயக்கார என்று எழுதி இருக்கிறீர்கள்.

வீரகேசரியில் இவ்வாறு இருக்கிறது....

அடைமழையானாலும் யுத்தம் தொடரும் இராணுவ பேச்சாளர் கூறுகின்றார்

3/26/2008 12:05:26 AM

வீரகேசரி இணையம் - முகமாலை மன்னார், மற்றும் வெலிஓயா பகுதிகளில் கடந்த சிலநாட்களாக இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெறுகின்றன. 2008 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் நேற்று முன்தினம் வரை புலிகளின் 115 சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. அடைமழையினால் இடையூறு ஏற்படினும் வடக்கில் இடம்பெறுகின்ற தாக்குதல்கள் கைவிடப்படமாட்டாது என்று பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

மன்னாரில் இதுவரையிலும் 31 சதுரஅடி கிலோமீற்றர் நிலப்பரப்பை படையினர் கைப்பற்றியுள்ளதுடன் அங்கு தங்களது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மன்னாரில் அரசாங்க கட்டுப்பாடற்ற பகுதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; அடைமழை குறுக்கிட்டாலும் வடக்கில் படையினரால் முன்னெடுக்கப்படுகின்ற மோதல்கள் கைவிடப்படமாட்டாது. ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையிலும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு 186 சிவிலியன்கள் வருகைதந்துள்ளனர்.

விடத்தல்தீவிலிருந்து மன்னாருக்கும், முல்லைத்தீவிலிருந்து புல்மூட்டைக்குமே பொதுமக்கள் வருகைதந்துள்ளனர். வவுனியார் தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளர் ஒருவரை புலிகள் கடத்திசென்றபோது படையினர் புலிகளை கைதுசெய்துள்ளனர். இவரிகளிடமிருந்து துப்பாக்கி, கைகுண்டு, மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவரின் ஒருவர் சயனைட் உட்கொட்டத்தினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=1752

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

மழை பெய்யும் போது முகில்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் முழங்கும்தானே? பிறேகேன் இவர் தனியாக முழங்குகிறார்?

மழையாகப் பொழிகிறார்கள் புலிகள், குண்டுகளை. எந்த மழையைச் சொல்கிறார் நாணயகார?

  • கருத்துக்கள உறவுகள்

:lol: கந்தப்பு,

" சதுர அடிக் கிலோமீற்றர் " ( சதுரக் கிலோமீற்றர்)- நிச்சயமாக இதை நீங்கள் எழுதியிருக்க மாட்டீர்கள், வீரகேசரி அரசுக்குப் பந்தம் பிடிக்கும் அவசரத்தில் கண் மண் தெரியாமல் செய்தி போடுது எண்டு நினைக்கிறன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.