Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த அரசாங்கம் இராணுவ ஆட்சிக்கு வித்திடுகிறது: சொல்வது சந்திரிகா

Featured Replies

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டை இராணுவ ஆட்சிக்கு இட்டுச்செல்லும் அபாயம் தோன்றியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க கொழும்பில் இருந்து வெளிவரும் வார இறுதி சிங்கள ஏடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

உங்களின் ஆட்சிக்காலத்தில் நீங்கள் மூன்று தவறுதானா செய்தனிங்க?

சரி இப்பிடிவரும்..... நீங்கள் செய்த ஏதாவ ஒரு நல்ல காரியத்தை சொல்லுங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடு நனையுதென்று ஓநாய் அழுதால்!!! :unsure:)))

நான் விட்ட மூன்று பிழைகள் - சந்திரிகா

தற்போதைய அரசு நாட்டை இராணுவ ஆட்சிக்கு இட்டுச் செல்லும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வார இறுதி சிங்களப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்திருக்கிறாh. அத்துடன் தனது ஆட்சிக்காலத்தில் மூன்று தவறுகளை தான் விட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது :

நானே இந்த அரசை அமைத்தேன் இந்த அரசு குறித்து பலவேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினன் மீது அளவற்ற பற்று வைத்ததுள்ளேன். அதனால் கட்சி குறித்து விமர்சிக்க விரும்பவில்ல.

எனினும் நாட்டிற்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். அரசை இராணுவ மயப்படுத்தப் போவதாக தெரிகிறது. எனது தந்தையும் தாயாரும் இந்த நாட்டின் ஜனநாயத்தை கட்டிக் காக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர்.

நான் ஒரு போதும் இராணுவ அரசை அமைக்க இமடளிக்க மாட்டேன். எனக்கு மீண்டும அரசியலுக்கு வர விரும்புப்பமில்லை. எனது சகோதரி சுனெத்தராவும் அரசியலுக்கு வரமாட்டார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் உள்ள சிறிலங்கா சு.கட்சியின் கிளைகளின் பிரதிநிரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த தொகுதியின் பிரதிநிதி ஒரருரை தெரிவு செய்ய உள்ளளேன்.

நான் எனது ஆட்சிக் காலத்தில் மூன்று தவறுகளை செய்துள்ளேன். மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டமை முதலாவது தவறாகும். 2004ம் ஆண்டு ஐ.தே.கட்சி அரசை கலைத்தமை இரண்டாவது தவறாகும்.

நான் இழைத்த மூன்றாவத தவறை எதிர்காலத்தில் கூறுவேன்.

அதாலபாதாளத்தில விழுந்துள்ள இந்த நாட்டை கட்டி எழுப்பி வேண்டுமானால் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும். நான் இன்னமும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறேன்.

மஹிந்தவை நானே தேசிய தலைவனாக்கினேன் என்று தெரிவித்திருந்தார்.

நன்றி வீரகேசரி

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசாங்கம் இராணுவ ஆட்சிக்கு வித்திடுகிறது -சந்திரிகா

30.03.2008 / நிருபர் வானதி

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டை இராணுவ ஆட்சிக்கு இட்டுச்செல்லும் அபாயம் தோன்றியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா

குமாரதுங்க கொழும்பில் இருந்து வெளிவரும் வார இறுதி சிங்கள ஏடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்.

அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

இந்த அரசாங்கத்தை நான் தான் அமைத்தேன். இந்த அரசாங்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. நான் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மீது அளவற்ற பற்று வைத்துள்ளேன். அதனால் கட்சி குறித்து விமர்சிக்க விரும்பவில்லை.

எனினும் நாட்டிற்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருப்பதாக உணர்கிறேன். அரசாங்கத்தை இராணுவ மயப்படுத்தப் போவதாக தெரிகிறது. எனது தந்தையும், தாயாரும் இந்த நாட்டின் ஜனநாயகத்தை கட்டிக்காக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

நான், ஒருபோதும் இராணுவ அரசாங்கத்தை அமைக்க இடமளிக்க மாட்டேன். எனக்கு, மீண்டும் அரசியலுக்கு வர விருப்பம் இல்லை. எனது சகோதரி சுனேத்ராவும் அரசியலுக்கு வர மாட்டார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகளில் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தத் தொகுதியின் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்ய உள்ளேன்.

எனது ஆட்சிக் காலத்தில் மூன்று தவறுகளை செய்துள்ளேன். மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டமை முதலாவது தவறாகும். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கலைத்தமை இரண்டாவது தவறாகும். நான் இழைத்த மூன்றாவது தவறை எதிர்காலத்தில் கூறுவேன்.

அதல பாதாளத்தில் விழுந்துள்ள இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமானால் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும். நான் இன்னமும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறேன்.

தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நானே தேசிய தலைவனாக்கினேன் என்றார் அவர்.

http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  • கருத்துக்கள உறவுகள்

நான் இழைத்த மூன்றாவத தவறை எதிர்காலத்தில் கூறுவேன்.

- சந்திரிக்கா -

நீங்கள் இழைத்த மூன்றாவது தவறு நீங்கள் கூறாமலே எமக்குத்தெரியும்.அதுதான் நீங்கள் அரசியலுக்கு வந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் யாரைப்பற்றி கதைக்கிறது ஆனா ஒண்டு தமிழரை அழிக்கிறதில இரண்டுபேரும் ஒண்டு சரிதான நான்சொல்லுறது

  • கருத்துக்கள உறவுகள்

நான் மூன்று தவறுகள் இழைத்தேன்???????

ஆடாதட ஆடாதட மனிதா...... ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவா மனிதா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.