Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடையால் நஷ்டம் இல்லை, மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர்: எனது படங்களைக் கர்நாடகத்தில் திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி பேசுகையில், தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே மோதலை உண்டாக்கும் வகையில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பினரை உதைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ரஜினியின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஜினி இனிமேல் கர்நாடகத்திற்குள் நுழையக் கூடாது. அவரது படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ், ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சா.ரா.கோவிந்து ஆகியோர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் உதயா டிவிக்கு ரஜினிகாந்த் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், கடந்த 2 நாட்களாக என்னைப் பற்றி கர்நாடகத்தில் தவறான பிரசாரம் நடக்கிறது. கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று நான் சொன்னதாக பிரசாரம் செய்கிறார்கள்.

உதைக்க வேண்டாமா என்று நான் பேசினேன். ஆனால் யாரைப் பேசினேன். சில விஷக் கிருமிகளை, தமிழ்நாடு, கர்நாடக அமைதியைக் கெடுக்கும் விஷ கிருமிகளை உதைக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.

சிறு சிறு விஷயங்களுக்காக பஸ்களைக் கொளுத்துவது, தியேட்டர்களை உடைப்பது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களைத்தான் அவ்வாறு சொன்னேன்.

மற்றபடி கர்நாடக மக்களை உதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் சொல்லவே இல்லை. 5 கோடி மக்களை உதைக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. விவேகம் இல்லாதவன் அல்ல.

எனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை பாதித்திருந்தால் நான் மன்னிப்பு கேட்கத் தயார். ஆனால் அந்தளவுக்கு நான் ஒரு தவறும் செய்யவில்லை. இதனால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

பர்வதம்மா ராஜ்குமார் (ராஜ்குமாரின் மனைவி), விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ், கிரீஷ் கர்னாட், அஸ்வத் (இசையமைப்பாளர்) ஆகிய பெரிய மனிதர்கள் தங்களது மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், நான் தவறு செய்ததாக. அவர்கள் சொன்னால் மன்னிப்பு கேட்கிறேன்.

என்னை மன்னிப்பு கேட்கச் சொல்லும் கன்னட அமைப்புகளைச் சேர்ந்த நான்கைந்து பேர் ஒட்டுமொத்த கர்நாடகத்தின் 5 கோடி மக்களின் பிரதிநிதிகள் அல்ல.

எனது படத்தை கர்நாடகத்தில் திரையிட விட மாட்டோம் என்கிறார்கள். கர்நாடகத்தில் ரஜினிகாந்த் படத்தைத் திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மட்டும் எனது படத்தைப் பார்க்கவில்லை. அங்குள்ள கன்னடர்களும்தான் பார்க்கிறார்கள்.

எனவே இந்தப் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வையுங்கள் என்றார் ரஜினிகாந்த்.

நன்றி தற்ஸ் தமிழ்

பாவம் மனுசன்...! எல்லாப்பக்கமும் அடி வாங்க வேண்டியிருக்கின்றது..! பேசாமல் இமயமலைக்கே போய்விடலாம்..!

  • கருத்துக்கள உறவுகள்

இமயத்தில் கடைப்பிடிக்கிற மௌனத்தை இங்கேயே கடைப்பிடித்திருக்கலாம்.

அமைதியா இருந்திருந்தா தமிழ்நாட்டுக்காரங்க கிழிச்சிருப்பாங்க.. தர்மசங்கடம் என்றது இதுதானோ..

இமயமலைக்கோ?

ஏன் அங்கையும் இளிச்ச வாயல் இருக்குதுகளோ?..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பேசியதில் என்ன தவறு? : கேட்கிறார் ரஜினி

fpn04.jpg

சென்னை: "ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னடர்கள் மனம் புண்படும்படியாக நான் பேசவில்லை.

கன்னடர்களை இழிவாக பேசும் எண்ணம் எனக்கில்லை. நான் பேசியது தவறு என்று மனசாட்சியுடன் சொன்னால், நான் மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டேன்," என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 4ம் தேதி தமிழ்த் திரையுலகத்தினரின் சார்பில், சென்னையில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடகத்தினர் எதிர்ப்பதையும் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் ரஜினி பேசிய பேச்சுக்கு கர்நாடகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ரஜினியின் கொடும்பாவியும் கொளுத்தப்பட்டது. இதனால், கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனியார் சூடிவி' ஒன்றிற்கு ரஜினி பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக, சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு நான் பேசும் போது கன்னடர்கள் மனம் புண்படும் படி ஏதும்பேசவில்லை. ஐந்தரை கோடி கன்னடர்களை இழிவாக பேசும் எண்ணம் எனக்கில்லை. ஒகேனக்கலை சுற்றியுள்ள எல்லைகள் தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இப்படியிருக்கும் போது இருமாநில மக்களும் அமைதியாக வாழ விடாமல் ஒகேனக்கல் விவகாரத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்க வேண் டாமா? என்று தான் கேட்டேன். திரையரங்குளை தாக்குவது, பஸ்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மனதில் வைத்து தான் இதனை கூறினேன். கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. அந்த அளவுக்கு நான் முட்டாள் அல்ல. நான் பேசியது தவறு என்றும், இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்கின்றனர்.

மன்னிப்பு கேட்காவிட்டால் எனது படங்களை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதனால், எனக்கு எந்த இழப்பும் இல்லை. நான் நடிக்கும் படங்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மக்களும் ரசிக்கின்றனர். கர்நாடகத்தில் நான் நடித்த படங்களை திரையிடாவிட்டால் கன்னட ரசிகர்கள் தான் வேதனையடைவார்கள். நான் சென்னையில் பேசிய பேச்சில் கர்நாடக மக்களை புண்படுத்தியதாக கன்னட திரையுலகின் பர்வதம்மாள் ராஜ்குமார், அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், அஸ்வத் போன்ற நடிகர்கள் மனசாட்சியுடன் கூறினால் நான் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். ஐந்தரை கோடி கன்னடர்களை நான் உதைப்பேன் என்று கூறியதாக எனக்கு எதிராக திட்டமிட்டு சிலர் தீய எண்ணத்தோடு பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதை நினைத்து வேதனைப்படுகிறேன். இத்தோடு இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறேன். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

ஜெயமாலா எதிர்ப்பு: சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் ரஜினியின் பேச்சுக்கு பெங்களூரில் கன்னட நடிகை ஜெயமாலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "ரஜினி பேசிய பேச்சால் கன்னடர்கள் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று ரஜினி கூறி, மறுபடியும் தவறிழைக்க வேண்டாம். உண்ணாவிரதத்தில் ரஜினி பேசிய பேச்சின் வீடியோவை அவர் மீண்டும் பார்க்க வேண்டும். சென்னையில் ரஜினி கன்னடர்களை இழிவாக பேசியது உண்மை. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி விரும்பினால் கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். இதே பதிலை கன்னடப் படத் தயாரிப்பாளர் கோவிந்தும் வலியுறுத்தியுள்ளார். இவர்கள் இப்படி பேசினாலும் ரஜினி குறித்து தனிப்பட்ட முறையில் அங்குள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் வெளிப்படையாக ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் பெங்களூரில் உள்ள தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Thinamalar

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிய நம்பினா இப்பிடி தான்...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டுபக்கம் அடி !

அந்தாளை மாட்டிவிடணுமெண்டே பிளான் போட்டு செய்தாங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.