Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னுடைய இளமைக் காலத்தை கட்சிக்காக அர்ப்பணித்தேன், அதனையிட்டு நான் வேதனையடைகின்றேன் - விமல் வீரவன்ச

Featured Replies

தமது இளமைக் காலத்தை கட்சிக்காக தியாகம் செய்ததனை நினைத்து மனம் வேதனையடைவதாக அண்மையில் கட்சி அங்கத்துவம் ரத்து செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

“தொழுநோயாளியைப் போன்றதொரு நிலைமை கட்சியில் எனக்கு ஏன் ஏற்படுத்தப்பட்டது” என விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“நான் சோசலிச கலைச் சங்கத்தில் அங்கம் வகித்தேன், சோசலிச பிக்குகள் முன்னணியை உருவாக்க அரும்பாடுபட்டேன் எனினும் இவற்றிலிருந்தும் நான் நீக்கப்பட்டுள்ளேன்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது கட்சி அங்கத்தினர்களே எனக்கு எதிராக சூழ்ச்சி செய்வதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என உணர்வுபொங்க விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் மற்றும் பாராளுமன்ற குழுத் தலைவராக விமல் வீரவன்சவின் கட்சி அங்கத்துவத்தை ரத்து செய்ய மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு கடந்த மார்ச் 21ம் திகதி தீர்மானித்தது.

இந்த மத்திய செயற்குழு கூட்டத்திற்கு விமல் வீரவன்ச அழைக்கப்படவில்லை, கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை கிழக்குத் தேர்தல்கள் முடிவடையும் வரை இரகசியமாக பேணுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலைமை தொடர்பாக லங்கா டிசென்ட் இணையதளம் முதலில் தகவல்களை வெளியிட்டிருந்தது அதன் பின்னர் ஏனைய உள்நாட்டு, வெளிநாட்டு செய்தி சேவைகள் இந்தத் தகவல்களை வெளியிட்டன.

எனினும், கடந்த 5ம் திகதி விமல் வீரவன்ச தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரண ஊடகத்தின் எஸ்.எம்.எஸ் சேவைக்கு தகவல் வெளியிட்டிருந்தார்.

எனினும், அதற்கு மூன்று தினங்களுக்கு பின்னர் அதாவது இன்றைய தினம் விமல் வீரவன்ச தனது கட்சி அங்கத்துவம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் கதைப்பதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையொன்றுக்கு தகவல் வெளியிட வேண்டுமாயின் சோமவன்சவிடம் அனுமதி கோர வேண்டியுள்ளது. நான் கட்சியின் தகவல்களை வெளியாருக்கு சொல்லவில்லை. எனினும், கட்சியில் உள்ள சிலரே இதனை மேற்கொள்கின்றனர் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

“நான் மக்கள் விடுதலை முன்னணியில் இதயபூர்வமாகவே இணைந்து கொண்டேன். ஒரு கையில் நஞ்சுக் குப்பியொன்றை ஏந்திக் கொண்டு எனது தந்தை ஜே.வி.பியில் இணைய வேண்டாம் என இறைஞ்சிக் கேட்டார்” அவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையிலேயே நான் ஜே.வி.பியில் இணைந்து கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

“நான் சிவனொளி பாத மலைக்குச் சென்றதில்லை”, “சிவனொளி பாதமலைக்குச் செல்வதற்காக அவகாசமும் கிடைக்கவில்லை” “ஏனென்றால் எனது முழு வாழ்க்கையையும் ஜே.வி.பி.யின் அரசியல் நடவடிக்கைகளுக்காக அர்ப்பணித்திருந்தேன்.” என மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

என்னை இந்தக் கட்சியிலிருந்து நீக்க எந்த சக்திக்கு தேவைப்படுகிறது? என்னை விலக்குவதினூடாக யார் சந்தோசமடைகிறார்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்களது உறுப்பினர்கள் தலைவர்களின் தீர்மானங்களை அவ்வாறே ஏற்றுக் கொள்ளவே பழகியுள்ளனர். நான் வகித்த எந்தப் பொருப்புக்களும் தற்போது எனக்கு இல்லை. எனினும் நான் காலனித்துவ ஆட்சியாளர்களின் காலடியில் வீழ்ந்து கிடக்கத் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்நாடு மீது எனக்கிருக்கும் நேசத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்களிடம் என்னைப் பற்றி போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒன்றாக இருக்கும் நபர்களே இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்களை நான் உரிய முறையில் நிறைவேற்றியுள்ளேன், அதற்கான பிரதிபலன்களைத் தான் நான் இப்போது அனுபவித்து வருகின்றேன் என குறிப்பிட்டார்.

இரவு கண்விழித்து எனது கையெழுத்தில் எழுதிக் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றியது வீண்விரயமாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால் இந்த விடயங்களை பாராளுமன்றத்தில் தெரிவிக்க தீர்மானித்தேன் என விமல் வீரவன்ச தனது மனக் குமுறலை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

நன்றி : www.lankadissent.com/Tamil/news

தான் ஒரு குஸ்ட ரோகி அல்ல. தன்னிடம் தற்போது பதவிகள் இல்லை என ஜே.வி.பியின் முன்னாள் பிரசார செயலாளர் விமல் வீரவன்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார்.......................

................

இதேவேளை ஜேவீபீயின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்சவுடன் இணைந்து பாராளுமன்றில் தனித்து இயங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். 39 நாடாளுமன்ற உறுப்பிர்களில்............

தொடர்ந்து வாசிக்க...........................................

http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3901.html

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்ச பாவம். நல்லாக நொந்து போனார். இப்படி தான் சுனாமி அகதிகளும் நொந்து போனார்கள். சுனாமி அகதிகளுக்கு பணம் சேராமல் விடுவதில் மிக மும்முரமாக ஈடுபட்டவர்களில் தாங்களும் ஒருவர். "துள்ளுற மாடு பொதி சுமக்கும்". :lol:

ஜே.வி.பி. கட்சியின் விமல் வீரவன்சவுக்கு அக்கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

சும்மா கிடந்த ஆப்பை... ஆட்டி இழுத்தா பந்து நசியதானே செய்யும்...

இதில இருந்து தப்ப ஒரு யோசனை:

அந்த ஆப்பை கழட்டி, ஆருக்கெண்டாலும் இறுக்குங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விடுதலை முன்னணியில் உறுப்புரிமை பெற்றது முதல் இதுவரை கட்சிக்கு எந்தத் தீங்கும் இழைக்கவில்லை-விமல் வீரவன்ச

[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2008, 12:54.54 PM GMT +05:30 ] [ வீரகேசரி ]

மக்கள் விடுதலை முன்னணியில் உறுப்புரிமை பெற்றது முதல் இதுவரை எனது கட்சிக்கு எந்தத் தீங்கும் நான் இழைக்கவில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களில் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு விளக்கமளித்து இன்று பாராளுமன்றத்தில் அவர் விசேட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கட்சியின் முன்னேற்றத்துக்காகவே நான் பாடுபட்டேன். எனினும், நான் பங்கேற்காத கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தன்னைக் கட்சியிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. நான் இதுவரை கட்சியில் வகித்து வந்த பொறுப்புக்களும் நீக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் பேசுவதற்கும் எனக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கட்சியில் தீர்மானம் எடுக்கக்கூடிய ஒரு சிலருக்கு என்மீது ஏற்பட்ட சந்தேகமே இதற்கான காரணம். இந்தச் சூழ்ச்சிகரமான நடவடிக்கையினால் நாட்டுக்கு எதிரான சக்திகள் சந்தோஷமடைகின்றன. இவ்வாறானதொரு தீர்மானத்தை கட்சி ஏன் எடுத்தது எனவும் ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளர் மேலும் கேள்வி எழுப்பினார்.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

தினை விதைத்தவன் தினையறுப்பான், வின விதைத்தவன் வினையறுப்பான். அரசாங்கத்தின் கடிவாளத்தைப் பிடித்தபடி எத்தனை ஆட்டம் போட்டார்கள். தமிழர்களுக்கு வந்த சுனாமி நிவாரணத்தை அவர்கள் தமது தேவைகளுக்கேற்ப பாவிக்கவிடாமல் தடுத்ததிலிருந்து அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக யுத்த அரக்கனை ஏவி விட்டதுவரை அத்தனை அனியாயங்களையும் கூட்டாகச் சேர்ந்து செய்தவர்கள் இப்போது தங்களுக்குள்ளே அடித்துக் கொள்கிறார்கள். மாக்ஸிஸ்டுகளென்று கூறிக்கொண்டு இன விஷத்தைக் கக்கிய போலிகள் இவர்கள். ஒரு உண்மை மாக்ஸிஸ்ட மனதாலும் ஓரினத்திற்குத் தீமை நினைக்கமாட்டான். மனது தூய்மையில்லாத எவரும் ஒருநாள் தங்கள் செயல்களுக்கான பலனை அனுபவித்தே தீரவேண்டும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதுமட்டுமன்றி 13வது திருத்தத்தைக்கூட எதிர்க்கின்ற இவர்கள் ஒற்றையாட்சியின்கீழ் தங்கள் பேரினவாதப் பிடிக்குள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆளவேண்டுமென்னும் வெறி கொண்டவர்கள்.

“பிரிந்தழிந்து போகட்டும் பேரினவாதப் பேய்கள்”

  • கருத்துக்கள உறவுகள்

வீரவன்ச:

கட்சி உறுப்பினர்களிடம் என்னைப் பற்றி போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒன்றாக இருக்கும் நபர்களே இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

"நன்றும் தீதும் பிறர் தர வாரா"

நன்மையும் , தீமையும் மற்றவர்களால் ஏற்படுவதல்ல , நமக்கு நாமே ஏற்படுத்திகொள்வது . நீ செய்த பாவத்தை அனுபவிக்க இந்த பிறப்பு மட்டும் காணவே காணாது என்பது மட்டும் நிச்சயம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.