Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அய்" என்ற பயன்பாடு தவிர்க்கப் படவேண்டும்!

Featured Replies

"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ)

"ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும்

அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்தது

என்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை.

ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும்.

"ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன்.

சில ஆண்டுகள் அப்படியே எழுதினேன்.

"அய்" என்று புழங்கியபோது சில உரையாட்டுகளும்

வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவது

தவறில்லை என்பதே அறிஞர்களின்

கருத்தாக இருக்கிறது. ஆயினும் அவர்கள்

"அய்" என்றே எழுதவேண்டும்

என்று வலியுறுத்துவதில்லை.

ஆனால், "அய்" என்ற புழக்கத்தை எதிர்த்தவர்களிடம்

இருந்து சரியான ஏரணம் அப்போது முன்வைக்கப்

படவில்லை. வழக்கம்போல தி.க, தி.மு.க என்று

போய்விட்ட அந்த எதிர்வாதுகளை நான் சட்டை

செய்யவில்லை.

ஆயினும் இந்த "அய்" விதயத்தில் என்னிடம்

காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும்

"ஐ" எனவே புழங்குகிறேன். ஐ என்று

எழுதவேண்டும் என்று சில பெரியவர்களும்

எனக்கு சொன்னபோது இதனை நுணுகிப் பார்க்கத்

தோன்றியது. "அய்" என்று நிறைய

புழங்கியவன் என்ற முறையில் என் கருத்துக்களை

நான் விளக்க வேண்டும்.

1) "ஐ" என்பது ஒரு சொல்; அஃது எழுத்து மட்டுமல்ல.

ஆகவே "ஐ" யை இழந்தால் ஒரு முக்கியமான

சொல்லை இழக்கிறோம். எழுத்தை மாற்றுகிறோம்

என்று சொற்களை இழக்கக் கூடாது.

ஐ என்பதற்கு உள்ள பொருள்களில் மிக முக்கியமானவை

நுண்மை, மெல்ல, வியப்பு மற்றும் ஐந்தின் குறுக்கம்.

ஐந்தின் குறுக்கமாக "ஐ" பயன்படுவதைக் காண்க:

"ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,

தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை"

................சிலப்பதிகாரம்:27:174-175

வியப்பு:

"பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,

'ஐ!' என்றாள், ஆயர் மகள்,"

..................சிலப்பதிகாரம்:ஆய்ச்சி

இப்ப "ஐ" அய் எண்டா எழுதுகிறார்கள்...??

பூனை எண்டதை எப்படி எழுதுவார்கள்...??? "பூன் அய்" எண்டா....??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத்து சீர்திருத்தம் எந்த அளவிற்கு கணிணியில் பயன்படுகிறது அதன் அவசியம் என்ன என இங்கே கருத்து தெரிவித்தவர்கள் தெரிவிக்கமுடியுமா.

எழுத்து சீர்திருத்தம் எந்த அளவிற்கு கணிணியில் பயன்படுகிறது அதன் அவசியம் என்ன என இங்கே கருத்து தெரிவித்தவர்கள் தெரிவிக்கமுடியுமா.

எழுத்து சீர்திருத்தம் என்பது சங்க காலத்துக்கும் முதல் இருந்தே இருக்கிறது.... பழைய தமிழ் எழுத்துக்கள் எதனையும் உங்களாலோ என்னாலோ படிக்க முடியாது...

அப்படியான சீர் திருத்தங்கள் இனியும் இருக்கும்... பழைமையான மொழிகள் பல அழிந்து போக தமிழ் மட்டும் நீட்டித்து இருப்பதும் அதனால்தான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்தாடலில் சம்பந்தப்படாத ஆனால் தொடர்புபட்ட ஒரு விடயம்: யாழ்க்கள முகப்பில் “விஜயமும் வியுhகமும் ” என்று போடப்பட்டுள்ளது.

உகரத்தின் நெடிலுக்கு (ஊகாரம்) அரவு (யுh) போடுவது எழுத்துச் சீர்திருத்தத்தில் இல்லை. நாம் ஒரு பொதுவான விதியையே (யூனிவேர்சல்) பின்பற்றவேண்டும்.

அவ்வகையில் “விஜயமும் வியூகமும்” என்றே எழுதப்படவேண்டும்.

தமிழக அரசினாலும், தமிழீழ நிழல் அரசினாலும் ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டவகையில் எழுத்துக்களை எழுதுவதே எதிர்காலத்தில் தமிழ் பலவடிவங்களை எடுக்காமல் காப்பாற்றுவதற்கு உதவும்.

வ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எழுத வெளிக்கிட்டால் தமிழின் ஒருமைத்தன்மை கெட்டுப் போய்விடும். சம்பந்தப் பட்டவர்களை இதில் கவனமெடுக்குமாறு வேண்டுகிறேன்.

குறிப்பு: என்னால் யு வின் அருகில் அரவைப் (h):போடவே முடியவில்லை. எப்போதும் யுh என்றே விழுகின்றது. அப்படியிருக்க முகப்பில் அதை எப்படிப்போட்டார்களோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை என்னவென்றால் வட எழுத்துக்களாகிய ஸ்ரீ,ஸ,ஜ,ஹ, போன்றவற்றைத் தமிழனுள் எவ்வித எழுத்துச் சீர்திருத்தம் இன்றி இணைத்தவர்கள், ஐ என்ற உயிரெழுத்தின் முக்கியமான எழுத்தினை நீக்க முனைவது மட்டும் எதற்காக என்று புரியவில்லை. இது முட்டாள்தனமா? அல்லது அறியாமையா? அல்லது தமிழைச் சிதை;ககின்ற இவர்களின் மற்றுமொரு செயற்பாடா?

***

ஒரு அடிப்படையுமில்லாமல், தமிழைப் பற்றிக் கதைக்க வெளிக்கிட்டால் இப்படித் தான்.

-------------------

எழுத்துச் சீர்திருத்தம் என்று இப்போது புலம்பெயர் நாடுகளில் ஒரு வழக்கம் வருகின்றது

Ba என்ற உச்சரிப்பை பஃ என்று எழுதுவதன் மூலம், அதற்கான உச்சரிப்பினை வழங்கலாம் என எழுதுகின்றார்கள். பாவிக்கலாம் போலத் தான் எனக்குத் தோன்றுகின்றது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

என்பது உயிர் எழுத்து. இதனை எப்படி அய் ஈடு செய்யும்?. ஒரு இலக்கண பிழையாகவே இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.