Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் அமைத்திட இந்திய அரசு தக்க வழி காண வேண்டும் -கலைஞர் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு -

உடன் பிறப்பே

அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று கூறி அவருக்குப் பதிலாக காமராஜ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நண்பர் கிள்ளிவளவன் அவர்கள் கலந்து கொண்டார்கள். திமுக திக காமராஜ் காங்கிரஜ் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பில் கோவை திண்டுக்கல் தூத்துக்குடி திருச்சி சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற டெசோ பேரணிகளில் கலந்து கொண்ட அவர் வேலூர்ப் பேரணியில் கலந்து கொள்ள இயலாமற்போன காரணத்தை நான் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும் கூட எனது ஐயத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் அக்டோபர் 13க்குப் பிறகு அவரது கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது.

அதில் உள்ள வாசகங்கள் வருமாறு:-

அன்புள்ள தலைவர் கலைஞர் அவர்கட்கு

வணக்கம். உங்கள் கரங்களில் இக்கடிதம் தவழும் போது நான் தமிழ் ஈழ மண்ணில் இருப்பேன். தமிழீழ மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தை நேரில் காணவும், அவர்களின் துயரங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுக்கு உறுதுணையாக தமிழகம் நிற்கிறது என்று உறுதியைக் கூறி அறுதல் அளிக்கவுமே செல்கின்றேன். நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன். ஒருவேளை எனக்கு ஏதாவது நேர்ந்து விடுமானால், அதற்காக கலங்க வேண்டாம்.தமிழீழ மக்கள் விடுதலை பெறுவதற்கு தமிழக மக்களும் உயிர்த்தியாகம் புரியத் தயாராகி விட்டார்கள் என்பதை உலகம் உணர வழி வகுக்கும். டெசோ இயக்கத்தை மேலும் வளருங்கள். ஏனெனில் தமிழீழம் காணப்போராடும் விடுதலை போராளிகளுக்கும், மக்களுக்கும் நமது டெசோ இயக்கத்தைத் தவிர உற்ற துணைவன் உண்மையான துணைவன் யாருமில்லை.

அன்புள்ள நெடுமாறன்.

இந்த கடிதத்தைப் படித்து முடித்ததும் என் நெஞ்சம் கனத்து போய்விட்டது. ஏன் கடிதம் முழுதையும் படிக்க முடியாமல் கண்களில் நீர்த்திரைகள் விழுந்து தடுத்தன. அன்றிரவு முழுதும் எனக்கு உறக்கமேயில்லை. அதன் காரணமாக இரண்டு நாட்கள் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.

எந்தப் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருந்தாலும் அல்லது சிந்தித்து கொண்டிருந்தாலும் அவரது நினைவே நிழலாடிக்கொண்டிருந்தது என் நெஞ்சில்.

அதன் விளைவுதான் உடன்பிறப்பே, இந்த வாரம் குங்குமம் இதழில் கூட சங்கத்தமிழ் தொடரோவியம் தீட்டிட நான் நெடுநெல் வாடை எனும் சங்க இலக்கியத்தை தேர்ந்தெடுத்தது.

மதுரை நக்கீரனார் எழுதிய நெடுநெல் வாடை தலையாலங்கானகத்துச் செரு வென்ற நெடுஞ்செழிய பாண்டியன் போர்க்களத்தில் காயம் பட்ட வீரர்களைப் பாசறையில் கண்டு ஆறுதல் வழங்கிடும் காட்சியினை எடுத்துக்காட்டி, அகம் புறம் எனத் தமிழர்கள் வகுத்துக்கொண்ட வாழ்க்கை நெறியின் மாட்சியை விளக்குகின்ற பெருமை மிக்க இலக்கியமன்றோ ?

அந்த மதுரைப் புலவன் நக்கீரன், நெடுஞ்செழியப் பாண்டியனுக்காக மட்டும் பாடவில்லை - இதோ இந்த மாவீரன் நெடுமாறனுக்காகவும் பாடியுள்ளான் போலும் என்ற உணர்வுடன்தான் இந்த இதழ்க் குங்குமத்திற்காக கடந்த வாரம் நெடுநெல் வாடையை அடிப்படையாக வைத்து சங்கத்தமிழ் எழுதித்தந்தேன்.

வலியதோர் வாள்வீரன் தோளில் - தன்

வலக்கையினைத் தோழமையுடன் போட்டுக்கொண்டு

மழைத்துளிகள் வீழ்கின்ற நள்ளிரவில்

மாவீரர் பலர் காயமுற்றுப் படுத்திருக்கும்

பகுதியெலாம் சென்று பார்த்தான் - அவரைப்

பரிவுடனே நலம் கேட்டு நன்றி கூறி அரவணைத்தான்

பகல் பொழுதில் பகைவர்களின் படையழித்து விரட்டும் போது

பழுதுபட்ட கால் கை உடல்களுடன் படுகின்ற துயரமெல்லாம்

பறந்தனவாம் தம் தலைவன் பனிப்பார்வை பட்டதாலோ

காதலைத் தேடிப் பேரரசி கலங்குகிறாள் - அவனோ

கடமையினை ஆற்றுதற்கு கால்கடுக்கச் சுற்றுகின்றான் பாசறையை

என்னைச் சந்தித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக உரையாடிய நண்பர் நெடுமாறன் அவர்கள் இருபத்து மூன்று நாட்கள் இலங்கைச் சுற்றுப்பயணம் பற்றி விரிவாக விளக்கிய போது, பாசறைப் படை வீரர்களை அன்றொரு நாள் பாண்டிய மன்னர் பார்வையிட்ட நிகழ்ச்சி குறித்த நெடுநெல்வாடைதான் என் நினைவைத் தழுவியது.

அந்த பயணம் குறித்த வீடியோ படக்காட்சியினைச் செய்தியாளர்கள் மட்டுமல்ல நானும் தம்பி முரசொலி மாறனும் நண்பர் ஆற்காடு வீராசாமியும் கண்ட போது எத்தனை முறை கண்ணீர் வடித்தோம் என்பதை எண்ணிச்சொல்ல முடியாது. ஆம் . நீர் வீழ்ச்சிக் கண்களுடனே அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். வீடியோவில்

இலங்கையில் இடிந்து பாழடைந்து கிடக்கின்ற தமிழர்தம் இல்லங்கள் - அகதிகளாக அலை மோதும் தமிழ்த் தாய்கள் குழந்தைகள், போர்க்களமாகவே எப்போதும் காட்சி தந்து கொண்டிருக்கும் தமிழர் வாழ் பகுதிகள், வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள்கள், எங்கள் வெற்றித் தோள்கள் என முழக்கி கிளம்பிற்றுக்காண் தமிழ்ச்சிங்க கூட்டம் கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை என்ற புரட்சி கவிஞரின் உணர்ச்சி வரிகளுக்கு உருவம் கொடுத்துக்கொண்டு படைக்கலங்களுடன் விடுதலை முழக்கமிடும் போராளிகளின் பாசறைகள் - இவற்றையெல்லாம் மாவீரன் நெடுமாறனின் விழிகள் வழியாக நானும் பார்த்தேன்.

இந்திராகாந்தி காட்டிய அக்கறை கூட இன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காட்டவில்லை என்பதை இலங்கைத்தமிழர்கள் எல்லோரும் ஒரே குரலில் ஒலிப்பதை கேட்டேன்.

எங்களுக்குத் தனிநாடு கிடைக்க எங்கள் போராளிகளை ஊக்கப் படுத்துங்கள். அவர்களை நிர்ப்பந்தித்து பிரச்சனையை தீர்க்க முயலாதீர்கள். தனித்தமிழ்நாடே எங்கள் இலட்சியம். உங்களால் முடியாவிட்டால் எங்கள் தலையில் குண்டுகளைப் போட்டு இலங்கைத் தமிழ் இனத்தையே அழித்து விடுங்கள்.

இந்தச் செய்தியை இந்தியாவுக்குச் சொல்லுங்கள் என்று இலங்கைத்தமிழின தாய்மார்கள், நெடுமாறன் அவர்களிடம் அழுது புலம்பியவாறு சொல்லுகிற காட்சியை இருதயத்தை அழுத்திப் பிடித்தபடி தான் பார்க்க முடிந்தது.

போர் நிறுத்தம் என்பதை இலங்கை அரசு தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு நூற்றுக்கணக்கான புதிய இராணுவத்தளங்களை அமைத்து வருகிறது. தமிழினத்தை அடியோடு அழிக்க

தெரிந்தோ தெரியாமலோ இலங்கை அரசின் இந்தச் சதிக்கு இந்திய அரசு துணைபோய்க்கொண்டிருக்கிறத

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் இந்த லொள்ளுத்தானே வேண்டாம் எண்டிறது எழுதினவருக்கே இப்ப அதை எழுதினது மறந்து போயிருக்கும் இதையெல்லாம் இப்ப போட்டு :D:wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள கருணாநிதி

4-11-1985

நீங்கள் எந்த கருணாநிதியை பற்றி கதைக்கிறீர்கள்? :D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கடிதத்தை உங்களது தபால்காரர் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கழித்து தங்களிடம் தந்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.