Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி,சென்னை அணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி

ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளின் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 105 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷேவாக், முதலில் ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார்.

ஸ்மித்தும், அஸ்னோட்கரும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினர். அஸ்னோட்கர் 23 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை, பவுண்டரி லைனில் நின்ற மகரூப் நழுவ விட்டதால் அவர் மேற்கொண்டு 16 ரன்கள் தங்கள் அணிக்கு சேர்த்து விட்டார்.

முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்த இந்த ஜோடி மகரூப் வீசிய ஒரே ஓவரில் காலியானது. ஸ்மித் 25 ரன்னிலும் (21 பந்து, 5 பவுண்டரி), அஸ்னோட்கர் 39 ரன்னிலும் (21 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்கள்.

பின்னர் ஷேன் வாட்சன் ராஜஸ்தான் அணிக்கு தனது அதிரடியால் வலுசேர்த்தார். எதிரணி பந்து வீச்சை சிதறடித்த அவர், 29 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் குவித்து அவுட் ஆனார். மற்றொரு அதிரடி மன்னன் யூசுப் பதான் 45 ரன்கள் (21 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசிய நிலையில் கடைசி ஓவரில் ரன்-அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. இந்த ஸ்டேடியத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். டெல்லி அணி தரப்பில் மகரூப் 3 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா, யோமகேஷ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

அடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேப்டன் ஷேவாக்கும், கம்பீரும் டெல்லி அணியின் இன்னிங்சை தொடங்கினார்கள். கடின இலக்கு என்பதால் தொடக்கத்திலேயே விளாச வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆடிய ஷேவாக்கும் (3 ரன்), கம்பீரும் (11 ரன், 15 பந்து) வாட்சன் பந்து வீச்சில் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், டெல்லி அணியின் இறுதிப் போட்டி கனவு தகர்ந்தது.

இதன் பிறகு டெல்லி அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 16.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த டெல்லி அணி 87 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 105 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக தில்ஷான் 33 ரன்கள் (22 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். 3 வீரர்களை தவிர மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்னைத் தாண்டவில்லை.

டெல்லி அணி தரப்பில் ஷேன் வாட்சன், முனாப் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளும், கேப்டன் வார்னே 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். வாட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இன்று நடக்கும் 2-வது அரைஇறுதியில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் ராஜஸ்தான் அணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டியில் சந்திக்கும்.

http://www.yarlnews.com/sportnews.php?suba...amp;ucat=2&

இறுதி ஆட்டத்தில் நாளை ராஜஸ்தானுக்கு எதிராக சென்னை அணி மோதுகிறது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

:) நான் இதுவரையிலும் எந்த அணியையும் ஆதரிக்க நினைத்தது இல்லை. இப்போது ஏதோ காரணத்துக்காக சென்னை அணியை ஆதரிக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் அங்குதான் தமிழர்கள் விளையாடுகிறார்கள்( ஓரிரண்டு பேராவது).

வாழ்க சென்னை !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆதரவும் சென்னைக்கு தான். இருந்தாலும் ராஜஸ்தானுக்கு தான் வெல்வதற்கான சந்தர்ப்பம் இருப்பதாக கூறுகிறார்கள். பார்ப்போம் நாளை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் அணி சாம்பியன்

.

Monday, 02 June, 2008 03:05 PM

.

மும்பை, ஜூன்.2: ஐபிஎல் இறுதிப்போட்டியில் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்தில் சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

.

8 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் போட்டிகளின் இறுதி ஆட்டம் மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதிய இந்த ஆட்டம் இறுதிப்போட்டிக்கே உரிய வகையில் மிகவும் விறுவிறுப் பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்றது.

சென்னை அணி முதலில் ஆடி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 43 ரன்களைக் குவித்தார். டோனி 29 ரன்கள் எடுத்தார். பார்த்தீவ் பட்டேல் 38 ரன்களைக் குவித்தார். பின்னர் ஆடத்தொடங்கிய ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் என்னும் நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால் யூசுப் பதான் சிறப்பாக ஆடி 39 பந்துகளில் 56 ரன்களைக் குவித்தார்.

இதன் காரணமாக ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை நெருங்கியது. கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ராஜஸ்தான் அணியின் வீரர் சோகைல் தன்வீர் வெற்றி ரன்னை அடித்தார்.

இதன்மூலம் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை வென்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அரை சதம் அடித்த யூசுப் பதான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி பந்து வரை நீடித்த இந்த போட்டி, ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. சென்னை அணி விடாமல் போராடினாலும் கடைசி பந்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி வெற்றிக்கோப்பையை கைப்பற்றியது.

malaisudar.com

ராஜஸ்தான் கலக்கி இருக்கிது. நான் ஒவ்வொரு நாளும் Cricinfoக்கு போய் score பார்த்துவந்தன். Watson, Pathan இல்லாட்டிக்கு ராஜஸ்தான் வென்று இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

முத்தையா முரளீதரன் அடுத்தடுத்துக் கொடுத்த இரண்டு Full Toss சிக்ஸர்களும், பாலாஜி கடைசி ஓவரில் தேவையில்லாமல் கொடுத்த ஒரு வைடும் ( Wide Ball) தான் தோல்விக்குக் காரணம். கடைசி ஓவருக்கு பாலாஜியைப் போட்டு டோணி கெடுத்துவிட்டான். ராஜஸ்தானின் விளையாட்டைவிட சென்னையின் தவிர்ததிருக்ககூடிய தவறுகள்தான் தோல்வியை நிர்ணயித்தன.

Edited by karu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.