Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாகர்கோவிலில் புலிகளின் சிறப்புக்கனரக அணியினரால் படையினரின் காவலரண்கள் தாக்கியழிப்பு

Featured Replies

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரையோரத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்புக்கனரக அணியினர் தாக்குதல் நடத்தி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

யாழ். வடமராட்சி நாகர்கோவில் கடற்பரையோர காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்பு கனரக அணியினரால் இன்று காலை 6:00 மணிக்கு தாக்கப்பட்டுள்ளன.

இதில் படையினரின் 3 காவலரண்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. 5 காவலரண்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் இளந்திரையன்.

http://www.puthinam.com/full.php?2b24OOU4b...2f1eW0cc3mcYAde

  • கருத்துக்கள உறவுகள்

நாகர்கோவிலில் புலிகளின் சிறப்புக்கனரக அணியினரால் படையினரின் காவலரண்கள் தாக்கியழிப்பு

[வியாழக்கிழமை, 05 யூன் 2008, 01:05 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரையோரத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்புக்கனரக அணியினர் தாக்குதல் நடத்தி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

யாழ். வடமராட்சி நாகர்கோவில் கடற்பரையோர காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்பு கனரக அணியினரால் இன்று காலை 6:00 மணிக்கு தாக்கப்பட்டுள்ளன.

இதில் படையினரின் 3 காவலரண்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. 5 காவலரண்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் இளந்திரையன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் செய்தித் தனிக்கை வந்திட்டுது. இனி எந்தச் செய்தியும் வெளியில வராது. வழக்கம் போல 30 புலி பலி, 8 படகுகள் அழிப்பு, 12 படுகள் சேதம் எண்டு புரட்டப் போராங்கள்.!!!!!

தமிழ்நெற்றில் புலிகளின் ஈரூடகப் படையணி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழீழ படையினரின் மரைன்ஸுக்கு வாழ்த்துக்கள் இனியும் பல பல வெற்றிகளையும் இறுதி யுத்ததின் போது சிறப்பான பங்களிப்பினை அவர்கள் வழங்குவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
:wub: வாழ்த்துக்கள் வீரவேங்கைகளே.

கரையோர காவலரண்களுக்குக் கலக்கம் பிடித்துவிட்டது.

வாழ்த்துக்கள் வீரவேங்கைகளே.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்கால புலிகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால்,

1) நாயாற்றுக் கடலில் டோரா மீது தாக்குதல். (கிழக்குக் கடல்)

2) வழங்கல் கப்பல் இன்வின்சிபிள் மீது தாக்குதல் (கிழக்குக் கடல்)

3) மன்னார் தீவில் கடற்புலித் தாக்குதல் (மேற்குக் கடல்)

4) சிறுத்தீவு தாக்குதல் (யாழ் குடா)

5) எழுதுமட்டுவாள் எறிகளைத் தளம் மீதான தாக்குதல். (யாழ் குடா)

6) நாகர்கோயில் கரையோரத் தாக்குதல் (யாழ் குடா)

முன்னர் ஒரு கட்டுரையில் சொன்னதுபோல யாழ் குடா மீதான பிடியை புலிகள் இறுக்குவது போலத் தெரிகிறது. வழங்கல் பாதைகளை பாதுகாப்பற்றவை ஆக்குவதும், ஏற்கனவே உள்ள வளங்களைக் குறைப்பதுமான நடவடிக்கைகள் போல் உள்ளன.

ஒரு கட்டுரையில் சொன்னதுபோல யாழ் குடா மீதான பிடியை புலிகள் இறுக்குவது போலத் தெரிகிறது. வழங்கல் பாதைகளை பாதுகாப்பற்றவை ஆக்குவதும், ஏற்கனவே உள்ள வளங்களைக் குறைப்பதுமான நடவடிக்கைகள் போல் உள்ளன.

பத்தியாளர்கள் சொல்வதை எல்லாம் படிச்சதோடை விட்டு போடவேணும்.... !!

புலிகள் சிறப்பு படை அணிகளுக்கு பயிற்ச்சியும், சோதனையும் செய்து கொண்டு இருக்கிறார்கள் எண்டும் எழுதுவார்கள்...

உண்மையிலை இலங்கை இராணுவம் அறிவித்து போட்டு செய்யும் நடவடிக்கை செயற்பாடுகளின்போது, பெருமெடுப்பில் புலிகள் படை எடுக்காமல் இருக்க அவர்களை நாங்கள் தற்காப்புநிலைக்குள் கொண்டு செல்கிறோம் எண்று அவர்களின் படை நடவடிக்கை காரணத்தை வெளிப்படையாக சொல்வார்கள்... புலிகள் செய்வதும் அது போல ஒண்றுதான்....

கடல் கரைகள் கடற்படையினரின் பலம் இருப்பதால் அனேகமாக பலவீனமாகவே இலங்கை படைகள் வைத்து இருக்கும். அப்படி கரையோரங்களில் தாக்கி வெற்றியை புலிகள் ஈட்டும்போது இலங்கை படைகள் கரையோர பலத்தை அதிகரிப்பார்கள், உதிரியாக திரியும் இராணுவம் கரையோர பணிக்கு அனுப்ப படும் என்பதும் தெரியாதவர்கள் அல்ல....

அதனை முற்றுகை எண்றும் சொல்ல முடியாது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

:wub: யாழ்க்குடாவில் ஆக்கிரமித்து நிற்கும் 40,000 சிங்கள ராணுவத்துக்கும் இருக்கும் ஒரே வழங்கள் மார்க்கம் கடல்தான். அது தமிழீழத்தின் இரு புறமும் உள்ள கடல் வழியால் நடைபெறுகிறது. இந்த வழங்களப் பாதையை புலிகள் மூடினால் அந்த 40,000 பேரையும் ஒரு முற்றுகைக்குள் கொண்டுவர முடியும். இந்தியா தமிழ்நாட்டிலிருந்தோ அல்லது கேரளாவிலிருந்தோ சிங்கள ராணுவத்துக்கு உதவி எதுவும் செய்யாத படசத்தில், சிங்கள ராணுவத்துக்கு உள்ள தெரிவு ஏ 9 பாதையூடாக வவுனியா நோக்கி வருவதுதான். அதைத்தான் புலிகளும் எதிர்பார்ப்பார்கள். வவுனியா வந்தடையுமுன் அந்த 40,000 பேரும் வன்னிக்குள் அழிந்துவிடுவார்கள்.

கடற்படையினரின் தாக்குதல் கலங்கள், வழங்கல்க் கப்பல்கள், கண்காணிப்பு நிலைகள் மீது புலிகளின் ஈரூடகப் படையணியினரின் தாக்குதல்களும் இதைத்தான் கட்டியம் கூறுகின்றன என்று நினைக்கிறேன்.

:wub: யாழ்க்குடாவில் ஆக்கிரமித்து நிற்கும் 40,000 சிங்கள ராணுவத்துக்கும் இருக்கும் ஒரே வழங்கள் மார்க்கம் கடல்தான். அது தமிழீழத்தின் இரு புறமும் உள்ள கடல் வழியால் நடைபெறுகிறது. இந்த வழங்களப் பாதையை புலிகள் மூடினால் அந்த 40,000 பேரையும் ஒரு முற்றுகைக்குள் கொண்டுவர முடியும்.

அதோடு 4 லட்சம் தமிழ் மக்களும் இருக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பத்தியாளர்கள் சொல்வதை எல்லாம் படிச்சதோடை விட்டு போடவேணும்.... !!

தயா,

நான் ஏற்கனவே வேறொரு திரியில் சொன்னது போல, புலிகளுக்கு மட்டுமே தற்போதைய தந்திரோபாயங்கள் தெரியும். இந்த ஆய்வாளர்கள் போலவே நாமெல்லாம் வெறும் ஊகங்களுடன் மட்டும் இருக்கிறோம். :wub:

இப்படி ஒரு வரிசைக்கிரமத்தில் தாக்குதல் செய்வது, புலிகளின் திசை மற்று உத்தி என்றும் இன்னொரு ஒரு ஆய்வாளர் எழுதலாம். கற்பனைக்கு வானமே எல்லை.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தயா. ஆனால் அந்த தமிழருக்கு வன்னி என்று ஒரு நிலமிருக்கு !

உண்மைதான் தயா. ஆனால் அந்த தமிழருக்கு வன்னி என்று ஒரு நிலமிருக்கு !

யாழ்ப்பாணம் முற்றுகைக்கை போகாமல் இருப்பதுக்கு முக்கிய காரணமே அங்கு இருக்கும் மக்கள் இப்போது இராணுவ பணயகைதிகளாக இருப்பதுதான்...

இராணுவத்துக்கான வளங்கல் தடைப்படும் போது அது பொதுமக்களுக்குமானதாகவும் இருக்கும்...!!!

இப்படி ஒரு வரிசைக்கிரமத்தில் தாக்குதல் செய்வது, புலிகளின் திசை மற்று உத்தி என்றும் இன்னொரு ஒரு ஆய்வாளர் எழுதலாம். கற்பனைக்கு வானமே எல்லை.. :wub:

புலிகள் எப்படி , எங்கை சண்டை பிடிப்பார்கள் என்பது முக்கியமே இல்லை... ஒருவேளை சண்டையே இல்லை எண்டாலும் சந்தோசம்...!!! சின்ன சண்டையில் வெற்றி எண்றாலும் பெரிய சந்தோசம்...

எங்களுக்கு முக்கியமாய் தேவை இளப்புக்கள் குறைந்த நிரந்தரமான ஒரு அமைதியான தமிழீழம்... அதுக்காக உயிர்விலைகள் அதிகமாக கொடுத்து விட்டோம்... இன்னும் அதிகமாகாமல் நகரும் புலிகள் எடுக்கும் மெதுவான நடவடிக்கைகளாக இருந்தாலும் அதுக்கான தார்மீக ஆதரவு, பக்கபலம் தேவை..

Edited by தயா

  • தொடங்கியவர்

தயா சொன்னதில் தவறேதும்மில்லை.. இன்னும் சொல்லப்போனால்.. யதார்த்தத்துக்கு தொலைவுமில்லை...

எங்களால் தொடர்ந்து மாவீரர்களை எண்ண முடியாது... குறைவான இழப்புக்களில் இலக்கினை அடைவதே புலிகளின் தெரிவாக இருக்கும்.... புலத்தமிழர்கள் தங்களால் முடிந்த முன்னகர்வுகளை செய்து தாய்நிலத்துக்கு பலம்சேர்ககவேணும்..

இது செய்தியல்ல... எமது சகோதர சகோதரிகளின் இழப்பினைத்தடுக்கும் அறைகூவல்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சந்தேகம்!

முந்தி 'தல' எண்ட பேரில களத்தில எழுதின ஆளும் இப்ப 'தயா' எண்டு எழுதிற ஆளும் ஒரேயாள்தானா?

அப்பிடித்தான் இருக்க வேணுமெண்டு 'இப்புக்கள்' சொல்லுது. எண்டாலும் கருத்துக்களில கொஞ்சம் சந்தேகம் பாருங்கோ...

:wub:

ஒரு சந்தேகம்!

முந்தி 'தல' எண்ட பேரில களத்தில எழுதின ஆளும் இப்ப 'தயா' எண்டு எழுதிற ஆளும் ஒரேயாள்தானா?

அப்பிடித்தான் இருக்க வேணுமெண்டு 'இப்புக்கள்' சொல்லுது. எண்டாலும் கருத்துக்களில கொஞ்சம் சந்தேகம் பாருங்கோ...

:wub:

இராணுவ சப்பாத்து பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதினாப்பிறகு காணாமல் சிறந்த நல்லவன் நீங்கள் தானே...?? புலிகளிக்கு ஆயுத சப்பிளை தேவை எண்டு அறிக்கை எல்லாம் விட்டாக்களிலை நீங்களும் ஒருத்தர் எண்டது உங்கட கட்டுரை சொன்னது...!!

அது சரி அப்படி என் கருத்தில் உங்களுக்கு என்ன சந்தேகம்...??

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் அழிவதைப் பார்த்து மகிழ்வதும் எமது போராளிகளின் வீரச்சாவுகளை ஏளனஞ்செய்து கைகொட்டிச் சிரிப்பதும் எமது எதிரிக்கு இருக்கக்கூடிய சிறப்பான குணாதிசயங்கள். எமது மக்களதும் போராளிகளினதும் உயிர்கள் எந்த வேளையிலும் பாதுகாக்கவேண்டிய அரிய சொத்து என்பதை எமது தேசியத்தலைமை மறந்ததில்லை. இந்தக் கோட்பாட்டுக்குள் அமைவதாகவே எதிர்காலத்திலும் அவர்களது எந்தவொரு நடவடிக்கைகளும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தயா உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். இழப்புகள் அளவுக்கு அதிகமாகவே நடந்துவிட்டன. யுத்தமொன்று இல்லாமல் எமது மக்களுக்கு சுதந்திரம் கிடைக்குமானால் அதைவிட நல்ல விடயம் ஒன்று இந்த உலகில் எங்களுக்கு இருக்கப்போவதில்லை. இழந்த எமது உயிரினும் இனிய கண்மணிகளும், மக்களும் எம்மால் ஈடு செய்யப்பட முடியாதவர்கள்.

நீங்கள் சொல்வதுதான் சரி. யாழ்ப்பாணத்திலுள்ள 4 லட்சம் மக்களின் பாதுகாப்புக் கருதித்தான் யாழ் முற்றுகை பிற்போடப்பட்டு வருகிறது என்றுதான் நாணும் நினைக்கிறேன். இது தொடர்பில் புலிகள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாம் பக்கபலமாக இருப்பதுதான் நாம் செய்யக் கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு யாழில் வந்த தளபதி அமுதாப் அவர்களின் விளக்க உரையினை இச்சந்தர்ப்பத்தில் வாசித்துப் பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36840

  • கருத்துக்கள உறவுகள்

:) நன்றி கந்தப்பு. முன்பும் வாசித்தேன். ஆனாலும் இப்போதும் கண்கள் குளமாகின்றன. அவர்களின் தியாகத்துக்கும், துணிவிற்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் ???????

எமது நம்பிக்கையும், வாழ்வும் விடுதலைப் புலிகள் தான் !

தமிழரின் தாகமும் தமிழீழம்தான் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.