Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறையில் தாயும் மகளும் காடையர்களால் பாலியல் வல்லுறவு

Featured Replies

அம்பாறையில் தாயும் மகளும் காடையர்களால் பாலியல் வல்லுறவு

[வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 06:31 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]

அம்பாறை ஒலுவில் பகுதியில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்நாள் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது.

தமிழ்ப் பெண்களான இந்த இருவரும் ஒலுவில் தென்னந்தோட்டப் பகுதி வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே அதிகாலை 1:00 மணியளவில் இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த இளம் தாயும் அவரது 13 வயது மகளும் மேற்படி வீட்டில் தங்கியிருந்த போது, அதிகாலை 1:00 மணியளவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த ஆறு பேரில் நான்கு பேர் இந்த இருவரையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து காவல்துறையினர், இருவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும், நால்வரைத் தேடி வருவதாகவும், விசாரணையின் பின் சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தாயும் மகளும் மருத்துவ பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: தினக்குரல்

புதினம்

எல்லா அனியாயங்களுக்கும்.. எற்ற நாடு இலங்கைதான்...

  • கருத்துக்கள உறவுகள்
:) கிழக்கில் தமிழர்களுக்கு நடக்கும் வெட்கக்கேடான அநியாயங்களை எத்தனை நாட்களுக்கு தான் தாங்கி கொள்வது.

ஆடன ஆடு எல்லாம் தீனிக்கு அழ இந்த சொத்தியாடுகள்ம் மட்டும் **** திரியுதுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13வயது என்பது ஒரு சிறுமியாகும். அதை மனதில் நிறுத்திக் கதையுங்கள். இப்படிப்பட்ட வக்கிரப்புத்திக்காரரோடு தமிழர்கள் போராட வேண்டியுள்ளது.

13துடைய பெண் நிச்சயம் சிறுமிதான் பொன்னையர்...

அந்த கொடுமையை செய்தவங்களுக்கு இங்க ஒண்டும் பாராட்டுவிழா நடத்தவில்லை... அவங்களுக்கன பேரையே வைத்தோம்...

நம்ம தலையெழுத்து இதுதான் , இதுக்கு இப்ப்படியான பதில்கள் நாம் சிங்களத்திற்கு கொடுப்பதில்லை அதுதான் இப்டி ஊதிப்பெருத்துட்டுதுகள் இந்த பாவிகள் கூட்டம்......

வாயடிச்சால் மட்டும் போதாது சிலவற்றை புலம்பெயர்ந்த நாம்தான் நிகழ்த்தி உலகை எம்பக்கம் இழுக்க வேண்டும்

வாயடிச்சால் மட்டும் போதாது சிலவற்றை புலம்பெயர்ந்த நாம்தான் நிகழ்த்தி உலகை எம்பக்கம் இழுக்க வேண்டும்

எப்படி அண்ணா உங்களால் முடியுது

:):wub: ஐயோ

நாட்டுச் செய்திகளை பார்க்க தூக்குப் போட்டு சாகலாம் போலிருக்கு :wub::wub::lol:

:wub::wub: ஐயோ

நாட்டுச் செய்திகளை பார்க்க தூக்குப் போட்டு சாகலாம் போலிருக்கு :wub::lol::lol:

கயறு வாங்கி தரனுமா? :)

சாக வேணுமெண்டா தூகுத்தான் போடவேணுமெண்டுமில்லை... அதுக்கு கயறுதான் வேணுமெண்டுமில்லை...

வேறு எத்தனையோ முறை இருக்கு... அதை நான் சொன்னா .. பிரச்சனை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:):wub: ஐயோ

நாட்டுச் செய்திகளை பார்க்க தூக்குப் போட்டு சாகலாம் போலிருக்கு :wub::wub::lol:

20cryingfacejc2.gif

மனத்தின் ரணங்களால்

மரணத்தின் வாசலில்

மண்டியிட்டு தினமும்

கண்ணீர் வடிக்கும்

நான்

ஒரு பெண்

என்னோடு கதை

ஆனால் வதைக்காதே

நான்

ஒரு நிலவு

என்னை ரசித்திடு

தொட நினைக்காதே

நான்

ஒரு கிளி

எனை பறக்கவிடு

அடைக்க முயலாதே

நான்

ஒரு வாசமுள்ள பூ

மோர்ந்து பார்

கசக்கி எறியாதே

நான்

ஒரு புல்லாங்குழல்

என்னை வாசித்திடு

முறித்து எறியாதே

நான்

ஒரு புரியா கவிதை

எடுத்து படி

மடித்து வீசாதே

நான்

ஒரு நெருப்பு

எரிய விடு

அணைக்காதே

தயவுசெய்து

தள்ளி நில்லு

எனை அணைக்காதே

மரணத்தின் வாசலில் நான்

-------------------

காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சே

மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே

***வெண்ணிலா***

பொதுவாக கேடுகெட்ட செயல்களைச் செய்பவர்களை மிருகங்கள் என்று சொல்லுவோம். ஆனால் மிருகங்களைக் கூட இவர்களோடு ஒப்பிடுவது தவறு என்பதை மேலும் மேலும் இவர்கள் நிரூபிக்கின்றார்கள்.

என்ன கிருபா ஆச்சரியமாக இருக்கிறதா அல்லது அந்தரமாக இருக்கின்றதா ?

நாம் எல்லாவற்றிற்கும் வாயடிச்சு வார்த்தைகளை விதைத்தால் மட்டும் போதாது. எமது நடவடிக்கைகளை முடிந்தவரை முன்னெடுக்க வேண்டும். எனக்கு நோர்வேஜிய மொழி பெரிதாக தெரியாது. அதனால் வெட்கப்படுகின்றேன். முடிந்தவரை கற்க முயல்கின்Nறுன். தெரிந்தால் இப்படியான கொடுமைகளை எப்படியாவது நோர்வேஜிய மக்களிடம் தெரியப்படுத்துவேன். அதைப்போல மற்றைய புலம்பெயர்ந்த இளைஞர்களும் அவர்களுடைய நாட்டு மொழியில் இப்படியான கொடுமைகளை வெளிக்கொணரவேண்டும். அதைவிட்டிட்டு இந்த யாழிற்குள்ளேயே ஆமாம் போட்டுக்கொண்டிருந்தால் குண்டுச்சட்டிக்குள் குதிரைதான் ஓடமுடியும்

பரனி

இங்க யாழ் களத்தில நாங்கள் எல்லாம் வருவது எமது உறவுகளுடன் எமது பிரச்சனைப்பற்றி கதைத்து கருத்தறிந்து கொண்டு எமது பணியை செம்மையாக்கவும் துரிதப்படுத்தவுமே...

களத்தில எழுதுறவங்களை குறைத்து மதிப்பிடாதேங்கோ. .. நீங்கள செய்ய விரும்புவதை தெளிவா சொல்லுங்கோ, உதவி கேளுங்கோ... அதை விட்டுப்போட்டு.. களத்தில இருக்கிறதைப்பார்த்து சினம் கொள்ளவேண்டாம். இன்னொருவழியில் இங்குள்ள கருத்துக்கள் கூட தமிழ் மக்களின் கருத்து கணிப்புக்கு உதவும். அண்மையில் கூட இங்குள்ள அரசியல் மற்ரும் ஊடகவியளாரை சந்திக்கும்போது எமது விடயங்களை எடுத்டுசொன்னேன்.. ஆச்சரியம் என்னவெண்டா யாழ் களம் பற்றி அவர்கள் அறிந்திருந்ததுதான்... அதிகமான தமிழ் பார்வைத்தளங்களில் எமது யாழுமொன்று.

அவர்கள் எப்படி மொழிபேர்த்தார்கல் என்று என்னிடம் கேட்டவேண்டாம்... அதை நான் அவர்களிடம் கேட்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.