Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய உயர் இராஜதந்திரிகள் கொழும்புக்கு திடீர் இரகசிய விஜயம்

Featured Replies

இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கரமேனனும் தேசியபாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நராயணனும் இந்திய பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஸ்ரீ விஜயசிங் ஆகியோர் அடங்கிய உயர் இராஜதந்திரிகள் குழு இன்று காலை 11.35 மணியளவில் விசேட விமானம் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர் என்று டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

A high powered Indian delegation visits Colombo

A high powered Indian delegation comprising Foreign Secretary Shiv Shankar Menon, National Security Adviser M.K. Narayanan and Defence Secretary Sri Vijay Singh arrived at the Bandaranaike airport in a special flight at 11.35 am and was flown to Colombo by a chopper.

Daily Mirror

இந்திய உயர்மட்டக் குழு சிறிலங்காவிற்கு திடீர் பயணம்

[வெள்ளிக்கிழமை, 20 யூன் 2008, 04:42 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு இன்று முற்பகல் முன்னறிவிக்கப்படாத அவசர பயணத்தினை மேற்கொண்டு வருகை தந்த இந்திய மத்திய அரசின் மூவர் அடங்கிய உயர்மட்டக் குழு, முக்கிய பேச்சுவார்த்தை நடத்திவிட்டு நாளை மீண்டும் இந்தியா திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகச் செயலாளர் சிவசங்கர் மேனன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறி விஜய சிங் ஆகிய மூவர் அடங்கிய உயர்மட்டக் குழுவே கொழும்பு வந்துள்ளது.

சிவசங்கர் மேனன் தவிர ஏனைய இருவரும் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னறிவிக்கப்படாத பயணமாக கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் சிறப்பு வானூர்தியில் வந்திறங்கிய இவர்கள் கொழும்பில் அரசின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

குறிப்பாக பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்வதே இவர்களின் பயணத்தின் பிரதான நோக்கம் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்க் உச்சி மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வருகை தரவுள்ளதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காகவே இவர்கள் வருகை தந்தனர் என்று அரச தரப்பு தகவல்களில் கூறப்படுகின்றது.

எனினும் இவர்களின் பயணம் குறித்த அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவித்தல்கள் உடனடியாக வெளிவரவில்லை.

சிறிலங்காவிற்கான சில மணிநேரப் பயணத்தினை முடித்துக்கொண்டு இக்குழுவினர் நாளை இந்தியா திரும்பவுள்ளனர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

முன்னறிவிக்கப்படாத பயணமாக கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் சிறப்பு வானூர்தியில் வந்திறங்கிய இவர்கள் கொழும்பில் அரசின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்

.

மக்களுக்கு முன்றவிக்கப்படாததாக இருக்கலாம். ஆனால் அரசுக்கு நிச்சயமாக முன்னறிவிக்கப்பட்ட ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

சாக்கு நாடுகளின் முன்னணி நாடொன்றின் பிரதமருக்குத் துவக்குச்சோங்கால் பிடரியில் வாங்குவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெறுவதாகச் செய்திகள் அடிபடுகின்றன. அது தொடர்பாக விசாரித்துப் போக இவர்கள் வந்திருக்கலாம்.

தமிழோசை நாளேட்டின் கேள்வியைப் பார்த்துவிட்டு புடுங்கிக்காட்டுறம் என்றுதான் வந்திருப்பார்கள்.அவர்களுக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.