Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் சுதாகரிப்பை புலப்படுத்தும் விஜயம் இது

Featured Replies

இந்தியாவின் மிக உயர்ந்த மட்டத்திலான அதிகாரிகள் குழு ஒன்று திடீரென சத்தம் சந்தடியின்றி கொழும்பு வந்தமை இலங்கை அரசியல் வட்டாரங்களில் ஏன், எதற்கு என்று பல்வேறு கேள்விக் கணைகளை எழுப்பியிருக்கின்றது.

சார்க் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்குபற்று வது தொடர்பான முன்னேற்பாடுகளைக் கவனிப்பதே இந்த உயர் அதிகாரிகள் குழுவின் கொழும்பு வருகையின் நோக்கம் என்று கூறப்பட்டாலும் ஆனால் அதுவல்ல பின் னணி என்பது பரகசியமானவிடயம். அந்தத் தேவைக் காக இவ்வளவு உயர்மட்டத்தில் இவ்வளவு முற்கூட் டியேஅதிகாரிகள் குழு இங்கு வரத் தேவையில்லை என் பது எவருக்கும் புரியும் ஒன்று.

இந்த உயர்மட்ட இந்தியக் குழுவின் கொழும்பு வருகை பற்றிய தகவலை, அக்குழு கொழும்புக்கு வந்து அவ் விடயம் பரகசியம் ஆகும் வரை, கொழும்பு அரசுத்தரப்பு அமுக்கி வைத்திருந்தது; வெளிப்படுத்வே இல்லை. அது ஒன்றே, இந்தக் குழுவின் விஜயம் கொழும்புத் தரப்பின் விருப்பத்துக்கும், வரவேற்புக்கும் உரிய விவகாரமல்ல என்பதை விளக்கப் போதுமானதாகும்.

புதுடில்லி தொடர்பான கொழும்பின் இராஜதந்திரக் கையாள்கை இந்திய அரசுக்குக் கொடுத்து வந்த எரிச்சலின் உச்சக் கட்ட விளைவே இந்த உயர்மட்டக்குழுவின் விஜயம் எனக் கருதப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கொழும்பு அரசு, இதுவரை காலமும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரம் தொடக்கம் பிராந்திய அரசியல் விடயங்கள் மற்றும் இராஜதந்திரத் தொடர்பாடல் செயற்பாடுகள் வரை புதுடில்லிக்கு அளித்து வந்த வாக் குறுதிகளை நிறைவுசெய்யவே இல்லை என்றும் அது பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான பாரத அரசுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்து வந்துள்ளது என்பதும் வெளிப்படையாக தெரிந்த அம்சங்களே.

பாகிஸ்தானையும், சீனாவையும் காட்டிக்காட்டியே புதுடில்லியிடம் உதவிபெற்றுவந்த கொழும்பு, மறுபுறத்தில் இந்த இரண்டு நாடுகளுடனும் குறிப்பாக சீனாவு டன்மிக அதிக பட்ச நெருக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவைத் தாண்டிய முன்னுரிமையை சீனாவுக்கு வழங்கி வருகின்றது என்ற ஆதங்கம் புதுடில்லிக்கு உண்டு.

தனது தென்கோடியில் சீனா காலூன்றுவதற்கு இலங்கை இடமளிக்கின்றது என்ற யதார்த்தத்தை புதுடில்லி வெறு மனே பார்த்துக்கொண்டு வாளாதிருக்க முடியாது என இப் பத்தியில் ஏற்கனவே சில தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த விவகாரம் உறைத்து இப்போது "பொறுத்தது போதும்; பொங்கியெழுவோம்' என்ற கொதிப்பு நிலைக்கு பாரதம் வந்துவிட்டது என்பதையே இந்த உயர்மட்டக் குழுவின் கொழும்பு விஜயம் வெளிப்படுத்தி நிற்கின்றது.

மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் ஊடுருவ முடியாத வலுவான பண்பாட்டுப் பாரம்பரிய சுவரையும் மொழிக் கவசத்தையும் கொண்டிருக்கும் சீனா இந்தப் பிராந்தி யத்தின் மிகப்பெரிய வல்லரசாக ஏகாதிபத்திய சக்தியாக உருவெடுத்து வருகின்றது என்பதையும் அந்த வல்லாதிக்க சக்தியின் வருகைக்கு தனது தேசத்தை அகலத்திறந்துவிட்டு இருகரம் கூப்பி வர வேற்பதன் மூலம் இந்தப் பிராந்தியத்தின் அமைதி, சமரச நிலை என்பவற்றுக்கு கொழும்பு ஆப்பு வைக்கின்றது என்பதையும்

இதில் இந்தியா தலையிட்டு நிலைமையை சீர் செய்யாவிட்டால் இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கும், தனித்துவமும், மரியாதையும், கௌரவ மும் கேள்விக்குள்ளாகும் என்பதையும் இந்தப் பத்தியில் ஏற்கனவே தெளிவாகவும் திடமாகவும் சுட்டி வந்துள் ளோம்

இவ் விவகாரத்தை நேரத்துடன் இந்தியா புரிந்து கொண்டு விட்டது, அந்தப் பின்னடைவு நிலையில் இருந்து தன்னை சுதாகரித்துக் கொண்டு, தனது செல்வாக்கையும், அதிகாரத்தையும் இந்தப் பிராந்தியத்தில் நிலை நாட்ட அது தயாராகி விட்டது என்பதையே அதன் தற் போதைய செயற் பாடு தெளிவாகவும், திடமாகவும் வெளிப்படுத்துகின்றது.

நுரைச்சோலையில் அனல் மின்நிலையம், கொழும் பில் கலாசார மண்டபம், கட்டுநாயக்காவுக்கு அதிவேக பாதை, அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகம் என்று இலங்கை விடயத்துக்குள் சீனாவின் கால் அதிகம் ஊன் றப்பட்டுவிட்டது.

போதாக்குறைக்கு 1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்தகாலம் முதல் இலங்கையில் தங்கியுள்ள சீனப் பிரசைகளுக்கு இலங்கையில் நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான விசேட சட்டமூலம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் மஹிந்த அரசினால் சமர்பிக்கப்பட்டிருக்கின்றத

Edited by Janarthanan

உதயன் இப்பிடிசொல்லுது

இப்பிடி சொல்லுறளவுக்கு வந்தவங்கள்

மகிந்தவுக்கு உண்மையா ஆப்படிக்கிறாங்களா?

அல்லது இதுவும் பத்தோட ஒரு திருவிழா காலமா தெரியேல்ல

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய குழுவில் அடங்கியுள்ள மேனன்களும்,தோனிகளும் பொதுவாகவே தமிழர்களின் அபிலாசைகளுக்கு எதிரானவர்களே எனினும் நல்லது நடந்தால் சந்தோசம், ஆனால் வட போர் நிலவரம் பற்றி முப்படை தள்பதிக்ளுடன் கலந்துரையாடி இருப்பது கவனிக்கத்தகது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை வந்து என்னத்தை போய் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவங்கள் குத்தியனையும், சங்கரியையும், சித்தார்த்தனையும், ஆறுமுகத்தாரையும் சந்தித்தார்கள் என்றால் ......... வந்தவையின்ற நோக்கம் தெரியுதுதானே

வந்தவங்கள் குத்தியனையும், சங்கரியையும், சித்தார்த்தனையும், ஆறுமுகத்தாரையும் சந்தித்தார்கள் என்றால் ......... வந்தவையின்ற நோக்கம் தெரியுதுதானே

குத்தியனெண்டு ஆரை சொன்னனிங்கள்... அந்த டக்கிளசைத்தானே?..

அவருக்கு எப்பிடி உந்தப்பேர் வந்தது?... நீங்கள் இதை சொல்லாட்டா என்ர தலையே வெடிச்சுடும்... தயவு செய்து சொல்லுங்கோ...

Edited by இணையவன்
ஒருமையில் எழுதப்பட்டது திருத்தப்பட்டுள்ளது. - இணையவன்

சுதாகரிக்கும் எனும் வரலாற்று தவறை இந்தியா எப்போதும் செய்ய போவது இல்லை.

குத்தியனெண்டு ஆரை சொன்னனிங்கள்... அந்த டக்கிளசைத்தானே?..

அவருக்கு எப்பிடி உந்தப்பேர் வந்தது?... நீங்கள் இதை சொல்லாட்டா என்ர தலையே வெடிச்சுடும்... தயவு செய்து சொல்லுங்கோ...

அத்தியடி குத்தியன்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.