Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தமிழீழ போராட்டம் பற்றி கூறுவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தமிழீழ போராட்டம் பற்றி கூறுவது என்ன?

Edited by nunavilan

காணொளியைக்காணவில்லை? :wub::lol::o

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அவர்சில வேண்டத்தகாத சரித்திரங்களை குழப்பியடிப்பதால்

நாமும் பதில் கூறவேண்டியுள்ளது

அதில் முக்கியமாக

அமிர்தலிங்கம் ஐயா அவர்களின் கொலை

அதில் இவர் தன் கருத்தை எம்மீது திணிக்கமுயல்கிறாரே தவிர

தமழ்மக்களின் கருத்தை செவி சாய்க்கவில்லை

அந்த நேரத்தில் அவருடன் கூட இருந்து காயமடைந்த

உயர்திரு. சிவசிதம்பரம் ஐயா அவர்கள் தன் வாழ்நாளின் கடைசிநாள்வரை

புலிகளை ஆதரித்தார் என்பதை கலைஞர் மறுத்துவிட்டார்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை யாருமே அறியாதநிலையில் இப்படி அபாண்டமாக பழிபோடுவது முறையற்றது

அதைவிட போராளிகளை வரச்சொல்லி அழைத்து

சாப்பாடும் கொடுத்துவிட்டு

சுட்டுக்கொண்டுவிட்டார்கள் என்று நாமும் கூறமுடியும்

அதைவிட

1977 லே காங்கேசன்துறையிலே 85 வீதத்திற்குக்கு மேற்பட்ட வாக்குகளை தமிழ்மக்களிடம் பெற்று பெருவெற்றியீட்டிய அமிர்தலிங்கம் ஐயா அவர்கள்

கடைசியாக 2வீத வாக்குகளைத்தமிழ்மக்கள் அளித்தபோது ஏன் ஒதுங்கவில்லை???

ஏன் நியமன எம்பி ஆகி பாராஞமன்றம் சென்றார்????

இதை கலைஞர் தன்னைப்போல் அரசியல் என்கிறாரா????

நாங்கள் அரசியல் செய்யவில்லை கலைஞரே

ரத்தமும்

சதையும் விதை;து வருகிறோம்

உதவி செய்யும் படி இரஞ்சவில்லை

உபத்திரவம் கொடுக்காமல் இருக்கவும்

தயவு செய்து........

பணத்தையும் பதவியையும் தன் வாரிசுகளுக்கு வகைபடுத்திக் கொடுக்க வரிந்து கட்ட தொடங்கிய பின்பு தமிழாவது தமிழராவது. உயிர்வலி உதட்டலவில் அரசியல் செய்பவர்களுக்கு புரியாது. வாய் ஜாலம் காட்டி வாழ்ந்தவர்களின் வரலாற்றை வருங்காலம் வசைமாறி பொழியட்டும்.

தமிழனின் சாபக்கேடு !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்களைப் பற்றிய கதை தேவையில்லை என நினைக்கின்றேன். ஆனால் அமிர்தலிங்கம் பற்றிக் கருணாநிதி அவர்கள் சொன்னது முரணானது. இன்றைய போராட்ட அமைப்புக்களுக்கு ஆரம்பகாலங்களில் தூண்டுதல் செய்தவர் இந்த அமிர்தலிங்கம். தமிழ்நாட்டில் எப்படி உணர்;ச்சி பொங்க மேடையில் அரசியல்வாதிகள் பேசி ஏமாற்றுவது போல தமிழ் இளைஞர்களை, அவர்களின் போராட்ட உணர்வைத் தன்னுடைய அரசியல்சுயநலத்தி;ற்குப் பாவித்துக் கொண்ட அவர், அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக கொழும்பில் சிங்கள அரசின் பணத்தைப் பெற்றுச் சுகவாழ்வு வாழ்ந்தார்.

இதன் மூலம் தமிழீழப்போராட்டம் தொடங்கப்பட்டதான நோக்கம் கொச்சைப்படுத்தப்படுவதாக உருவாக்கம் பெற்றது. மக்களை ஏமாற்றி அவர்களை மூடர்களாக்கிச் சாகடித்தபடி அதில் தன்வாழ்வைக் கொண்டு சென்ற சுயநலவாதியாகத் தான் அவர் இருந்தார்.

இவர் கொல்லபபட்ட விதம் தொடர்பாக எவ்வித உடன்பாடும் இல்லை. தேசியத்தலைவர் கூட இதைக் கண்டித்துள்ளார். ஆனால் அதற்காக அவரை நியாயப்படுத்தி விடமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களைப் பற்றிய கதை தேவையில்லை என நினைக்கின்றேன். ஆனால் அமிர்தலிங்கம் பற்றிக் கருணாநிதி அவர்கள் சொன்னது முரணானது. இன்றைய போராட்ட அமைப்புக்களுக்கு ஆரம்பகாலங்களில் தூண்டுதல் செய்தவர் இந்த அமிர்தலிங்கம். தமிழ்நாட்டில் எப்படி உணர்;ச்சி பொங்க மேடையில் அரசியல்வாதிகள் பேசி ஏமாற்றுவது போல தமிழ் இளைஞர்களை, அவர்களின் போராட்ட உணர்வைத் தன்னுடைய அரசியல்சுயநலத்தி;ற்குப் பாவித்துக் கொண்ட அவர், அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக கொழும்பில் சிங்கள அரசின் பணத்தைப் பெற்றுச் சுகவாழ்வு வாழ்ந்தார்.

இதன் மூலம் தமிழீழப்போராட்டம் தொடங்கப்பட்டதான நோக்கம் கொச்சைப்படுத்தப்படுவதாக உருவாக்கம் பெற்றது. மக்களை ஏமாற்றி அவர்களை மூடர்களாக்கிச் சாகடித்தபடி அதில் தன்வாழ்வைக் கொண்டு சென்ற சுயநலவாதியாகத் தான் அவர் இருந்தார்.

இவர் கொல்லபபட்ட விதம் தொடர்பாக எவ்வித உடன்பாடும் இல்லை. தேசியத்தலைவர் கூட இதைக் கண்டித்துள்ளார். ஆனால் அதற்காக அவரை நியாயப்படுத்தி விடமுடியாது.

ஆனால் கலைஞர் அவர்கள்

அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்படவேண்டியவரா??? என்ற கேள்வியை எல்லோரையும் பார்த்துக்கேட்டிருந்தார்

அதைக்கண்டித்திருந்தார்

அதனால்தான் அதைக்கிளறவேண்டியேற்பட்டது

இந்தக்கேள்விக்கு எவருமே பதில்அளிக்க முன்வரவில்லை

இந்தக்கேள்விக்கு உங்கள் பதில் என்ன???

அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்படவேண்டியவரா???

உந்த காணொளியை பார்க்க விருப்பம் வருதில்லை...

இருந்தாலும் மத்தவர்களின் கருத்துக்களை பார்க்கும் போது அவர் என்ன சொல்லி இருப்பாரெண்டு

மாத்திரம் தெரியுது. வயசாகிப்போனதால மு. க வுக்கு வாக்கு மாறிப்போச்சு. போல கிடக்கு.

நான் வாக்கெண்டு சொன்னது தேர்தல் வாக்கில்லை.... மனித வாக்கு.. சுய புத்தி வாக்கு...

இந்த காணொளி இதற்கு முன்பு வேறு தலைப்பில் இணைக்கப்படது. எங்கே என்று தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா?

இந்த காணொளி இதற்கு முன்பு வேறு தலைப்பில் இணைக்கப்படது. எங்கே என்று தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா?

http://www.yarl.com/forum3/index.php?showt...amp;mode=linear

நன்றி

காலஞ்சென்ற முதல்வர் திரு.எம்ஜீஆர் அவர்கள் விடுதலை புலிகளை ஆதரித்த ஒரே காரணத்திற்காக டெலோவை அழைத்து பணமும் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி இயக்கங்களுக்கிடையிலான பிரிவினைகளுக்கு தூபம் இட்ட கலைஞர் இன்று இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமை இருந்திருந்தால் விடுதலை கிடைத்திருக்க்கும் என்று நீலிக்கண்ணீர் வடிப்பது வேடிக்கை

தமிழீழ விடுதலை இயக்கங்கள் தங்கள தாளத்திற்கு ஏற்ற விதமாக ஆடவேண்டும் என்பதற்காக இயக்கங்களை

80களில் துண்டு துண்டாக உடைத்துப்போட்ட இந்திய உளவு நிறுவனம் றோவின் சதிச்செயல் திரு.கருணாநிதி அறியாததா?

இந்திய றோவிற்கு தலையாட்டி பொம்மையாக செயற்பட மறுத்த காரணத்திற்காக, இந்திய அமைதிப்படை என்ற போர்வையில் விடுதலைபுலிகளை முற்றுமுழுதாக அழித்தொழிக்கவே ஒரு கொலைப்படை அனுப்பப்பட்டது என்ற அரசியல் வரலாறை திரு.கருணாநிதி அறியாதவர் போல் பாசாங்கு செய்வது ஏன்?

றோவின் சதிவேலைகளிற்கு அசைந்து கொடுக்காத புலிகளை உடைப்பதற்காக மாத்தையாவின் நெஞ்சில் நஞ்சை கலந்த றோவின் கபடநாடகம் திரு.கருணாநிதி அறியாததா?

இந்திய அமைதிப்படை எனும் பெயரில் ஒரு கொலைப்படை, ஈழத்தில் பல நூறு தமிழ்பெண்களை பாலியல் வல்லுறவு செய்து மானபங்கப்படுத்தி கொண்டிருந்த வேளையிலேயே, இந்திய படைகள் நிலைகொள்வதை ஆதரித்து இலங்கை பாராளுமன்றத்தில் பேசியவர் தானே இந்த அமிர்தலிங்கம். இதை எவர் வேண்டுமானாலும் இலங்கை பாராளுமன்ற குறிப்பேடுகளில் ( Hansard இல்) சரிபார்ர்த்துக்கொள்ளலாம். இப்படி பேசும்படி திரு.அமிர்தலிங்கத்திற்கு பாடம் எடுத்தது யார்? றோ(RAW)வை தவிர வேறு யார்?!!!

இது போன்ற இன்னும் எத்தனையோ படுபாதக செயல்களுக்கு திரு.அமிர்தலிங்கம் போன்றவர்களும் இந்திய ரோவின் கைப்பொம்மைகளாகவே செயற்பட்டார்கள். இப்படியான வரலாற்று உண்மைகளை இன்று திரு.கருணாநிதி மறைக்க முயற்சிப்பது ஏன்?

எல்லாம் வேறு எதற்கு? அடுத்த தேர்தலில் காங்கிரஸின் கூட்டுக்கு. கூட்டல் கழித்தல் அரசியலில் செய்யலாம். தப்பில்லை! ஆனால் கொள்கைகளை கூட்டிக்கொடுத்து தான் அரசியல் பிழைப்பு நடத்த வேண்டுமென்றால் அதைவிட மானங்கெட்ட பிழைப்பு வேறில்லை!!

இன்று வரை ஈழப்போராட்டம் நீடித்து செல்வதற்கு ஒரே காரணம் சிறிலங்கா இனவெறி அரசின் அரசியல் நுணுக்கமோ அதன் இராணுவ வல்லமையோ அல்ல. திரைமறைவில் இந்திய றோ செய்யும் சதி வேலைகள் தான் காரணம்.

அதேநேரத்தில், தமிழர்களின் விரலை வைத்தே தமிழர்களின் கண்ணை குத்தும் தைரியம் இன்றுவரை றோவிற்கு குறையாத காரணம், அரசியல் பதவிகளுக்காக இனத்தையும் மானத்தையும் மொத்தவிலைக்கு விற்றுவிட தயங்காத இவர் போன்ற அரசியல்வாதிகளே !!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

[இது போன்ற இன்னும் எத்தனையோ படுபாதக செயல்களுக்கு திரு.அமிர்தலிங்கம் போன்றவர்களும் இந்திய ரோவின் கைப்பொம்மைகளாகவே செயற்பட்டார்கள். இப்படியான வரலாற்று உண்மைகளை இன்று திரு.கருணாநிதி மறைக்க முயற்சிப்பது ஏன்?

எல்லாம் வேறு எதற்கு? அடுத்த தேர்தலில் காங்கிரஸின் கூட்டுக்கு. கூட்டல் கழித்தல் அரசியலில் செய்யலாம். தப்பில்லை! ஆனால் கொள்கைகளை கூட்டிக்கொடுத்து தான் அரசியல் பிழைப்பு நடத்த வேண்டுமென்றால் அதைவிட மானங்கெட்ட பிழைப்பு வேறில்லை!!

இன்று வரை ஈழப்போராட்டம் நீடித்து செல்வதற்கு ஒரே காரணம் சிறிலங்கா இனவெறி அரசின் அரசியல் நுணுக்கமோ அதன் இராணுவ வல்லமையோ அல்ல. திரைமறைவில் இந்திய றோ செய்யும் சதி வேலைகள் தான் காரணம்.

அதேநேரத்தில், தமிழர்களின் விரலை வைத்தே தமிழர்களின் கண்ணை குத்தும் தைரியம் இன்றுவரை றோவிற்கு குறையாத காரணம், அரசியல் பதவிகளுக்காக இனத்தையும் மானத்தையும் மொத்தவிலைக்கு விற்றுவிட தயங்காத இவர் போன்ற அரசியல்வாதிகளே !!!!

நாம் கேட்பது ஒன்றேதான்

உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை

உபத்திரவம் செய்யாதீர்.....

நாங்கள் வெல்வோம்

வெல்வோம்

உமது உதவியில்லாது வெல்வோம்

இல்லை அழிவோமெனில்......

தாங்கமாட்டீர்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.