Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களவர்களை துடைத்தழிப்பதே விடுதலைப்புலிகளின் இலக்கு – சரத்பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் இலக்கு முழு இலங்கைத்தீவையும் கைப்பற்றி முழு சிங்கள இனத்தையும் அழிப்பதே என்றும் அதனை தடுப்பதற்காகவே சிறீலங்கா படைகள் போராடி வருவதாக, சிறீலங்கா தரைப்படை தளபதி வியாக்கியானமளித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சிறீலங்கா தரைப்படை தலைமையத்தில், நேற்று திங்கட்கிழமை

லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும், AFP, AP, BBC, JNW,

ரொய்டேர்ஸ், சிங்குவா, த ஹிந்து, நியூ இந்தியா பிரஸ், இந்தியா

ருடே, ஹந்துஸ்தான் ரைம்ஸ் ஆகிய பன்னாட்டு ஊடக நிறுவனங்களின்

செய்தியாளர்களுக்கும் மத்தியில், சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன்பொழுது கருத்துரைத்த சிறீலங்கா தரைப்படை தளபதி,

மரபுவழி ஆற்றலை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு

எதிராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, காட்டுப்புற யுத்தத்தையே

தமது படைகள் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிலங்களைக் கைப்பற்றுவது சிறீலங்கா படைகளின் மூலோபாயம்

அல்ல என்றும், மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொல்வதே

தமது இலக்கு என்றும், லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்பலம் குறித்து, பல தடவைகள்

தமது படைகள் குறைத்து மதிப்பிட்டதாகவும், ஒவ்வொரு தடவையும்

புதிய யுக்திகளை அவர்கள் கையாண்டு வருவதால், நினைத்த

மாத்திரத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை

என்றும், சிறீலங்கா தரைப்படை தளபதி வியாக்கியானமளித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இற்றை

வரையான இருபத்து மூன்று மாதங்களில், ஆயிரத்து எழுநூறு

படையினர் கொல்லப்பட்டு, மேலும் நான்காயிரம் படையினர்

காயமடைந்திருப்பதாகவும், வரும் ஓராண்டுக்குள் தமிழீழ விடுதலைப்

புலிகளை தமது படைகளால் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை

தனக்கு இருப்பதாகவும், சிறீலங்கா தரைப்படை தளபதி கூறியுள்ளார்.

இவ்வாண்டின் நடுப்பகுதிக்குள், தமிழீழ விடுதலைப் புலிகளை

துடைத்தழிக்கப் போவதாக, கடந்த ஆண்டின் இறுதியில்

லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா சூளுரைத்தமை நினைவூட்டத்தக்கது.

http://www.pathivu.com/?p=1539

போறதுக்கு முன்னால எதையோ பேசிட்டு போகட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறதுக்கு முன்னால எதையோ பேசிட்டு போகட்டும்.

எங்கே போறது? மேலையோ :wub::wub: பேசட்டும் பேசட்டும் நாய் குரைத்தால் யார்தான் கணக்கிலேடுப்பார்கள். அந்த நாய்க்கு யாராவது கல்லால எறியுங்கப்பா? :(:D

Edited by suppannai

சுப்பண்ணா..

அவர் குலைக்கைறாரா? அல்லது குரைக்கிறாரா? இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா..

அவர் குலைக்கைறாரா? அல்லது குரைக்கிறாரா? இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு

மன்னிக்கவேண்டும் சூறாவளி அது குரைத்தல் . தமிழ் எழுதி மிக நீண்ட காலம் ஆகிவிட்டன எழுத்துப்பிழை இல்லாமல் எழுவது கடினமாக இருக்கின்றது :wub:

இப்பொழுது திருத்தப்பட்டுள்ளது

Edited by suppannai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு பதில் அமிதாப்போட உரையில பதில் இருக்கு

அட நீங்கள் ஒண்டு இதுக்கெல்லாம் போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டு...

நான் எனக்கு தெரிந்த ஒரு விடயத்தை சொல்லுகிறேன்..

குலைக்கும் நாயெண்டா வாலைக்குலைக்கும் நாய் அது கடியாது. ஆனா குரைக்கின்ற நாய் கடிக்கும்

தவறாக விளங்கி கடிவாங்கக்கூடாது... அதுதான் சொன்னன்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களை துடைத்தழிப்பதே விடுதலைப்புலிகளின் இலக்கு – சரத்பொன்சேகா

சிறிய திருத்தம் பொன்சேகா தமிழரின் தாயகத்திலிருந்து என்று வரவேண்டும் . அதில் நீங்கள் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

, AFP, AP, BBC, JNW,

ரொய்டேர்ஸ், சிங்குவா, த ஹிந்து, நியூ இந்தியா பிரஸ், இந்தியா

ருடே, ஹந்துஸ்தான் ரைம்ஸ் ஆகிய பன்னாட்டு ஊடக நிறுவனங்களின்

சிங்கள விசுவாசி த ஹிந்து பதிரிகையாளரை தவிர்த்து ஏனைய பத்திரிகையாளருக்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவை நிகழ்சிக்கு சென்ற திருப்தி கிடைத்திருக்கும் <_<

வெள்ளைக்காரன் போய் தமிழ்படம் பார்த்தமாதிரி இருந்திருக்கும். ஓன்டும் விளங்கியிருக்காது. சும்மா இந்தாள் அலட்டுறதை கேட்டிடடு கொட்டாவிதான் விட்டிருப்பாங்கள். . .

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இற்றை

வரையான இருபத்து மூன்று மாதங்களில், ஆயிரத்து எழுநூறு

படையினர் கொல்லப்பட்டு, மேலும் நான்காயிரம் படையினர்

காயமடைந்திருப்பதாகவும், வரும் ஓராண்டுக்குள் தமிழீழ விடுதலைப்

புலிகளை தமது படைகளால் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை

தனக்கு இருப்பதாகவும், சிறீலங்கா தரைப்படை தளபதி கூறியுள்ளார்.

பொன்சேகா சொல்லும் தகவலின் அடிப்படையில் மாதத்துக்கு சராசரியாக குறைந்தது 73 சிங்களப் படைகள் கொல்லப்படுகின்றனர்.

பொன்சேகா சொல்லும் தகவலின் அடிப்படையில் மாதத்துக்கு சராசரியாக குறைந்தது 73 சிங்களப் படைகள் கொல்லப்படுகின்றனர்.

கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கையிலிருந்த நம்பவர்களின் இழப்பு வீதம். இந்த ஆண்டு 150ற்கும் மேலாக இருக்கிறது என்பது வேதனையானது கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கையிலிருந்த நம்பவர்களின் இழப்பு வீதம். இந்த ஆண்டு 150ற்கும் மேலாக இருக்கிறது என்பது வேதனையானது கந்தப்பு

உண்மைதான். விடுதலைப்புலிகளில் இழப்புவீதம் தற்போதைய வருடத்தில் மாதத்துக்கு சராசரியாக 180 போராளிகள் என சூரியன் இணையத்தளத்தில் வந்த ஆக்கத்தில் படித்திருக்கிறேன். இவ்வருடத்தில் முதல் 5 மாதங்களில் இறந்த போராளிகள் 900க்கு மேல் என விடுதலைப்புலிகளின் மாவீரர்கள் பற்றிய தகவலைப் பதிவு இணையத்தளத்தில் படித்தேன். சரத் பொன்சேகா சொல்வதைப் போல இராணுவத்தின் இழப்பு மாதமொன்றுக்கு குறைந்தது 73 பேர். ஆனால் அரசு பொதுவாக இறந்த இராணுவத்தின் எண்ணிக்கையை மிகவும் குறைத்தே வெளியிட்டுவருகிறது. இறந்த இராணுவத்தில் பலரைக் இராணுவத்தில் காணாமல் போனோர் பட்டியலில் இட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையினைக் குறைத்துச் சொல்கிறது. இறந்த இராணுவத்தின் உடலங்கள் தென்பகுதிக்கு தெரியாமல் மன்னார் பகுதிகளில் புதைக்கப்பட்டுவருவதாக செய்திகளில் படித்திருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.